Saturday, February 13, 2010

கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க!!!!



காதலர்தினத்துக்கு ஏதாவது பதிவப் போடுவம்னு பார்த்தா நமக்கு இதில முன்னனுபவம் பின்னனுபவம் சைடனுபவம்னு எதுவுமே இல்லையே.சரி நாமெல்லாம் எதுக்கு சொந்தமா யோசிச்சு மத்தவங்கள இந்த சந்தோஷமான நேரத்தில துக்கத்தில ஆழ்த்தனுமேன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.சும்மா திரைப்படங்களிலும் பாடல்களிலும் எனக்குப் பிடித்த சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.எந்தெந்த படம்,பாட்டு என்பது நீங்களே கண்டு பிடிக்க வேண்டியது.கண்டுபிடிச்சா பின்னூட்டத்தில சொல்லுங்க.ரெடி

அதுக்கு முன்னாடி ஏன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என ஒருகுட்டி பிலாஷ்பக்:
 வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். யாரும் காதலிக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என ரோமாபுரி சக்கரவர்த்தி கிளாடி2 விதித்த சட்டத்தை மீறி காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததற்காக வலண்டைனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது .

இப்போ என்னை கவர்ந்த சில வசனங்கள் :

" காதல் ஒன்னும் மரத்தில காய்க்கிற விஷயம் இல்ல தட்டி பறிக்கிறதுக்கு அது மனதில பூக்கிற விஷயம் அமைதியா இருந்தா தானா நடக்கும்"

"காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்கள மறந்திர்ரீங்க,காதலிக்கும் போது உங்களையே மறந்திர்ரீங்க கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க."

"நான்கூட நெனப்பன் ஏண்டா இந்த லவ்வையும் பண்ணிட்டு தற்கொல பண்ணிக்குராங்கன்னு,இப்போ தானே புரியுது உங்ககிட்ட மாட்டிகிட்டு அணுஅணுவா சாகிறதுக்கு அது எவ்வளவோ மேலுன்னு."


"காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பது அறியாது ,உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் பசியோ வலியோ தெரியாது"

"வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது"


"செவ்வாயில் ஜீவராசி உண்டாவென்று தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது புரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்"

"பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை பிடிக்கிறதே உன்முகம்தான்"

"பாறையில் செய்தது எந்தன் மனமென்று தோழிக்கு சொல்லியிருந்தேன்,பாறையின் இடுக்கில் வேர் விட்ட செடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்"

"உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா !! "

"இருகண்கள் பேசும் வார்த்தைகளை இருநூறு மொழிகள் சொல்வதில்லை"

"காதல் என்னும் ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் ஒரு உருவம் இல்லை"

"கண்ணோடு கண் சேரும்போது வார்த்தைகள் எங்கே போகும்,கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்"

"என்னைக் கேட்டு காதல்அது வரவில்லையே,நான் சொல்லி அது போகக் கூடுமோ ?"

"பூஞ்சோலை அமர்ந்து சென்றாள் கொஞ்ச நேரமே,சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே"

"எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம், எப்போதோ உன்னோடு நான் வாழ்ந்த ஞாபகம்"

"யாரிடத்தில் யாருக்கிந்த காதல் வருமோ, என்ன அந்த காதல் அது சொல்லி வருமோ"


இறுதியாக

"இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று "



 எது எப்படியோ ...... "எப்பூடியின் இனிய  காதலர் தின வாழ்த்துக்கள் "