tag:blogger.com,1999:blog-78564429570088904522024-02-21T12:22:20.769+05:30எப்பூடி.....சும்மா அதிருதில்லஅ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-40006582769236767552023-02-01T01:19:00.000+05:302023-02-01T01:19:22.518+05:30இது கதையல்ல நிஜம்.<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGBNSsNKIMyVi5xfGBe1GfAgHJ3_hJCBizMFdNfYO5-HVmIqc7mJcxqXgDfaGWZMDBVKpQXVgFWO9_EdZl2HGQocZZKWk6P4t03GpPNPsgJZnC6dDnFxkwsdsixQUL_liUbhX183Op3wY/s1600/MPj04402940000%5B1%5D.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGBNSsNKIMyVi5xfGBe1GfAgHJ3_hJCBizMFdNfYO5-HVmIqc7mJcxqXgDfaGWZMDBVKpQXVgFWO9_EdZl2HGQocZZKWk6P4t03GpPNPsgJZnC6dDnFxkwsdsixQUL_liUbhX183Op3wY/s400/MPj04402940000%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521663854798546258" /></a>
<br/><br/>
அப்போது அந்த சிறுமிக்கு ஐந்து வயதுக்கு உள்ளாகத்தான் இருக்கும், பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டியவயத்தில் தாய்,தந்தை இரண்டுபேரையும் இழந்து ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் அரவணைப்பில் ஒரு 'சிறுவர்கள் இல்லத்தில்' சேர்க்கப்பட்டாள். சொந்தம் என்று சொல்வதற்கு உறவுகளென்று யாருமில்லை, அங்கிருந்தே தனது பாடசாலை கல்வியை பயின்ற அந்த சிறுமி காலத்தின் வேகத்திற்கு இணையாக திருமண வயதை அடைந்தாள். கன்னிப்பருவத்தில் எல்லோருக்கும் வரும் காதல் உணர்வு ஒரு வாலிபன்மீது அவளுக்கு ஏற்படவே தான் விரும்பியவினையே கைப்பிடித்தாள்.
<br/><br/>
அதுதான் அவளுக்கு வாழ்க்கையில் ஏற்ப்பட்ட முதல்ப்பிடிப்பு, இவர்களது காதலின் அடையாளமாக ஒரு குழந்தையும் பிறந்தது. அன்பான கணவன், புதிதாக மழலை செல்வம், பணவசதி குறைவு என்றாலும் மனநிறைவான தனது இளம் (மழலை, குழந்தை, கன்னி) பருவத்தின் வெறுமையை பூரணப்படுத்தும் விதமாக குடும்பவாழ்க்கை அவளுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.
<br/><br/>
அப்போதுதான் அவளது வாழ்வில் மிகப்பெரும் பூகம்பம் வெடித்தது. சிலநாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவளது கணவர் காய்ச்சல் குறையாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஓரிருநாளில் இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டார். அவளால் அந்த துயரத்தை தாங்க முடியவில்லை, கணவன் இறந்து 30 நாட்களுக்குள் தான் தனது கணவரிடம் போய்ச் சேர்ந்துவிடுவேன் அன்று கூறியபடியே அழுதுகொண்டிருந்த அந்த அபாக்கியவதி மூன்றுமுறை தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டு இறுதியாக ஒருநாள் நள்ளிரவில் நான்காவது தடவையாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார். கணவன் பிரிந்து 30 நாட்களில் தன்னை மாய்த்தபோது தான் ஈன்ற மழலைக்கு வயது வெறும் 45 நாள்த்தான் என்பது அவருக்கு தெரியாததல்ல.
<br/><br/>
ஒருபக்கம் அவருக்காக அனுதாபப்பட்டாலும் அவரது தற்கொலையை சரியென்றும், தவறென்றும் இருவேறு பார்வையில் ஊர்மக்கள் விவாதித்தனர். தற்கொலை என்பது கோழைத்தனம், தனது குழந்தையை அவர் நினைத்து பார்த்திருக்கவேண்டும் என ஒரு பிரிவினரும், அவளும் என்னத்தை செய்வாள்? சிறுவயதில் இருந்து வெறுமையோடு வாழ்ந்தவளுக்கு கிடைத்த முதற்பிடிப்பு சொற்பநாளிலேயே தன்னைவிட்டு போனதை அவளால் எப்படி தாங்கமுடியும்? என்று இன்னொரு தரப்பும் தத்தமது தரப்பில் இருந்து நியாயத்தை பிளந்தாலும் அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்குமென்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். எது எப்பிடியோ இன்று அவளது குழந்தைக்கு அவளது நிலைதான், ஆம் பிறந்து 45 நாட்களில் அந்த குழந்தைக்கு கிடைத்த பெயர் அநாதை.
<br/><br/>
இந்த நிலைக்கு யார் காரணம்?(கடவுளா? இயற்கையா? விதியா?)
<br/><br/>
இவற்றில் உங்கள் நம்பிக்கைக்கு எது பொருந்துதோ அதை நீங்கள் எடுத்து கொள்ளலாம், ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் கவனக்குறைவுதான் முக்கியகாரணம். அப்படி இவர்கள் கவனக்குறைவாக இருந்தது யாரிடம்?/எதில் ?
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY0o1dSDJE4x7HjDcWSBC-H7iij4AyyAVd1fCkMFXqt-x7GUvLRPJfgF7ri3BBLZr_H8cLYQURQuMXjlDc62ryGvaFz8R0fsXimFhlnp0krHgFqazXuKrGhPEU8p5qloHB28T5JUz3iek/s1600/most-dangerous-mosquitoes-aedes-albopictus.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY0o1dSDJE4x7HjDcWSBC-H7iij4AyyAVd1fCkMFXqt-x7GUvLRPJfgF7ri3BBLZr_H8cLYQURQuMXjlDc62ryGvaFz8R0fsXimFhlnp0krHgFqazXuKrGhPEU8p5qloHB28T5JUz3iek/s400/most-dangerous-mosquitoes-aedes-albopictus.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521663859729683906" /></a>
<br/><br/>
<span style="font-size:180%;"><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">நுளம்பிடம்</span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"> </span></span>(வேடிக்கை அல்ல), ஆம் இவர்கள் கவலையீனமாக இருந்தது டெங்கு நோயை பரப்பும் <span style="font-weight: bold;">Aedes albopictus</span> என்கிற நுளம்பிடமும், காய்ச்சல் வந்ததும் உடனடியாக மருத்துவமனையை நாடாமல் தாங்களே மருந்துகளை வாங்கி உட்கொண்டு டெங்குநோய் கிருமிகளை வளரவிட்டதிலும்தான்.
<br/><br/>
காய்ச்சல் சாதரணமாக காய்ந்தாலே உடனடியாக மருத்துவரை நாடவேண்டும், இரண்டு நாட்களுக்குள் காய்ச்சல் விடாவிட்டால் இரத்த பரிசோதனை செய்யவேண்டும் என்று பலதடவைகள் பத்திரிக்கைகளில் எழுதியும் பலரும் இதை சாட்டை செய்யவில்லை. இதனால் கடந்த 6 மாதத்திற்குள் 25 இக்கும் மேற்பட்டவர்கள் டெங்கால் உயிரிழந்துள்ளனர், 4000 பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
<br/><br/>
வீடுகளில் வாய்க்கால்களில் நீரை தேங்கவிடவேண்டாம், நீர் தேங்கும் எந்த பொருட்களையும்(தேங்காய் சிரட்டைகள், யோக்கட் கிண்ணங்கள் போன்றன) தேக்கிவைக்கவேண்டாம், குப்பைகளை புதையுங்கள் அல்லது எரியுங்கள், அடர்த்தியான குரோட்டன் செடிகளின் இலைகளை கத்தரியுங்கள், புற்கள் வீட்டு முற்றத்திலோ வீட்டின் வெளிப்பகுதியிலோ இருந்தால் அவற்றை செருக்குங்கள் என சுகாதார உத்தியோகஸ்தர்களும் பொலிசாரும் இணைந்து ஒலிபெருக்கிகளில் வீதிகளில் பிரச்சாரம் செய்தபோது காதில் வாங்கிக்கொள்ளாத நம்மாளுகள் இப்போது சுகாதாரம் குறைவான வீடுகளை திடீரென சோதனைசெய்து அகப்படும் குடும்ப தலைவரை நீதிமன்றில் ஆஜர்செய்து குற்றப்பணம் அறவிடப்படுகின்றது என்றதும் ஓரளவு வீடுகளை சுத்தமாகவைத்திருக்க முயற்சிக்கின்றனர்.
<br/><br/>
இப்போது மழைகாலம் ஆரம்பித்திருப்பதால் தண்ணீர் தேங்குவதும், புற்கள் முளைப்பதும், குரோட்டன் செடிகள் வளர்வதும் முன்னைவிட அதிகமாக இருப்பதால் நுளம்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. டெங்கு ஒரு தொற்றுநோய் அல்ல என்பதால் அனைவரும் முடிந்தவரை உங்கள் வீடுகளையும் வீதிகளையும் சுத்தமாக வைத்திருந்தாலே டெங்கை குறைக்கலாம். சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்ப்பட்டாலே மருத்துவமனையை நாடுங்கள், நீங்களே வைத்தியராகாதீர்கள்.
<br/><br/>
இலங்கையின் வடபகுதியில் இயற்க்கை அழிவுகள் இல்லை, ஆயுதத்தாலான அழிவுகளும் இப்போது இல்லை என்பதால் இயற்கையை சமப்படுத்த ஏதாவதொரு ரூபத்தில் அழிவு வரத்தான் செய்யும். ஒருபக்கம் வீதிவிபத்துக்கள் ஆட்களை பதம் பார்த்தாலும்(இதுபற்றி ஒரு தனிப்பதிவு எழுதவேண்டும்) பெரும்பாலும் நோய்கள் வடிவிலே இயற்கை சமப்படுத்தப்படலாம் என்பதால் முடிந்தவரை துப்பரவாகவும் சுகாதாரமாகவும் இருக்கபாருங்கள்.
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">(</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">மேலுள்ள</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"> </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">சம்பவம்</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"> </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">பதிவுக்காக</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"> </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">எழுதப்பட்டதல்ல</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">, </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">அது</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"> </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">ஒரு</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"> </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">உண்மை</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"> </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">சம்பவம்</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">.)</span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-66351047928212541052016-04-04T23:23:00.000+05:302023-02-01T01:07:27.971+05:30பென் ஸ்ரோக்ஸ்ம் யோக்கரும்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<span style="color: blue;"><b><br />
</b></span> <span style="color: #20124d;"><b>யோக்கர்....</b></span><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR24ri7WhaySUCAeL1Hzb_HcNirGqHQJ0HuHFaaP-tZDGK39x7fSRgx7-fXAny68DtG27iwaRXmySOT4f2AB26GsGhsPUSivhNTQAxFm6GFOQ-wFnL5iTmXeU42jEjL_Mn8isiG_vNDbym/s1600/161575.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR24ri7WhaySUCAeL1Hzb_HcNirGqHQJ0HuHFaaP-tZDGK39x7fSRgx7-fXAny68DtG27iwaRXmySOT4f2AB26GsGhsPUSivhNTQAxFm6GFOQ-wFnL5iTmXeU42jEjL_Mn8isiG_vNDbym/s320/161575.jpg" /></a></div><br />
குட் லென்த், சோர்ட், ஃபுல் போல்கள் போல யோக்கருக்கு பந்தை பிட்ச் செய்யும் இடத்தை இதுதான் என வரையறைப்படுத்த முடியாது! போலரால் உண்மையில் யோக்கர் என்று ஒன்றை வீச முடியாது, பட்ஸ்மனை வேண்டுமானால் அந்தப்பந்தை யோக்கராக்கிக் கொள்ளும்படி செய்யமுடியும். பட்ஸ்மனின் ஸ்ரான்ஸ், மூவ்மண்ட் போன்றவற்றை வைத்து இந்தப்பந்தை பட்ஸ்மன் ஜோக்ட் ஆக்குவான் என்று எதிர்பார்த்து வீசுவதுதான் யோக்கரின் சிறப்பு!<br />
<br />
துடுப்பாட்ட வீரரால் மேற்கொள்ளப்படும் அசைவுகளாலும், வீசப்படும் பந்து சிறிது விலகினாலும் யோக்கர்கள் பரிதாபமாக்கப்பட்டுவிடும்! டெஸ்ட் மச் யோக்கர்கள் லிமிட்டர் ஓவேர்சிலும் சிறப்பானவை, எதிர்பார்க்காத நேரத்தில் வீசப்படும் யோக்கர்கள் கொடுக்கும் விக்கட்டுகள் அலாதியானவை. லிமிட்டட் ஓவர்சை பொறுத்தவரை டெத் ஓவர்களிலேயே அதிகமான யோக்கர்கள் வீசப்படும். சில சமயங்களில் யோக்கர்தான் வீசப்படும் என்று எதிர்பார்த்து நின்றாலும் பட்ஸ்மனால் யோக்கர்களை ஓட்டங்களாக மாற்ற முடியாத அளவுக்கு போலேர்சின் துல்லியம் இருக்கும்.<br />
<br />
எங்கள் காலங்களில் வசீம், வக்கார், அக்தர் என பாகிஸ்தான் வேகங்கள் ரிவேஸ் ஸ்விங் யோக்கர்களில் மிரட்டிய நாட்கள் மறக்க முடியாதவை, அதிலும் ட்டெயில் என்டேர்சுக்கு வசீம் அடிக்கும் சொலிட் யோக்கர்கள் சான்சே இல்லை! புதிய பந்தில் யோக்கரில் கலக்கியவர் இங்கிலாந்தின் டரன் கஃப்!, எனக்கு தெரிந்து கஃப் போன்று புதிய பந்தில் யோக்கரில் மிரட்டியவர்கள் யாருமில்லை, குறிப்பாக லெப்ட் ஹான்ட் பட்ஸ்மனுக்கு கஃப் சிம்மசொப்பனம்.<br />
<br />
இவங்களுக்கெல்லாம் அப்புறம்தான் வந்தான் மலிங்க! யோக்கர்களின் அத்தனை பரிமாணங்களையும் அலாதியாக கையாள்வதில் எனக்கு தெரிந்து மலிங்கவுக்கு நிகர் வேறு யாரும் இல்லையென்பேன். இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவேஸ் ஸ்விங் , (F)ப்லைட்டட் ஸ்லொவ், (F)ப்ளற் ஸ்லொவ் என யோக்கர்களை ஓப் ஸ்ரம், லெக் ஸ்ரம், மிடில் ஸ்ரம், 'அவுட் சைட் தி ஓப் ஸ்ரம்' என தான் நினைக்கும் ஏரியாவில் பந்தை வீசி பட்ஸ்மனை யோக்கராக்க வைக்க மலிங்கபோல் வேறெவராலும் முடியாது! <br />
<br />
<b><span style="color: #20124d;">மலிங்க - கோட் ஒஃப் யோக்கர் !!</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYacA1-yQlv3Ggt00USaHNN_aRiFh4EktI1UI1KDNUlM6hkmqRjqC01wayPQFYSngF5vvIsKPEzaAePIEjm5JIsRMqgqd3KifQiUbKaMMA6-31u8m-Uyv38LP5aD3xVQXVKHRaeOFIA6hq/s1600/i.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYacA1-yQlv3Ggt00USaHNN_aRiFh4EktI1UI1KDNUlM6hkmqRjqC01wayPQFYSngF5vvIsKPEzaAePIEjm5JIsRMqgqd3KifQiUbKaMMA6-31u8m-Uyv38LP5aD3xVQXVKHRaeOFIA6hq/s320/i.jpg" /></a></div><br />
இப்பேர்ப்பட்ட யோக்கர் ஸ்பெஷலிஸ்டான மலிங்கவையே யோக்கரை மறக்கும் அளவுக்கு அடித்து துவைத்த சாமுவேல்ஸின் இனிங்க்சை இலங்கை ரசிகர்கள் எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது! மலிங்க யோக்கர் எறியப்போகிறார் என்பதை எதிர்பார்த்து, சொட்டை அஜெஸ்ட் பண்ணியும், இம்ப்ரவைஸ் செய்தும் பெரும்பாலான பட்ஸ்மன்ஸ் தோல்வியையே கண்டிருந்த நிலையில்; சாமுவேல்ஸ் மட்டும் மலிங்காவின் யோக்கர்களை ஃபுல் லெந்தாக்கி வெட்டிய வெட்டுக்கள் அபாரம். சாமுவேல்ஸின் அந்த அஜஸ்மண்டுகள்தான் கிரிக்கட்டின் நுணுக்கங்கள்!<br />
<br />
யோக்கர்கள் பட்ஸ்மனால் சரியான முறையில் அஜெஸ்ட் செய்யப்பட்டால் ஃபுல் லெந்தாகவும், லோ ஃபுல்டோசாகவும் ஆக்கமுடியும்; ஆம் யோக்கர்கள் பட்ஸ்மன் நினைத்தால் இல்லாமல் செய்யப்படக் கூடியவையே! பல சமயங்களில் யோக்கர்கள் மிஸ் யோக்கர்கள் ஆகி ஃபுல்டோஸ் ஆகிவிடும்; சேட்டன் ஷர்மா யோக்கர் வீசப்போய் அது மிஸ்டாகி அடிக்கப்பட்ட மியாண்டாட்டின் சிக்ஸர் சரித்திரம். யோக்கர்கள் இறுதி ஓவர்களுக்கு தேவையானவைதான், ஆனால் அது வீசப்படும் சூழ்நிலை, வீசப்படும் வீரர், எதிர்கொள்ளும் வீரர், அப்போதைய காலநிலை என பல விடயங்கள் சார்ந்துதான் சாதக/பாதக முடிவை கொடுக்கும்.<br />
<br />
<b><br />
</b> <b><span style="color: #20124d;">பென் ஸ்ரோக்ஸ் - :</span></b> பைனல் ஓவர், இங்கிலாந்து யோக்கருக்கு திட்டமிட்டே தயாரானது, 19 ஓட்டங்களைக் கட்டுப்படுத்த யோக்கர் சிறந்த தெரிவுதான், ஆனால் காலநிலை பந்தை வழுக்கும் நிலையில் வைத்திருந்தது, முதல் பந்து மிஸ்ட் யோக்கராகி லெக் சைட்டில் பட் ரேஞ்சில் விழுந்தது, அதை அடிக்க பரத்வைட் தான் தேவை இல்லை, ஸ்லொக் பண்ண தெரிந்த யாருக்குமே அது ஆறுதான்! முதல் பந்து சிக்ஸ் ஆகியவுடன் நிச்சயம் லெந்தை மாற்ற யோசித்திருக்க வேண்டும், மாற்றவில்லை, இந்த தடவை யோக்கர் சரியாக விழுந்தது; ஆனால் அதை ஃபுல் லெந்தாக்கி பரத்வைட் வெளியே அனுப்பினார், இப்போது கூட ஸ்ரோக்கும் இங்கிலாந்தும் திட்டத்தை மாற்றவில்லை, மீண்டும் ஒரு யோக்கர், மீண்டும் பரத்வைட் அதை ஃபுல் லெந்தாக்கி வெளியே அனுப்பினார்!<br />
<br />
முதல் சிக்ஸ் உடன் நிச்சயம் லென்த் மாற்றம் அல்லது வேரியேஷன் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம் ஓஃப் ஸ்டம் யோக்கராவது ட்ரை பண்ணி இருக்கலாம், எல்லாம் முடிந்துவிட்டது! பரத்வைட் ஹீரோவாகிவிட்டார், இனிமேல் அவர் T/20 தனியார் சந்தைகளில் நல்ல விலை போவார். ஸ்ரோக்ஸ் கூட மனக் காயத்தில் இருந்து இலகுவில் மீண்டு வருவார்! அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின் இரு T/20 உலக கிண்ணமும் யோக்கர்களை சிதறடித்து பெறப்பட்டு வரலாறாகிவிட்டது :-)</div>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-15962811966484134322014-08-19T00:15:00.000+05:302023-02-01T01:07:34.648+05:30 மகேலவும், நானும், சில பசுமையான ஞாபகங்களும்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKy3UjKYZqdNqXx8uB2RO466JLh9ahosGJrFDFSoijT8pGEzFG5VYWx3xGewN32PBsHRH4rWPxVq2WM5Dvd8tGSWxtA6b4r9v2hXUHOl6cngjKF4OeWVU2nOt6PTbEoLLVQghwzYbEHG0_/s1600/ma.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKy3UjKYZqdNqXx8uB2RO466JLh9ahosGJrFDFSoijT8pGEzFG5VYWx3xGewN32PBsHRH4rWPxVq2WM5Dvd8tGSWxtA6b4r9v2hXUHOl6cngjKF4OeWVU2nOt6PTbEoLLVQghwzYbEHG0_/s1600/ma.jpg" height="320" width="204" /></a></div><br />
<br />
1997 - பகல் நேரங்களில் மின்சாரம் அற்ற யாழ்ப்பாணம், இரவில் அள்ளித்தெளிக்கும் சொற்ப நேரத்து மின்சாரத்தின் தயவில் அன்றைய எமது இரண்டு அலைவரிசைகளில் ஒன்றான டூடடர்சன் தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளின் விளையாட்டுச் செய்தி "இலங்கை அணி 39 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கினை இழந்துள்ளது, இந்தியா முன்னதாக எட்டு இலக்குகளை இழந்து 537 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது" என்கின்ற செய்தியை சொன்னது, எனக்கு இது அன்று ஒரு சாதாரண செய்தி! டூடடர்சனின் தமிழ் செய்திகளில் கிரிக்கட் வீரர்களின் பெயர்களின் உச்சரிப்புக்கள் வேறுமாதிரியாக சொல்லப்படும், கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் (உதாரணமாக மறவன் அட்டப்பட்டு, நாதன் ஆஸ்லே, மார்க் & ஸ்டீவ் வா) <br />
<br />
மறுநாள் இரவுச் செய்திகளில் ஓட்ட எண்ணிக்கை சற்று கவனத்தை ஈர்த்தது, மேலதிக இலக்குகள் இழப்பின்றி அன்றைய நாளை இலங்கை 322 ஓட்டங்களைப் பெற்று நிறைவு செய்திருந்தது! ஆனால் மறுநாள் செய்திகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது; அந்தநாள் முடிவிலும் மேலதிக விக்கட்டுகள் வீழ்த்தப்படவில்லை. சனத் ஜெயசூர்யா 326 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் , கூடவே ரொஷான் மகாநாம 225 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், அப்போது இலங்கை 587 ஓட்டங்களை பெற்றிருந்தது! அனைத்து இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் அன்றைய நாளின் ஒரே எதிர்பார்ப்பு; சனத் ஜெயசூர்யா நாளை டெஸ்ட் போட்டிகளின் இன்னிங்க்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய தனிமனித ஓட்ட சாதனையான பிரைன் லாராவின் 375 ஓட்டங்களை முறியடிப்பாரா என்பதுதான்! <br />
<br />
காலைப் பொழுதும் புலர்ந்தது, மணி பத்தை எட்டியது. மின்சாரமற்ற நேரங்களில் டின்னரை மோர்ந்து பார்க்கக் கொடுத்து, ஏமாற்றி மண்ணெண்ணையில் இயங்க வைக்கப்பட்ட ஜெனரேட்டர் துணைகொண்டு; ஆங்காங்கே சில வீடுகளில் பல ரசிகர்கள் ஆவலோடு பாத்திருக்க சனத் 340 ஓட்டங்களில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்! கூடவே பல ஜெனரேட்டர்களும் நிறுத்தப்பட்டுவிட்டன! மாலையில் இலங்கை பெற்ற இமாலய ஓட்டங்களான 952/6 சாதனை எண்ணிக்கை; நாம் ஊரில் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்தில் பேசப்படுகின்றது! கூடவே அரவிந்தவின் சதம், அர்ஜுனவின் அரைச்சதம், கூடவே ஒரு புதுப்பெயர் பெற்ற அரைச்சதம், அந்தப்பெயரை முதல் முதலில் கேட்ட தருணம் அதுதான்!! - மகேல ஜெயவர்த்தன<br />
<br />
"19 வயது சின்னப் பெடியன் நல்லா விளையாடினான்" என்று அவர்கள் பேசும் போது; அன்று யாரவன் என ஏற்பட்ட எதிர்பார்ப்பு, இன்று 17 வருடங்கள் ஆகியும் ஒவ்வொரு தடவையும் மகேலவை கிரீசில் காணும்போதெல்லாம் இம்மியளவும் குறையவில்லை!! மகேல என்னும் சொல் வெறும் பெயராக அல்ல, 17 ஆண்டுகள் என்னோடு கைகோர்த்து, நீங்கா நினைவாக, பசுமையான பசுமரத்து ஆணிபோல் பயணித்த ஓர் அற்புத நிகழ்வு! அந்த நிகழ்வின் சில துளிகளையும், மெய் சிலிர்ப்புக்களையும், பெருமைகளையும் பகிரலாமென்று நினைக்கிறேன்!!<br />
<br />
காயம் காரணமாக அணியில் இல்லாமல்போன ஹஷான் திலகரத்னாவுக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பில்; இலங்கையின் 69 ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகமாகி தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடிய மகேலவுக்கு; மூன்றாவது போட்டியை ஆடும் வாய்ப்பு பத்து மாதங்களுக்கு பின்னரே மீண்டும் கிடைக்கப்பெற்றது, இம்முறை நியூசிலாந்துக்கு எதிராக. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளும் மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன! இவ்விரு போட்டிகளுமே மகேலவின் மீதான நம்பிக்கையை தேர்வாளர்களுக்கும் , ரசிகர்களுக்கும் அதிகப்படுத்தியது. எதிர்கால இலங்கை கிரிக்கட்டைக் கலக்கப்போகும் நாயகனாக மகேலவின் பெயர் இலங்கை டெஸ்ட் அணியில் உறுதிசெய்யப்பட்டதும் இத்தொடரில்தான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1x1q1A78mktlvLZ3w6RIAxdgOMx4Gau2RZx87X5hWjwV4z7W3h_EpTWJfokdEdAqonUtWW-JebzgLsDu7gtlcTcUX6CR5UUPoTggDfvURhoQ3gHo2LM0mhyphenhyphenSfDNLMFZ2NNS4EQcds8HYd/s1600/62555.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1x1q1A78mktlvLZ3w6RIAxdgOMx4Gau2RZx87X5hWjwV4z7W3h_EpTWJfokdEdAqonUtWW-JebzgLsDu7gtlcTcUX6CR5UUPoTggDfvURhoQ3gHo2LM0mhyphenhyphenSfDNLMFZ2NNS4EQcds8HYd/s1600/62555.jpg" height="320" width="229" /></a></div><br />
<br />
பகல் நேரத்திலும் மின்சாரம் வழங்கப்பட ஆரம்பித்த புதிது, முதல் முறையாக இலங்கையின் ஆசுவாசமாக ஒரு டெஸ்ட் போட்டியை பார்க்கக் கிடைத்தது! முதல் இன்னிங்சில் மகேல 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும்; இலங்கை போட்டியின் தோல்வியைத் தவிர்க்க போராடிய வேளையில், அரவிந்த டீ சில்வாவுடன் இணைந்து தடுப்பாட்டம் ஆடிய மகேல 255 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் (SR - 21.17), இலங்கைக்கு இந்தப்போட்டி தோல்வியில் முடிவடைந்திருந்தது!! அடுத்த டெஸ்ட் போட்டி காலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது, இலங்கையின் இன்றைய பிரபலமான அழகிய டெஸ்ட் மைதானமாக விளங்கும் காலி மைதானத்தின் முதல் சர்வதேசப்போட்டி அதுதான்! <br />
<br />
முதல் போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்க காத்திருந்த இலங்கைக்கு அந்தப்போட்டியில் கிடைத்ததோ இன்னிங்ஸ் வெற்றி!! ஆட்ட நாயகன் வேறுயாருமல்ல, 20 வயதேயான இளம் நட்சத்திர வீரர் மகேல தான்!! சனத், மார்வன், அரவிந்த, அர்ஜுன, ஹஷான், களுவிதாரண என இலங்கையின் அனுபவ/பிரபல வீரர்கள் சரியச்சரிய, மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய மகேல மட்டும் நிலைத்து நின்று 278 பந்துகளில் 167 ஓட்டங்களை (SR - 60) குவித்திருந்தார், இலங்கை சார்பில் வேறு எந்த வீரரும் 40 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை, நியூசிலாந்தின் நதன் அஸ்டில் பெற்ற 53 ஓட்டங்கள்தான் அந்தப்போட்டியில் பெறப்பட்ட ஒரே அரைச்சதம்! பந்துவீச்சுக்கு சாதகமான காலி ஆடுகளத்தில் மகேல பெற்ற இந்த 167 ஓட்டங்கள் மகேலவின் எதிர்காலத்தையும், இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலத்தையும் எதிர்வுகூறியது! அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் முரண்பட்ட இனிங்ஸ்களை ஆடி இருபது வயதிலேயே தன்னை ஒரு முதிரிந்த நுணுக்கமான வீரராக வெளிக்காட்டியிருந்தார் மகேல! <br />
<br />
மகேலவின் ஏழாவது டெஸ்ட் போட்டி, அது ஆசிய கிண்ணத்துக்கான டெஸ்ட் போட்டி. அப்போது பாடசாலையில் இலங்கை இந்திய கிரிக்கட் ரசிகர்களின் மோதல் உச்சத்தில் இருந்த நேரம்! இலங்கை தோற்றால் மறுநாள் பாடசாலையில் என்னைச் சுற்றி இந்திய ரசிகர் கூட்டம் சர்க்கரையை மொய்க்கும் ஈக்களாய் குழுமிவிடுவார்கள், எப்படி அவர்களின் வாயை அடைப்பது என்பதை சிந்திப்பதில் தூக்கம் தொலைத்த இரவுகள் பல! அதேநேரம் இந்தியா இலங்கையிடம் தோற்றுவிட்டால் புரட்டாதிச் சனிக் காக்கைகள் போல ஒரு இந்திய ரசிகனும் கண்ணில் அகப்படமாட்டார்கள், அகப்பட்டால் அன்று அவர்களுக்கு சனிதான்.<br />
<br />
<br />
முதல் இரு நாட்களும் இந்தியா புரட்டிப்போட்டிருந்தது, 500 ஓட்டங்களுக்குமேல் குவித்த இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை தொடர்ந்த இலங்கையின் இலக்குகள் ஒரு முனையில் சாயச்சாய மறுமுனையில் 3 ஆம் இலக்கத்தில் களமிறங்கிய இளம் சிங்கம் மகேலவின் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவின் வரலாற்றுச் சுழல்பந்துவீச்சாளர்களான கும்ளேயும் ஹர்பஜனும் வீசிக்கொண்டிருக்க, மிகச் சிறப்பான நுணுக்கமான துடுப்பாட்டத்தின் மூலம் 242 ஓட்டங்களை மகேல குவித்தார். அனைத்து திசைகளிலும், அனைத்து விதமான கிரிக்கட் ஷொட்களையும் அழகாக விளையாடும் மகேலவின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு நளினம் இருந்தது! <br />
<br />
<br />
ஒருசில வீரர்களுக்குத்தான் ஸ்டைல் இயல்பிலேயே இருக்கும்; உதாரணமாக சொல்வதானால் மார்க் வோ, அசாருதீன் போன்றோரை சொல்லலாம், மகேலவிடமும் ஸ்டையில் இயல்பிலேயே இருந்தது, அது துடுப்பாடும்போதும் சரி, களத்தடுப்பின் போதும்சரி அன்றிலிருந்து இன்றுவரை மாறாத அழகு! ஒவ்வொரு ஷொட்களையும் மகேல விளையாடும் நேர்த்தி கிரிக்கட்டை காதலிக்கும் எவருக்கும் சிலிர்ப்பைக் கொடுக்கும்; அதனால்தான் If Cricket is an Art, Mahela is Picasso என்று பெருமைப்படுத்தி சொல்வார்கள். அந்த சிலிர்ப்பை ஓட்டங்குவிக்கும் ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் மகேல உணரவைத்திருப்பார். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8RedakxgCFoobX9r9nGAp0DoZMvwUkA7Qn_fNIp14_pouy3DJgU4eh5093VowVhlUUekdF66zu6jecw0MTraXKfQ9rzth2MRoTfF-RSrsR6VoP7hm3pm4jZ6WlTFsMdH1MIeq2WTLIR0B/s1600/3390490848_f534aaaa24.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8RedakxgCFoobX9r9nGAp0DoZMvwUkA7Qn_fNIp14_pouy3DJgU4eh5093VowVhlUUekdF66zu6jecw0MTraXKfQ9rzth2MRoTfF-RSrsR6VoP7hm3pm4jZ6WlTFsMdH1MIeq2WTLIR0B/s1600/3390490848_f534aaaa24.jpg" height="320" width="229" /></a></div><br />
1999 உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஆடும் VB முக்கோணத்தொடர் இடம்பெறவிருந்தது. டெஸ்ட் வீரராக மட்டும் கணிக்கப்பட மகெலவை ஒருநாள் போட்டிகளுக்கும் பொருத்தமான வீரராக அடையாளம் காட்டியது இந்தத் தொடர்தான். VB தொடருக்கான இலங்கைக்கான குழாமில் முதற்சில போட்டிகளில் அரவிந்த டீ சில்வா சில காரணங்களுக்காக ஆடமுடியாத நிலை ஏற்படவே; அரவிந்தவிற்கான மாற்றீடாக இறுதி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார் மகேல! தொடரின் முதல் சில போட்டிகளில் சோபிக்காவிட்டாலும்; மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கியமான ஒரு போட்டி மகேலவிற்காக இந்தத் தொடரில் காத்துக்கொண்டிருந்தது! <br />
<br />
இலங்கை யின் ஓர் தனியார் தொலைக்காட்சி போட்டிகளை ஒளிபரப்பியது, அவற்றை நேரடியாக பார்க்கும் வசதிகள் அப்போதைய யாழ்ப்பாணத்தில் இல்லை! பலாலியை மையமாக கொண்டு இயங்கிய இராணுவத்தினரின் தொலைக்காட்சியில் முதல் நாள் போட்டிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மறுநாள் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பப் போட்டிகளின் தோல்வி VB தொடர்மீது ஆர்வத்தை குறைத்திருந்தது, இந்நிலையில் ஒருநாள் மாலை உறவினர் வீடு ஒன்றிற்கு நானும் தம்பியும் சைக்கிளை மிதித்தபடி சென்றுகொண்டிருந்தோம். அப்போது மனோகரன் அண்ணை மறித்தார். மனோகரன் அண்ணை - பாடசாலைக்கு பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர், எங்களுக்கு எட்னா (EDNA) சாக்லேட் விற்றே பணக்காரனாகியிருப்பார் :-) எட்னா கவருக்குள் வரும் கிரிக்கெட் வீரர்களது ஸ்டிக்கர்கள் அப்போது இங்கு மிகப்பிரபலம்! அதிலும் 20 ரூபா எட்னா ஸ்டிக்கர்தான்; ஸ்டிக்கர் சேர்க்கும் அனைவரும் விரும்புவது. சில நேரங்களில் ஸ்டிக்கரை செலக்ட் செய்யப்போவதாக சொக்லேட்களை வாங்கி; ஸ்டிக்கர் திருட்டுகளும், எங்களிடம் டபிளாக இருக்கும் ஸ்டிக்கர்களை மாற்றி வைக்கும் சம்பவங்களும் நடைபெறும் :-)<br />
<br />
வழிமறித்த மனோகரன் அண்ணன் "எப்பிடி அடி? குடுத்து விட்டாங்கள், 300 ஐக் கலைச்சிட்டாங்கள்" என்றார். ஆர்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க யார் அடித்தது என்று ஒரே குரலில் நானும் தம்பியும் கேட்டோம், அவர் "மாக்கட ஜெயவர்த்தன" என்றார்! இன்றுவரை மகேலவை செல்லமாக 'மாக்கட' என்று எங்களுக்குள் அழைப்பதுண்டு :-) மனோகரன் அண்ணையிடம் விடைபெற்று வீடு திரும்பும் வரை எங்களுக்கிருந்த மகிழ்ச்சி, மறுநாள் ஒளிப்பதிவு ஒளிபரப்பப்படும்வரை காத்திருந்த நிமிடங்களின் நீளங்கள் என்பன சொல்லிப் புரியாதவை! <br />
<br />
அன்று 1999 ஜனவரி 23 - இலங்கைக் கிரிக்கட்டின் மறக்கமுடியாத ஓர்நாள்! VB தொடரில் இலங்கை இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி அடிலைட் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை பந்துவீசிக் கொண்டிருந்தது. போட்டியின் 18 ஆவது ஓவரின் நான்காவது பந்தை முரளிதரன் வீசிக்கொண்டிருந்தபோது; போட்டியின் இரண்டாம் நடுவராக (Square Leg Umpire) கடமையாற்றிக் கொண்டிருந்த 'ரோஸ் எமர்சன்' என்ன நினைத்தாரோ தெரியவில்லை, முரளி வீசிய அந்தப் பந்தை முறைதவறி வீசப்பட்டதாக அறிவித்தார், காரணம் முரளியின் பந்துவீசும் முறை என சொல்லப்பட்டது! <br />
<br />
தலைமை என்றால் என்ன? ஒரு அணித் தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான விடை அன்று கிடைத்தது! சில நொடிகளில் ரோஸ் எமர்சனுக்கும் அர்ஜுனவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. அர்ஜுனாவின் முகத்தில் கடும் கோபம் தெரிந்தது,சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர் அர்ஜுன இலங்கை அணியை கூட்டிக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு சென்றுவிட்டார். உடனடியாக இலங்கை அணியின் முகாமையாளரும், போட்டி மத்தியஸ்தரும் இலங்கைக் கிரிக்கட் சபையுடன் பேசி ஒருவழியாக சமரசம் ஏற்பட்டது. முரளி தொடர்ந்து பந்துவீசுவதாக முடிவெடுக்கப்பட்டது, ஆனால் ரோஸ் எமர்சன் முதல் நடுவராக இருக்கும் திசையிலிருந்தே பந்து வீசுவதென்று முடிவு செய்யப்பட்டது! (முதல் நடுவருக்கு பந்துவீசும் முறை பற்றி முடிவெடுக்க அதிகாரமில்லை) முரளி பந்து வீச வருகிறார் around Through வழியாக பந்துவீச ஆரம்பிக்கிறார், எமர்சன் விக்கட்டுக்கு சற்று பின்னே நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார், அவர் முரண்டு பிடிக்கிறார், அர்ஜுன மீண்டும் சிங்கமாகிறார், இம்முறை எமர்சன் பின்வாங்குகிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsLEfUA26zw1rnp8yCaDrjCjCrCEhSDQDnkgYp-L3CbJvLB6XCslCUZRXskcD5h6SIWgwz4IjS2nfcTZHdPLNAkwRDuk0oJ4w2X3gUjAKjNRL3C_-3b41H3IP0FDsk_XTx1eXAQXGlUdA6/s1600/97699.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsLEfUA26zw1rnp8yCaDrjCjCrCEhSDQDnkgYp-L3CbJvLB6XCslCUZRXskcD5h6SIWgwz4IjS2nfcTZHdPLNAkwRDuk0oJ4w2X3gUjAKjNRL3C_-3b41H3IP0FDsk_XTx1eXAQXGlUdA6/s1600/97699.jpg" height="320" width="223" /></a></div><br />
<br />
ஆனால் முரளியின் பந்தினை இங்கிலாந்தின் கிராம் ஹிக் பதம் பார்க்க தொடங்குகிறார், ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்தின் பக்கம் இலகுவில் திரும்புகிறது, 302 ஓட்டங்களை இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் பெற்றுக்கொள்கின்றது! அன்றைய தேதியில், அதிலும் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவொரு மிகப்பெரும் இலக்கு! இலக்கினை நோக்கி இலங்கை அடியெடுத்துவைக்க நினைக்கையில் ஓட்டம் பெறாமல் களுவிதாரண Run-out ஆகிறார், அடுத்துவந்த அத்தப்பத்துவும் உடன் வெளியேற, திலகரட்ணவின் ஆமைவேக ஆட்டத்தை தன் அதிரடியால் சமப்படுத்திய சனத்; வேகமாக 36 பந்துகளில் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்கிறார்; அப்போது இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்கள்!<br />
<br />
நட்சத்திர வீரர் அரவிந்த டீ சில்வா இல்லாத நிலையில்; இந்தப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கனி வாய்ப்பு எட்டாக்கனி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது. அப்போதுதான் மைதானம் நுழைந்தான் அந்த 20 வயது இளைஞன். ஹஷான், அர்ஜுன என இரு அனுபவங்களும் துணை நிற்க அற்புதமான சதத்தை கடந்தான் அந்த இளம் சிங்கம், எங்கள் மகேல! அனுபவ இங்கிலாந்தை அன்னியமண்ணில் ஒரு உணர்ச்சிமிக்க போட்டியில் பந்தாடிய மகேல 111 பந்துகளில் 120 ஓட்டங்களை குவித்து வெளியேறினார்! உப்பிள் சந்தனவின் அதிரடி கைகொடுக்க வெற்றிக்கான ஓட்டத்தை அன்றைய சர்ச்சை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொடுக்க இலங்கை உணர்ச்சிபூர்வமான வெற்றிக்கனியை பறித்தது, ஆட்டநாயகனாக 20 வயதான மகேல. <br />
<br />
தொடர்ந்து வாசிம் அக்ரம், சொகைப் அக்தர், சக்லின் முஸ்டாக் என பலமான பாகிஸ்தான் பந்து வீச்சு வரிசையை எதிர்கொண்டு மகேல பெற்றுக்கொண்ட அவரது இரண்டாவது ஒருநாள் சதமும் மகேலாவின் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்று! இந்தப்போட்டியைக் காண 10 Km வரை சைக்கிள் மிதித்து நண்பன் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன், மின்கலத்தில் இயங்கும் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் பார்த்த அந்த இனிங்ஸ்சும், நினைவுகளும் இன்னமும் பசுமையாக உள்ளது, 99 ஓட்டங்களில் மகேல Run-Out இல் இருந்து மயிரிழையில் தப்பியதுகூட! <br />
<br />
அடுத்து உலகக் கிண்ணம் 1999, நடப்பு சாம்பியனாக போட்டிகளில் பங்கேற்ற இலங்கைக்கு மிகப்பெரும் அடி காத்திருந்தது, முதற் சுற்றுடன் வெளியேறியது இலங்கை. அதிலும் இந்தியாவுடனான படுதோல்வி பாடசாலையில் இலங்கை ரசிகர்களான எமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது!! உலகக் கிண்ண தோல்வியைத் தொடர்ந்து 1996 இல் கொண்டாடப்பட்ட நாயகர்கள்மீது கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இலங்கை கிரிக்கட் தமது அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியது, முதற்கட்டமாக இலங்கைக் கிரிக்கட்டின் தூண்களான அரவிந்த, அர்ஜுன இருவரும் ஒருநாள் அணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். புதிய தலைவராக சனத் ஜெயசூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார், உலகக்கிண்ணப் போட்டிகளில் ஓரளவேனும் ஓட்டம் குவித்திருந்த ரொஷான் மகாநாம கிரிக்கட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது, காரணம் தலைமைப் பதவி கிடைக்காதது என்று பேசப்பட்டது! <br />
<br />
<br />
உலகக்கிண்ண போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காவிட்டாலும் இலங்கை சார்பாக கணிசமான ஓட்டங்களை பெற்றிருந்த மகேலவின் துடுப்பாட்டம் எல்லோரையும் கவர்ந்திருந்தது! இலங்கை கிரிக்கட்டும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மகேலவை அணியின் உபதலைவராக அறிவித்தது. 20 வயதில் இது மகேலவிற்கு ஒரு மிகப்பெரும் அங்கீகாரம். சனத் தலைமையிலான அணி; எடுத்த எடுப்பிலேயே இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா பங்குகொண்ட முக்கோணத் தொடரை சொந்தமண்ணில் வெற்றி கொண்டதோடல்லாமல், முதல்தர அணியான அவுஸ்திரேலியாவுடன் முதல் போட்டி மற்றும் போட்டித் தொடர் வெற்றியையும் பதிவு செய்தது!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT3EzJrFlBWTO9voMtCKg8EVZtBncYAkKhha5o3_UUIgZw37bKY5WxKYUpJ6sod9SUDh8iVr0MRGXBfUXK9UvLFUEyV1C4rfgSwgSJYHfm8NEh4lmXXkX4Cr5ZS9LAVDjDM3dUrYl24bHx/s1600/97683.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT3EzJrFlBWTO9voMtCKg8EVZtBncYAkKhha5o3_UUIgZw37bKY5WxKYUpJ6sod9SUDh8iVr0MRGXBfUXK9UvLFUEyV1C4rfgSwgSJYHfm8NEh4lmXXkX4Cr5ZS9LAVDjDM3dUrYl24bHx/s1600/97683.jpg" height="320" width="300" /></a></div><br />
<br />
மகேலவின் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆளுமை அதிகரித்துக்கொண்டு சென்றாலும் ஒருநாள் போட்டிகளில் மகேலவின் ஓட்டக்குவிப்பு சராசரியாகவே இருந்து வந்தது. தனது விக்கட்டை தானே தூக்கியெறியும் விதமாகவே பல ஒருநாள் போட்டிகளை மகேல ஆடிக்கொண்டிருந்தார்! முக்கிய தருணங்களில் நிதானமாக பொறுப்பாக ஆடும் திறன், சாதாரண நேரங்களில் மகேலவிடமிருந்து வெளிப்படுவதில்லை, நிலைத்து நிற்கும் இனிங்ஸ்களிலும், 40 ஓவர்களைக் கடந்துவிட்டால்; ஒவ்வொரு பந்தையும் அடித்தாட வேண்டும் என்கின்ற மனநிலையில் காணப்படுவார். தனது இந்த இயல்பை அவர் இறுதிவரை மாற்றவில்லை! அதனை மாற்ற முடியாதுள்ளதாக மகேலவே கூறியிருந்தார். மகேல ஆடியிருக்கும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கைக்கும், அவர் திறனுக்கும் அவர் பெற்ற ஓட்டங்கள் குறைவானவையே! <br />
<br />
இந்நிலையில் 2000 ஆம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை கிரிக்கட்டால் மகேலவின் உபதலைவர் பதவி மீளப்பெறப்பட்டு, அத்தப்பத்து உபதலைவராக்கப்பட்டார். மகேலவின் துடுப்பாட்டத்தை சீர் செய்யவே இந்த முடிவு என்று சொல்லப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தை மகேல பெற்றிருந்தார். அடுத்து தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல்ப் போட்டியில் மிகச் சிறப்பான இனிங்க்ஸ் ஒன்றை ஆடி மீண்டும் ஒரு 167 ஓட்டங்களை காலி மைதானத்தில் குவித்தார், 165,166,167 ஓட்டங்களில் மகேல 5 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அர்ஜுனவின் இறுதி இனிங்ஸில்; அவருடன் இறுதிவரை களத்தில் இணைந்து ஆடி, மற்றொரு சதத்தையும் அதே தொடரில் பெற்றுக்கொண்டார்!<br />
<br />
இலங்கையின் அடுத்த தொடரின் முதல் போட்டி தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டேர்பன் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இனிங்ஸில் மகேல 98 ஓட்டங்களை பெற்றவேளையில் ஆட்டமிழந்தார், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆட்டமிழப்பு இது. அனைத்து டெஸ்ட் விளையாடும் நாடுகளுடனும் சதமடித்துள்ள மகேலவிற்கு; வெறும் 2 ஓட்டங்களால் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் சதமடித்திருக்கும் வீரர்கள் பட்டியலில் இணையும் வாய்ப்பு இறுதிவரை அமையவில்லை. <br />
<br />
தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சதங்களுடன் ஓட்டங்களைக் குவித்துக்கொண்டிருந்த மகேலவிற்கு மற்றுமொரு மைல்கல் 2002 ஆம் ஆண்டு கடந்தது. கிரிக்கட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் சதமடித்து, டெஸ்ட் கிரிக்கட் விளையாடும் வீரர்களின் முக்கிய கனவுகளில் ஒன்றை நிறைவேற்றினார். பின்னர் 2006 இல் மீண்டும் ஒரு சதம் மகேலவால் லோட்சில் பெறப்பட்டது. போட்டியின் நான்காம், ஐந்தாம் நாட்களில் போட்டியை சமநிலையில் கொண்டு செல்ல, மகேல போராடியபோது கிடைத்த சதமது. மகேல மற்றும் பின்வரிசை வீரர்களால் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. ஆசிய வீரர்களில் வெங்காஸ்கர்(3 சதம்) தவிர்த்து மகேல மட்டுமே லோட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் அடித்த வீரர் என்கின்ற பெருமையை பெற்றுள்ளார்.<br />
<br />
2003 - உலகக் கிண்ணம் ஆரம்பமாகியது, பெரும்பாலான முக்கோணத் தொடர்களைக் கைப்பற்றி; சனத் தலைமையில் சாதித்துக் கொண்டிருந்த இலங்கை அணிமீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை கென்யாவுடனான தோல்வியை விடுத்து பார்த்தால், அரையிறுதிவரை முன்னேறியது உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை கௌரவமான பெறுபேறுதான். ஆனால் அறையிறுதித் தோல்வி ஜீரணிக்க முடியாமல் போனது நிதர்சனம். 213 எனும் வெற்றி இலக்கு நிச்சயம் எட்டப்பட கூடியதே, ஆனால் இலங்கையால் போட்டியை வெற்றிகொள்ள முடியவில்லை. இந்த உலகக் கிண்ணம் மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையின் ஓர் மோசமான அத்தியாயம். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoYr89UrWfNu8KFfwCofEPBV1zwUc7vUBpR1QOTLtzim0effBhEwUbDEBUsE2END_FoOjnZj5OGg-zIPZ5cTJEpa7O2k4TPRSpIBKzKMok-uu0AzIZ8dcZm61Ibsy-AypQNsr2OE2niZ8R/s1600/Mahela+Jayawardene.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoYr89UrWfNu8KFfwCofEPBV1zwUc7vUBpR1QOTLtzim0effBhEwUbDEBUsE2END_FoOjnZj5OGg-zIPZ5cTJEpa7O2k4TPRSpIBKzKMok-uu0AzIZ8dcZm61Ibsy-AypQNsr2OE2niZ8R/s1600/Mahela+Jayawardene.jpg" height="248" width="320" /></a></div><br />
<br />
2003 உலகக் கிண்ணப் போட்டிகளில் மகேல எட்டு இனிங்ஸ்களில் ஆடி 22 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார், இது அந்தத் தொடரின் இரண்டாவது மோசமான ஓட்ட எண்ணிக்கை. பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹாக் மகேலவை விட குறைவான எண்ணிக்கையில் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மகேலவின் மீது அதிருப்தி அடைந்த இலங்கைக் கிரிக்கட், அடுத்தசாஜா தொடருக்கான குழாமில் மகேலவை இணைக்கவில்லை! இது மகேலவிற்கு மட்டுமல்ல, அவர் ரசிகர்களான எமக்கும் ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்தது. மகேலவை பிடிக்காதவர்கள், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கை அஸ்தமனம் என்றே பேசிக்கொண்டனர். நாமோ மகேலவை மீண்டும் காணும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தோம்.<br />
<br />
அடுத்த தொடராக இலங்கைக்கு நியூசிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்துடன் ஆடும் இலங்கை 'கிரிக்கட்சபை அணி' அறிவிக்கப்பட்டது, அதில் மகேலவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. கூடவே நீண்ட நாட்களாக அணியில் இல்லாதிருந்த களுவிதாரணவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் நான் கொழும்பில் ஒர் அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், குறிப்பிட்ட பயிற்சிப் போட்டியன்று வேலைக்கு போக்குக் காட்டிவிட்டு, நண்பன் ஒருவனை வலிந்து அழைத்துக்கொண்டு, போட்டி நடைபெறும் NCC மைதானத்திற்கு சென்றோம், முழுக்க முழுக்க மகேலவிற்காக! <br />
<br />
எமது ராசி நன்றாக இருந்திருக்கவேண்டும், ஏனெனில் இலங்கைதான் துடுபெடுத்தாட ஆரம்பித்திருந்தது. ரசல் ஆர்னோல்ட், டில்ஷான் என பிரபல வீரர்கள் ஆட்டமிழக்க, 4 ஆம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். எனக்கு பயங்கரமான பதட்டம்! ஷேன் பொண்ட், ஜேகப் ஒராம் வீசிய வேகங்களுக்கு மகேல தடுத்தாடிய அவரது விருப்பத்துக்குரிய Forward Defense பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. <br />
<br />
வைஸ்மனின் ஓவர் ஒன்றில் காலியாக இருந்த மிட் விக்கட் திசையை குறிவைத்த மகேலவின் முயற்சி பலனளிக்க, அங்கு அற்புதமான இனிங்க்ஸ் ஒன்று என் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்தேறியது. திருப்திகரமான சதம் ஒன்றை மகேல நிறைவு செய்துவிட்டு ஆட்டமிழந்தார். அன்றைய எல்லையற்ற என் மகிழ்ச்சி 10 ஆண்டுகள் கழித்து இப்போதும் உணரக்கூடியது, அந்தப்போட்டியில் 57 ஓட்டங்கள் பெற்று, மகேலவுடன் டெஸ்ட் அணியில் களுவிதாரண இடம்பிடித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. <br />
<br />
முதல் டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 515 ஓட்டங்களை குவித்திருந்தது. மூன்றாம்நாள் ஆட்டத்தைக் காண மைதானம் செல்ல முடிவெடுத்திருந்தேன், மைதானம் செல்ல பம்பலப்பிட்டியில் இருந்து 154 இலக்க பேரூந்தில் சென்று, பொரளை சந்தியிலிருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, முன்னால் உள்ள சிறிய வீதியில் செல்ல ஆட்டோவுக்கு 40 ரூபா கொடுத்தால் போதும், 40 ரூபாயை மிச்சப்படுத்த சில சமயம் நடத்தும் சென்றிருக்கிறோம்! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuPRrXfI7vBJicWNM5I1zYQmhiXccsTt0xJqX09MKW-VfeKSfABqZZlnZJpi6xc1so-eocQDwbdTCTRlphNnHTAEowHOF4Nw4cGXvg9QuJPjpa8uGrU6qBMOjhCtwICBADMXvLI8OrU-nY/s1600/Wallpaper_13%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuPRrXfI7vBJicWNM5I1zYQmhiXccsTt0xJqX09MKW-VfeKSfABqZZlnZJpi6xc1so-eocQDwbdTCTRlphNnHTAEowHOF4Nw4cGXvg9QuJPjpa8uGrU6qBMOjhCtwICBADMXvLI8OrU-nY/s1600/Wallpaper_13%5B1%5D.jpg" height="256" width="320" /></a></div><br />
<br />
அன்றையதினம் துடுப்பாட்டத்தில் இலங்கையும் நன்றாக ஆடியது, எதிர்பார்க்கப்பட்ட மகேலவும் களுவிதாரணவும் அரைச்சதம் கடந்தனர். போட்டி நிறைவடையும் நேரம் நெருங்க மழையும் ஆரம்பித்தது, அதிகமாக மைதானத்தில் தூங்கும் ஹஷான் திலகரட்ன; சதமடித்த பின்னர் வேகமாக ஓட்டங்குவிக்க, மைதானம் ஆரவார நிலையில் இருக்கும்போதே அன்றைய நாள் முடிவடைந்தது! மகேல ஓட்டங்களை குவித்ததால் மீண்டும் அணியில் தொடர்ந்து ஆடுவார் என்கின்ற நம்பிக்கையான மகிழ்ச்சியில் அந்தநாள் நிறைவடைந்தது. <br />
<br />
அப்படியே ஆண்டுகள் நகர்ந்தன மகேலவின் துடுப்பாட்ட வரைபடம் சராசரியாக நகர்ந்துகொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு அணித்தலைவர் அத்தப்பத்துவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக மகேல தற்காலிக தலைவராக பங்களாதேஷ், பாகிஸ்தான் தொடர்களில் கடமையாற்றினார். பாகிஸ்தானுடனான சொந்தநாட்டு தொடர் தோல்வியில் முடிந்தாலும்; அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட, அத்தப்பத்து இல்லாத இலங்கை அணிக்கு மீண்டும் மகேலவே பதில் தலைவராக அனுப்பிவைக்கப்பட்டார். <br />
<br />
மகேலவின் மட்டுமல்ல, இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலமும் இந்தத் தொடரில் தீர்மானிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமப்படுத்திய மகேல தலைமையிலான இலங்கை அணி; ஒரே T/20 போட்டியையும் வென்று, ஒருநாள் தொடரில் 5:0 என மிகப்பெரும் வெற்றி பெற்று இங்கிலாந்தை சொந்தமண்ணில் திணறச் செய்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும், ஒருநாள் போட்டிகளில் இரு சதமும் என மகேலவால் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் குவிக்கப்பட்டன. தொடர்ந்து ஹொலண்டுடனான ஒருநாள் தொடரின் ஓர் போட்டியில், ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச ஒட்டமான 443 ஓட்டங்கள் இலங்கையால் குவிக்கப்பட்டது. பின்னர் 2007 இல் இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சாதனை ஓட்டங்களான 260 ஓட்டங்களையும் மகேல தலைமையிலான இலங்கை அணி குவித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கட்டின் அதிகூடிய ஓட்டமான 952 ஓட்டங்களை இலங்கை குவித்த போட்டிதான் மகேலவின் முதற் போட்டி என்பது கூடுதல் சிறப்பு. <br />
<br />
அடுத்து இலங்கையில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மகேலவிற்கு மறக்கமுடியாத மற்றுமொரு தொடர். இரு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இரண்டு போட்டிகளும் மகேலவிற்கு சிறப்பான போட்டிகள். முதற் போட்டியில் சங்கக்காரவுடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான போலக், நிட்டினி, ஸ்டெயின் போன்றோரை திணறடித்து 624 ஓட்டங்களை இணைப்பாகமாக பெற்று உலகசாதனை படைத்தனர். இந்த போட்டியில் மகேல குவித்த 374 ஓட்டங்கள், ஆசியாவின் தனிமனித சாதனை எண்ணிக்கை, வலது கை வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டமும் இதுதான். என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியிலும் மின்சாரம் விளையாடியிருந்தது, 3 ஆம் நாள் ஆட்டத்தன்று எமது பகுதிக்கு பவர் கட். அக்கா ஒருவரின் வீட்டில் போட்டியை பார்க்க சென்றிருந்தேன், மகேல 370 ஓட்டங்களுக்குள் நுழைந்த நேரம் அங்கும் மின்தடை ஏற்பட்டது, பதட்டத்துடன் காத்திருந்த எனக்கு 10 நிமிடங்களில் மின்கலம் ஒளிர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, தொலைக்காட்சி திரை தோன்றும் அந்தக் கணம்வரை பரபரப்பு! ஆனால் அங்கே திரையில் மகேல ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.<br />
<br />
374 ஓட்டங்கள், தூக்குவாரிப்போட்டது, மிகப்பெரும் ஏமாற்றம், அன்ட்ரே நெல் வீசிய புதிய பந்தினாலான இன்ஸ்விங் பந்தொன்று மகேலவின் மட்டைக்கும் காலுக்கும் இடையிலான இடைவெளியில் புகுந்திருந்தது. "அட இன்னும் ஓர் ஓட்டம் எடுத்திருந்தால் லாராவின் 375, ஆறு ஓட்டம் எடுத்திருந்தால் ஹெய்டனின் 380" என அடுத்தடுத்த சில நாட்களுக்கு வெறுவாய் மென்று கொண்டிருந்தோம். ஆனாலும் மகேலவின் தனித்துவமான ஷொட்டான inside out பற்றி பேசி பெருமைப்பட்டுக்கொண்டும் இருந்தோம். மகேல அடிப்பது நான்கோ, ஆறோ; அவர் எதிர்முனையில் இருக்கும் கிரீஸ்வரை சென்று கிரீசை தொட்டுவிட்டுத்தான் திரும்புவார், இதை அவர் ஒரு அதிஷ்டமாக நினைப்பவர். எமக்கும் சில அதிஷ்டங்களை நம்பும் குணம் உண்டு! மகேல ஆடிக்கொண்டிருக்கும்போது என் தம்பி சோபாவில் இருந்து ஒரு கதிரைமேல் காலைப் போட்டுக்கொண்டிருப்பான், இடியே விழுந்தாலும் மகேல ஆட்டமிளக்கும்வரை .எழும்பவே மாட்டான். தொலைக்காட்சி சத்தம் மகேல நிற்கும்வரை 27 இல் இருக்கும், மின்சாரம் தடைப்பட்டால் மீண்டும் மின்சாரம் வரும்போது மகேல மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்க மாட்டார், என பல நம்பிக்கைகள். மகேலாவை ரசித்தோம் என்று சொல்ல முடியாது, தீவிரமாக காதலித்தோம்! <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqzEYC4TUrXbWHn6d3M3T2QalyjDPM5UScc8QbPIb15JLa_ajq9g0eCgaF03TBiZ7G8jGjiiD_t0wt3aC_ZDdeLYBhHBAbaxUMBCR1Oj563KimVqeXFqyf0JOA3pD-sEqfqUGbBpGcnF8X/s1600/62591.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqzEYC4TUrXbWHn6d3M3T2QalyjDPM5UScc8QbPIb15JLa_ajq9g0eCgaF03TBiZ7G8jGjiiD_t0wt3aC_ZDdeLYBhHBAbaxUMBCR1Oj563KimVqeXFqyf0JOA3pD-sEqfqUGbBpGcnF8X/s1600/62591.jpg" height="320" width="235" /></a></div><br />
<br />
தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற நான்காவது இனிங்ஸில் 352 ஓட்டங்களை இலங்கை பெற்றாக வேண்டும், இலங்கை ஆடுகளங்களில் நான்காம் ஐந்தாம் நாட்களில் இந்த ஓட்டங்களை பெறுவதென்பது மிகவும் கடினமான விடயம். சனத் கொடுத்த தொடக்கத்தை பயன்படுத்தி மகேல தனித்து நின்று போராடி 123 ஓட்டங்களைப் பெற்று, வெற்றிக்கு மேலும் 10 ஓட்டங்கள் மட்டுமே தேவையானபோது ஆட்டமிழந்தார், இறுதியில் இலங்கை 1 விக்கட்டினால் போட்டியையும், தொடரையும் கைப்பற்றியது! மகேலாவினது மட்டுமல்ல; இலங்கை வீரர் ஒருவர் பெற்ற மிகச்சிறந்த டெஸ்ட் சதமும் இதுவென்பேன்! <br />
<br />
இங்கிலாந்து, மற்றும் இலங்கையில் தென்னாபிரிக்காவுடனான தொடர் வெற்றிக்கு பின்னர் இலங்கைக் கிரிக்கட் மகேலவே தொடர்ந்தும் தலைமைப்பதவி வகிக்க விரும்பியது. அடுத்த சாம்பியன்ஸ் ட்ரோபி, நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் போன்றவற்றிற்கு மகேலவே தலைமை தாங்கினார். ஆனால் மகேலவின் ஓட்டக்குவிப்பு மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருந்தது. பெரியளவிலான ஓட்டங்கள் எவையும் மகேலவிடமிருந்து கிடைக்கவில்லை. இந்நிலையில் 2007 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தலைவராக மகேலவையே இலங்கைக் கிரிக்கட் தேர்வு செய்திருந்தது. ஏற்கனவே 2003 உலகக்கிண்ணம் மகேலவிற்கு கொடுத்த அனுபவம் மறக்கப்படாமலிருக்க, 2007 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை ஆடத்தொடங்கியது. தனது அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மகேல; அந்தத் தொடரில் அரையிறுதியில் பெற்ற அற்புதமான சதத்துடன் மொத்தமாக 548 ஓட்டங்களைக் குவித்து இலங்கையை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றிருந்தார். <br />
<br />
2003 உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் இரண்டாவது மோசமான ஓட்டம் பெற்றிருந்த மகேல; இம்முறை இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த வீரர் என்கின்ற பெருமையைப் பெற்றார். இதுதான் போராட்ட குணம் மிக்க மகேலாவின் வெற்றி! அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக மகேல பெற்ற சதம் மறக்க முடியாத சதங்களில் ஒன்று. மிகுந்த பதட்டத்துடன் போட்டியை காணக் காத்திருந்த எங்களுக்கு சனத், சங்கா ஏமாற்றமளிக்க, நான்காம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். உப்பில் தரங்க சற்று வேகமாக ஓட்டமெடுக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய மகேல, அற்புதமான ஒரு நீண்ட இனிங்ஸ்சிற்கு தயாராகிக்கொண்டிருந்தார். நிதானமாக ஓட்டங்களைக் சேர்த்துக் கொண்டிருந்த மகேல இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆட்டமிளக்காமல் 115 ஓட்டங்களைக் குவித்தார். முக்கிய போட்டிகளில் நிலைத்து நின்று பொறுப்போடு ஆடும் மகேலாவின் போராட்டம் மிக்க இனிங்ஸ்களில் இதுவும் ஒன்று! அரையிறுதியில் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களை; இறுதிப்போட்டி புஸ்வானமாக்கிப்போனது. அடம் கில்கிறிஸ்டின் தனிமனித தாக்குதலை இலங்கையால் கட்டுப்படுத்த முடியாமல் போனதுதான்; உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்விக்கும்,இலங்கையின் உலகக் கிண்ணம் மீதான கனவை மீண்டும் தள்ளிபோடவும் காரணமாயிற்று! <br />
<br />
2007 உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் பெரிதளவில் வெற்றிகளை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 2007 இன் T/20 உலககிண்ண வெளியேற்றம், இந்தியாவுடனான உள்நாட்டு ஒருநாள் போட்டித்தொடர் தோல்வி என்பன மகேலவை தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய காரணமாயிற்று. ஒரு தலைவராக மகேல கவர்ந்தளவிற்கு வேறெவரும் என்னைக் கவரவில்லை. இறுதிவரை போராடும் குணம், வீரர்களை ஒருங்கிணைக்கும் வல்லமை, பொறுப்பை தோளில் சுமக்கும் இயல்பு, புதுமையான திட்டங்கள், எதிரணி வீரர்களுக்கு ஏற்ப களத்தடுப்பு வியூகம், பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் என மகேல ஒரு அணித்தலைவராக தன்னை வெளிக்காட்டினார்.<br />
<br />
2006 இங்கிலாந்து மண்ணில் பீட்டர்சனுக்கு அமைத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கொடுத்திருந்தன. 2007 உலகக் கிண்ணத்தில் ஒரு சிறப்பான தலைமைத்துவத்தை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மகேல வெளிக்காட்டியிருப்பார். 235 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் 15 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து இங்கிலாந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில்; எந்த அணித்தலைவரும் போலிங் பவர்பிளேயை எடுத்துக் கொள்வது சாதாரணம். ஆனால் மகேல பவர் பிளேயை எடுத்துக்கொள்ளாமல் தனது பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கினார். ஜெயசூர்யா, டில்ஷான் இருவரும் வீசிய ஓவர்களில் தங்கள் விக்கட்டை இழக்காமல் நிதானமாக ஆடிய இங்கிலாந்து; 29 ஆவது ஓவரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட போலிங் பவர்பிளே ஓவர்களில் பலமான முரளியையும், மலிங்கவையும் எதிர்கொண்டு விக்கட்டுகளை இழக்க ஆரம்பித்தது, மகேலவின் திட்டம் எதிர்பார்த்ததுபோல் வெற்றியைக் கொடுத்தது. போட்டியை இங்கிலாந்தின் பின் மத்தியவரிசை வீரர்களான நிக்சனும், போப்பராவும் இறுதிவரை விறுவிறுப்பாக்கினாலும், இறுதியில் இலங்கை இரண்டு ஓட்டங்களால் போராடி வெற்றி பெற்றது! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYprygOfx7G7C1rflnuth2WbSS52h0aRHgaUU4SVOaZ7ign42zHhfRL8ZviyKdJOXtue6rhGU6SqcJZ0YcsBVSh-kvAKAh8ksLit7KyCVcKs3ev-H1Teq36KT9cwZUak5vV0Mu9PD9-Gis/s1600/Mahela-Jayawardene-century.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYprygOfx7G7C1rflnuth2WbSS52h0aRHgaUU4SVOaZ7ign42zHhfRL8ZviyKdJOXtue6rhGU6SqcJZ0YcsBVSh-kvAKAh8ksLit7KyCVcKs3ev-H1Teq36KT9cwZUak5vV0Mu9PD9-Gis/s1600/Mahela-Jayawardene-century.jpg" height="221" width="320" /></a></div><br />
<br />
தமது அணி குறைந்த ஓட்டங்களை பெற்றிருப்பினும் இறுதிவரை போராடி வெற்றி பெற செய்வதில் மகேல கில்லாடி, வெற்றி கிடைக்காதவிடத்து கௌரவமான தோல்வியாவது மிஞ்சும். மகேலவின் தலைமைத்துவத்தின் சிறப்பை பெரும்பாலான கிரிக்கட் விற்பன்னர்கள் உணர்ந்திருந்தனர். 2007 உலகக் கிண்ண போட்டித்தொடரை அடுத்து, ஆசிய அணிக்கும் ஆபிரிக்க அணிக்குமான போட்டித் தொடரிலும் மகேல தலைமை ஏற்று தொடரை 3:0 என வென்று கொடுத்ததோடு, தொடரின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். மூன்றாவது போட்டியில் இந்திய நட்சத்திரம் டோனியுடன் இணைந்து ஆறாவது விக்கட்டுக்காக பெற்றுக்கொண்ட 218 ஓட்ட இணைப்பாட்டம் இன்றுவரை சாதனையாக உள்ளது. 2008 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் லீக் போட்டிகளில் இந்தியாவுடன் ஆடவிடால் வைத்திருந்துவிட்டு இறுதிப் போட்டியில் அஜந்த மெண்டிசை துரும்பு சீட்டாக பாவித்து, இலங்கைக்கு கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார். பஞ்சாப், கொச்சி, டெல்லி என மகேல விளையாடிய மூன்று IPL அணிகளும் மகேலவின் தலைமைமீது நம்பிக்கை கொண்டு அவரை அணித் தலைவராக்கியிருந்தன!<br />
<br />
தலைவராக மட்டுமல்ல ஒரு சிறந்த பண்பை வெளிப்படுத்தும் வீரராக மகேல தன்னை மைதானத்தில்;வெளிக்காட்டிருப்பார். 2007 உலக கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை;எட்டு விக்கட்டுகளை இழந்து மூன்று ஓவர்களில் மீதமிருக்க;தோல்வியின் விளம்பில் இருந்தது. ஆனால் மைதானத்தில் இருள் குழுமியிருந்தது, பந்து தெரியத அளவுக்கு இருள் சூழ்ந்துவிட்டது. நடுவராக இருந்த அலீம் டார் மிகுதி மூன்று ஓவர்களையும் மறுநாள் வைத்துக்கொள்ளாம் என முடிவெடுக்கிறார். கொண்டாட்ட மனநிலையில் இருந்த அவுஸ்திரேலியர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அந்தநேரம் மைதானத்துள் வந்த இலங்கை தலைவர் மகேல, அணி வீரர்களிடம் கலந்து பேசி மீதி;மூன்று ஓவர்களையும் இலங்கை விளையாட பணித்தார், மிதமான வேகத்தில் மிகுதி மூன்று ஓவர்களும் பந்துவீச இலங்கை தோல்வியடைந்தது.<br />
<br />
ஒரு வீரராக களத்தில் தன்னை;கனவானாக வெளிப்படுத்தும் மகேல; களத்துக்கு வெளியேயும் மிகச்சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர். சிறுவயதில் தனது ஆருயிர் தம்பியை புற்றுநோய்க்கு பறிகொடுத்த மகேல, நீண்ட நாட்களுக்கு அதனிலிருந்து மீள கஷ்டப்பட்டவர். தனக்கு வந்த துன்பத்தை அப்படியே விட்டுவிடாம்ல், தனது முயற்சியால் Hope Cancer Project க்கு பெரும் பங்களிப்பார்றினார். அத்தப்பத்து தலைமை ஏற்ற காலத்தில் இருந்து தமக்கு (சங்ககாரவும்) கிடைக்கும் ஆட்ட நாயகன், ஆட்டத் தொடர் நாயகன் விருதுக்கான பணத்தொகையை மருத்துவத்திற்கு தேவையானவர்களுக்கு அமைப்பு மூலமாக வழங்கிவருகின்றார்கள். எலோருடனும் சகஜமாக பேசக்கூடிய மகேலவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரமிப்பாக இருக்கும். தனது அணியை, அணித்தேர்வை, வீரர்களை விட்டுக்கொடுக்காமல் பேசும் மகேல, அதனை பத்திரிகையாளர்கள் பகைத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்ளும்படி சொல்வதில் கில்லாடி. போட்டி வெற்றியோ தோல்வியோ, மகேலாவின் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும் அருமையாக இருக்கும்.<br />
<br />
மகேலாவின் தலைமைப் பதவி ராஜினாமாவின் பின்னர் இலங்கையின் அடுத்த தலைவராக சங்ககார பொறுப்பேற்க; இலங்கை அணி மீண்டும் சராசரியாக சென்றுகொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில்; தனக்கு பிடித்தமான மேற்கிந்திய ஆடுகளங்களில், தொடர்ச்சியாக குறைந்த பந்துகளில் 81,100,98* ஓட்டங்களைக் குவித்த மகேல தன்னை T /20 போட்டிகளிலும் ஆடும் திறன் படைத்தவர் என்பதனை நிரூபித்தார். அடுத்த தடவை இடம்பெற்ற IPL வீரர்களுக்கான ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்கின்ற பெருமையையும் மகேல பெற்றார். <br />
<br />
அடுத்து 2011 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணதொடர் ஆரம்பிக்கவிருந்தது. இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டது, அதில் மகேல அணியின் உபதலைவர். தனக்கு கீழே உபதலைவராக இருந்தவரின் தலைமையின் கீழ், தான் உபதலைவராக இருக்க இலகுவில் எந்த பெயர் பெற்ற வீரரும் சம்மதிக்க மாட்டார்கள்! ஆனால் மகேல சம்மதித்தார், காரணம் அவர் ஒரு அணிக்கான வீரனாகவே தன்னை எப்போதும் எண்ணியிருந்தார். அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் தனது துடுப்பாட்ட வரிசை இலக்கத்தை அணியின் தேவைக்கு ஏற்ப மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மாற்றி மாற்றி ஆடிக்கொடுத்தார், கொடுத்துக்கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அரவிந்தவின் ஓய்வால் வெற்றிடமான; டெஸ்ட் கிரிக்கட்டின் நங்கூரமான நான்காம் இலக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக தனது மூன்றாம் இலக்கத்தை இழந்திருந்தார். <br />
<br />
2011 உலகக் கிண்ணத்தை நோக்கி சங்கா தலைமையில் இலங்கை அணி தயாராகியிருந்தது. மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இலங்கை இறுதிப்போட்டிவரை முன்னேறியது. அடுத்தடுத்த இரண்டு உலகக் கிண்ணங்களில் இறுதிப்போட்டிக்கு தெரிவான இலங்கைக்கு, இம்முறையும் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. இந்திய அணியால் அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து இலங்கையின் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் மகேல பெற்ற சதம் அந்தப் போட்டியை காணுற்ற ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மிக முக்கியமான, அழுத்தம் நிறைந்த போட்டியொன்றில் எத்தனை அழகாக தனது இனிங்ஸ்சை மகேல கொண்டு சென்றார்! மகேலவின் அற்புதமான இனிங்ஸால், இந்திய மைதானம் மூச்சிழந்து காணப்பட்டது! ஆனால் போட்டி முடிவு என்னவோ எம்மை மூர்ச்சையாக்கியிருந்தது :-(<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiopSFin4qCM4qJfEzdGR6q8T0ncBOLCm0a1mmM-BUvv_XIHe5b6pz0sqjIVAngqOD_rcgxKSTXTL2QgZvnDS2CdJAGD5TJ0hI9SrvR6CbhQnG2-MRkewa3CeKFO5sTc5sJh4qIA5Xt1lPC/s1600/Wallpaper_12%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiopSFin4qCM4qJfEzdGR6q8T0ncBOLCm0a1mmM-BUvv_XIHe5b6pz0sqjIVAngqOD_rcgxKSTXTL2QgZvnDS2CdJAGD5TJ0hI9SrvR6CbhQnG2-MRkewa3CeKFO5sTc5sJh4qIA5Xt1lPC/s1600/Wallpaper_12%5B1%5D.jpg" height="256" width="320" /></a></div><br />
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்வியின் எதிரொலியாக சங்ககார தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய, மகேலவும் தனது உப தவைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவராக டில்ஷான் இலங்கைக் கிரிக்கட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் டில்ஷான் தலைமையில் இலங்கை தடுமாறிக்கொண்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இலங்கைக் கிரிக்கட் விரும்பினாலும், யாரை தேர்ந்தெடுப்பது என தடுமாறியது. மீண்டும் மகேலவிடம் கோரிக்கை வைக்கப்படாது, இம்முறை மகேல தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். <br />
<br />
மகேல தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர், முதல் தொடராக அவுஸ்திரேலியாவின் கொமன்வெல்த் பாங்க் சீரிஸ் அமைந்தது. இலங்கை அவுஸ்திரேலியாவில் ஒரு முக்கோணத் தொடரில் அதுவரை அசத்தாத அளவுக்கு அசத்தியது. இந்தியா வெளியேற, அவுஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றது. தொடர் முழுவதும் அவுஸ்திரேலியாவை அடக்கி வைத்திருந்த இலங்கைக்கு முதல் இறுதிப் போட்டியிலும் வெற்றி கிடைத்தது. இரண்டாம் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற, மூன்றாவது இறுதிப் போட்டி எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலியாவை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை வெற்றிக்கனியை எட்டுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த எமக்கு மீண்டும் ஒரு இறுதிப்போட்டி தோல்வி. இம்முறையும் உடைந்தே போய்விட்டோம். இந்தத் தொடரில் இலங்கையின் வெற்றிகள் மகேலவின் துடுப்பினாலும், தமைத்துவ சிறப்பினாலும் பெரும்பாலும் பெறப்பட்டிருந்தன. ஆரம்ப துடுப்பாட்ட வரிசையின் சீரின்மையை ஈடுசெய்ய; மத்திய வரிசையில் ஆடிவந்த மகேல, தானே ஆரம்பவீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி இலங்கையை வெற்றிப் பாதையில் இட்டுச்சென்றிருந்தார்.<br />
<br />
அடுத்து சொந்தநாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அன்றைய பலமான இங்கிலாந்து அணியை காலி மைதானத்தில் சந்தித்த மகேலவின் இலங்கை அணி, இங்கிலாந்தை காலி செய்தது. துடுப்பாட சிரமமான மைதானத்தில் இலங்கை பெற்ற 318 ஓட்டங்களில் தனித்து நின்று ஆடி மகேல 180 ஓட்டங்களை குவித்திருந்தார். இங்கிலாந்தின் ஜிம்மி அன்டர்சன் 'தான் பார்த்த இனிங்ஸ்களில் இதுதான் மிகச்சிறந்த இனிங்க்ஸ்' என்று அப்போது புகழ்ந்திருந்தார். இரண்டாவது போட்டியில் இலங்கையின் இரண்டு இனிங்க்ஸ்களிலும் மகேல 105,64 ஓட்டங்களை மகேல பெற்றிருந்தார். தன் தலையில் பொறுப்பு இருக்கும்போதும், முக்கியமான நேரங்களிலும் பொறுமையாக கவனத்துடன் ஆடும் மகேலவின் ஆட்டத்திறன் மீண்டும் இந்தத்தொடரிலும் வெளிப்பட்டிருந்தது! <br />
<br />
அடுத்து 2012 ல் சொந்த மண்ணில் T/20 உலககிண்ணம் ஆரம்பமாயிற்று. பலமான அணிகள் பல விளையாடினாலும், சொந்தநாட்டு மைதானம் என்பதால், இலங்கைக்கும் வாய்ப்புக்கள் காணப்பட்டன. இலங்கையின் வாய்ப்பை மகேலவின் தலைமைத்துவம் சரியான முறையில் கையாண்டது! இறுதிப்போட்டிவரை முன்னேறிய இலங்கைக்கு, இலகுவான அணியான மேற்கிந்தய தீவுகளுடன் இறுதிப் போட்டி. அதுவரை எந்த T/20 போட்டியிலும் மேற்கிந்தியாவுடன் தோற்றிருக்காத இலங்கைமீது; மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது. <br />
<br />
கிரிஸ் கெயில் மீது பயம் இருந்தாலும்; கெயிலை வெளியேற்றலாம் என்கின்ற நம்பிக்கையும் பலமாக .இருந்தது. எதிர்பார்த்தது போலவே கெயில் வெளியேற, 10 ஓவர்கள் முடிவில் இலங்கையின் கைப்பிடியில் இருந்த போட்டி; சாமுவேல்ஸின் அதிரடியில் அப்படியே மாறிப்போனது. மீண்டும் இறுதிப்போட்டியில் தோல்வி, இறுதிப்போட்டிகளில் இலங்கையின் தோல்விகள் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எதிர்பார்த்ததுபோல் மகேலவும் பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரம் இந்த தொடரின் அதிக ஓட்டங்குவித்தவர்கள் பட்டியலில் மகேல இரண்டாவது இடத்தில் இருந்தார். மகேலவின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளுக்கு மத்தியூசஸும், T/20 அணிக்கு சந்டிமலும் தலைவராக்கப்பட்டனர்.<br />
<br />
<br />
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் சிலகாலம் மகேல சதமடிக்கவில்லை என்கின்ற விமர்சனம் எழுந்தபோது; மற்றுமொரு சிறப்பான சதத்தை (129) அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக மகேல குவித்திருந்தார். தன்மீது விமர்சனம் வரும்போதெல்லாம் முக்கியமான போட்டியொன்றில் தன்னை நிரூபித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது மகேலவின் பாணி. டெஸ்ட் கிரிக்கட்டைப் போலவே ஒருநாள் போட்டிகளிலும் சில போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத மகேல; தன்மீதான விமர்சனங்களுக்கு இவ்வாண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பதிலளித்தார். இக்கட்டான நேரத்தில் 75 ஓட்டங்களைக் குவித்து இலங்கையின் கிண்ண வெற்றிக்கு முக்கிய காரணமானார். தொடர்ந்து இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியிலும்; மகேலவின் அரைச்சதத்தின் பங்களிப்பு இலங்கைக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மகேல தன்னை முக்கிய/பெரிய போட்டிகளில் ஓட்டங்குவிக்கும் வீரராக தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிருந்தார். <br />
<br />
<div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5MFZ14n0iKTHNcPrihyphenhyphendjKFjObgfX5Sj4GYBf8Q2FfR3uGxqZNNZoMkrXS_jGryYCczNxmfp-pqsjswydYvfuLeLOBbb31l9UCq7bFLV1yHeRJSCCUsON1lDTbpurDgUMbGUNrhqYeKzp/s1600/64767.jpg" imageanchor="1"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5MFZ14n0iKTHNcPrihyphenhyphendjKFjObgfX5Sj4GYBf8Q2FfR3uGxqZNNZoMkrXS_jGryYCczNxmfp-pqsjswydYvfuLeLOBbb31l9UCq7bFLV1yHeRJSCCUsON1lDTbpurDgUMbGUNrhqYeKzp/s320/64767.jpg" /></a></div><br />
2014 - T/20 போட்டிகள் ஆரம்பிக்க இருந்த நிலையில்; உலகக் கிண்ணத்துடன் T/20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மகேலவும் சங்காவும் அறிவித்தனர். இம்முறை T/20 போட்டிகளில் இலங்கை கிண்ணத்தை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு குறைந்தளவே காணப்பட்டது. மலிங்க தவிர்த்து T/20 போட்டிகளுக்கான விசேட வீரர்கள் இல்லாத நிலையிலும் இலங்கை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அரையிறுதிக்கு தகுதிபெற்ற இலங்கை, கடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியைக் கொடுத்த மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் நிலை ஏற்பட்டது. பழிதீர்க்கும் ஆட்டமாக அமைந்த இந்தப் போட்டியில் அணித்தலைவர் சந்திமல் நீக்கப்பட்டு, மலிங்க தலைமை தங்கினார். <br />
<br />
முதலில் துடுப்பெடுத்தாடி 160 ஓட்டங்கள் குவித்த இலங்கையின் இலக்கை எட்ட எத்தனித்த மேற்கிந்தியாவை வெறும் 80 ஓட்டங்களுக்குள் இலங்கை சுருட்டியது. பெயருக்கு மலிங்க முன்னிற்க மகேலவே பின்னின்று அணியை வழிநடத்தினார். மீண்டும் மகேலவை தலைவராக ரசித்த திருப்தி கிடைத்தது. அடுத்து இறுதிப் போட்டி இந்தியாவுடன், எப்படியும் இலங்கைக்கு தோல்விதான் எண்ணத்திலேயே போட்டியை பார்க்க ஆரம்பித்தாலும், மனதில் வெற்றிக்கான அவா அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இறுதி ஓவர்களில் இலங்கையின் வேகங்கள் கொடுத்த சவாலில், இந்தியாவின் அதிரடி மன்னர்களான யுவராஜ், டோனி, கோலி போன்றோரால் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போக; இலங்கை இந்தியாவை 130 ஓட்டங்களில் மட்டுப்படுத்தியது. துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானத்தில் 131 என்னும் இலக்கை, சங்காவின் அரைச்சதத்துடன் இலங்கை இலகுவாக எட்டியது. இலங்கை 2014 ஆம் ஆண்டின் T/20 சாம்பியன் - நம்ப முடியவில்லை, நாம் இறுதிப் போட்டியில் இறுதியாக வென்றே விட்டோம்!!!! மகேலவுக்கும் சங்காவுக்கும் மிகச்சிறந்த பிரியாவிடை இலங்கை அணியால் வழங்கப்பட்டது.<br />
<br />
சில நாட்களின் பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மகேல தனது டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் ஓய்வு தினத்தை அறிவித்தார். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், மிகச்சரியான முடிவு. இலங்கை மண்ணில் அடுத்து விளையாடும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுடனான தலா இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களுடன் சொந்தமண்ணில் ஓய்வு பெறுவது என்பது மகேலவின் அறிவிப்பு. பெரும் பெரும் ஜாம்பவான்களெல்லாம் வயது அதிகரித்து, ஓட்டக்குவிப்பு நலிவடைந்த நிலையில் 'எப்படா போவாங்க' என கிரிக்கட் ரசிகர்களும், கிரிக்கட் சபைகளும் காத்திருந்த நிலையை மகேல தனக்கும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நல்ல நிலையில் இருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்திருந்தார் மகேல, அதிலும் சொந்த நாடு, சொந்த மக்களுக்கு முன்னிலையில்! <br />
<br />
ஓய்வை அறிவித்தபின்னர் தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது போட்டியில் 160 ஓட்டங்களையும், பாகிஸ்தானுடனான இறுதி இரு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தையும் மகேல பெற்றிருந்தார். அதிலும் தனது இறுதி இனிங்க்சில் 54 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனது நண்பனும், டெஸ்ட் கிரிக்கட்டில் இணைப்பாட்ட சாதனைக்கு பங்குதாரருமான சங்காவுடன் இணைந்து 19 ஆவது தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டமாக பெற்றிருந்தார். முன்னதாக காலியில் மகேலவின் இறுதி இனிங்க்ஸ், பொழுது சாயும் நேரம், நன்றாக இருட்ட ஆரம்பித்துவிட்டது, மழை எந்நேரத்திலும் வரலாம் என்னும் நிலையில்; ஆட்டமிழந்த மகேல, அன்று தனக்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் தனது துடுப்பை காட்டி பிரியாவிடை பெறாது, வேகமாக ஓடிச்சென்று அடுத்த வீரருக்கு வழி விட்டார். இப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்று அடுத்த சில செக்கன்களில்; மழை சோவெனப் பொழிய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. தனது இறுதி இரு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கான தனது பங்களிப்பை மகேல வழங்கியிருக்கிறார். தனது சொந்த நாட்டில், சொந்த மைதானத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், இறுதிப் போட்டி மற்றும் தொடர் வெற்றிபெற்ற மகிழ்வுடன் மகேல ஓய்வு பெற்றுக்கொண்டார். அற்புதமான பிரிவுபசாரம் ஒன்றை மகேல பெற்றிருந்தார், இது இலங்கையின் எந்த ஜாம்பவானுக்கும் வாய்த்திராத கொடை - சாதனையாளர்!<br />
<br />
<b>இலங்கை டெஸ்ட் அணியில் இனிமேல்....... </b><br />
<br />
விபரம் தெரிந்த நாள் முதல் ரசித்துவந்த 69 ஆம் இலக்க ஜேர்சியை இனிமேல் காண இயலாது! <br />
<br />
ஸ்கோர் போட்டில் 2 விக்கட்டுக்கு பின்னர், விக்கட் எண்ணிக்கை மாறாமல் இருக்க, ஓட்ட எண்ணிக்கை மட்டும் கிடுகிடுவென உயரும்போது; மைதானத்தின் நடுவே உணர்ச்சி பூர்வமாக தன் நண்பனை ஆரத்தழுவும் ஒரு உணர்ச்சிமிக்க வீரனை காண இயலாது! <br />
<br />
புதிய இளம் வீரருடன் ஆடும்போது, ஒரு தந்தை தன் பிள்ளையை வழி நடத்துவதுபோல, கற்றுக்கொடுக்கும் ஆசானைக் காண இயலாது! <br />
<br />
எவர் தலைவராக இருப்பினும், எந்தவித ஈகோவும் இல்லாமல்; இக்கட்டான நேரங்களில் தானே முன்வந்து ஆலோசனை சொல்லி வழிநடத்தும் தலைவனைக் காண இயலாது!<br />
<br />
முதலாவது சிலிப்சில் பிடியை பிடித்துக்கொண்டு இடது கையை மடக்கி அசைத்தபடி சிங்கமென கர்ஜித்தபடி ஓடும் இளைஞனைக் காண இயலாது! <br />
<br />
ஒவ்வொரு போட்டியிலும் அணியின் பொசிட்டிவ் எனர்ஜியாக இருந்து, இறுதிவரை அணியில் ஸ்திரத்தை குறையவிடாமல் வைத்திருக்கும் ஒரு சிறந்த அணி வீரனை இனி காண முடியாது!<br />
<br />
<b>ஆனால்.......</b> அவன் விட்டுச்சென்ற நினைவுகளும், கொடுத்த அனுபவமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! என்றும் நிலைத்திருக்கக்கூடியது <br />
<br />
நிச்சயமாக மகேல ஒரு ஓட்டங் குவிக்கும் இயந்திரம் அல்ல, மகேலவின் ஓட்டக்குவிப்பு எப்போதும் தொடர்ச்சியாக இருந்ததுமில்லை; ஆனால் முக்கியமான போட்டிகளில், இக்கட்டான நேரங்களில் தன் கையைத் தூக்கி முன்வந்து போட்டியை வென்று கொடுக்கும் மகேல வரலாற்றின் ஒர் வெற்றியாளன்! மோசமான துடுப்பாட்ட நேரங்களில், தன்மீது விமர்சனங்கள் வரும்போதெல்லாம், அவற்றுக்கு தன் துடுப்பால் பதில் சொல்லும் ஓர் போராட்ட வீரன்!! மகேல முழுத்திறனுடன் ஆடும் இனிங்ஸ் ஒன்றின் அழகுக்கு இணையான இனிங்சை வெளிப்படுத்த வேறெந்த சமகால வீரரும் இல்லை! <br />
<br />
<b>Inside out, Foreword defense, Cover drive, squire drive, Late cut, cut, pull, glance, flick, down the wicket to long on & mid-wicket, sweep in font of the wicket, sweep behind the wicket, slog sweep, reverse sweep, paddle sweep, upper cut, improvisation in behind the wicket of </b><b>both side</b><b>, soft hand touches, quick single in the gaps </b>- என கிரிக்கட் ஷொட்களையும், நுணுக்கங்களையும், ஓட்டம்பெறும் முறைகளையும் நேர்த்தியுடன் பிரமிப்பாக செயற்படுத்தும் திறன்படைத்த முழுமையான துடுப்பாட்ட வீரர் மகேல!<br />
<br />
மகேல இல்லாத இடைவெளி இலங்கை கிரிக்கட்டுக்கும், ரசிகர்களுக்கும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்! என்னைப் பொறுத்தவரை இதுவொரு மிகப்பெரும் தாக்கம். எனது 15 வயதில் உருவான பந்தமிது; பாடசாலை கல்வி, வெட்டியான காலம், அரச வேலை, தனியார் வேலை, சொந்த முயற்சி, சொந்த தொழில், திருமணம், குழந்தை என என் வாழ்க்கை ஓட்டத்துடனும், இடமாற்றங்களின் போதும், 17 ஆண்டுகளாக என்கூடவே பயணித்த மகிழ்ச்சியான பந்தம் இது! அற்புதமான நினைவலைகளை விட்டுச்சென்ற, வாழ்வின் இறுதி மூச்சுள்ளவரை மறக்கப்பட முடியா இணைப்பிது!! <br />
<br />
<b>மகேல - </b>என் வாழ்வின் ஓர் அங்கம்!! <br />
<b><br />
</b> <br />
<div style="text-align: center;"><b><span style="font-size: large;">நன்றி மகேல!!! </span></b></div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-81853201138361905122013-05-04T19:58:00.003+05:302023-02-01T01:07:41.303+05:30 (மூட) நம்பிக்கையும் சமூகமும்!! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNyD8ztqUDovDCti38SqqONQUSa2ImxSqhjWp1bhCCOGUsmQJyE7XyE6yrHA4xoJ-QzGn9WGeb_gWJgTl5EPHm6aTb54hfF441vTvHi0s-beaUnhuWHRivLXUNsq1Kal_QLAFY4P3YtTbw/s1600/103554228.jpg" imageanchor="1"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNyD8ztqUDovDCti38SqqONQUSa2ImxSqhjWp1bhCCOGUsmQJyE7XyE6yrHA4xoJ-QzGn9WGeb_gWJgTl5EPHm6aTb54hfF441vTvHi0s-beaUnhuWHRivLXUNsq1Kal_QLAFY4P3YtTbw/s320/103554228.jpg" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<div>
நாகரிகம் வளர வளர பண்டைய மனிதனின் நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வர ஆரம்பித்தது; சில நாகரீக மனிதர்களால் பல நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் என்று வரையறுக்கப்படத் தொடங்கின!! ஆனாலும் பலர் இன்றும் தொடர்ந்தும் அதே நம்பிக்கைகளை நம்பிக்கையாக பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இங்கு நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான அளவுகோல் எனப்படுவது பார்ப்பவரது பார்வையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது!! சில நம்பிக்கைகள் அரசாங்கங்களால் உத்தியோக பூர்வமாக நிராகரிக்கப்பட்டும், சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் பின்பற்றப்படுகின்றன!! </div>
<div>
<br /></div>
<div>
இன்று மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றில் பல ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு; பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருபவைதான்!! அவற்றில் பல நம்பிக்கைகள்; ஏற்படுத்தப்பட்ட காரணங்களை விடுத்து தவறான புரிதலோடு இன்றுவரை வெவ்வேறு காரியங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றின் பாதகத்தன்மை, சாதகத்தன்மை என்பதெல்லாம் அவை கொடுக்கும் பலனில் வைத்து கணிக்கப்பட வேண்டியவை அல்ல!! அவற்றின் தாக்கம் அவற்றால் கிடைக்கப்பெறும் மன/உடற் தாக்கங்களில்தான் தங்கியுள்ளது. அன்றாட மனிதப் பழக்கவழக்கங்களில் இருந்து மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றை விமர்சிப்பது மிகச் சுலபமான காரியங்களில் ஒன்று; அப்படி செய்வதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் அது சுத்த முட்டாள்தனம்(என் பார்வையில்)</div>
<div>
<br /></div>
<div>
மேலே சொன்னதுபோல நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுபவை. ஆனால் அந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதகத்தன்மை, பாதகத்தன்மை பொறுத்தே அவை வேண்டியவையா, வேண்டாதவையா, இருந்திட்டு போகட்டும் வகையறாக்களா என முடிவெடுக்க முடியும். அதுகூட அவரவர் வாழும் சமூகம், மொழி, மதம் என கலாச்சாரம் சார்ந்துதான் முடிவெடுக்கமுடியும். சிலருக்கு/ஒரு சமூகத்துக்கு மூட நம்பிக்கையாக தோன்றும் விடயங்கள் பலருக்கு/இன்னொரு சமூகத்துக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கலாம்! இந்த நம்பிக்கை மரபுவழியாக ஏற்பட்ட உளவியல் உறுதி என்றுகூட சொல்லலாம். இதை விமர்சிப்பதென்பது அறியாமையின் வெளிப்பாடே!! </div>
<div>
<br /></div>
<div>
சில நம்பிக்கைகள் அடிமைத்தனங்கள், உயிர்பாதிப்பு, உடற்பாதிப்பு, மனப்பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை இயன்றளவிலும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது; இது பல சமூகங்களுக்கும் பொருந்தும். அவற்றை இல்லாமல் செய்ய குரல் கொடுப்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல்தான். ஆனால் இங்கு மூடநம்பிக்கையாக சொல்லப்படுபவை; அதை ஒரு நம்பிக்கையாக ஏற்று செயற்படும் சமூகத்தில் நிகழ்கின்றது என்னும் பட்சத்தில் அவர்களை கண்டிப்பதோ, கிண்டல் செய்வதோ அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது அவர்களுக்குள் மேலும் வன்மத்தையும், கோபத்தையும்தான் ஏற்படுத்தும். அவர்களை பொறுத்தவரை அவர்களாக புரிந்து, கலாச்சார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அவற்றிலிருந்து விடுபடமுடியும்; புரியவைத்தால் என்பது சாத்தியமான வழியல்ல!! </div>
<div>
<br /></div>
<div>
எல்லோரும் விமர்சகர்களாக இருக்கத்தான் ஆசைப்படுகின்றோம், அது மனிதனில் ஒன்றிப்போன ஒரு சுபாவம்!!! ஆனால் மற்றவரை விமர்சிக்கும் நாம் அதே விடயத்தில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்பதில்லை. உதாரணமாக சொல்வதானால், பர்தா அணியும் முஸ்லிம் சமூகத்துப் பெண்கள் <wbr></wbr>வெப்பமான காலப்பகுதியில் உடலை முழுமையாக மூடியிருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை என்று சொல்லும் கனவான்கள்; அதே வெப்பமான காலப்பகுதியில் தங்கள் குடும்ப பெண்களை பிகினியில்/நிர்வாணமாக நடமாட விடுவார்களா? குறைந்த பட்ச நாகரிக உடையை உடுத்துவது எப்படி அவர்களுக்கு அவசியமோ; அதேபோலத்தான் அவர்களது சமூகத்தின் நாகரீகம் அது, அவ்வளவுதான்! அவர்களது மாற்றத்தை அவர்களது நாகரீகம் தீர்மானிக்கட்டும்; அதில் எதற்கும் நாம் சொறிய வேண்டும்? </div>
<div>
<br /></div>
<div>
மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படும் பல நம்பிக்கைகள் ஏதோ ஒருவகையில் ஆரோக்கியமானவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு!! எல்லோரும் பரந்த சிந்தனையாளர்கள் இல்லை; சிந்தனைத் திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்நிலையில் இன்றும் பல நம்பிக்கைகள்தான் பலருக்கும் நம்பிக்கையை, தைரியத்தை கொடுக்கிறது; சிலரை தப்புச் செய்யவிடாமல் தடுக்கின்றது. மூடநம்பிக்கைகள் என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட பல விடயங்கள்; அடிப்படையில் சுகாதார, மருத்துவ ரீதியில் சரியானவை என சொல்லப்பட்டிருக்கின்றன!! பலருக்கு பல நம்பிக்கைகள் நிறைவேறும் போது திருப்தியை கொடுக்கின்றன!! புரட்டாதிச் சனியானால் அம்மா காக்காவுக்கு சாதம் வைக்கும் சம்பவம் விமர்சிக்கப்படும், காக்காக்கள் பிதுர்கள் இல்லாமல் இருக்கட்டும், அது மூடநம்பிக்கையாக இருக்கட்டும்; ஆனால் காக்காவுக்கு வைக்கும் சோறு அம்மா/அப்பா/தாத்தா/பாட்டியின் நம்பிக்கை, அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் சம்பவம்!! 361 நாளும் வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டும் அம்மாவுக்காக 4 நாட்கள் சற்று பிந்தி சாப்பிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது? </div>
<div>
<br style="font-family: arial; font-size: small;" />
<div style="font-family: arial; font-size: small;">
பல்லி கத்தும்போது கைவிரலால் சுண்டுவது, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்துவிட்டு போவது, சாப்பாட்டில் தலைமயிர் இருந்தால் தண்ணீர் தெளிப்பது, காலையில் வெளியே போகும்போது விளக்குமாறு/துடைப்பம் கண்ணில் படாமல் போவது, எங்கே போகின்றாய் என்று கேட்டால் ஓரிரு நிமிடங்கள் தாமதித்து செல்வது, ஊசியை கையில் கொடுப்பதில்லை, வாகன சாவியை கையில் வாங்குவதில்லை போன்று நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள் அன்றாட வாழ்விலும்; ஒவ்வொரு விசேட சம்பவத்தின் போதும் இப்படியான பல நூறுக்கணக்கான நம்பிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் வழமை!! சிலவற்றுக்கு காரணம் சொல்லப்படும், பலத்துக்கும் காரணம் தெரியாமல் மரபுவழி பயன்படுத்தப்பட்டுவரும்!! இங்கு கடைப்பிடிக்கப்படும் அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்று கொண்டாலும்; அவற்றைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு? இழப்பு என்று ஏதும் இல்லை, ஆனால் கிடைப்பது திருப்தி!! </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
Facebook இல் கூட ஒரு கடவுள் படத்தை போட்டு இதை Share செய்தால் 7 செக்கனில் நல்லது நடக்கும் என்று போடப்பட்டிருக்கும்; அதை பலர் இன்னமும் share செய்து வருகின்றனர், சிலர் அவர்களை கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர். நன்மை கிடைக்கிதோ இல்லையோ அதை share செய்பவனுக்கு அதில் ஒரு நம்பிக்கை!! நாம் அரசியல், சினிமா, கிரிக்கட், பொது விடயங்களுக்கு போடும் கோபமான, ஆதங்கமான விமர்சன Status கள் எல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பால் பரிசீலிக்கப்பட்டு பலன் கொடுக்கின்றனவா? ரெண்டுபேரும் ஒரே வேலையைதான் செய்கின்றோம், ஆனால் வேறு வேறு வழிகளில். இதில் ஒருவரை மட்டும் எப்படி நையாண்டி பண்ணமுடியும்? </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
அடுத்தவர்களை விமர்சித்து, பகுத்தறிவு பேசுபவர்களுக்கு; அப்படி செய்வதில் ஒரு சந்தோசம், மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அதில் தவறில்லை! அதேநேரம் அடுத்தவர் நம்பிக்கையை சுரண்டி, அதை காயப்படுத்துவது ஆரோக்கியமான செயலா? சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை மறுத்து, கடவுளை கேவலப்படுத்தி தன்னை நாத்திகராக காண்பித்த ஒருவர்; தன் திருமணத்தில் கடவுள் படத்தை வைத்திருந்ததால் விமர்சிக்கப்<wbr></wbr>பட்டார். அவர் தரப்பில் சொல்லப்பட்ட நியாயம், அவர் மனைவியின் குடும்பத்தின் நம்பிக்கை அது என்பதுதான்!! தனக்கு என்று வந்தால், தன் உறவென்று வந்தால் நம்பிக்கையை நிறைவேற்றுவதும்; அடுத்தவர்களது நம்பிக்கையை காயப்படுத்துவதும்தான் பகுத்தறிவா? </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
தாலியை, கோவில்களை, பூசாரியை, ஜாதகத்தை,பஞ்சாங்கத்தை கேவலமாக கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தன் திருமணத்தை மேற்சொன்ன எவையும் இல்லாமல் நிகழ்த்த தைரியம் இருக்கா? திருமணம் என்பது தனி நபர் விருப்பு வெறுப்பல்ல; பெண்ணிற்கு மேற்சொன்ன சம்பிரதாயங்கள் அற்ற திருமணத்தில் விருப்பம் இல்லாத பட்சத்தில் இவர்கள் ஆணாதிக்கமாக தங்கள் எண்ணத்தை திணிக்கவேண்டும். தங்கள் பெற்றோரை, பெண்ணின் பெற்றோரை என பலரை காயப்படுத்தவேண்டும். சரி இப்படியான சூழ்நிலையில் பெண்ணுக்கு புரியவைத்து, பெற்றோரை சமாதனப்படுத்தி/காயப்படுத்தியே<wbr></wbr>னும் சம்பிரதாயம் அற்ற திருமணம் செய்துகொண்டால் விமர்சனம் ஏதுமில்லை. மாறாக பெண்ணின்(வருங்கால மனைவி), பெற்றோரின், மாமனார் குடும்ப நம்பிக்கைக்காக என்று தங்கள் நாத்திக கொள்கையை இவர்கள் செருப்பைபோல கழட்டிவிட்டால்; இவர்கள் தங்களை செருப்பால் அடிக்க சம்மதிப்பார்களா? உணர்வு என்பது தன் குடும்பத்திற்கு மட்டும்தான் இருக்குமா? அடுத்தவன் உணர்வை சொறிபவர்கள்; அதே உணர்வை தன் சுற்றத்திற்காக விட்டுக் <wbr></wbr>கொடுப்பது மிகக் கேவலமான செயல். இதனால்தான் சொல்கிறேன் இவர்களில் மிகப்பெரும்பான்மை போலிகள் என்று!!</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
கமல்ஹாசன் பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். மதம் மட்டும் ஆணுறுப்பு போன்றதல்ல, நாத்திகமும் கூட ஆணுறுப்பு போன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள், குழந்தைகள்மேல் திணிக்காதீர்கள், எல்லாவற்றையும் அதை வைத்தே சிந்திக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான விடயம் இருக்கின்றது, அதுதான் நம்பிக்கை; அதில் கல்லைவிட்டு எறிந்து மற்றவர்களை காயப்படுத்தி உங்களுக்கு அடையாளம் தேடாதீர்கள். என் நண்பன் ஒருவர் சொன்னது 'தன் நண்பன் ஒருவன் நாத்திகனாம், அவனுக்கு எந்த சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை இல்லை, சுவாமி அறைக்குள் செருப்போடு போவானாம்', அதை சொல்லும்போது அவனுக்கு அப்படி ஒரு பெருமையாம். பெற்றவர்களது நம்பிக்கையை காயப்படுத்தி தன் நாத்திகத்தை வெளிப்படுத்தும் இந்த நண்பரின் நண்பர் செய்யும் செயலுக்குப் பேர்தான் நாத்திகம்/பகுத்தறிவென்றால் அது என் பார்வையில் குப்பை!! </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
நம்பிக்கை, மூட நம்பிக்கையை எதுவென்றாலும் அதை ஒவ்வொருவரும் தங்களிடத்தில் வைத்திருத்தல் நல்லது!! அதே நேரம் அடுத்தவர்களது நம்பிக்கையில் (அது பார்ப்பவர் பார்வையில் மூட நம்பிக்கையாய் இருப்பினும்) சொறியாமல் இருப்பது இன்னமும் நல்லது!!! </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial;">
<b><span style="color: #cc0000; font-size: large;">கொசிறு :-</span></b></div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
இன்று இணையத்தில் நிறையவே சமூகத்தள புரட்சியாளர்கள் தோன்றியுள்ளனர்; எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள், பிரபலங்களில் குறை தேடுவார்கள், எதையும்/எவற்றையும் விமர்சிப்பார்கள், பகுத்தறிவு பேசுவார்கள், (மூட) நம்பிக்கைகளை உடைத்தெறிவார்கள். இவர்களது நிஜமுகம் அங்கு தெரியப்போவதில்லை; பொதுவெளியில் முதிர்ச்சி அடைந்த மனநிலையாளர்களாக, சமூகத்தை நெறிப்படுத்தும் முன்னோடிகளாக தங்களை நிரூபிக்கும் ஒருவகை ஹீரோயிச எண்ணம்தான் இப்படியான இணையப் போராளிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது! ஏழை, தாழ்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படிக்காதவன் போன்றோர் மகா நல்லவர்கள் என்னு<wbr></wbr>ம் மாயையையும்; பணக்காரன், உயர்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படித்தவன் போன்றோர் மகா கெட்டவர்கள் போன்ற மாயையையும் இணைய சமூகத்தளங்களில் காணலாம். மனித குணங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருப்பது என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத போராளிகள் இவர்கள்!! இவர்களைவிட ஆபத்தானவர்கள் சமூக விடுதலைப் போராளிகள்; இவர்களால் எதிர்க்கருத்துக்கு துரோகிப்பட்<wbr></wbr>டம் கூட இலவசமாக வழங்கப்படும்!!</div>
</div>
<div>
<br /></div>
</div>
அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-32075375465963794132013-01-12T19:51:00.002+05:302023-02-01T01:07:50.304+05:30 ஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<span style="color: #20124d;"><span style="font-size: large;"><b>இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைக்கு எழுதியது!!! </b></span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9B3zLqfVmDBkYGqXfjy3wWBYjKR3IsctZ726EhyphenhyphenrRthWJ5l8WzHu6B72_MZ2Nwb9a47SXbJQE9HHXm2lOse15-qPKnFGdBoudqDtSKff-6EqY-RmJ4vkGSHdBzmo2FlrUTaCMACR_M0_8/s1600/1509631843sachin3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="235" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9B3zLqfVmDBkYGqXfjy3wWBYjKR3IsctZ726EhyphenhyphenrRthWJ5l8WzHu6B72_MZ2Nwb9a47SXbJQE9HHXm2lOse15-qPKnFGdBoudqDtSKff-6EqY-RmJ4vkGSHdBzmo2FlrUTaCMACR_M0_8/s400/1509631843sachin3.jpg" width="350" /></a></div><br />
கிரிக்கட் என்கின்ற சொல்லையும் சச்சின் டெண்டுல்கர் என்கின்ற பெயரையும் பிரித்துப் பார்க்க முடியாது. மேலோட்டமாகவேனும் கிரிக்கெட்டை அறிந்திருக்கும் ஒருவருக்கு சச்சினை தெரியாதிருக்கும் வாய்ப்பு 0% தான்!! அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று!! மூன்று தலைமுறை கடந்து சச்சினை ரசிக்கின்றார்கள், மூன்று தலைமுறை பந்து வீச்சாளர்களை சச்சின் அடித்து நொருக்கியிருக்கின்றார், சச்சினுடன் ஒன்றாக ஆடியவர்களது பிள்ளைகள் சச்சினுடன் சேர்ந்து ஆடியிருக்கின்றார்கள், சச்சினுடன் ஆடியவர்களில் பலர் இன்று வர்ணனையாளர்கள், சச்சினுக்கு எதிராக ஆடியவர்கள் சச்சின் இருக்கும் அணிக்கு பயிற்சியாளர்கள், சச்சினுடன் ஆடிய வீரர்கள் இன்று சச்சினுக்கு நடுவர்களாக தீர்ப்பளிக்கின்றார்கள். எந்த நாட்டு ரசிகராக இருந்தாலும், தமது நாட்டு அணிக்கு எதிராக ஆடுகின்றார் என்கின்றபோதும் சச்சினது அழகான ஷாட்களுக்கு தம்மை மறந்து கைதட்டி ரசிக்கின்றார்கள். வெறும் 5 அடி 5 அங்குலம் உயரமுடைய சச்சின் மிகவும் உயரமான ஆஜானுபாகு தோற்றமுள்ள பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டும் துடுப்பாட்ட கலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.<br />
<br />
1989 களின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய சச்சின், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் (2012 இறுதியில்) தனது ஒருநாள் போட்டிகளின் நீண்ட பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம், அவர் இறுதியாக ஆடியதும் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். 23 ஆண்டுகள் சர்வதேசப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடுவதென்பது சாதாரண விடயமல்ல! உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும்!! அண்மைக் காலங்களாக ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு தொடர்ச்சியான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை; உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் கடந்த 20 மாதங்களில் சச்சின் வெறும் 10 போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார். முதுமையும், ஓட்டக்குவிப்பின்மையால் வந்த விமர்சனங்களும்தான் அழுத்தமாக மாறி சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தூண்டியிருப்பினும், அவர் ஓய்வுபெற்ற இத்தருணம் சரியான நேரம்தான்!!<br />
<br />
சச்சினது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பூச்சியம். முதல் போட்டியே சச்சினுக்கு வித்தியாசமான போட்டிதான், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 16 ஓவர்களைக் கொண்ட (மழை காரணமாக) போட்டிதான் சச்சினின் முதலாவது ஒருநாள் போட்டி; சுவாரசியம் என்னவென்றால் சச்சினுக்கு அப்போது வயதும் 16 தான். இந்தப்போட்டியில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான வக்கார் யூனிஸின் பந்துவீச்சில் சச்சின் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவர் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஓட்டங்கள் எதனையும் அவரால் குவிக்க முடியவில்லை. அதன் பின்னர் சில போட்டிகளில் சச்சின் ஆடியிருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டக்குவிப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய அரைச்சதங்களாக 96 அரைச்சதங்களை குவித்துள்ள சச்சின் தனது ஒன்பதாவது போட்டியில்தான் தனது கன்னி அரைச்சதத்தை இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்டார். அந்தப் போட்டியில் 5 ஆம் இலக்கத்தில் களமிறங்கி 41 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த சச்சின், பந்துவீச்சிலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியிருந்ததால் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்; ஒருநாள் போட்டிகளில் ஆகக்கூடியதாக 62 ஆட்டநாயகன் விருதுகளை தனது பெயரில் கொண்டுள்ள சச்சினின் முதல் ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது இதுதான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl9VTSxnijeMSqJjujL4ZLmm52W2gbxNZ_yIaRmtzlEf88EJm-2t5FIR2JJ5iowcUiPmC9fATg9KOYPpF03FsdceDiv9Nt_DkHjVC2f4UmRhPAXnhx0-M5YBqYu_PK4fyCCjIRehG-qU_Y/s1600/Tendulkar-raising-his-arms-after-scoring-the-100th-ton1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="291" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl9VTSxnijeMSqJjujL4ZLmm52W2gbxNZ_yIaRmtzlEf88EJm-2t5FIR2JJ5iowcUiPmC9fATg9KOYPpF03FsdceDiv9Nt_DkHjVC2f4UmRhPAXnhx0-M5YBqYu_PK4fyCCjIRehG-qU_Y/s400/Tendulkar-raising-his-arms-after-scoring-the-100th-ton1.jpg" width="400" /></a></div><br />
சாதனை எண்ணிக்கையான 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒருநாள் போட்டிகளின் அதிகபட்சமான யாரும் இலகுவில் எட்டமுடியாத 49 சதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் தனது கன்னிச் சதத்தை தனது 79 ஆவது போட்டியில்தான் பெற்றுக்கொண்டார். 1994 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'சிங்கர் வேர்ல்ட் சீரிஸ்' தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 130 பந்துகளை எதிர்கொண்டு சச்சின் குவித்த 110 ஓட்டங்கள் அந்தப்போட்டியில் இந்தியாவிற்கு வெற்றியையும், சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்னும் சாதனையாக 15310 ஓட்டங்களை குவித்துள்ள சச்சின்; முதன்முதலாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் அக்லண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டிதான். 142 என்னும் இலகுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க வேண்டிய இந்தியா சச்சினை முதன் முதலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கியது; காரணம், இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நவ்ஜொட் சிங் சித்துவிற்கு ஏற்பட்ட உபாதை. கிடைத்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சச்சின்; யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியாக ஆடி 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என வெறும் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசினார், கூடவே ஆட்டநாயகன் விருதையும் தட்டிக்கொண்டார். அன்றிலிருந்து சச்சின் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாபெரும் பங்களிப்பை இறுதிவரை கொடுத்துவந்துள்ளார்!!<br />
<br />
ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களை பெற்றிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் இறுதிப் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட சதம்; சச்சினின் மிகச்சிறந்த சதங்களிலில் ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. அன்றைய காலப்பகுதியில் 272 என்னும் மிகப்பெரிய இலக்கை ஷார்ஜா மைதானத்தில் இரவுநேரம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொள்வதென்பது இலகுவான காரியமன்று!! பலம் பொருந்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொருக்கி சச்சின் பெற்றுக்கொண்ட அந்த 134 ஓட்டங்கள் இந்தியாவிற்கு கிண்ணத்தையும் சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. சச்சின் சதம் பெற்ற மற்றுமொரு முக்கிய போட்டி 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் கென்யாவுக்கு எதிராக பெறப்பட்டது; தனது தந்தையின் பிரிவின் மணித்துளிகள் கடக்கும் முன்னர், மனதின் பாரத்தை இறக்கிவைக்கும் அளவுக்கு கால அவகாசம் போதாத நிலையில்; சச்சின் 114 பந்துகளில் பெற்றுக்கொண்ட 140 ஓட்டங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானது. இப்படி சச்சின் பெற்ற சதங்களில் பல சதங்கள் சிறப்பு வாய்ந்தவை எனினும்; 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் 273 என்னும் கடினமான இலக்கை பலமான பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு, வெறும் 75 பந்துகளில் சச்சின் பெற்ற 98 ஓட்டங்கள் சச்சினின் மிகவும் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான மைதானத்தில் பலமான பாகிஸ்தான் வேகங்களை சச்சின் அடித்து நொறுக்கிய இனிங்ஸது. அதேபோன்று மற்றுமொரு முக்கியமான இனிங்க்ஸ்; தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு குவாலியோர் மைதானத்தில் சச்சின் பெற்றுக்கொண்ட 200* ஓட்டங்கள்தான், ஒருநாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் இதுதான்.<br />
<br />
சச்சினை ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே சாதனைகள் முன்னிறுத்தினாலும் பந்துவீச்சிலும் சச்சின் மறக்க முடியாத சில சம்பவங்களை கிரிக்கட் வரலாற்றில் நிகழ்த்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பேத் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்; 6 ஓட்டங்களுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியை கட்டுப்படுத்தவேண்டிய நிலையில் அன்றைய அணித்தலைவரான அசாருதீன் தனது முக்கிய பந்துவீச்சாளர்கள் நான்கு பேரினதும் 40 ஓவர்களும் நிறைவடைந்த நிலையில் வேறு வழியின்றி சச்சினை பந்து வீச அழைத்தார். ஒரு விக்கட் மீதமிருக்க இறுதி ஓவரில் 6 ஓட்டங்களுக்காக ஆடிய மேற்கிந்திய அணி முதல் 5 பந்துகளிலும் 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டி சமநிலையில் இருக்கும்போது அந்த ஓவரில் இறுதிப்பந்தை வீசிய சச்சின்; 24 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கமின்ஸை சிலிப் திசையில் நின்றுகொண்டிருந்த அசாருதீனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதேபோல் 1993 ஆம் ஆண்டு 'ஹீரோ கப்' அரையிறுதியில் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இறுதி ஓவரில் தென்னாபிரிக்காவிற்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அனுபவம் மிக்க கபில்தேவ், ஸ்ரீநாத், பிரபாகர் ஓவர்கள் மீதமிருக்க இம்முறை சச்சின் மீது நம்பிக்கை வைத்து பந்துவீச அழைத்தார் அசாருதீன். இறுதி ஓவரில் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 ஓட்டங்களால் போட்டியை வெற்றி கொண்டதுடன், இந்தியாவை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றார் சச்சின். இவற்றைவிட 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனும், 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனும் 5 இலக்குகளை சாய்த்து போட்டியை இந்தியாவின் கைகளுக்கு வெற்றிக்கனியாக மாற்றியிருக்கின்றார், இந்த இரு போட்டிகளும் இடம்பெற்றது கொச்சி மைதானத்தில் என்பது விசேட அம்சம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkH6zlWXMS-rQibwKUMaFO5Dx5EjQlw7wvSG3Le0X6MnJ02YMoU5oF5BI4Ttnu6NOaY65pTFf5MzSWM1wX9VdbetNO4nPhALTxcl9IclNwykzb3NXglhurrY-F7RpISAL53jU8L4C1XmUJ/s1600/Sachin-Tendulkar-the-Indi-001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkH6zlWXMS-rQibwKUMaFO5Dx5EjQlw7wvSG3Le0X6MnJ02YMoU5oF5BI4Ttnu6NOaY65pTFf5MzSWM1wX9VdbetNO4nPhALTxcl9IclNwykzb3NXglhurrY-F7RpISAL53jU8L4C1XmUJ/s400/Sachin-Tendulkar-the-Indi-001.jpg" width="400" /></a></div><br />
18426 ஓட்டங்களை உலகசாதனையாக தனது பெயரில் சச்சின் கொண்டிருந்தாலும் அதில் 4 ஓட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளேன் மக்ராத் தான் வீசிய பந்தை கையில் எடுத்து மீண்டும் சச்சினை நோக்கி விட்டெறிந்தார், தன்னை நோக்கிவந்த பந்தை பாதுகாப்பிற்காக தனது மட்டையால் சுழற்றி அடித்தார் சச்சின், அந்த பந்து எல்லைக்கோட்டை கடக்கவே அன்றைய விதிமுறைகளின்படி சச்சினுக்கு 4 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு மிகச்சிறந்த இனிங்ஸ் ஒன்று சச்சினால் ஆடப்பட்டபோதும் அந்த இன்னிங்க்ஸ் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கபடாததால் எல்லோராலும் கவனிக்கப்படவில்லை. 18 ஆடி 1998 இல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லோட்ஸ் மைதானத்தில் MCC அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக ஆடிய சச்சின் 262 என்னும் இலக்கை எட்டுவதற்கு 4 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்து தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான மக்ராத், டொனால்ட், ஸ்ரீநாத், கும்ளே அனைவரையும் சச்சின் ஒருகை பார்த்த ஆட்டமது. அன்று சச்சினும் அரவிந்த டீ சில்வாவும் (அரவிந்தா 82 ஓட்டங்கள்) 177 ஓட்டங்களை தங்களுக்குள் இணைப்பாட்டமாக பெற்றமை கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் காணற்கரிய விருந்தாக அமைந்தது, சச்சினின் சிறந்த இனிங்கஸ்களில் ஒன்றாக இதையும் சொல்வார்கள்.<br />
<br />
சச்சின் 23 வருடங்களாக கிரிக்கட் பயணத்தை வெற்றிகரமாக பயணித்ததில் அழுத்தங்களை அதிகம் எதிர்கொண்டவர்கள் என்னவோ எதிரணி தலைவர்களும் பந்துவீச்சாளர்களும்தான். சச்சினுக்கு வியூகங்கள் அமைப்பதிலும், எப்படி பந்துவீசி ஆட்டமிழக்க செய்வது என்பதிலும் எதிரணியினரின் கவனம் அதிகமாக இருந்தும் அவர்களால் சச்சினை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை; சச்சின் அளவுக்கு உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலரையும் எதிர்கொண்டு ஓட்டங்களை வஞ்சனையில்லாமல் குவித்த வீரர்களை எங்கும் காணவியலாது; எந்த நாட்டுக்கு எதிராகவோ, எந்த நாட்டில் இடம்பெற்ற போட்டியாயினும் சச்சினின் ஆதிக்கம் பந்துவீச்சாளர்களுக்கு தலையிடிதான்!! சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்கின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான்!! இப்படியாக ஒருநாள் போட்டிகளின்மீது தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த சச்சினுக்கு கிடைத்த மகுடந்தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அணியின் வீரர் என்கின்ற பெருமை. சச்சினுக்காகவேனும் இந்தியா நிச்சயம் உலககிண்ணம் வெல்ல வேண்டும் என்று கூறிவந்த கிரிக்கட் ரசிகர்களின் கனவை மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி மெய்ப்பித்து சச்சினுக்கு கௌரவம் சேர்த்தது.<br />
<br />
சச்சின் சதமடிக்கும் போட்டிகள் தோல்வியில் முடிவடையும் என்பதும், சச்சின் போட்டிகளை இறுதிவரை கொண்டுசென்று முடிப்பதில்லை என்பதும் சச்சின் மீது சொல்லப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகள். சச்சின் சதமடித்த 49 போட்டிகளில் 33 போட்டிகள் இந்தியாவால் வெற்றி கொள்ளப்பட்டவை; இந்த 33 என்னும் எண்ணிக்கையில் இதுவரை வேறெந்த வீரரும் மொத்தமாகவேனும் சதங்களை எட்டவேயில்லை. வெற்றிபெற்ற போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதலிடம்; 56.63 என்னும் சராசரியில் 11157 ஓட்டங்களை வெற்றி ஓட்டங்களாக குவித்த சச்சின் 62 தடவைகள் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். சதமடித்த எந்தப்போட்டியிலும் சச்சின் தேவைக்கு குறைவான ஓட்ட வேகத்தில் சுயநலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை; தேவைகேற்ப ஆக்ரோஷமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும், சக துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புமிடத்தில் சச்சின் எப்படி அந்த தோல்விகளுக்கு பொறுப்பாக முடியும்? மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்! பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள்? இந்தக் குற்றச்சாட்டுக்கள் சச்சின் மீது சொல்லப்படுவது அறியாமையிலும் இயலாமையிலும் தானன்றி வேறில்லை!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT6VvRVVVbhX3HwicEOQ7kvP31Se3nIb0V5F3SOcVEFcm06XvldHgjnQmyFsGt9N6WBa6YYjhAvknY0zdj8GI2iF9iO_tt8XnDl3DCshNk-jJh6wqZjavjKJ_qOQevucny7FDupyILP9Q5/s1600/sachin-tendulkar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="260" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT6VvRVVVbhX3HwicEOQ7kvP31Se3nIb0V5F3SOcVEFcm06XvldHgjnQmyFsGt9N6WBa6YYjhAvknY0zdj8GI2iF9iO_tt8XnDl3DCshNk-jJh6wqZjavjKJ_qOQevucny7FDupyILP9Q5/s400/sachin-tendulkar.jpg" width="400" /></a></div><br />
சச்சின் டெண்டுல்கர் - இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் நிலைத்திருக்கும். இவரது ஒருநாள் போட்டிகளினது சாதனைகளை இன்னொருவர் தாண்டுவாரா என்பதற்கான பதில் மிகமிக சாத்தியக்குறைவு என்பதுதான். சச்சினை பிடிக்காதவர் இருக்கலாம், சச்சினை விமர்சிக்கலாம், ஆனால் சச்சினை எவராலும் புறக்கணித்து கிரிக்கட்டை நேசிக்க முடியாது! இந்தியாவில் கிரிக்கட் ஒரு மதம், சச்சின் அதன் கடவுள் என்பார்கள்; உண்மைதான், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சச்சின் நிச்சயமாக பிதாமகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சச்சினின் டெஸ்ட் போட்டிகளின் ஒட்டக்குவிப்பு அண்மைக்காலங்களில் மந்தகதியில் இருப்பினும் சச்சினால் மீண்டு வரமுடியும் என சச்சினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையும் நம்புவதால் சச்சின் மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஓட்டக்குவிப்பு ஒன்றை நிகழ்த்தியவுடன் சச்சின் தனது ஓய்வை முழுமையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்; ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஓய்வை அறிவித்திருக்கும் இந்நேரத்தில் அவர் இறுதியாக ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் மற்றும் அரைச்சதம் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம். சச்சின் என்னும் ஜாம்பவான் வாழும் காலத்தில் அவர்கூட தாங்கள் விளையாடியதை பல வீரர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள்; அதேபோல ரசிகர்களாகிய நாம் கிரிக்கட்டை நேசித்து, ரசித்த காலத்தில் சச்சின் என்னும் மீபெரும் துடுப்பாட்ட வீரரை ரசித்தது எமக்கும் பெருமையான, மறக்க முடியாத, பசுமையான நினைவுகளாக எம்முடன் என்றென்றும் பயணிக்கும்...... </div>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-59829663135830297532012-09-28T18:29:00.000+05:302023-02-01T01:10:48.392+05:30தாண்டவம் - என் பார்வையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh97oD4Gp39Be8HvWxLnrlT4wuYByi2shmx-yPnyEgKbe7809lqo251uMfKx0z8d3mc5t8eduUsKguet85ccvtBIVdP-ehJbtuTbIVY6yglzqI-cfXH4J_eb_MxgsNAoT1iRntsSY7pHA3_/s1600/thandavam_trailer_launch_wallpapers_25856432.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh97oD4Gp39Be8HvWxLnrlT4wuYByi2shmx-yPnyEgKbe7809lqo251uMfKx0z8d3mc5t8eduUsKguet85ccvtBIVdP-ehJbtuTbIVY6yglzqI-cfXH4J_eb_MxgsNAoT1iRntsSY7pHA3_/s400/thandavam_trailer_launch_wallpapers_25856432.jpg" width="400" /></a></div><br />
எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், நீரவ்ஷா கேமராவில் சீயான் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம், நாசர், ஜெகபதிபாபு, லக்ஷ்மிராய் போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும்; சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் போன்றோர் குறிப்பிடத்தக்க வேடங்களிலும் நடித்து UTV Motion Picture தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தாண்டவம்!!<br />
<br />
<span style="color: #20124d;"><b>கதை - </b></span>போலிஸ், கிரைம், கால்யாணம், காதல், நட்பு, குடும்பம், கிராமம், டெல்லி, லண்டன், குண்டுவெடிப்பு, தீவிரவாதம், இழப்பு என கதை சொல்லப்பட்டிருக்கின்றது!! புதுமையான கதை இல்லை என்றாலும் அதை புதுமையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர், அதில் வெற்றியும் கண்டுள்ளார்!!<br />
<br />
<span style="color: #20124d;"><b>திரைக்கதை - </b></span>முதல்பாதியில் வரும் பிளாஷ்பாக் கதையை அங்கேயே இடைநிறுத்தி, இரண்டாம் பாதியில் மீண்டும் இடையில் கொண்டுவந்திருப்பது திரைப்படத்தை தொய்வின்றியும் சலிக்காமலும் கொடுக்க உதவியிருக்கின்றது! வேகமான திரைக்கதை எல்லாம் இல்லை என்றாலும் வழமையான எல்.விஜயின் பாணியில் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது!! <br />
<br />
<b><span style="color: #20124d;">வசனம் -</span> </b> குறிப்பிட்டு சொல்லும்படி பெரிதாக எழுதவில்லை எனினும், வசனம் எந்தவிதத்திலும் குறையாக தெரியவில்லை; கிராமத்து காட்சிகளில் வரும் வசனங்கள் ஜதார்த்தத்தை மீறி நகைச்சுவையாக அதிகம் இருந்தாலும் அவற்றுக்கு சபாஷ் போடலாம்!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4nM5Y0eAkknFgxhHosAeKw8jd-L8_GvtuJc-D6pf4oxlQoqJeE4COHUJfH5e3DZqO6UrHjKjCiGj5_ofa7hyMOSmMF7Xakq4Mar7v334k_TTynhT16ulipKGLErsHfbyVSrPAlCr5CQWs/s1600/tamil-actor-thandavam-vikram-stills-vikram-in-thandavam-movie-photos12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4nM5Y0eAkknFgxhHosAeKw8jd-L8_GvtuJc-D6pf4oxlQoqJeE4COHUJfH5e3DZqO6UrHjKjCiGj5_ofa7hyMOSmMF7Xakq4Mar7v334k_TTynhT16ulipKGLErsHfbyVSrPAlCr5CQWs/s400/tamil-actor-thandavam-vikram-stills-vikram-in-thandavam-movie-photos12.jpg" width="400" /></a></div><br />
<span style="color: #20124d;"><b>விக்ரம் -</b></span> என்ன சொல்றது? 46 வயதிலும் இத்தனை கடின உழைப்பை ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கணும் என நினைத்து அதை 100 சதவிகிதம் கடைப்பிடிக்கும் விக்ரமிற்கு சபாஷ்!! விக்ரம் படங்கள் அண்மைக்காலங்களில் சொதப்பினாலும் விக்ரமின் உழைப்பு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சம அளவில் கடினமானதாக அமைந்திருக்கும்; தாண்டவமும் விதிவிலக்கல்ல!! உடல் எடையை ஏற்றுவதிலும், இறக்குவதிலும், உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் விக்ரமுக்கு நிகர் விக்ரம்தான்!! தில் திரைப்படத்தில் பார்த்து வியந்த அதே உடல் கட்டுப்பாடு!! முகத்தில் சற்று முதுமை தெரிந்தாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், விறுவிறுப்பிலும் விக்ரம் இன்னமும் இளைஞன்தான்!!<br />
<br />
<span style="color: #20124d;"><b>அனுஷ்கா -</b></span> சற்று வயது அதிகமாக தோன்றினாலும் விக்ரமிற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்; இப்போதிருக்கும் நாயகிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் அதிகம் உடைய அனுஷ்கா தாண்டவத்திலும் அசத்தியிருக்கின்றார். எல்.விஜய் திரைப்படங்களுக்கு இயல்பான நாயகியாக அனுஷ்கா சிறப்பான தேர்வு!!<br />
<br />
<span style="color: #20124d;"><b>எமி.ஜாக்சன் -</b></span> பெரிதாக கவரவில்லை; அழகிலும்!!<br />
<br />
<span style="color: #20124d;"><b>சந்தானம் - </b></span>திரைப்படத்தை தொய்யவிடாமல் சந்தானம் அப்பப்போ திரைக்கதையில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அவை கதையைவிட்டு தனியே இல்லாமல் திரைக்கதையின் தேவைக்காக அமைந்திருப்பது சிறப்பு!! ரஜினி என்ன செய்தாலும் ஸ்டைல் என்கின்ற ஒருநிலை உருவாகியதுபோல; சந்தானம் என்ன சொன்னாலும் அதை கவுண்டராக/காமடியாக எடுத்து ரசிகர்கள் விசிலடிக்கும் அளவிற்கு சந்தானத்தின் அசுரவளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது!! ஒவ்வொரு கவுண்டருக்கும் கிளாப்ஸ்; கவுண்டர் கொடுப்பதுடன் இப்பெல்லாம் சந்தானம் எக்ஸ்ப்ரஷனிலும் வெளுத்து வாங்குகிறார், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனுக்குகூட செம ரெஸ்போன்ஸ், தாண்டவத்திலும்!! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIGWgugvNhTiMIoNqApyH9mnHMoTBLQZ7mbJUyUUcMU_HXUuyn7r7yvQzlDc3FPzxEe_jjznB0kKonIc7ty3VS1WDQymGGlKjk6Kz1zh3vWOQ5gI0KvawawpWq9BMn-E8NMN_GGLupAguj/s1600/Thandavam-Movie-Stills-7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="387" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIGWgugvNhTiMIoNqApyH9mnHMoTBLQZ7mbJUyUUcMU_HXUuyn7r7yvQzlDc3FPzxEe_jjznB0kKonIc7ty3VS1WDQymGGlKjk6Kz1zh3vWOQ5gI0KvawawpWq9BMn-E8NMN_GGLupAguj/s400/Thandavam-Movie-Stills-7.jpg" width="400" /></a></div><br />
<span style="color: #20124d;"><b>நாசர் -</b></span> இலங்கை தமிழ் பேசும் லண்டன் விசாரணைப் போலிஸ்; இதுவரை தமிழ் சினிமா கொடுத்த இலங்கை உச்சரிப்புக்களில் அதிகம் நெருக்கமாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியளவிலும் உள்ள வசன உச்சரிப்பாக நாசரின் இந்த திரைப்பட உச்சரிப்பை கூறலாம்!! நாசர் கொடுத்ததை சிறப்பாக செய்யாவிட்டால்தான் ஆச்சரியம், இதிலும் சிறப்பாகவே தனது வெளிப்பாட்டை கொடுத்திருக்கின்றார்!! <br />
<br />
<b><span style="color: #20124d;">லக்ஷ்மிராய் - </span></b>நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரங்களை கொடுத்தால் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்; ஆனால் இவருக்கு சப்பை கேரக்டர்களே தொடர்ந்தும் கிடைக்கின்றமை அவரது துரதிஸ்டம்!!<br />
<br />
<span style="color: #20124d;"><b>சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் -</b></span> கிடைத்த சிறிது நேரத்தையும் தமது அனுபவத்தால் கலகலப்பாக்கி விடுகின்றார்கள்!!<br />
<br />
<span style="color: #20124d;"><b>எடிட்டிங் -</b></span> காட்சிகளை சிறப்பாக கோர்த்திருக்கின்றார்; விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டமைக்கு ஆண்டனிக்கு சபாஸ் போடலாம்!!<br />
<span style="background-color: black;"></span> <span style="color: #20124d;"><br />
<span style="background-color: white;"><b>ஒளிப்பதிவு -</b></span></span> நீரவ்ஷா கேமரா வழமைபோல சிறப்பு; லண்டன், டெல்லி, கிராமம் என மூன்று வித்தியாசமான பிரதேசங்களையும் அழகாக காட்சிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்; எமி ஜாக்சனை அழகாக காட்டுவதில் மட்டும் தோற்றுப் போய்விட்டாரோ என எண்ணத் தோன்றுகின்றது!!<br />
<span style="color: #20124d;"><b> </b></span><br />
<span style="color: #20124d;"><b>இசை -</b></span> ஜீ.வி.பிரகாஷ்குமார் பாடல்களில் ஸ்கோர் பண்ணியிருக்கின்றார்; அனிச்சம் பூவழகி, உயிரின் உயிரே, ஒருபாதி கதவு பாடல்களின் காட்சியமைப்புக்களும் பிரமாதம்!! பின்னணி இசையில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாகவோ, மட்டமாகவோ தோணவில்லை!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjonjZIX4z6t1E-fFoyto2FxGCPRUcO3APRe5b-wBFfqmhfBF5d9Ga7xCVwMOnu1v-T84xpX-tfQDK5NQZ4oGaIsQYT0j_VNcmSk7GqRNM1qAA-XWAPKwf0NOE_qthllqViEnR7CIvW-x_s/s1600/Thandavam-Movie-Latest-Photos-1604.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="396" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjonjZIX4z6t1E-fFoyto2FxGCPRUcO3APRe5b-wBFfqmhfBF5d9Ga7xCVwMOnu1v-T84xpX-tfQDK5NQZ4oGaIsQYT0j_VNcmSk7GqRNM1qAA-XWAPKwf0NOE_qthllqViEnR7CIvW-x_s/s400/Thandavam-Movie-Latest-Photos-1604.jpg" width="400" /></a></div><br />
<span style="color: #20124d;"><b>இயக்கம் - </b></span>சென்னையில் இருந்து டெல்லிவரை எடுக்கக் கூடிய கதையை, டெல்லியில் இருந்து லண்டனுக்கு எடுத்திருக்கின்றார் இயக்குனர் எல்.விஜய்; திரைப்படத்தை அழகாகவும், ரிச்சாகவும் காட்டுவதற்கான புதிய வழிமுறை!! பெரிய ஹீரோக்கள் படமென்றால் இப்போதெல்லாம் இயக்குனர்கள் இதனையே அதிகம் செய்கின்றார்கள். ஸ்டுடியோவுக்குள் இருந்த கேமராவை கிராமங்களுக்கு கொண்டுவந்த பாரதிராஜாவின் புரட்சியை இன்றைய இயக்குனர்கள் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வது ஆரோக்கியமானதா? இல்லையா? என்று சொல்லமுடியவில்லை!! மற்றப்படி இயக்கத்தில் விஜய் வழமைபோல சிறப்பாக இயக்கியிருக்கின்றார்; பல திரைப்படங்களில் பார்த்த காட்சிகள்போல ஞாபகங்கள் ஆங்காங்கே வந்துபோனாலும் எடுத்த விடயத்தை ஆக்ஷன், காமடி, காதல், கிரைம் என மசாலாவாக சலிக்கவைக்காமல் கொடுத்திருக்கின்றார்!! <br />
<br />
<span style="color: #20124d;"><b>தாண்டவம் -</b></span> தமிழ் சினிமாவின் மைல்கள் என்றோ, பக்கா கமர்சியல் விருந்தென்றோ சொல்லமுடியாது என்பது எத்தனை சதவிகிதம் உண்மையோ; அத்தனை சதவிகிதம் தாண்டவம் திரையரங்கில் சலிக்காமல் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம் என்பதும் உண்மை!! நிச்சயம் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்!!!<br />
<br />
<span style="color: #20124d;"><span style="background-color: white;"><b>குறிப்பு -</b></span></span> இது விமர்சனமல்ல 'எனது பார்வையில்' தாண்டவம்! (குறிப்பாக பாலுமஹேந்திரா சார் அவர்களுக்கு)<br />
<br />
<div style="text-align: center;"><span style="color: #4c1130;"><b><span style="font-size: x-large;">*--------------*</span></b></span></div><br />
</div>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-84795184457942039712012-09-25T15:16:00.006+05:302023-02-01T01:08:01.293+05:30நானும் சினிமாவும் பாகம் - 3 (சீயான் விக்ரம்) <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaoRrhJuCrOetGSB_S22sLEqHouY5sGmGfdYxYspoeovytdFH2guQjOq82Uy4nM2w6yZF6VZ6MesJtgu5XKEUbpzZkZL-u402IN6BWsXs6Oi4gRqn0lmOD_EXPtwUVVieOWtxQ705MFoLG/s1600/vikram+bheema+stills%252Callbams%252Cimages%252Cwall.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaoRrhJuCrOetGSB_S22sLEqHouY5sGmGfdYxYspoeovytdFH2guQjOq82Uy4nM2w6yZF6VZ6MesJtgu5XKEUbpzZkZL-u402IN6BWsXs6Oi4gRqn0lmOD_EXPtwUVVieOWtxQ705MFoLG/s400/vikram+bheema+stills%252Callbams%252Cimages%252Cwall.jpg" width="400" /></a></div><br />
நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய நானும் சினிமாவும் பாகம் இரண்டாவதின் தொடர்ச்சி!! விக்ரம் சம்பந்தப்பட்டது என்பதால் சற்று விரிவாக என்னுடைய அனுபவத்தில் விக்ரமையும் தாண்டி, விக்ரமை பற்றியும் எழுத வேண்டும் என நினைத்திருந்ததால் பல நாட்கள் தள்ளிப்போய்விட்டது. இந்தவார இறுதியில் தாண்டவம் வெளியாகும் நேரத்தில் இதனை எழுதுவது சரியென தோன்றியது! ரஜினிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விக்ரம் என்பதனால் முடிந்தளவுக்கு திருப்தியாக, விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கின்றேன்; எழுதினேனா இல்லையா என்பதை நானும் உங்களைபோல பதிவின் முடிவில் தெரிந்துகொள்கின்றேன் :-))<br />
<br />
<span style="font-size: large;"><span style="color: #20124d;"><b><br />
</b></span></span> <span style="font-size: large;"><span style="color: #20124d;"><b>எனக்கு பிடித்த விக்ரம் -</b></span></span> இந்த விம்பத்தை எனக்கு பொதிகை தொகைக்காட்சி முன்னரே ஒரு சில திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி இருந்தாலும்; அந்த விம்பத்தை எனக்கு இவர் பெயர் விக்ரம் என அறிமுகப்படுத்தியது 'தில்' திரைப்படம் தான்!! 'சேது' திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்திருந்தாலும் இங்கு யாழ்ப்பாணத்தில் ஓரிரு 'மினி' திரையரங்கில் மட்டுமே 'சேது' காண்பிக்கப்பட்டது! ஓரிருவர் "படம் நல்லாயிருக்கு" என்று சொன்னாலும் ஏனோ படம் பார்க்க பிடிக்கவில்லை!! சிலகாலம் கழிந்த பின்னர் மீண்டும் ஒரு நண்பனின் உதவியில் 'தில்' திரைப்பட VCD கிடைத்தது; மிகவும் தெளிவான copy வேறு!! படம் ரொம்பவே பிடித்துப்போக, பலதடவைகள் வேறு வேறு இடங்களில்(உறவினர், நண்பர்கள் வீடுகளில்) மீண்டும் மீண்டும் பார்த்ததாலோ என்னமோ அந்த திரைப்படத்தின் நாயகனும் மனதுக்கு நெருக்கமானான்!!<br />
<br />
கூட இருந்த அஜித்,விஜய் ரசிகர்களான நண்பர்களின் அடுத்த சூப்பர்ஸ்டார் அலப்பறை; ரஜினிவேறு நீண்ட இடைவெளிகளில் படம் நடிப்பதால் இடைப்பட்ட காலத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு தேவயான ஒரு பிடிப்பு போன்றவை மறைமுக காரணங்களாக இருக்க தில், காசி, சேது என அடுத்தடுத்து நான் பார்த்த மூன்று திரைப்படங்களிலும் வித்தியாசம் + ஈர்ப்பை கொடுத்த விக்ரம் எனக்கு மனதுக்கு நெருக்கமான நாயகனானார்!! அடுத்தடுத்து விக்ரம் நடித்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களின் VCD களையும் தேடித் தேடி பார்ப்பது வழக்கம் (திரையரங்குகளுக்கு படங்கள் வந்ததில்லை) ஓரிரு திரைப்படங்கள் வெளிவந்தாலும் அந்த சமயங்களில் நான் ஊரில் இருந்ததில்லை. மிகவும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் பார்வையிட எதிர்பார்த்திருந்த பிதாமகனும் கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போயிற்று!! First show மிஸ் பண்ணினால் ஏனோ அந்த படத்தை திரையில் பார்க்க பிடிப்பதில்லை; இன்றுவரை :-)<br />
<br />
அதற்கிடையில் தூள், சாமி, ஜெமினி என விக்ரமின் மாஸ் திரைப்படங்கள் என்னை விக்ரமின் தீவிர ரசிகனாக மாற்றியது!! நான் மிகவும் எதிர்பார்த்து முதல் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம்(கொழும்பில் நான் பார்த்த முதல் திரைப்படம்) 'அருள்' ஊத்திக்கொண்டது!! அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் அந்நியன்; முதல்நாள் மற்றும் சில நாட்கள் திரையரங்கிலும், தொலைக்காட்சி மற்றும் DVD என பலநாட்கள் வீட்டிலுமாக, நான் அதிகதடவைகள் பார்த்த திரைப்படங்கள் வரையில் அந்நியனும் இடம்பிடித்துக்கொண்டது. அந்நியனுக்கு பின்னர் மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை என எந்த திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகளையும் திரையில் காண தவறவிட்டதில்லை!! இப்போதும் தாண்டவம் முதல்நாள் காட்சிக்காக ஆவலுடன்!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZEZ890d48eXWdxLSI4IrK_PCuoMZ0Ef7nYPSIEm1W81OvOHwLFQcVYP_JVASiGE_MbEiK9JAFRA8XgVJ5N6MLeUen41_PpKLsiNXpNvfosEv0mga8v4lxomW5xa3QTbXxxO01ym_-jESm/s1600/chiyaan_vikram_deiva_thirumagan_stills_18.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZEZ890d48eXWdxLSI4IrK_PCuoMZ0Ef7nYPSIEm1W81OvOHwLFQcVYP_JVASiGE_MbEiK9JAFRA8XgVJ5N6MLeUen41_PpKLsiNXpNvfosEv0mga8v4lxomW5xa3QTbXxxO01ym_-jESm/s400/chiyaan_vikram_deiva_thirumagan_stills_18.jpg" width="400" /></a></div><br />
<br />
வெற்றிப்படங்கள் மட்டுமென்றில்லாது விக்ரமின் சரியாக போகாத சில திரைப்படங்களும் எனக்கு மிக்கவும் பிடித்தவை; அவற்றில் பீமா, சாமுராய், இராவணன் போன்றவை முக்கியமானவை!! ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் மலையளவு எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் அவற்றை கடந்த 7 வருடங்களில் தெய்வதிருமகள் மட்டும்தான் பூரணமாக திருப்திப்படுத்தியது; பீமா, ராவணன் திரைப்படங்கள் திருப்தியை கொடுத்தாலும், வணிகரீதியில் சரியாக போகாத குறை இருக்கத்தான் செய்தது. வயது ஏறிக்கொண்டே போகும் நேரத்தில் வீணாக பெரிய பட்ஜெட் என்று காலத்தை இழுத்தடிக்காமல் நல்ல ஸ்கிரிப்ட்களில் விக்ரம் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்; தாண்டவத்திற்கு அடுத்து ஷங்கரின் 'ஐ' திரைப்படம் என்பதால் அதற்கும் நீண்டகால அவகாசம் தேவை!!<br />
<br />
<span style="font-size: large;"><b><span style="color: #20124d;">நடிகர் விக்ரம் -</span></b> </span>சினிமாக் கனவு; அதற்கான முயற்சியாக படிப்பு, பயிற்சி என தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு தனது கனவு கோட்டைக்குள் காலடிவைத்த இளைஞன்!! 10 வருட போராட்டம், 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகனாக நடிக்க வாய்ப்பு; ஆனாலும் வெற்றியோ அடையாளமோ கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை!! கல்லூரி காலத்தில் இருந்து விக்ரமிற்கு தடைக்கற்கள்தான் அதிகம்!! கல்லூரி காலத்தில் மிகவும் ஆபத்தான மோட்டார் சைக்கிள் விபத்தை சந்தித்து இருபதிற்கும் மேற்ப்பட்ட சத்திர சிகிச்சையால் பிழைத்த விக்ரமிற்கு கால்களில் இன்னமும் அதன் தாக்கம் உண்டு. அதன் பின்னர் சினிமாவில் நடிகனாக தோல்வி, தோல்வி, தோல்வி..... அப்பப்போ வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசும் சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது; குறிப்பாக பிரபுதேவாவிற்காக காதலன், மின்சாரகனவு போன்ற திரைப்படங்களிலும்; அப்பாசிற்காக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூச்சூடவா திரைப்படங்களிலும்; அஜித்திற்கு அமராவதி திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்தவர் விக்ரம்தான்!!<br />
<br />
தனக்கும் சினிமாவுக்கும் எட்டாம் பொருத்தம் என நினைத்து சினிமாவைவிட்டு ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆக முடிவெடுத்திருந்த வேளையில் கிடைத்த ஒரு திரைப்பட வாய்ப்பை இறுதி வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டுமொருதடவை முயற்சி செய்தார் விக்ரம். பாலுமகேந்திரா பாசறையில் இருந்து புதுமுக இயக்குனராக வெளிவந்த பாலா இயக்குனர் அவதாரம் எடுக்க, விக்ரம் அரிதாரம் பூசிய அந்த திரைப்படம்தான் சேது!! சேதுவிற்கான பாலாவால் முதலில் கதை சொல்லப்பட்டது அஜித்குமாருக்குத்தான்!; முதலில் அஜித் நடிப்பதாக கூறப்பட்டு பின்னர் அஜித் விலகிவிட்டார் என அறிவிக்கப்பட்டது. மொட்டை போடும் காட்சியால் அந்த திரைப்படத்தில் இருந்து அஜித் விலகியதாக பேசப்பட்டது (பின்னர் கஜினியில் அஜித் நடிக்க முடியாமைக்கு போகவும் அதே மொட்டை காட்சிதான் காரணம்!) பாலாவிற்கு முதல் முயற்சியாகவும், விக்ரமிற்கு இறுதி முயற்சியாகவும் தயாரிக்கப்பட்ட 'சேது' திரைப்படத்தின் பிரிவியூஷோ மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக சொல்வார்கள்; யாரும் வாங்க முன்வரவில்லை!!<br />
<br />
இறுதியில் ஒருவழியாக 1999 இல் வெளிவந்த சேது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது; இயக்குனர் பாலாவை தமிழ் சினிமா இருகரம் கொடுத்து வரவேற்று முதன்மை இயக்குனர்களுக்கு சமனான சிம்மாசனம் கொடுத்து அழகுபார்த்தது. தமிழ் சினிமாவிற்கு புதிய முகத்தை பாலா கொடுக்க, விக்ரமின் அபரிமிதமான நடிப்பாலும், இளையராஜா, இரத்தினவேல் போன்றோரின் தொழிநுட்பரீதியிலான பங்களிப்பாலும் சேது மிகப்பெரும் வெற்றி பெற்றது!! பல வருடத்து கனவு, 10 வருட உழைப்பு என விக்ரமிற்கு தமிழ் சினிமா வெற்றிக்கதவை மெல்லத் திறந்தது. ஸ்ரீதர், விக்ரமன், பி.சி.ஸ்ரீராம் இயக்கங்களில் கிடைக்காத வெற்றி பாலா என்னும் புதுமுகம் மூலம் விக்ரமிற்கு கிடைத்தது அதிஸ்டமா? நேரமா? உழைப்பிற்கும் இலட்சயத்திற்க்கும் கிடைத்த பிந்திய வெற்றியா? போன்ற கேள்விகளுக்கு வித்திட்டன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVHENRNMO76BbVgN2nkvBpCxCxp-gUIjFws-AJe5fj-jb-UK-kqOzOUylKJotHI4aMGI7bBOGlwV-UBo_irha7urYKu3AVyxj_VhbxRVvg4u2hCcVm-noN__T8AbVFlz20X4Tbh4spMgjh/s1600/vikram_005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVHENRNMO76BbVgN2nkvBpCxCxp-gUIjFws-AJe5fj-jb-UK-kqOzOUylKJotHI4aMGI7bBOGlwV-UBo_irha7urYKu3AVyxj_VhbxRVvg4u2hCcVm-noN__T8AbVFlz20X4Tbh4spMgjh/s400/vikram_005.jpg" width="400" /></a></div><br />
சேதுவை தொடர்ந்து தனது கல்லூரிகால நண்பனான தரணி என்று சினிமா உலகில் அறியப்படும் ரமணியுடன் இணைந்து பணியாற்றிய 'தில்' திரைப்படம் வணிகரீதியில் பெரும் வெற்றி பெற்றது!! தில் திரைப்படம் விக்ரமிற்கு மட்டுமல்ல, எதிரும் புதிரும் திரைப்பட தோல்வியால் தளர்ந்திருந்த தரணிக்கும் 'வெற்றிப்பாதையை திறந்துவிட்டது!! அடிதடியில் மட்டும் ஓடிக்கொண்டிருந்த ஆக்ஷன் கமர்சியல் சினிமாவில் ஐடியா காட்சிகளை டசின் கணக்கில் புகுத்தியதும் தில் திரைப்படம்தான். தில் திரைப்படத்தை தொடர்ந்து வணிகரீதியில் மீண்டும் தரணியுடன் இணைந்து A.M.இரத்தினத்தின் ஸ்ரீசூர்யா மூவிஸுக்காக தூள், சரணுடன் இணைந்து ஏ.வி.எம்க்காக ஜெமினி, ஹரியுடன் இணைந்து கவிதாலயாவுக்காக சாமி என தொடர்ச்சியாக கமர்சியல் வெற்றிகள் விக்ரமிற்கு கிடைத்தன!! சமகாலத்திலேயே தன்னை வருத்தி சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய காசி திரைப்படமும் விக்ரமிற்கு மேலும் பெயரை பெற்றுக் கொடுத்தது!!<br />
<br />
2001 - 2003 வரையான காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் விக்ரம் என்பது அன்றைய காலப்பகுதியில் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, ஏன் சாதனை என்று கூட சொல்லலாம்!! சாமி வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்களால் இன்றைய சூப்பர்ஸ்டார் விக்ரம்தான் என்கின்ற கூற்று விக்ரமை பொறுத்தவரை மிகப்பெரும் பாராட்டு!! அடுத்து மீண்டும் பாலாவுடன் கைகோர்த்து விக்ரம், சூர்யா கூட்டணியில் வெளிவந்த பிதாமகன் மிகப்பெரும் வரவேற்ப்பை வணிகரீதியிலும், விமர்சனரீதியிலும் பெற்றுக்கொடுத்தது. தனக்கு அங்கீகாரம் கொடுத்த தமிழ் சினிமாவிற்கு கைமாறாக விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்றுகொடுத்து பெருமை சேர்த்தார்!! தமிழ் சினிமாவில் முழுமையான மாஸ் ஹீரோவாகவும், முழுமையான கிளாஸ் ஹீரோவாகவும் தனித்தனி திரைப்படங்களில் நடித்து இரண்டு வகையிலும் ரசிகர்களால் முழுமையாக அங்கீகாரம் பெற்ற முதல் நடிகன் என்கின்ற பெருமையை விக்ரம் பெற்றுக்கொண்டார்!!<br />
<br />
இந்த வெற்றிப் பயணத்திற்கிடையே சாமுராய், காதல் சடுகுடு, கிங், விண்ணுக்கும் மண்ணும் என வணிக ரீதியில் சரியாக போகாத திரைப்படங்களும் அப்பப்போ வெளிவந்தன; ஆனலும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் விக்ரம் தனது அதிகபட்ச வெளிப்பாடை கொடுத்துக்கொண்டிருந்தார். உடல் எடையை கூட்டிக்குறைப்பதில் மாயாஜாலம் நிகழ்த்தினர்; படத்திற்கு படம் உடல்மொழி, வசன உச்சரிப்பு போன்றவற்றில் புதுப்புது பரிமாணங்களை வேறுபடுத்திக் காட்டத் தொடங்கினார்!! பிதாமகனுக்கு அடுத்து ஹீரியுடன் மீண்டும் இணைந்து நடித்த அருள் திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் அடியாக அமைந்தது!! விமர்சனங்கள், வசூல் மற்றும் விக்ரமினின் மாறுபட்ட பாத்திரங்கள் என அனைத்திலும் அருள் கைகொடுக்கவில்லை!!<br />
<br />
அருள் திரைப்படத்தின் தோல்வியை ஈடுசெய்யும் வகையில் வெளிவந்த விக்ரமின் அடுத்த திரைப்படமான அந்நியன் திரைப்படம் அருளில் இருந்த அத்தனை குறைகளையும் போக்கியது; ஷங்கரின் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அந்நியன் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது!! மூன்று வேறுபட்ட பாத்திரங்களை ஒரு உருவத்தில் கனகச்சிதமாக விக்ரம் கொடுத்திருந்தார்!! உடல்மொழி, வசன உச்சரிப்பு என ஒரு பாத்திரத்திற்கும் மற்றைய பாத்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அப்படியொரு சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருப்பார். அந்நியன் விக்ரமின் திரைவாழ்க்கையில் மிகப்பெரும் மைல்கல்! விக்ரமை மிகச்சிறந்த நடிகனாக ரசிகர்களும், திரையுலகமும் ஏற்றுக்கொன்டாலும் விக்ரமிற்கு காமடி சரியாக அமைவதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது; சிவாஜிகணேஷன் அவர்களுக்கும் கடைசிவரை இருந்த குறையது!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb-rvFro_8r7T_DnklgxNhyphenhyphenxUjLLeBYp7fgBjyVu2nRq_qoFqaGVcYDcdDhCtzhnxa9gIcIFobDLvihCAzRXHIKjo2hDJwo68LDL7LQFOOwj3_FjLSOrPVZnLFhXskWJmhbZlReomJS_Xe/s1600/Raavanan-Movie-Stills-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb-rvFro_8r7T_DnklgxNhyphenhyphenxUjLLeBYp7fgBjyVu2nRq_qoFqaGVcYDcdDhCtzhnxa9gIcIFobDLvihCAzRXHIKjo2hDJwo68LDL7LQFOOwj3_FjLSOrPVZnLFhXskWJmhbZlReomJS_Xe/s400/Raavanan-Movie-Stills-13.jpg" width="400" /></a></div><br />
குறுகியகாலத்தில் ஒருவரது வெற்றி நீண்டகாலமாக அதே துறையில் இருப்பவருடன் போட்டிக்கு கோர்த்துவிடுவது எல்லா இடங்களிலும் நடக்கும் சம்பவம்; இன்று வீராத் கோலியை சச்சினுடன் ஒப்பிடுவதுபோல அன்று விக்ரமை கமலுடன் ஒப்பீடுகளும் இடம்பெற்றன. கமலுக்கு காமடி காட்சிகள் அல்வா சாப்பிடுவது போன்றது, ஆனால் விக்ரமிற்கோ காமடி பெரிதாக எடுபடவில்லை என்கின்ற குறை; இந்நிலையில்தான் மலையாள இயக்குனர் ஷாபியின் துணையுடன் 'மஜா' என்கின்ற முழுநீள நகைச்சுவை(?) திரைப்படத்தில் விக்ரம் நடித்தார். கமலுடன் போட்டிக்காக விக்ரம் மஜாவிலும், அந்நியனின் மூன்று வேடங்களுக்கு போட்டியாக தன்னை மேலும் நிரூபிக்க கமல் பத்து வேடங்களில் தசாவதாரமும் நடிப்பதாக பேசப்பட்டது!! ஆனால் மஜாவில் விக்ரமிற்கு காமடியும், வணிக ரீதியில் மஜாவும் விக்ரமிற்கு கைகொடுக்கவில்லை!<br />
<br />
அந்நியன் கொடுத்த வெற்றியும், புது மற்றும் பிரபலமில்லாத இயக்குனர்கள் கொடுத்த தோல்விகளுமோ என்னவோ விக்ரமை தனது திரைப்பட தெரிவுகளில் புதிய முடிவுகளை எடுக்க தூண்டியது; அந்த முடிவுகள்தான் விக்ரமின் திரைப்பயணத்தில் தொய்வையும், வீழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியது என்றால் மிகையல்ல. பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் பிரபலமான இயக்குனர்களிடம்தான் நடிப்பது போன்றவைதான் அந்நியனுக்கு பின்னர் விக்ரமின் திரைப்படங்களை தெரிவு செய்வதில் எடுத்த தவறான முடிவுகளோ என்று என்ன தோன்றுகின்றது!! 2005 மஜாவிற்கு பின்னர் 2011 இல் தெய்வத்திருமகள் வெளிவரும்வரை ஆறு வருடங்களில் விக்ரம் நடித்தவை வெறும் மூன்று திரைப்படங்கள்தான். பீமா, கந்தசாமி, ராவணன் திரைப்படங்கள்தான் அந்த மூன்று திரைப்படங்களும்; இம் மூன்று திரைப்படங்களும் மிகப்பெரும் பொருட் செலவிலும், அதிக கால அவகாசங்களிலும் எடுக்கப்பட்டாலும் மூன்று திரைப்படங்களாலும் வணிகரீதியில் வெற்றியை பெறமுடியவில்லை!!<br />
<br />
அதேநேரம் இந்த மூன்று திரைப்படங்களுக்கும் விக்ரம் கொடுத்த உடல் உழைப்பு அபரிமிதமானது; ஆனால் அவை விழலுக்கு இறைத்த நீராகியது என்பதுதான் உண்மை. பீமா திரைப்படத்தில் காட்சியமைப்புக்களை லிங்குசாமி சிறப்பாக கையாண்டிருந்தாலும் திரைக்கதையில்த்தான் சில தவறுகள்; ஆனாலும் தனிப்பட முறையில் எனக்கு பீமா இன்றும் மிகவும் பிடித்த திரைப்படம்!! கந்தசாமி திரைப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் அதிக காலத்தையும் இழுத்தடித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்த திரைப்படம்; சிறிய பட்ஜெட்டில் திருட்டுப்பயலேயை கொடுத்த சுசிகநேஷனால் மிகப்பெரும் பட்ஜெட்டில் கந்தசாமியை காப்பாற்ற முடியவில்லை. அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன் திரைப்படத்தின் தோல்வி விக்கிரம மீதான எதிர்பார்ப்புக்களை குறைக்க தொடங்கின; அதற்க்கு காரணம் விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திற்கு எடுத்துக்கொள்ளும் காலமும், இறுதியில் அவற்றிற்கு கிடைக்கும் எதிர்மறையான முடிவுகளும்தான்!!<br />
<br />
இந்நிலையில்தான் என்ன நினைத்தாரோ விக்ரம் தன் திரைப்படங்களின் பட்ஜெட்டை சக நடிகர்களது திரைப்படங்களின் செலவுக்கு இணையாக குறைத்துக்கொண்டார்; ஆனாலும் இன்னும் பிரபல இயக்குனர்களைதான் நம்பிவருகின்றார், இன்றைய தேதியில் விக்ரம் மட்டுமல்ல அனைத்து முன்னணி நடிகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!! நீண்ட காலங்களுக்கு இழுத்தடிக்கப்பட்ட திரைப்படங்கள் கொடுத்த தோல்வியை குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட தெய்வத்திருமகள் ஈடு செய்தது!! ஐ ஆம் சாம் திரைப்படத்தின் தழுவல் என பலரும் கூப்பாடு போட்டாலும் ஐ ஆம் சாம் என்றால் ஐ ஆம் சாரி என சொல்லும் பெரும்பான்மை மக்களால் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வதிருமகள் ரசிக்கப்பட்டது!! வணிகரீதியிலும், விக்ரமிற்கு நடிப்பிலும் நல்லபெயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அடுத்துவந்த ராஜபாட்டை திரைப்படம் விக்ரமின் திரைவரலாற்றின் மிக மோசமான திரைப்படமாக அமைந்தது, பிரபல இயக்குனரை கண்ணைமூடிக்கொண்டு நம்பியதன் பலன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieIGrgGJ5jiTxXIeq1jjJWB-TVGLt2BgNCDQmCs3yUyu6B7St8THnuCM8U9EUXAfo4tD1xXjQMOjgeFzRsQyba9Xw5AmKL-C3CfprO5N-GkmZs45Kp2AtfCWBG4Xv15kYRFp79eOXLtVFs/s1600/rajapattai_vikram_stills_280.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieIGrgGJ5jiTxXIeq1jjJWB-TVGLt2BgNCDQmCs3yUyu6B7St8THnuCM8U9EUXAfo4tD1xXjQMOjgeFzRsQyba9Xw5AmKL-C3CfprO5N-GkmZs45Kp2AtfCWBG4Xv15kYRFp79eOXLtVFs/s400/rajapattai_vikram_stills_280.jpg" width="400" /></a></div><br />
2005 ஆம் ஆண்டில் அந்நியனின் மிகப்பெரும் வெற்றிக்கு பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் அதிக திரைப்படங்களில் நடிக்காவிட்டால்கூட தெய்வதிருமகள் தவிர்த்து வேறந்த திரைப்படமும் வணிகரீதியாக விக்ரமிற்கு வெற்றிபெறவில்லை; தெய்வத்திருமகள்கூட முதலுக்கு சற்று அதிகமாக வசூலித்ததே அன்றி சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியல்ல!! இந்த நிலையில் மிகவும் கடினாமாக உழைத்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்த நடிகர் விக்ரமிற்கு இப்போது தேவை ஒரு மிகப்பெரிய கமர்சியல் பிரேக்; அந்த பிரேக்கை தாண்டவம் பெற்றுக்கொடுத்தால் அடுத்த ஷங்கரின் 'ஐ' திரைப்படம் அதனை தக்கவைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு!! விக்ரம் come Back ஆவதற்கு தாண்டவத்தின் வெற்றி மிகமிக அவசியம். ஆட்டையை போட்டாலும் திரைப்படத்தை ஜனரஞ்சகமாக கொடுப்பதில் இயக்குனர் விஜய் கில்லாடி, எப்படி தாண்டவத்தை கொடுத்திருகின்றார் என்பதித்தான் விக்ரமின் மறுபிரவேசம் தங்கியுள்ளது!!<br />
<br />
அதே நேரம் விக்ரம் இனிமேல் பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என்று பார்க்காமல் நல்ல ஸ்கிரிப்ட், நல்ல ரோல் உள்ள திரைப்படங்களை எந்த இயக்குனராக இருப்பினும் தேடித், தேர்ந்து நடிப்பது அவசியம்!! ஏழு ஆண்டுகளில் விக்ரம் மிகப்பெரும் வெற்றிகள் எதையும் கொடுக்காவிட்டாலும் இன்றுவரை விக்ரம் திரைப்படங்களுக்கு கிடைக்கும் ஓப்பினிங் ஆச்சரியமானது!! வெற்றித் திரைப்படங்களை கொடுக்கும் சக நடிகர்களுக்கு சற்றும் குறைவில்லாத முதல்வார வசூல்கள் அவை; விக்ரமின் இன்றைய தேவை கிடைக்கும் ஓப்பினிங்கை வெற்றியாக மாற்றும் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதுதான். விக்ரம் என்னு அற்புதமான கலைஞன் இல்லாமல் போவதில் எனக்கு சம்மதமில்லை; சிறந்த இயக்குனர்கள், ஸ்கிரிப்டுகள் வந்துகொண்டிருக்கும் இன்றையதேதியில் விக்ரம் அவற்றை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் சீயானால் தமிழ் சினிமா இன்னும் தலை நிமிரும்!!<br />
<br />
<span style="font-size: large;"><span style="color: #990000;"><b>குறிப்பு:- </b></span></span>தனிப்பட்ட முறையில் சொல்வதானால் விக்ரம் டிவி ஷோக்களில் சிறுபிள்ளைபோல பழகிக்கொள்வதையும், ப்ரோமொஷங்களில் ஓவராக பில்டப் + பீட்டர் + பீலா விடுவதையும் குறைத்துக்கொண்டால் நல்லது:-)) ரெம்ப ஓவரா இருக்கு :p<br />
<br />
தெரியாதவர்களுக்கு இன்னுமொரு எக்ஸ்ட்ரா தகவல் -: நடிகர் பிரஷாந்தின் தந்தையும் நடிகர் விக்ரமின் தாயாரும் உடன்பிறந்தவர்கள்!! <br />
<br />
<div style="text-align: left;"><b><span style="color: purple;">முன்னைய பதிவுகள் </span></b></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"> 1) <a href="http://eppoodi.blogspot.com/2011/07/1.html">நானும் சினிமாவும் - பாகம் - 1 </a></div><div style="text-align: left;"> 2) <a href="http://eppoodi.blogspot.com/2011/11/2.html"> நானும் சினிமாவும் பாகம் - 2</a></div><h3 class="post-title entry-title" style="text-align: center;"></h3><br />
அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-84016156754918462372012-09-21T22:02:00.000+05:302023-02-01T01:08:07.064+05:30ஒரு கூமுட்டையின் நீதிமன்ற அரைநாள் அனுபவம்!! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrQYDJ8R5GX8lupb2jt4uH2gxbDDJ10r2IY908YvW1GgHopNX5hJVfSVr9NjzyyJTaKpmY8oJkbG-913ZjauU9af6hy5skDjI68RuvmEHcIdfaGUF3At5igCdLBmiXKfbB7HhqYW5AFDjj/s1600/3e26c8e0.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrQYDJ8R5GX8lupb2jt4uH2gxbDDJ10r2IY908YvW1GgHopNX5hJVfSVr9NjzyyJTaKpmY8oJkbG-913ZjauU9af6hy5skDjI68RuvmEHcIdfaGUF3At5igCdLBmiXKfbB7HhqYW5AFDjj/s400/3e26c8e0.gif" width="289" /></a></div><br />
ஹிஸ்றீரியா என்னும் ஒரு நாட்டில் கூமுட்டை என்கின்ற ஒரு சாதாரண பிரஜை போக்குவரத்து பொலிசாரால் வாகனத்தின் சமிக்ஞை விளக்கு வேலை செய்யவில்லை என்கின்ற காரணத்திற்காகவும், குறிப்பிட்ட தவணையில் போலீசில் கொடுத்த சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெறப்படவில்லை என்கின்ற காரணத்திறக்காகவும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தான்!! ஆம் அலைக்கழிக்கப் பட்டிருந்தான்!! காலை எட்டு மணிக்கு பொலிசாரால் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த அவனுக்கு 2.30 கடந்துதான் வழக்கு முடிந்தது!! முதல் முறையாக நீதிமன்றம் சென்ற கூமுட்டைக்கு பல சந்தேகங்கள் மனதில் பிறந்தன!! அந்த சந்தேகங்களை கூமுட்டை விடயம் தெரிந்தவர்களிடம் அறிந்துகொள்ள முயற்சித்து தன் சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்கின்றான்!! <br />
<br />
காலை எட்டு மணிக்கு நீதிமன்று வந்தவனுக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது; ஆம் நீதிமன்றிற்கு 'காலர்' இல்லாத மேற்சட்டை அணியக்கூடாது என்பதுதான் அது!! வாயிற்காவலனால் மேற்சட்டையை மாற்றிவிட்டு வரும்படி திரும்ப அனுப்பிவைக்கப்படுகின்றான்!! அடிப்படை சட்டங்கள் எதனையும் பாடப்புத்தகங்களும், பாடசாலைகளும் போதிக்காதவிடத்து முன்னனுபவம் இல்லாத ஒருவனுக்கு இந்த சட்டம் எப்படி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை சட்ட வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும்!!! அவன் அருகில் தெரிந்தவர்கள் வீடு இருந்ததால் அங்கு சென்று வேறொரு சட்டையை மாற்றிவிட்டு வந்தான்; அதுவே அங்கு யாரையும் தெரியாமல் பலமைல் கடந்து வந்திருந்தால் அவன் நிலைதான் என்ன? புதுச்சட்டை வாங்குவதா?!!! அடுத்து உள்ளே சென்றவனை வழிமறித்த வாயிற்காவலர் டீஷெட்டை காற்சட்டைக்குள் உள்ளே விடும்படி உத்தரவிட்டார், சட்டமாம்!! அப்படியானால் லுங்கி, வேஷ்டி கட்டுபவர்கள் மட்டும் வெளியில் விடலாமா? <br />
<br />
இப்படியாக ஒருவழியாக உள்ளே நுழைந்தவனுக்கு காலை 9.15 மணிக்கு மன்று ஆரம்பிக்கப்படும் என்று உள்ளிருந்த காவலர்களால் தகவல் கொடுக்கப்பட்டது!! 25 நிமிடங்கள் தாமதமாக நீதிபதி உள்ளேவர மன்று ஆரம்பிக்கப்பட்டது!! "ஒருநாள்தானே தாமதம் பணத்தை கட்டிவிடுகிறேன் சாரதி அனுமதி பத்திரத்தை கொடுத்துவிடுங்கள்" என கூமுட்டை கேட்டதற்கு போலீசார் "ஒருநாளோ, பாதிநாளோ தாமதம் தாமதம்தான்" என கூறியது நினைவுக்குவர சிரிப்பும் கடுப்பும் வந்து தொலைத்தது!! நீதி கொடுப்பவர்கள் தாமதிக்கலாம் என்று சட்டத்தில் இருக்கின்றதோ என்னமோ!! வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டன; கிரைம் விசாரணைகள், காணாமல் போனவர்கள் சாட்சியம், விவாகரத்து பெற்றவர்களின் பணக் கொடுக்கல் வாங்கல்கள், நகரசபை மற்றும் பிரதேச சபையின் குத்தகை வழக்குகள், சுகாதார கட்டுப்பாட்டு சபையின் வழக்குகள், வயது குறைந்தவருக்கான புகையிலை விற்பனை வழக்கு, போக்குவரத்து பிரிவு வழக்கு என அனைத்தும் கலந்து விசாரணைகள் இடம்பெற ஆரம்பித்தன!! <br />
<br />
பார்வையாளர் பகுதியில் வழக்காளிகளும், பார்வையாளர்களும் உட்கார்ந்திருக்க அங்கிருந்த இரண்டு போலிஸ் காவலர்கள் வாங்கிலில்(உட்காரும் நீண்ட கதிரை) நிமிர்ந்து உட்க்காரும்படியும், கைகளை கட்டியோ, முன்னால் இருக்கும் கதிரையில் பிடித்துக்கொண்டோ இருக்ககூடாது என்றும், கைகள் கீழே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்; அப்பப்போ மறந்து கைகளை கட்டுபவர்கள் மீண்டும் மீண்டும் கைகளை கீழே விடும்படி பணிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்; அந்த நேரத்தில் நீதிபதி அவர்கள் சாட்சிகளின் விசாரணையை சாயமனை கதிரையில் பக்கவாட்டில் சாய்ந்திருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்!! இது முரண்பாடா இல்லை பாகுபாடா அல்லது சட்டம் கொடுக்கும் சலுகையா அல்லது அடக்குமுறையா என்னவென்று தெரியாது மனம் அலைபாய்ந்தது. ஒரு மனிதனால் முள்ளந்தண்டை நிமிர்த்தி, முழங்கை மூட்டை மடிக்காமல் மணிக்கணக்கில் இருக்கசொல்லி சட்டம் சொல்கின்றதா? ஆமென்றால் அது மருத்துவரீதியில் எல்லோர்க்கும் சாத்தியமா? <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPe12zAEunjwfoUHTJL8drdFYsvUj6kqql5tGlal3ErMkcvkuGs14g55MOe2G1Fd0ETaAWNSBicSGxiepcR7HVFUCPHn-4CC6rLu-9EMf9YIYVr-M1IyjEqJNX0Z_flSe4a0CdNOavEl1_/s1600/Law-Salary.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPe12zAEunjwfoUHTJL8drdFYsvUj6kqql5tGlal3ErMkcvkuGs14g55MOe2G1Fd0ETaAWNSBicSGxiepcR7HVFUCPHn-4CC6rLu-9EMf9YIYVr-M1IyjEqJNX0Z_flSe4a0CdNOavEl1_/s400/Law-Salary.jpg" width="400" /></a></div><br />
அங்கிருந்த குற்றவாளிகளில் பாதிக்குமேல் போக்குவரத்து குற்றங்களும், ஜீவனாம்சம் பெறவந்த பிரிந்த ஜோடிக்களும்தான்; அதிகம்பேர் தம்மை 'குற்றவாளிகள்' என ஒப்புக்கொண்டு நாட்டுக்கும், கோட்டுக்கும் தண்டப்பணத்தை இலட்சக்கணக்காக தினம்தினம் அள்ளியள்ளிக் கொடுக்கும் போக்குவரத்துப் பிரிவுக்கு நிச்சயம் தனியாக ஒரு மன்றம் அவசியம் என்பதை ஏன் நீதிமன்றம் புரிந்துகொள்ளவில்லையோ என்கின்ற சந்தேகம் கூமுட்டைக்கு மட்டுமல்ல அங்கிருந்த பலருக்கும் இருந்தது!! குற்றவாளிகளை அழைத்துவரும் 'மேன்மைமிகு' போக்குவரத்துபிரிவு பொலிசாருக்குகூட தினமும் முழுநாள் காத்திருப்பும், அலைச்சலும், வீண் நேரவிரயமும் என்பதைகூட மன்றம் புரிந்துகொள்ளவில்லை போலும்! இடப்பற்றாக்குறை (இப்போது அதை சொல்ல முடியாது), நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற ஒப்புச் சாட்டுக்களை தவிர உருப்படியான பதிகள் எதுவும் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இல்லை!! <br />
<br />
பொலிசாரால் காலை எட்டு முப்பதுக்கு அழைத்துவரப்பட்டிருந்த கூமுட்டைக்கு மதிய உணவு இடைவேளையில் சிலருடன் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது!! அவர்களில் முக்கியமானவர்கள் ஜீவனாம்சமாக மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தொகையை மன்றத்திற்கு செலுத்தும் ஆண்களில் ஒருவர்; பருமனான தோற்றம் உடல் உழைப்பால் ஜீவனாம்சம் செலுத்துபவர் அவர்; 16 வருடங்களுக்கு மேலாக பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்! இதில் என்ன கொடுமை என்றால் அவர் மாதமாதம் இதற்கென கிட்டத்தட்ட முழுநாளை செலவழித்து நீதிமன்றம் வரவேண்டி உள்ளது!! இப்படியானவர்களது எண்ணிக்கை அதிகம், இவர்களுக்கு தனியான பிரிவில் அல்லது போலிஸ் பிரிவில் வைத்து பணத்தை பெற்றுக் கொடுத்தால் எவ்வளவு நேரம்/அலைச்சல் மிச்சமாகும்? <br />
<br />
அத்துடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் வறியவர்கள்; குடும்பத்துடன் சேர்ந்து குடும்பம் நடத்தும்போது தினமும் வரும் பணத்தை கொண்டுதான் குடும்பத்தை ஓட்டுவார்கள்; அதனால் மாதம் போகும் செலவு பெரிதாக தோற்றாது!! ஆனால் மொத்தமாக ஒரு முழுத் தொகையை ஜீவனாம்சமாக மாதாமாதம் கொடுப்பதென்பது இவர்களுக்கு மிகுந்த சிரமமானது!! அதேநேரம் இந்த பணமில்லாமல் பிள்ளைகளை வளர்ப்பதென்பது மனைவிகளுக்கும் மிகவும் சிரமமானது என்பதையும் சற்றும் மறுப்பதற்கில்லை; அந்த இடத்தித்தான் விவாகரத்து நடைமுறை ரீதியில் எவ்வளவு அலைச்சலையும் விரக்தியையும் கொடுக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும்!! உடல்நிலை சரியில்லாவிட்டால் கூட பணத்தை கொடுக்கவேண்டும் என்னும் நிலையில் பல அன்றாடம் காய்ச்சி ஆண்கள் மிகவும் சிரமப்படுவதுவும் உண்மை!! ஆணுக்கு சமனான பெண் விடுதலை பற்றி பேசும் புதுமைப் பெண்களின் ஜீவனாம்சம் பற்றிய நிலைப்பாடுதான் என்ன? என்பதையும் அறியும் ஆவலும் அங்கே தோன்றியது! <br />
<br />
அடுத்து கூமுட்டை வியந்த மற்றொரு விடயம் வக்கீல்கள் மன்றுக்குள் வரும்போதும், வெளியே போகும்போதும் நீதிபதியை நோக்கி கூளக்கும்பிடு போடுவதுதான்!! ஒருநாளைக்கு ஒருதடவை விஷ் பண்ணினால் போதாதா? என்றோ எவரோ கொண்டுவந்த அடிமைத்தனம் போன்ற செயற்கையான மரியாதை கொடுக்கும் சட்டத்தை 2012 இலும் மறுபரீசலனை செய்யாமல் ஒருநாளைக்கு 50 தடவை கூளக்கும்பிடு பூத்தல் கொலஸ்ரோலை குறைக்க நல்ல உடற்ப்பயிர்ச்சியாக நல்லவிடயமன்றி சாதாரண மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட தேவையற்ற செயற்பாடோ என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது!! தான் படித்த விடயங்களை சரியானமுறையில் தீர்ப்பாக வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பில் உள்ள நீதிபதியும் மனிதர்தானே!! மனித உயர்களை பாதுகாக்கும், இவர்களைவிட அதிகமான கல்விச்சுமையை தன் மேல் ஏற்றிக்கொண்ட வைத்தியருக்குகூட இப்படியான கூளக்கும்பிடுக்கள் விழுவதில்லை; அடிமைத்தனம் நீதிமன்றில் இருந்தே ஆரம்பிப்பது வேதனை!! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS87ToiFIURR80UrEkUwRnZDjH7NIag1hbbVQWXpc6fTbpFR8xtBuVnevukRUw3JARVb12OTlB2OHZNPCopcKoK5QLsGXANdOpZpJ5uTHTahXnbdG936bZytBgV4b8dioyPkQZ7NX77Z90/s1600/intellectual_property_lawyer.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS87ToiFIURR80UrEkUwRnZDjH7NIag1hbbVQWXpc6fTbpFR8xtBuVnevukRUw3JARVb12OTlB2OHZNPCopcKoK5QLsGXANdOpZpJ5uTHTahXnbdG936bZytBgV4b8dioyPkQZ7NX77Z90/s400/intellectual_property_lawyer.jpg" width="400" /></a></div><br />
வாய்தா!!!!! குற்றவாளி என ஒப்புக்கொண்டால் தண்டப்பணம்/சிறைத்தடனை; மற்றையபடி வாய்தா வாய்தா வாய்தா.... 20 லட்சம் பெறுமதியான நகை களவுசெய்த திருடனை சாட்சிகளோடு பிடித்துக்கொடுத்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் வாய்தா கொடுத்து கொடுத்து வழக்கை மாதக்கணக்கில் இழுத்தடித்தமையால் தாமாகவே வழக்கிலிருந்து விலக்கிக்கொண்ட குடும்பமும் நிஜத்தில் உண்டு!! வழக்குகள் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் நிலுவையில் தேம்புவதாலும், வாய்தாக்களாலும்தான் மக்கள் நீதிமன்றை நாடவே பயப்படுகின்றார்கள்!! சமரசத்தில் பிரச்சனைகளை முடித்து நீதி பெறாமலே பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படுகின்றன! வக்கீல்கள் தமது கட்சிக்காரருடன் வெளியில் பேசும் பேச்சுக்கள் கொடுக்கும் நம்பிக்கையை பெரும்பாலும் வாய்தாக்கள் தகர்த்துவிடுகின்றன!! வக்கீலுக்கு கட்சிக்காரர் மூலம் ஒவ்வொரு அமர்வுக்கும் கட்டணம் கிடைக்கின்றது, ஆனால் கட்சிக்காரருக்கு? <br />
<br />
வக்கீல்களும் சும்மா அல்ல!! இரு தரப்பிலும் முதல் நான்கு, ஐந்து வாய்தாக்களுக்கும் வழக்காட கட்டணம் வாங்கிவிட்டு இறுதியில் இரண்டு கட்சிக்காரர் பக்கத்து வக்கீல்களும் இரு கட்சிக்காரரையும் சமாதானப்படுத்தி அனுப்புவது மிகப்பெருமளவான வழக்குகளில் இடம்பெறும் சம்பவம்!! நேரவிரயம், பணவிரயம், மன உளைச்சல் போன்றவைதான் நீதிமன்றங்களில் நீதியைவிட அதிகமாக கிடைக்கின்றன!!! அதைவிட கொடுமையானது வக்கீல்களின் ஆங்கில மொழியிலான வாதாட்டம்!! வராத இங்கிலீசை வா வா என்று அவர்கள் செய்யும் அலப்பறை பார்க்கவே சகிக்கமுடியாத ஒன்று!! குறித்த மொழிப்பிரதேசத்தில் வேற்றுமொழி போலீஸ்காரன் தன் மொழியில் குற்றத்தை பதிவுசெய்து கொள்ளும்போது; தனது பிரதேசத்தில், தனது கட்சிக்காரருக்கு முன்னால், தன்மொழி பேசும் நீதிபதி முன்னிலையில் எதற்கு வலிந்த ஆங்கிலம் பேசவேண்டும்?<br />
<br />
அடுத்து முக்கியமான விடயம் சுகாதாரம்!!! சாதாரண இடங்களில் இருக்கும் உணவகங்களுக்கு சுகாதார உத்தியோகஸ்தர்கள் விதிக்கும் சுகாதார அழுத்தங்களும் தண்டனைகளும் நீதிமன்றத்தில் உள்ள தேனீர் விடுதிக்கு பொருந்தாதா? உணவுகளை கைகளால் எடுத்துக்கொடுக்கும் பழக்கம் தண்டனைக்குரியதாக இருக்கும் பட்சத்திலும் அவை நீதிமன்றில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை!! அடுத்து மலசலகூடம் தேநீர் விடுதிக்கு 10 அடி தூரத்தில் உள்ளது!!! அங்கு நிலமட்டத்தில் இருந்து 5cm அளவு உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது; நீளக்காற்சட்டையை மதித்துத்தான் உட்செள்ளவேண்டும்; பொது இடங்களில் உள்ளவைபோல கதவு தாழ்ப்பாளும் அவுட்!!! அடிப்படை சுகாதாரமே நீதிமன்றில் காற்றில் பறக்கின்றது வேதனை!!! <br />
<br />
இங்குதான் இப்படியென்றால் விளக்கமறியல்களின் கொடுமையை கேட்கவே வேண்டாம்!! போலிஸ் ஸ்டேசனிலும், நீதிமன்றிலும் இருக்கும் 10 க்கு 10 அறையில் 15 பேரை ஒன்றாக பூட்டிவைப்பது என்பது மிகவும் கொடுமையானது!! அதிலும் போலிஸ் ஸ்டேஷன்களில் மலசலம் கழிப்பதும் அதே அறையில்த்தான், அனைவர் முன்னிலையில்!! சந்தேக நபர்களை, குற்றம் நிரூபிக்கப்படாதவர்களை எப்படி இப்படியான ஒரு மனவுளைச்சலுக்கும், மனநோய்க்கும் ஆளாக்ககூடிய சூழலில் அடைத்து அடிப்படை சுகாதாரம்/மனித உரிமைகளை மீறவேண்டும்!! ஏன் அவர்களை மிருகங்களைப்போல நடத்த வேண்டும்!! நாளை அவன் சுற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவன் அனுபவித்த நரகவேதனைக்கு சட்டமோ, அரசோ என்ன பதில் சொல்லப்போகின்றது? எந்த குற்றமும் செய்யாதவன் மனநிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!! தண்டனைகள் வழங்கப்படும்வரை இப்படியான கைதிகளுக்கு அடிப்படை சுகாதாரம், காற்றோட்டம், தூய்மையான உறைவிடம் அவசியமானதா? இல்லையா? கைதிகளும் மனிதர்கள்தானே!! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlekE4Dunk27XAPkYXfxYle_F6k7w6ujLBHw7gYZ1du0fwO57L6hjjIH7JJZj2KQowQNoqtkbII-14NOf5C0Ri6ePsBSzSznwn-6O0ygj_9owS7fwcAYwuKrbOW52RFg25s1bd4JWrq0r4/s1600/Best-Lawyer.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlekE4Dunk27XAPkYXfxYle_F6k7w6ujLBHw7gYZ1du0fwO57L6hjjIH7JJZj2KQowQNoqtkbII-14NOf5C0Ri6ePsBSzSznwn-6O0ygj_9owS7fwcAYwuKrbOW52RFg25s1bd4JWrq0r4/s400/Best-Lawyer.jpg" width="400" /></a></div><br />
மனிதமனம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது, இந்த விடயத்தால் மனதின் வலிமையை இழக்கும், மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஒருவருக்கு என்ன நஷ்டஈடு கொடுத்தாலும் ஈடுசெய்யமுடியாது!! இங்கே இப்படியென்றால் சிறைச்சாலைகளில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!! குற்றம் செய்பவனை தண்டிக்க மட்டுமா சட்டம்? அவனை நல்வழிப்படுத்துவது, மறுசீரமைப்பது சட்டத்தின் வேலை இல்லையா? அடிப்படை மனிதவசதிகள், சுகாதாரம் இல்லாத ஒரு தண்டனையை கொடுக்கச் சொல்லியா சட்டம் சொல்கின்றது? அல்லது சட்டம் இவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையா? <br />
<br />
அடுத்த மிகப்பெரும் சந்தேகம் என்னவென்றால் நீதிமன்றங்கள் நீதிகளை கொடுக்கவா? அல்லது வக்கீல்களின் திறமையான வாதத்திற்கு அங்கீகாரம் கொடுக்கவா? எந்த வழக்காக இருந்தாலும் இவர் இலகுவாக வெளியே எடுத்துவிடுவதாக ஓரிரு வக்கீல்களின் பெயரை சொல்கின்றார்கள்; அப்படியானால் சட்டம் சார்ந்திருப்பது எதனில்? மருத்துவம் ஒருவரின் உயிர் சம்பந்தப்பட்டதென்றால் சட்டம் வாழ்க்கை சம்பந்தப்பட்டது; தவறான ஒருவருக்கு பணத்திற்காக வக்கீல்கள் தம் திறமையை காட்டும்போது எப்படி நீதி தழைக்கும், சமூகம் சிறக்கும்? கொள்ளைக்காரரும், கொலைகாரரும், ரௌடிகளும், லஞ்சப்பேர்வழிகள் தாம் மாட்டினாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையில் தவறு செய்வதற்கு தூண்டும் மறைமுகமான மூலகாரணிகளே திறமையான வக்கீல்கள்தான் என்பதை மறுக்க முடியுமா? <br />
<br />
அரச மருத்துவமனை, தபால் நிலையம், கச்சேரி, வங்கிகள் எப்படி அசட்டையீனமாக இயங்குகின்றனவோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இயங்குகின்றன நீதிமன்றங்கள்!! ஒரு முக்கியமான தேவையின் நிமித்தம் ஒரு கேள்வியை கேட்டு அங்கிருக்கும் ஊழியரிடமிருந்து பதிலை பெறுவதென்பது கல்லில் நார் உரிப்பதை போன்றது; காரணம் அவர் ஒரு அரச ஊழியர்!!! இவர்களுக்கு எங்கிருந்து இந்த ஆணவமும், அசட்டையீனமும் பிறக்கின்றனவோ தெரியவில்லை!! இங்கு வேலைசெய்யும் ஊழியர்களை (போலீசார் உட்பட) பார்க்கும்போது தனியார் வங்கி, தனியார் மருத்துவமனை போன்று நீதிமன்றங்களையும் தனியார் மயப்படுத்தினால் பரவாயில்லையோ என கேவலமாக எண்ணத் தோன்றுகின்றது!! <br />
<br />
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதர்களிடமும், சமூகத்திடமும் தங்கியுள்ளது எவ்வளவு உண்மையோ; அதேயளவிற்கு அரசிலும், அரசுசார்ந்த நிர்வாகங்களிலும் தங்கியுள்ளது!!! அரச திணைக்களகங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் சரியாக, சற்று வேகமாக இயங்க தொடங்கினாலே மாற்றம் அசுரவேகத்தில் இடம்பெறும்!! ஆனால் இங்கு இவை இருக்கும் நிலைகளை பார்க்கும்போது 3000 ஆம் ஆண்டிலும் சாத்தியமாகுமா என்று தோன்றவில்லை!! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU1xLW7PioWL8OBcoF7CAtR7IDgXijJzsxcDsDWfn3nwByDeOExVyChAsWcj6q9swb5XO0GXM7ZeHCfVu-MHKBx0FlpHfvDLarmAPDfJ7OHDwghXzRjUxcgldiBJrl_5CPWIHx4xps4_um/s1600/lawyer.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU1xLW7PioWL8OBcoF7CAtR7IDgXijJzsxcDsDWfn3nwByDeOExVyChAsWcj6q9swb5XO0GXM7ZeHCfVu-MHKBx0FlpHfvDLarmAPDfJ7OHDwghXzRjUxcgldiBJrl_5CPWIHx4xps4_um/s400/lawyer.png" width="400" /></a></div><br />
<span style="color: blue;"><span style="font-size: large;">குறிப்பு -: </span></span>நீதிமன்றில் கூமுட்டை பார்த்த ஒரே நல்ல விடயம்; உடல்வளர்ச்சி அடைந்த 18 வயது நிரம்பாத ஒரு சிறுவனை திட்டமிட்டு அனுப்பி ஒரு கடையில் சிகரெட் வாங்குவித்து குறிப்பிட்ட கடை உரிமையாளரை மன்றுக்கு அழைத்துவந்த போலிஸ்காரருக்கு விழுந்த டோஸ்தான்; அதிலும் இனிமேல் "டாக்கேட் காட்டணும் என்கிறதுக்காக இப்படியான சீப்பான வேலைகள் செய்யவேண்டாம்" என போலீசாரை அதட்டி சொன்னது சற்று ஆறுதல்; ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்து அந்த நபரிடமிருந்து 1000 ரூபாவை தண்டமாக பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாற்றியது :-))<br />
<br />
குறை சொல்லவேண்டும் என்பது கூமுட்டையின் நோக்கமல்ல; சிலவிடயங்கள் பார்க்கும்போது சரியாகப்படவில்லை; தனக்கு ஏற்பட்ட விரக்தியை, கோபத்தை, வெறுப்பை; அதற்கான தீர்வை பொதுவில் முன்வைப்பதே அவனின் நோக்கம்!! அரை நாளிலே இவளவு என்றால் தினமும் அங்கு இருப்பவர்களுக்கு இன்னும் எத்தனையோ அடிப்படை பிரச்சனைகள் தவறென கண்முன் தெரியும்; அவர்களுக்கும் இதே உணர்வு வருமா? அப்படி வந்தால்இனிமேலும் அவற்றை காற்றில் விடாமல் அவர்களுக்கென்று உரிய நேரம்/பதவி வரும்போதே ஏதாவதொரு ஒரு விடயத்தை ஒருவர் சீர் செய்தாலே மாற்றங்களை கொண்டு வரலாம்!! மாற்றம் ஒன்றுதானே மாறாதது :-))<br />
<br />
<span style="color: #cc0000;"><span style="font-size: large;">முக்கிய குறிப்பு -:</span></span> சட்டவல்லுனர்களே நோட் பண்ணிக்கோங்க; இது கூமுட்டை என்பவன் ஹிஸ்றீரியா என்னும் நாட்டில் தனது அரைநாள் நீதிமன்ற அனுபவத்தை சொல்வதுபோல சித்தரிக்கப்பட்ட கற்பனை பதிவு!! ஆமா எங்க நாட்டில எப்படி நீதிமன்றங்கள் இயங்குகின்றன?!!!<br />
<br />
<div style="text-align: center;"><span style="color: #660000;"><b><span style="font-size: x-large;">*...............*</span></b></span></div>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-41544036171277064872012-07-24T14:15:00.000+05:302023-02-01T01:08:18.111+05:30நல்லூர் முருகன் கோவிலும், திருவிழாவும், நானும்!!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw7DGgI-lYZxbuy-GZQM30jr1pw9jQXQw45o1D_qvIjZHJaE2-Sd32GJD8f1UDQseCFJxjaY3HwBvIeLdVjoUi8X9EQQe3f8rWUZQCy6jq9Ugxj_pWP1IkX4PpGabMxirSFHVERkLeqmab/s1600/Nallur_temple.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw7DGgI-lYZxbuy-GZQM30jr1pw9jQXQw45o1D_qvIjZHJaE2-Sd32GJD8f1UDQseCFJxjaY3HwBvIeLdVjoUi8X9EQQe3f8rWUZQCy6jq9Ugxj_pWP1IkX4PpGabMxirSFHVERkLeqmab/s400/Nallur_temple.jpg" width="400" /></a></div><br />
இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் முன்னாள் தலைநகரான நல்லூரின் மத்தியில் அமைந்திருக்கும் முருகன் கோவில்தான் நல்லூர் கந்தசுவாமி கோவில்;யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்று!!! நல்லூர் என்கின்ற சொல் ஒரு பிரதேசத்தை குறிப்பிட்டாலும் பொதுவான பழக்கத்தில் நல்லூர் என்ற சொல் கந்தசுவாமி கோவிலைத்தான் பிரதி பலிக்கின்றது. இலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான நல்லூர் ஆலயம்தான் இலங்கையின் மிகப்பெரிய கோவில் என்றும், பணக்கார கோவில் என்றும்கூட சொல்லலாம்!! பொதுவாகவே இலங்கையில் நான்கு முருகன் கோவில்கள் மிகப் பிரபலமானவை; கதிர்காம கந்தன், நல்லூர் கந்தன் (அலங்காரக்கந்தன்), செல்வசந்நிதி முருகன் (அன்னதானக்கந்தன்), மாவிட்டபுர கந்தன்(அபிஷேககந்தன்) ஆகிய நான்கும்தான் முக்கியமான முருகன் கோவில்கள்!!! இவற்றில் நல்லூர் கந்தசுவாமி கோவில் மட்டும்தான் தனி ஒருவருக்கு சொந்தமானது!!<br />
<br />
நல்லூர் கந்த சுவாமி கோவிலின் மிகச்சிறந்த பண்பு ஒழுக்கம் மற்றும் சமத்துவம்!!! இன்குள்ளதுபோல நேரந்தவறாமையை வேறெந்த கோவிலிலும் பார்க்க முடியாது!!! அதிகாலை 4.30 மணிக்கு அடிக்கும் நல்லூர் கோவில் மணி யாழ்நகரின் பெரும் பகுதிகளுக்கு அலாரம்; நல்லூர் மணியோசை கேட்டு கண்விழிக்கும் யாழ்ப்பான வாசிகள் ஏராளம்!!! இந்த மணியோசையின் ஒலி என்றுமே நேரம் தவறியதில்லை!!! திருவிழா காலங்களிலும் கொடி ஏற்றம், தேர்(வசந்த மண்டப பூஜை) என்பன சொல்லிவைத்த நேரத்திற்கு தவறி நடந்ததில்லை!!! அடுத்த மிகச்சிறந்த விடயம் பாகுபாடு பார்க்காமை!!! ஆண்களில் எவராக இருந்தாலும் மேற்சட்டையுடன் கோவிலின் உள்ளே செல்ல முடியாது; அவர் அமைச்சரோ, பிரதமராகவோ இருந்தாலும்!!! மேற்சட்டை இல்லாமல் ஆண்களும்; புடவை, சல்வாரில் பெண்களும் கோவிலின் உள்ளே செல்லவேண்டும் என்கின்ற சட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அந்த சட்டம் யாவர்க்கும் பொதுவானது என்பது வரவேற்க்கத்தக்கது !!!<br />
<br />
அடுத்து அர்ச்சனை டிக்கட்டின் விலை; இங்கு பூசகரிடம் பணம் கொடுத்து அர்ச்சனை செய்யமுடியாது!!! அர்ச்சனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் டிக்கட் எடுத்துத்தான் அர்ச்சனை செய்யவேண்டும்; டிக்கட்டின் பெறுமதி 1 ரூபா!!! உங்களுக்கு 1000 ரூபாக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்றால் வரிசையில் நின்று 1000 ஒரு ரூபாய் டிக்கட்டுகளை வாங்கித்தான் செய்யமுடியும்; இதுதான் நல்லூருக்கும் ஏனைய கோவில்களுக்குமான மிகப்பெரும் வேறுபாடு!!! இவை தவிர்த்து கோவிலின் தூய்மை எப்போதும் பேணப்படுவதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மிக முக்கியமானவிடயம்!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgve9b2hrnnJ26E1D2qGfq7iVxpvC0iraLkyBkYrerAPz9SDJobmesegWrBRdQl61O6nPr49K9cHAqm1WhZziovFmfjxX1lbOEcaACA5k3LLn8gicLuweT4eQxnm_2h-TuCaP9erBC7j5UO/s1600/nallur1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgve9b2hrnnJ26E1D2qGfq7iVxpvC0iraLkyBkYrerAPz9SDJobmesegWrBRdQl61O6nPr49K9cHAqm1WhZziovFmfjxX1lbOEcaACA5k3LLn8gicLuweT4eQxnm_2h-TuCaP9erBC7j5UO/s400/nallur1.jpg" width="400" /></a></div><br />
ஒவ்வொரு வருடமும் ஆடி/ஆவணி மாதங்களில் 25 நாட்கள் திருவிழாவாக நடத்தப்படுகின்றது!!! முதல்நாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கும் திருவிழா 25 ஆம் நாள் மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தாலும் மறுநாள் நிகழும் பூங்காவனத் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதும்!!! யாழ் குடாநாட்டு இந்துக்களில் குறிப்படத்தக்களவு மக்கள் 25 நாட்களும் விரதம் இருப்பவர்கள், பலர் தினத்துக்கு தினம் (கொடியேற்றம், மஞ்சம், கார்த்திகை, தேர், தீர்த்தம்) விரதம் இருப்பவர்கள், கிட்டத்தட்ட 90 % க்கும் அதிகமான இந்துக்கள் மாமிச உணவுகளை இந்த 25 நாட்களுக்கும் உண்ணமாட்டார்கள்!! இவை தவிர்த்து பெரும்பாலான இளைஞர்கள் (முதியவர்கள் கூட) தினமும் கோவிலின் வெளிவீதியை சுற்றி (கிட்டத்தட்ட 500 மீட்டர்கள்) அங்க பிரதட்சணம் செய்வார்கள்!!! முதல் நாட்களில் தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் பின் நாட்க்களில் சர்வசாதாரணமாக சுற்றி வருவார்கள்; ஒவ்வொரு திருவிழா முடியும்போதும் இவர்களில் அதிகமானவர்கள் 10 kg வரை குறைந்திருப்பார்கள்!!!<br />
<br />
ஆரம்ப நாட்களில் அமைதியாக அளவான மக்கள் எண்ணிக்கையில் நடந்துகொண்டிருக்கும் திருவிழா 17,18 ஆம் திருவிழாக்களின் பின்னர் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்!!! மக்கள் கூட்டம் இறுதி நாட்களை நெருங்க நெருங்க அலைமோத தொடங்கும்!!! இறுதிநாளான 25 ஆம் நாள் தீர்த்த திருவிழா நல்லூரின் மிகவும் பிரசித்தமான திருவிழாக்களில் ஒன்று!!! அன்று வரும் காவடிகளின் கண்கொள்ளாக் காட்சியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது!!! பால்க்காவடி, பறவைக்காவடி, செடில்காவடி, தூக்குக்காவடி என வகைவகையான காவடிகளின் நேர்த்திகள் வியக்கவைக்கும்!!! வயது வேறுபாடின்றி காவடி ஆடுபவர்கள் தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றிக்கொண்டு இருப்பார்கள்!!! கூட்டம் கூட்டமாக மேளதாளங்களுடன் வரும் நூற்றுக்கணக்கான காவடிகள் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்!!!<br />
<br />
இறுதி 10 நாட்களுக்கும் மாலை நேரங்களில் இளசுகளின் படையெடுப்பு அதிகமாக இருக்கும்; முருகனை கும்பிட ஒரு பக்தர்கூட்டம் என்றால்; அலங்கார பதுமைகளான பெண்களை சைட் அடிக்க ஒரு கூட்டமும் அலைமோதும்; இவர்கள் திருவிழா முடிந்த பிற்பாடு நான்கு வீதிகளிலும் மணல்மேல் உட்கார்ந்து கடலை சாப்பிட்டுக்கொண்டே கடலைபோடும் அழகு தனி!! :-)) கோவில் வீதிகளில் ஒழுக்கத்தை பேணுவதற்கு நலன்புரி சங்கம், சாரணர்கள், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையை சேர்ந்தவர்கள் சீருடையில் விறுவிறுப்பாக செயர்ப்படுவதும் அழகாக இருக்கும்!!! காணமால் போன சிறுவர்கள்/பொருட்களை பெற்றோரிடம்/உரியவரிடம் ஒப்படைக்க ஒலிபெருக்கியில் அப்பப்போ ஒலிபரப்புவேறு செய்துகொண்டிருப்பார்கள்!!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr4ACchJGuYQSr3quPRBt9BURJ23F1gtM6ai49IKKjgSIxlZSR3awWU_8D5es0VQok_cWPLo5SCS0Un8dePbm9WrtsS8JltWPCINQYiDGMMJR7QExbeU8cJwevkhZs0VBJHBDownVClXcg/s1600/General-SF-at-Jaffna.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr4ACchJGuYQSr3quPRBt9BURJ23F1gtM6ai49IKKjgSIxlZSR3awWU_8D5es0VQok_cWPLo5SCS0Un8dePbm9WrtsS8JltWPCINQYiDGMMJR7QExbeU8cJwevkhZs0VBJHBDownVClXcg/s400/General-SF-at-Jaffna.jpg" width="350" /></a></div><br />
இதனிடையே திருடர்களின் கைவண்ணமும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும்!!! தங்க நகைகளை கோவிலுக்குள் அணிந்து கொண்டு வராதீர்கள் என வீதிவீதியாக ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியும் பலரும் அதனை பின்பற்றுவதில்லை; தாலிக்கொடிகள், சங்கிலிகள், நெக்லஸ்கள் என ஒரு 100 பவுணாவது திருடர்களால் வருடா வருடம் தேற்றப்படும்!! இறுதி நாட்களில் கோவிலின் வீதிகளில் கடைகளும் குறிப்பாக ice cream, கச்சான் கடைகள் மக்கள் கூட்டத்தால் மாலை நேரங்களில் அலைமோதும்!!! குடும்பம் குடும்பமாக, உறவினர்களுடன், நண்பர்களுடன் சேர்ந்து ice cream குடிப்பது ஒரு தனி சுகம்!!! விளையாட்டு பொருட்கள் விற்பனை கடை நூற்றுக்கணக்கில் காணப்படும்; ஒவ்வொரு கடைகளுக்கும் முன்னாலும் சிறுவர்கள் தாய் தந்தையரிடம் தமக்கு வேண்டிய பொருட்களை கேட்டு அடம்பிடித்து அழுதுகொண்டிருப்பார்கள்!!!<br />
<br />
குழந்தைகளாக இருக்கும்போது தமது பெற்றோரிடம் விளையாட்டு பொருள்கேட்டு அழுதவர்களது குழந்தைகள் இன்று அவர்களிடம் விளையாட்டுப் பொருள் கேட்டு அழுகின்றபோது காலத்தின் வேகத்தையும் அனுபவத்தையும் உணரமுடிகின்றது!!! ஆனாலும் இது ஒரு சுகமான, எண்ணிப்பார்க்கையில் மகிழ்வான அனுபவம் என்பதையும் மறுக்க முடியாது!!! 25 நாட்களும் அனைத்து அன்னதான மடங்களிலும் அன்னதானம் வழங்கப்படும்; அங்கு சபை வைக்கும் இளைஞர்களின் சுறுசுறுப்பும், முண்டியடிக்கும் பக்தர்கள் கூட்டமும் என அந்த இடமே மதிய நேரங்களில் கலகலப்பாக இருக்கும்!!! என்னதான் வீட்டில் பல கறிகளுடன் சமைத்து சாப்பிட்டாலும் கோவில் அன்னதான சாப்பாட்டில் இருக்கும் சுவை தனித்துவமானது என்பதை அதிகமானவர்கள் அனுபவித்திருப்பார்கள்!!! <br />
<br />
எனக்கும் நல்லூருக்குமான தொடர்பு எனக்கு 5 வயதாக இருக்கும்போது ஆரம்பித்தது!!! எனக்கு 5 வயதாக இருக்கும்போது வீட்டில் பால்க்காவடி நேர்த்தி வைத்ததனால் அந்த வயதில் இருந்து 20 வயதுவரை பால்க்காவடி எடுத்திருக்கின்றேன்!!! பல வருடங்கள் வேறு இடங்களில் உள்ள கோவில்களில் இருந்து நல்லூரை நோக்கியும், சில வருடங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் இருந்தே கோவிலை சுற்றியும் காவடி எடுத்திருக்கின்றேன்!!! அண்ணன்கள்(பெரியம்மா பிள்ளைகள்) அயலவர்கள் என ஒரு 10,15 பேராவது ஒரு குழுவாக செல்வது வழக்கம்!! சிறு வயதில் இருந்து ஆடத்தொடங்கியதால் எனக்கு ஆடுவது சுலபமாகவும், விருப்பமாகவும் இருக்கும் :-)) என் நண்பர்கள் 20 வயதிலும் பால்காவடி எடுப்பதாக கிண்டல் பண்ணத் தொடங்கியதுதான் நான் 20 வயதில் காவடி எடுக்கும் நேர்த்தியை நிறுத்த காரணமாக அமைந்தது!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjchGSUH2FdNfvKcrcGDGStenLa_wcA7xYbUxHziqh3Ju07PigmuYVj9oKEc656U5i1mdk0IBGfpizV8QiX-GIkO9bBiuhJa8Lhm1m5_cQlBeppsXfUw7HOOeSRm2oZtCsqT1wddSH0fLmf/s1600/Nallur_Kandaswamy_Kavadi_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjchGSUH2FdNfvKcrcGDGStenLa_wcA7xYbUxHziqh3Ju07PigmuYVj9oKEc656U5i1mdk0IBGfpizV8QiX-GIkO9bBiuhJa8Lhm1m5_cQlBeppsXfUw7HOOeSRm2oZtCsqT1wddSH0fLmf/s400/Nallur_Kandaswamy_Kavadi_2.jpg" width="400" /></a></div><br />
20 வயதில் குறைந்தபட்சம் முதுகில் முள்ளுக்குத்தி செடில்காவடியாவது எடுப்பார்கள்; எனக்கு அந்த துணிவில்லை என்பதால் நிறுத்திவிட்டேன்!!! ஆனால் இப்போதும் மேளச்சத்தத்துடன் அடுத்தவர்கள் காவடி ஆடுவதை பார்க்கும்போதெல்லாம் ஆடணும்ன்னு தோணும்!! (ஆடின காலும் பாடின வாயும்..... :P) வெளிநாட்டு இடைவெளி, உறவில் இடைவெளி போன்ற காரணங்களெல்லாம் நீங்கி மீண்டும் அனைவரும் ஒருநாள் ஒருமித்து யாழில் நல்லூர் உற்சவகாலத்தில் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் அந்த திருவிழாவில் மீண்டும் ஒன்றாக சேர்ந்து காவடி எடுப்பது என ஒரு எண்ணம்!!!! (கண்டிப்பாக பால்க்காவடிதான்:p) என்று காவடியை நிறுத்தினேனோ அன்றிலிருந்து எனக்கும் நல்லூர் முருகனுக்குமான இடைவெளி அதிகரிக்க ஆரம்பித்தது; அந்த இடைவெளி இறுதி 6 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாக்காலங்களில் கோவிலுக்கு உள்ளே நான் செல்லாத அளவுக்கு அதிகரித்தது ஆச்சரியம்!!!<br />
<br />
கடந்த மாதம் நான் கோவிலுக்கு உள்ளே சாதரணமான நாள் ஒன்றில் செல்லும்வரை எனது நல்லூர் முருகனின் நேரடி தரிசனத்தின் இடைவெளி 6 வருடங்களுக்கு மேல்!!! கடந்த ஆண்டுகூட ஒருநாளாவது திருவிழா நாட்க்களில் பூஜை நேரங்களில் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்; முழுக்க முழுக்க நேரமிருந்து அது சாத்தியப்படாமல்போக என்னகாரணம் என்று புரியவில்லை!!! அதேநேரம் மாலையில் தினமும் கோவில் வீதியில் நண்பர்களுடன் நேரத்தை பொழுதுபோக்காக போக்கியது குறிப்பிடத்தக்கது!!! 15 நாட்கள் கடந்த பின்னர்தான் கோவில் வீதிகள் களைகட்டும் என்பதால் இம்முறையும் மாலைநேரங்களில் (7 மணிக்கு பின்னர்) 15 நாட்களின் பின்னர் எம்மை சந்திப்பவர்கள் சந்திக்கலாம் :-))) இந்த ஆண்டு நிச்சயம் கோவிலுக்குள்ளே திருவிழா காலத்தில் செல்லவேண்டும்!!!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyCgK6tN_nEBdt5y46GTMfXh4gHd5ch59AO5qEhrcZ8EQLA9y4OFuCu3pL5S4nHyAHs8R2l2_Wau5vxgMnklUjyEK6iiYexLc4fL7HRljA2aKK1mb01spwJZlHqz29zp7xSeEgexPQCIRE/s1600/Nallur.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="300" width="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyCgK6tN_nEBdt5y46GTMfXh4gHd5ch59AO5qEhrcZ8EQLA9y4OFuCu3pL5S4nHyAHs8R2l2_Wau5vxgMnklUjyEK6iiYexLc4fL7HRljA2aKK1mb01spwJZlHqz29zp7xSeEgexPQCIRE/s400/Nallur.jpg" /></a></div><br />
<br />
என்னை பொறுத்தவரை நல்லூர் திருவிழா என்பது ஒரு கோவில் திருவிழா என்பதையும் தாண்டி ஒரு சிறப்பான மகிழ்வான அனுபவம்!!! மனதில் துன்பங்கள், வேதனைகள், வேண்டுதல்களோடு பக்திப்பரவசத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் திளைக்க; அரோகரா ஓசைகளும், கற்பூர வாசனையும், நாதஸ்வர, தவில் இன்னிசைகளும் மனதை லயிக்கவைக்கும் சூழல் அது!!! இளசுகளுக்கோ பக்தியையும் தாண்டி மனதுக்கு பிடித்த வண்ணமயமான காட்சிகள் :-) கோவிலை அண்டிய சூழல் முழுவதும் விறுவிறுப்பு, பரபரப்பு, ஆச்சாரம் ஆக ஒருவித சுகந்தமான உணர்வு!!! ஆங்காங்கே கோவில்களிலும், கோவிலை அண்டிய வீதிகளும் தண்ணீர்ப்பந்தல்; உறவுகள், நண்பர்கள், என ஒருமித்து ஒன்று சேரும் ஒரு ஒன்றுகூடல் மகிழ்ச்சி; இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம்!!<br />
<br />
குறிப்பாக மதுபான சாலைகளுக்கு விடுமுறை கொடுக்கும் இளைஞர்கள்!! இந்த 25 நாட்களில் உடலுக்கு மதுவையும், புகையும் செலுத்துவதில்லை!! {25 நாள் முடிந்து 26 ஆம் நாள் அனைத்து யாழ்நகர மதுபானசாலைகளிலும் நல்லூரில் இருந்ததை விட கூட்டம் அதிகம் என்பது தனிக்கதை :-))} டீ.ஆர் பாணியில் சொல்வதானால் 25 நாட்களுக்கும்; சுற்றிலும் அடியார் படை, தினமும் அன்னதான மடை, வாகன போக்கு வரத்து தடை, வீதிகளின் ஓரங்களில் கடை, நாகரிகமான உடை, அலங்கரிக்கப்பட்ட சடை, தேநீர்க்கடைகளில் சுடசுட வடை, யாராக இருப்பினும் கால் நடை, அசைவத்திற்கும் மதுவுக்கும் விடை!!! <br />
<div style="color: red;"><b><br />
</b></div><div style="color: red;"><b>* <a href="http://eppoodi.blogspot.com/2012/06/blog-post.html">பகுத்தறிவு சார்ந்த பதில்களை சொல்வதானால் இந்த பதிவிற்கு முன்னைய பதிவில் சொல்லுங்கள்!!!!</a></b></div></div><br />அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-18446538520531913102012-04-23T11:06:00.001+05:302023-02-01T01:11:54.393+05:30ரஜினியின் 'சிவாஜி'யும், தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பினிங்கும்!!! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfDNWk-lVXypK7Tio2o2NGcAyTyoIwkwqJGBMb6dSiu6pSxJr8IKrF2nmOw1xKfX6G5JLXKiNmGAxxgjMMc3XYh2O-ZiAlh25KdSDWeo5Zlagx4f_Q3MeHuxNCbVt9UEZQ8_jVCMsRxgbi/s1600/rambha-theatre-endhiran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="252" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfDNWk-lVXypK7Tio2o2NGcAyTyoIwkwqJGBMb6dSiu6pSxJr8IKrF2nmOw1xKfX6G5JLXKiNmGAxxgjMMc3XYh2O-ZiAlh25KdSDWeo5Zlagx4f_Q3MeHuxNCbVt9UEZQ8_jVCMsRxgbi/s400/rambha-theatre-endhiran.jpg" width="400" /></a></div>
<br />
<b style="color: red;">எச்சரிக்கை -</b> <b>பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்!</b><br />
<br />
ஓப்பினிங்(Opening) - ஓப்பினிங் என்றால் என்ன? ஒரு திரைப்படம் எந்த நாளில் ரிலீஸ் ஆகின்றதோ, அன்றிலிருந்து முதலாவதாக வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான வசூல்தான் ஆரம்ப வசூல் அதாவது ஓப்பினிங் வசூல் என்று சொல்லப்படுகின்றது!! திங்கட்கிழமை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும், சனிக்கிழமை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் ஞாயிறு வரையான வசூலையே முதல் வார ஓப்பினிங் வசூலாக எடுத்துக் கொள்கின்றனர்; ஆனால் திங்கள், செவ்வாய் கிழமைகளில் திரைப்படங்கள் பொதுவாக ரிலீஸ் ஆவதில்லை. பண்டிகை நாட்கள், விஷேட நாட்களில் மட்டும் சில நேரங்களில் புதன், வியாழன் ஆகிய நாட்க்களில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன; மிகப்பெரும்பாலான திரைப்படங்கள் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை களில்த்தான் வெளியிடப்படுகின்றன, சில தவிர்க்க முடியாத காரணங்களால் சனிக்கிழமைகளிலும் ஒருசில திரைப்படங்கள் வெளியிடப்படும்!!!<br />
<br />
அந்த வகையில் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியிடப்படும் வெள்ளிக்கிழமையை எடுத்துக்கொண்டால்; முதல் மூன்று நாள் வசூல் ஓப்பினிங் வசூலாக கொள்ளப்படும்!! கிட்டத்தட்ட ஒரு திரையரங்கில் 12 - 15 வரையான ஷோக்கள் வார இறுதியில் காண்பிக்கப்படும். ஷோக்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை, டிக்கட்டின் பெறுமதி, ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவற்றை கொண்டே ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங் கணிக்கப்படுகின்றது!! ஒரு திரைப்படம் 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 360 காட்சிகளில் 90% மக்களின் பார்வையில் பெற்ற வசூலைவிட, 28 திரையரங்குகளில் திரையிட்டு 336 காட்சிகளில் 90% மக்கள் பார்வையில் வேறொரு திரைப்படம் அதிக ஓப்பினிங் வசூலை பெற்றிருக்கலாம்!!! அதற்க்கு காரணம் திரையரங்குகளின் கொள்ளளவு மற்றும் டிக்கட்டின் விலை வித்தியாசங்கள்தான் (மல்டி சென்டர்களில் அதிகம் ரிலீஸ் ஆனால் வசூல் அதிகம்).<br />
<br />
ஒரு திரைப்படத்தின் வெற்றியை ஓப்பினிங் இன்றைக்கு எந்தளவிற்கு தீர்மானிக்கின்றது!!! இதை அலசுவதாயின் காலத்தை இரண்டாக பிரிப்பது தவிர்க்க முடியாதது!!! <b>சிவாஜி (SIVAJI 'The Boss')</b> திரைப்படத்திற்கு முன்னர், சிவாஜி திரைப்படத்திற்கு பின்னர் என இரண்டாக பிரித்துப் பார்ப்பது அவசியம்.<br />
<br />
சிவாஜிக்கு முன் - ஒரு திரைப்படம் அதன் வெற்றியை தீர்மானிப்பதற்கு குறைந்த பட்சம் 30 நாட்களாவது காத்திருக்கவேண்டும், எத்தனை நாட்கள் அதிகமாக ஓடுகின்றதோ அத்தனை நாட்களை பொறுத்தே வெற்றியின் அளவு கணிக்கப்படும் (ஆளில்லா திரையரங்கில் சுய விளம்பரத்திற்கு ஓட்டப்படுபவை தவிர்த்து). இதற்கு நேர்மாறாக சில திரைப்படங்கள் ஆரம்ப நாட்க்களில் மந்த கதியில் நகர்ந்து தோல்விப்படம் என முத்திரை குத்தப்பட்ட பின்னர்கூட வாய்வழியாக ( Word of Mouth) மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் மூலம் Late pick up ஆகி நாட்கள் போகப்போக கூட்டம் அதிகமாகி வசூலை அள்ளிய வரலாறுகளும் உண்டு; மகேந்திரனின் முள்ளும் மலரும் முதல் மிஸ்கினின் சித்திரம்ம் பேசுதடி வரை பல உதாரணங்கள் ஆங்காங்கே உண்டு!!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ3tgboXbqjoui4lIpw1ldcWtu7Mi_cm1bM3vVlVTmrRC0LISKipCWZ6qud8rG-v8eof8weWjWmKS6aqiN-jQbe4ez3j0BwOUUYLgK5RKI5YqzjyUhediZ687xiGvFr0vDbT2bkBvSTOWP/s1600/image2png.php.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ3tgboXbqjoui4lIpw1ldcWtu7Mi_cm1bM3vVlVTmrRC0LISKipCWZ6qud8rG-v8eof8weWjWmKS6aqiN-jQbe4ez3j0BwOUUYLgK5RKI5YqzjyUhediZ687xiGvFr0vDbT2bkBvSTOWP/s400/image2png.php.jpg" width="400" /></a></div>
<br />
அதேபோல ஆரம்பத்தில் மந்தகதியில் புறப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களின் விளம்பர உக்தியால் பின்னர் சிறந்த வசூலை பெற்றுத்தந்த திரைப்படங்களும் உண்டு, உதாரணமாக சொல்வதானால் எஜமான், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களை சொல்லலாம்!! முதல்வாரம் கடந்து அடுத்தநாள் (திங்கட்கிழமை) மக்கள் கூடம் திரையரங்கிற்கு வந்தால் "அப்பாடா திரைப்படம் தப்பித்து விட்டது" என ஓரளவிற்கு மனதிற்கு ஆறுதலாக இருக்கும், மக்களுக்கு பிடித்துப்போனால் மாத்திரமே வாய்வழியாக சொல்லப்பட்டு இரண்டாம்வாரம் கூட்டம் வரும் என்பது அன்றைய நிலை!!! இப்படியாக மக்களுக்கு பிடித்த திரைப்படங்கள் 175, 200 நாட்கள் என திரையிடப்பட்டது, அதனால் அன்றைய திரைப்படங்களின் வெற்றி 'நாட்களை' வைத்தே கணிக்கப்பட்டது!!! 100 நாள், 175 நாள் (வெள்ளிவிழா) 200 நாள் ஓடிய திரைப்படங்கள் என வெற்றியின் அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.<br />
<br />
இந்த நிலையில்த்தான் 90 களின் இறுதியில் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது, அதுதான் திருட்டு VCD!!! அதற்க்கு முன்னரான காலப்பகுதியில் VCR Player கள்தான் பாவனையில் இருந்தன, ஆனால் அவை ஒரு தெருவில் ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும்தான் இருந்தன; அவற்றுக்கு பயன்படுத்தப்படும் கேசட்டுக்கள் பாவனையும் அதிகளவில் இருக்கவில்லை, காரணம் VCD கள்போல இலகுவில் Copy பண்ண முடியாது, மற்றும் செலவும் ஜாஸ்தி!!! ஆனால் VCD கள் தாரளமாக குறைந்த விலையில், இலகுவாக Copy பண்ணப்பட்டு திருட்டுத்தனமாக விற்க ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுக்கான Player களும் குறைந்த விலை என்பதால் அதிகமான வீடுகளில் பாவனைக்கு வரத்தொடங்கியது!!!<br />
<br />
திரைப்படம் வெளிவரும் அடுத்தடுத்த நாட்களில் திருட்டு VCD க்கள் வெளிவர தொடங்கியதும் மக்கள் திரையரங்கிற்கு செல்வது குறைய ஆரம்பித்தது. 100 ரூபா கொடுத்து ஒருவர் திரையரங்கில் பார்ப்பதைவிட, வீடிலிருந்து 30 ரூபாயில் குடும்பமாக VCD யில் பார்த்தால் பணமும், போக்குவரத்தும் விரயமாகாது என பலரும் எண்ணினர்; இதனால் திரையரங்கிற்கு வரும் மக்கள் தொகை திடீரென வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. முதல் பத்து, பதினைந்து நாட்களுக்கு பின்னர் திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்தன!! இதனால் தோல்விப்படங்கள் ஆகவேண்டியவை படுதோல்வி ஆயின, வெற்றிப்படங்கள் ஆகவேண்டியவை சராசரி ஆகின, சூப்பர் ஹிட் ஆகவேண்டியவை ஹிட் ஆவதற்கே சிரமப்பட்டன!! தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் லாபம் பார்க்க சிரமப்பட்டனர்!! இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படத்தின் உரிமையை AVM நிறுவனம் விற்க முடிவு செய்தது........<br />
<br />
சென்னை நகருக்கான உரிமையை 'அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட 6.2 கோடிகளுக்கு வாங்கினர்; அதுவரை எந்த திரைப்படமும் சென்னையில் வசூலித்திராத தொகை அது!!! அதுவரை அதிக வசூலை சென்னையில் குவித்திருந்த சந்திரமுகிகூட தொடாத தொகை அது!!! எல்லோருக்குமே ஆச்சரியம், ஆனால் ராமநாதன் பயப்படவில்லை; தான் போட்ட காசை பிடிப்பதற்கு அவர் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார், அதுதான் அதிக திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடும் திட்டம். சென்னையில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் அதிகபட்சம் 10,15 திரையங்குகளில்த்தான் அப்போதெல்லாம் வெளியப்பட்டு வந்தது; ராமநாதன் 'சிவாஜி'யை கிட்டத்தட்ட 30 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார், அத்துடன் இணையம் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ளும் வசதியம் துணையிருக்க முதல் 10 நாட்க்களுக்கான டிக்கட்டுகள் அதிகமாக முற்பதிவு செய்யப்பட்டன!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTZBJg1RLvhSjvv1flTkJ34na5IGRgUsr_U9DjSlOWs7xqjFo3oXxQCz70ouKGFYHkGNKtnPcYkOPQ-DIfrxz4snGmng03JlsyY55oyq5CBIuH3vHlj_Ai7ercYFE73TLf2It73B_VmRwL/s1600/Sivaji+The+Boss_222.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTZBJg1RLvhSjvv1flTkJ34na5IGRgUsr_U9DjSlOWs7xqjFo3oXxQCz70ouKGFYHkGNKtnPcYkOPQ-DIfrxz4snGmng03JlsyY55oyq5CBIuH3vHlj_Ai7ercYFE73TLf2It73B_VmRwL/s400/Sivaji+The+Boss_222.jpg" width="400" /></a></div>
<br />
சிவாஜி பற்றிய விமர்சனங்கள் Mix Report ஆக வெளிவந்து கொண்டிருக்கும்போதே முதல் நான்கு நாட்களில் ஓப்பினிங் வசூலாக மிகப்பெரும் தொகையான 1 கோடி 34 இலட்சத்தை சிவாஜி வசூலித்து, மூன்றாம் வாரத்தில் போட்ட பணமான 6.2 கோடியை மீட்டெடுத்த 'அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட மொத்தமாக சென்னையில் 12 கோடியை வசூலாக பெற்றார்; இது அவருக்கு இரட்டிப்பு லாபம்!!! சிவாஜி திரைப்படம் வெளியாகிய ஐந்தாவது வார இறுதியில்(வெள்ளி. சனி, ஞாயிறு) பெற்ற வசூல் 48 இலட்சம்; அதே வாரம் வெளியாகிய அஜித்தின் 'கிரீடம்' வார இறுதியில் பெற்ற வசூல் 31 இலட்சம். அஜித்திற்கு கிடைத்த ஓப்பினிங் 98%, அப்படி இருந்தும் வசூலில் 5 ஆவது வாரத்து சிவாஜியை கிரீடம் நெருங்கவில்லை என்றால் என்ன காரணம்? வெளியாகிய திரையரங்குகளின் எண்ணிக்கைதான்; 5 ஆவது வார இறுதியில் சிவாஜி 243 காட்சிகள் ஓடியது, முதல் வார இறுதியில் கிரீடம் வெறும் 189 காட்சிகள்தான்!!!<br />
<br />
இது தவிர்த்து அமேரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்து ஐங்கரன் நிறுவனமும் புதிய வர்த்தகப்பாதையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது!! இப்படியாக தமிழ் சினிமாவின் மாக்கேட்டிங் சிவாஜிக்கு பின்னர் புதிய வடிவில் எழுச்சி பெற ஆரம்பித்தது. ஆனாலும் இந்த மாற்றத்தை ஏனைய திரைப்பட விநியோகிஸ்தர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் குறைந்த திரையரங்குகளிலேயே திரைப்படங்கள் வெளியிடப்பட்டுவந்தன. சிவாஜிக்கு அடுத்து அதே ஆண்டு மிகப்பெரும் வசூலை குவித்த திரைப்படம் பில்லா; சென்னையில் அதன் ஆரம்ப வசூல் மூன்று நாட்களில் 59 இலட்சம், மொத்தமாக பில்லா சென்னையில் கிட்டத்தட்ட 4.5 கோடிவரை வசூலித்தது; அன்றைய தேதியில் இதுவொரு மிகச்சிறந்த வசூல்!!! ( அதேநேரம் இன்றைய சராசரி படங்களின் வசூலைவிட இது குறைவே!!)<br />
<br />
முதல் வார இறுதி வசூலாக விஜயின் 'அழகிய தமிழ்மகன்' நான்கு நாட்களில் 29 இலட்சம், சூர்யாவின் 'வேல்' நான்கு நாட்களில் 28 இலட்சம், தனுஸின் 'பொல்லாதவன்' நான்கு நாட்களில் 27 இலட்சம், விக்ரமின் 'பீமா' நான்கு நாட்களில் 58 இலட்சம், சிம்புவின் 'காளை' நான்கு நாட்களில் 36 இலட்சம், வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' 3 நாட்க்களில் 40 இலட்சம் என 'தசாவதாரம்' வரும்வரை வேறெந்த திரைப்படமும் அதிக வசூலை ஓப்பினிங்காக பெறவில்லை; ஆனால் இவை அனைத்தையும் முதல் வாரத்தில் 90% க்கு அதிகமான மக்கள் பார்வையிட்டிருந்தனர்; அப்படி இருந்தும் ஓப்பினிங் குறைவாக உள்ளதென்றால்(இன்றோடு ஒப்பிடும்போது) அதற்க்கு முழுக்காரணமும் திரையரங்க எண்ணிக்கைதான்.<br />
<br />
'சிவாஜி'க்கு பின்னர் கமலின் 'தசாவதாரம்' திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வசூலை குவித்தது!! சென்னையில் ஓப்பினிங்காக மூன்று நாட்க்களில் 95 இலட்சம் வசூலித்த தசாவதாரம் மொத்தமாக சென்னையில் கிட்டத்தட்ட 11 கோடிகளை வசூலித்தது!!! வெளிநாடுகளிலும் அதிக திரைகளில் வெளியிடப்பட்டு கணிசமான வசூலை பெற்றது!!! தசாவதாரத்தை தொடர்ந்தும் அதிக திரையரங்கில் வெளியாகி அதிக ஓப்பினிங்கை பெற்ற திரைப்படம் 'குசேலன்', மூன்று நாட்களில் 84 இலட்சம்வரை வசூலித்தது. பின்னர் விக்ரமின் 'கந்தசாமி' திரைப்படத்தை பெரிய பட்ஜெட், எதிர்பார்ப்பு போன்ற காரணத்தால் அதிகளவு திரையில் திரையிட்டார்கள், எதிர்பார்த்ததுபோல மூன்று நாட்க்களில் 93 இலட்சம் வசூலாக கிடைத்தது!! அதனை தொடர்ந்து வேட்டைக்காரன் மூன்று நாட்க்களில் 89 இலட்சம், ராவணன் மூன்று நாட்க்களில் 88 இலட்சம் என சராசரியாக ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 30 இலட்சங்களை அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்தன!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjT3HaYcCJPjRdWwmUue82smsiZ2r_KjCoLyMgEHwPIJnQo0c81E9f9xehReK0sMkjpqqMeA8fxwk3EVSLq_G2n9KlDNUdIAiK9KuOIjR0HXY61gBqZros-dYeNEd9csw5n3VTIgYsP02L/s1600/Endhiran_Rajinikanth.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjT3HaYcCJPjRdWwmUue82smsiZ2r_KjCoLyMgEHwPIJnQo0c81E9f9xehReK0sMkjpqqMeA8fxwk3EVSLq_G2n9KlDNUdIAiK9KuOIjR0HXY61gBqZros-dYeNEd9csw5n3VTIgYsP02L/s400/Endhiran_Rajinikanth.jpg" width="400" /></a></div>
<br />
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு மீண்டும் ரஜினியின் 'எந்திரன்' திரைப்படத்தின் சென்னை உரிமையை கிட்டத்தட்ட 10 கோடிகளுக்கு வாங்கிய 'அபிராமி' ராமநாதன் இம்முறை திரையரங்குகளை இன்னமும் அதிகரித்தார்; 45 க்கும் அதிகமான திரையரங்குகளில் சென்னையில் வெளியாகிய எந்திரன் முதல் மூன்று நாட்க்களில் இரண்டு கோடி (202 இலட்சம்) வசூல் செய்தது; மொத்தமாக 17 கோடிகளை சென்னையில் வசூலித்தது!!! எந்திரனை தொடர்ந்து அதிகமான முன்னணி நடிகர்களது திரைப்படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்தது!!! அஜித்தின் மங்காத்தா ஐந்து நாட்களில் 1 கோடி 80 இலட்சம்வரை வசூலித்தது!! மொத்தமாக 8 கோடிகளுக்குமேல் வசூல்!! மங்காத்தா ரஜினி, கமலுக்கு அடுத்து சென்னையில் 8 கோடியை தொட்ட நடிகர் என்கின்ற பெருமையை அஜித்திற்கு பெற்றுக் கொடுத்தது!.<br />
<br />
அதன் பின்னர் சென்னையில் சூர்யாவின் 7 ஆம் அறிவு திரைப்படம் ஓப்பினிங்காக ஐந்து நாட்க்களில் 2 கோடி 20 இலட்சத்தையும், விஜயின் வேலாயுதம் ஐந்து நாட்களில் 1 கோடி 95 இலட்சத்தையும் வசூலித்தன. வேலாயுதம் சென்னையில் 8 கோடி கடந்த முதல் விஜய் படமாகவும்; 7 ஆம் அறிவு ரஜினி, கமலுக்கு அடுத்து 9 கோடியை கடந்த நடிகராக சூர்யாவிற்கு பெருமையை தேடிக்கொடுத்தது. அதன் பின்னர் வெளிவந்த விக்ரமின் 'ராஜபாட்டை' மூன்று நாட்க்களில் 96 இலட்சம், விஜயின் 'நண்பன்' நான்கு நாட்க்களில் 1 கோடி 37 இலட்சம், தனுஸின் 'மயக்கம் என்ன' மூன்று நாட்க்களில் 97 இலட்சம், சிம்புவின் 'ஒஸ்தி' நான்கு நாட்களில் 1 கோடி 33 இலட்சம், தனுஸின் '3' மூன்று நாட்க்களில் 1 கோடி 31 இலட்சமும், உதயநிதியின் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூன்று நாட்க்களில் 1 கோடி 73 இலட்சத்தையும் வசூலித்திருக்கின்றன!!!<br />
<br />
இவை அனைத்தும் இரண்டு வாரங்கள் முடிவதற்குள் குறைந்தபட்சம் சென்னையில் மட்டும் 3 கோடியை தொட்ட திரைப்படங்கள், இவற்றில் படு தோல்விப்படங்களான ராஜபாட்டை, ஒஸ்தி போன்றன சென்னையில் மட்டும் 3 கோடிகள் என்றால் தமிழ் நாடு + தெலுங்கு + வெளிநாடு என முதல் மூன்று நாட்க்களில் 20 கோடிகளையாவது வசூலித்திருக்கும்!!! இந்த திரைப்படங்களின் விநியோகம் 40 கோடிகள் என்றால், கிட்டத்தட்ட அரைவாசிப் பணமாவது மீள பெறப்பட்டிருக்கும்!! இதே திரைப்படங்கள் முன்னர் வெளியாகுவதுபோல குறைந்த திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் 10 கோடிகள் கூட தேறியிருக்காது. பெரிய நடிகர்களது திரைப்படங்கள் இப்பொது அதிக திரையரங்குகளில் வெளியாவதால் எப்படிப்பட்ட மோசமான திரைப்படமாக இருந்தாலும் முன்பதிவு மற்றும் எதிர்பார்ப்பால் முதல் 10 நாட்களுக்குள் (மக்கள் படம் மோசம் என்று புறக்கணிப்பதற்குள்) பாதிப் பணத்தையாவது தேற்றி விடுகின்றார்கள்.<br />
<br />
அதே நேரம் திரைப்படம் நன்றாக இருந்தால் மூன்று வாரங்களுக்குள் லாபம் பார்த்துவிடுகின்றார்கள், ஐந்து வாரம் சிறப்பாக ஓடினால் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுகின்றது; முன்னர் 200 நாட்கள் ஓடி பெறப்பட்ட வசூலை இப்போது 40 நாட்களுக்குள் பெற்று விடுகின்றார்கள்!! 2007 ஆம் ஆண்டின் Blockbuster Hit ஆன பில்லாவின் முதல் நான்குநாள் வசூலை இன்று 'ஒரு கல் ஒரு கண்ணாடி' கிட்டத்தட்ட ஒரே நாளில் பெறுகின்றதென்றால் இந்த மாற்றம் சிவாஜியால் (அபிராமி ராமநாதனால்) ஏற்ப்படுத்தப்பட்டது!! <b>சிவாஜியை 'கமர்சியல் குப்பை' என்பவர்களுக்கு சிவாஜி தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்ப்படுத்திய மாற்றம் புரிந்தாலும் புரியாதது போலத்தான் இருப்பார்கள்!!!</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZlZAhKUiMYzqs-ZrC1Zf1fotDkQ6TzTV-ALaiB811BEEw1ZGdmRy0jvUIjapFsA4bwu-Ml-IIsz12yxNQzGGpOLphVLEa4lVPeXdU0zJw5i510waMasfVDkjbR_WYB_EmoGtzgqE0hL5m/s1600/dasavatharam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZlZAhKUiMYzqs-ZrC1Zf1fotDkQ6TzTV-ALaiB811BEEw1ZGdmRy0jvUIjapFsA4bwu-Ml-IIsz12yxNQzGGpOLphVLEa4lVPeXdU0zJw5i510waMasfVDkjbR_WYB_EmoGtzgqE0hL5m/s400/dasavatharam.jpg" width="400" /></a></div>
<br />
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பினிங் யாருக்கு - ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், நடிகர்களால் மட்டும் மிகச்சிறந்த ஒப்பினிங்கை பெற்றுக்கொடுக்க முடியாது. நடிகர்களையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புத்தான் ஓப்பினிங்கை தீர்மானிக்கின்றது; அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நடிகரும், குறிப்பிட்ட ஒரு இயக்குனரும் சேரும்போதுதான் அதிகமாக ஏற்ப்படுகின்றது, இயக்குனரும் இசையமைப்பாளரும் இணையும்போது கூட எதிர்பார்ப்புக்கள் அதிகரித்த சந்தர்ப்பங்களும் உண்டு!!! இவைதவிர மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வெற்றிபெற்ற கூட்டணி போன்றனவும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஏனைய காரணிகள்.<br />
<br />
திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தவிர்த்து; திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி, திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கில் முக்கியத்துவம் செலுத்தும் முக்கிய காரணிகள்.<br />
<b><br />
</b><br />
<b>திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி -</b> பண்டிகை/விசேட தினங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் போட்டி இருக்கும்! போட்டிக்கு வேறு எதிர்பார்ப்புள்ள திரைப்படங்களும், சில சிறு திரைப்படங்களும் வெளிவரும் சந்தர்ப்பம் உண்டு; அதனால் அதிகமான திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை தோன்றலாம், இது நிச்சயம் பாதகமான நிலைதான்!!! ஆனால் பண்டிகை/விசேட தினங்களில் அதிகளவான மக்கள் திரையரங்கை நாடிப்போவதும், பண்டிகை காலமாகையால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இலவச விளம்பரங்களாக உதவிசெய்வதும் இந்தக்காலப்பகுதியில் திரைப்படங்களை வெளியிடுவதால் கிடைக்கும் சாதகமான தன்மைகள்.<br />
<br />
அத்துடன் இரண்டு பெரிய திரைப்படங்கள் ஒரேநேரத்தில் போட்டிக்கு வெளியாகினால், அவ்விரு திரைப்படங்களில் நடித்த நடிகர்களது ரசிகர்கள் இருபடத்தையும் ஒப்பிடும் நோக்கில் அவ்விரு திரைப்படங்களையும் பெரும்பாலும் பார்வையிடுவார்கள், இதுகூட பண்டிகை காலங்களில் திரைப்படங்களின் ஓப்பினிங்கிற்கு கிடைக்கும் சாதகம்தான். அதே நேரம் பிறிதொருநாளில் தனியாக ஒரு பெரிய திரைப்படம் வெளியிடப்படும்போது மேற்சொன்ன சாதகங்கள் பாதகமாகவும், பாதகங்கள் சாதகமாகவும் அமையும்!!! அனாலும் பலரும் பண்டிகைகாலங்களில் திரைப்படங்களை வெளியிடவே விரும்புகின்றனர்!!! இயக்குனர் ஹரி, சரண் போன்ற கமர்சியல் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை அதிகமாக பண்டிகை நாட்களில் வெளியிட விரும்புவதே வழக்கம்; காரணம் கமர்சியல் திரைப்படங்கள் Festival mode இல் அதிகமாக மக்களிடம் எடுபடும் என்பதுதான்!!! <br />
<br />
<b>திரையரங்குகளின் எண்ணிக்கை -</b> பெரிய திரைப்படங்களை பொறுத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு அதிக திரையில் வெளியிடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக ஒப்பினிங்கை பெறமுடியும், இது தயாரிப்பாளர், வினியோகிஸ்தர் கைகளில்த்தான் உண்டு. படத்தின் எதிர்பார்ப்பை பொறுத்தே திரையரங்கங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டாலும், பண்டிகை காலங்களில் பல திரைப்படங்கள் வருவதால் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில்லை; அதிகமான மற்றும் சிறந்த திரையரங்கை பெற்றுக்கொள்ளும் புத்திசாலி விநியோகிஸ்தர் அதிக ஓப்பினிங்கை பெற்றுக்கொள்ளுவார்!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMZrr7xYlFIPEqm2kNLqKojKocnQVXfObupsXOAF178EGJZRSJbZF3nFdk4uFJYQRZkmXRHhbuYN5pOkMf0Mgyu8ClOjhXN3LFeSZpg15J8yF4GIfjXiunxltVemnp2kBrR7ZMGkXl9gwL/s1600/mankatha-wallpapers.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMZrr7xYlFIPEqm2kNLqKojKocnQVXfObupsXOAF178EGJZRSJbZF3nFdk4uFJYQRZkmXRHhbuYN5pOkMf0Mgyu8ClOjhXN3LFeSZpg15J8yF4GIfjXiunxltVemnp2kBrR7ZMGkXl9gwL/s400/mankatha-wallpapers.jpg" width="400" /></a></div>
<br />
<b style="color: blue;"><span style="color: #20124d;">ரஜினிகாந்த் -</span> </b>சிவாஜி வரும்வரை சந்திரமுகியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வரும்வரை சிவாஜியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியும் எந்திரனின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் நெருங்கவில்லை, ரஜினியின் முழுநீளத் திரைப்படமல்லாத குசேலன் திரைப்படத்தின் சென்னை ஓப்பினிங் மூன்று நாட்களில் 84 இலட்சம்; அன்றைய தேதியில் இது சிவாஜி, தசாவதாரம் திரைப்படங்களுக்கு அடுத்து மூன்றாவது மிகப்பெரும் ஓப்பினிங்!! ஒவ்வொரு ரஜினியின் திரைப்படத்திற்கும் உள்ள அதிகபட்ச எதிர்பார்ப்புத்தான் ஓவ்வொரு தடவையும் மிகப்பெரிய ஓப்பினிங் அமைய காரணம். எந்திரனது மிகப்பெரும் ஓப்பினிங்கிற்கு ரஜினி தவிர இயக்குனர் ஷங்கர், ரஜினி & ஷங்கர் கூட்டணி, சண் பிக்சர்ஸின் மாக்கெட்டிங், அதிகளவு திரையரங்குகளில் வெளியிடப்பட்டமை போன்றவையும் முக்கிய காரணிகள்.<br />
<br />
<b style="color: blue;"><span style="color: #20124d;">கமல் -</span> </b>கிட்டத்தட்ட சிவாஜிக்கு இணையான ஓப்பினிங்கை தசாவதாரம் பெற்றாலும் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுடன் வெளியிடப்பட்ட 'மன்மதன் அம்பு' சென்னையில் நான்கு நாட்க்களில் 94 இலட்சங்களை மாத்திரமே வசூலித்தது!!! இரண்டு திரைப்படங்களிலும் கமல்தான் நாயகன், ரவிக்குமார்தான் இயக்குனர், அசினுக்கு பதில் திரிஷா, மாதவன் வேறு நடித்திருந்தார், மற்றும் தசாவதாரத்திற்கு பின்னர் வருவதனால் கூடுதல் எதிர்பார்ப்பு வேறு!! அப்படி இருந்தும் தசாவதாரம் மூன்று நாட்க்களில் பெற்ற வசூலை மன்மதன் அம்பு நான்கு நாட்களில்கூட பெறவில்லை!! அதற்க்குக் காரணம் கமலின் 10 கெட்டப் என்பதால் தசாவதாரத்திற்கு இருந்த மலையளவு எதிர்பார்ப்பு, அந்த எதிர்பார்ப்பு அதன் பின்னரான மற்றைய கமல் படங்களுக்கு அமையவில்லை, விஸ்வரூபத்தில் அமைகிறதா என பார்ப்போம்!!<br />
<br />
<b style="color: #20124d;">அஜித் -</b> King of Opining, Gilli Of Kollywood போன்ற சொற்களால் ஆங்கில இலத்திரனியல் ஊடகங்களால் புகழப்படும் நடிகர். மிகக் குறைவான விளம்பரங்களுடன்; தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுக்காமல்; பெரிய பானர், பெரிய இயக்குனர் என பெரிய கூட்டணி இல்லாமல்; எத்தனை தோல்விகளை தொடர்ந்து கொடுத்தாலும் அடுத்துவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் கொடுக்கும் மலையளவு வரவேற்ப்பை வைத்துத்தான் அஜித்திற்கு மேற்சொன்ன பட்டங்கள் அடைமொழியாக கொள்ளப்படுகின்றது!! அஜித்தை பொறுத்தவரை எந்த திரைப்படத்திற்கும் 95 % ஓப்பினிங் ரசிகர்களால் கொடுக்கப்படும்; ஆனாலும் அஜித் திரைப்படங்களில் அஜித்தின் பட்டப் பெயர்களை மெய்ப்பிக்கும் வகையில் அதிகம் ஓப்பினிங் வசூலை கொடுத்த திரைப்படங்கள் 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' திரைப்படங்கள்தான்; அன்றைய தேதியில் 'பில்லா' சிவாஜிக்கு அடுத்து மிகப்பெரிய ஓப்பினிங், 'மங்காத்தா' எந்திரனுக்கு அடுத்து மிகப்பெரிய ஓப்பினிங் !!!<br />
<br />
<b style="color: #20124d;">விக்ரம் -</b> 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக வெற்றித் திரைப்படங்கள் இல்லை, ஆனாலும் விக்ரமின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கிடைக்கும் ஓப்பினிங் மிக அதிகம்!! அதற்க்கு காரணம் விக்ரம் மாத்திரமன்னு!! அந்தந்த திரைப்படங்கள் மீதான அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்கள்தான் (அதிகமான திரைப்படங்கள் தோற்க்கவும் அவைதான் காரணம்) அதிக ஓப்பினிங் கிடைக்க முக்கிய காரணம். விக்ரம், சுசிகணேசன் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த கந்தசாமி திரைப்படத்தின் ஓப்பினிங் சென்னையில் மூன்று நாட்களில் 93 இலட்சங்கள்; இந்த தொகையை கடக்க அஜித் மங்காத்தாவரையிலும், விஜய் வேலாயுதம் வரையிலும், சூர்யா 7 ஆம் அறிவிவு வரையிலும் காத்திருக்கவேண்டி வந்தது!!! அதேபோல மணிரத்தினம், விக்ரம் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ராவணன் சென்னையில் மூன்று நாட்களில் 88 இலட்சங்களை வசூலித்தது!!! தெய்வத்திருமகள், ராஜபாட்டை போன்ற திரைப்படங்களும் மூன்று நாட்க்களில் முறையே 80, 95 இலட்சம்வரை வசூலித்திருந்தது!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoRyePpmuhtX-IZ8YBNkQaTn-N1RKDIOHkVlF-lscxdND6ejsALnJFwfrsOOT8lEOKjPbAWyKv9NnbzxtMe5fD8FBUjqGjEY-Cxhyphenhyphenvf9WMDxZmRNi78D2Z8Y6-J3xK6ZTyndgzMkgrgzWS/s1600/7-aam-arivu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoRyePpmuhtX-IZ8YBNkQaTn-N1RKDIOHkVlF-lscxdND6ejsALnJFwfrsOOT8lEOKjPbAWyKv9NnbzxtMe5fD8FBUjqGjEY-Cxhyphenhyphenvf9WMDxZmRNi78D2Z8Y6-J3xK6ZTyndgzMkgrgzWS/s400/7-aam-arivu.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<b style="color: #20124d;">விஜய் - </b> வேலாயுதம் திரைப்படம் வரை மிகப்பெரிய ஓப்பினிங் எதுவும் விஜய்க்கு அமையவில்லை! அதற்க்கு முந்தய திரைப்படங்களில் சண் பிக்சர்ஸின் விளம்பர உதவியுடன் 'வேட்டைக்காரன்' மூன்று நாட்களில் எட்டிய 89 இலட்சங்கள்தான் சென்னையில் விஜயின் அதிகபட்ச ஓப்பினிங். வேலாயுதம் விஜய்க்கு மிகப்பெரிய ஓப்பினிங்கை பெற்றுக் கொடுத்தாலும் அதிக திரையரங்குகளில், அதிக எதிர்பார்ப்போடு வெளியாகிய '7 ஆம் அறிவின்' ஓப்பினிங்கை தாண்டமுடியவில்லை!!! ஷங்கர், விஜய் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'நண்பன்' திரைப்படம் சிறப்பான ஓப்பினிங்கை பெற்றாலும் முன்னைய வேலாயுதத்தை கடக்கவில்லை!!<br />
<br />
அதிகளவில் ரசிகர்கள் இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் போட்டி நடிகர்களைவிட குறைவான ஓப்பினிங்கை விஜய் பெற இரண்டு முக்கிய கரணங்கள் 1) பெரிய பானர், பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என பொதுவான ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எதிலும் விஜய் நடிக்காமையும் 2) அதிகளவிலான விஜய் ரசிகர்கள் பெண்களாகவும், குழந்தைகளாகவும் இருப்பதால் முதல் வாரம் திரையரங்கு செல்வதற்கு சாத்தியகுறைவு உள்ளமையும் முக்கிய காரணங்கள். ஆனாலும் விஜய் ரசிகர்களால் கொடுக்கப்படும் ஓப்பினிங் அண்மைக்காலங்களில் முன்னரைவிட கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது!! முருகதாஸ், விஜய் இணையும் கமர்சியல் கூட்டணி என்பதால் விஜய் படங்களில் அதிகளவு ஓப்பினிங் பெற்ற திரைப்படமாக துப்பாக்கி அமையலாம்!!! <br />
<br />
<b style="color: #20124d;">சூர்யா -</b> இதுவரை சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரீதியில் பெரியளவு ஓப்பினிங் கிடைக்கவில்லை ஆயினும் சூர்யா சேரும் கூட்டணியை பொறுத்து அவரது ஓப்பினிங் வசூல் மாறுபடும். சூர்யாவின் சிங்கம் திரைப்படத்தின் ஓப்பினிங் சென்னையில் மூன்று நாட்க்களில் 77 இலட்சம்தான், ஆதவனின் மூன்றுநாள் வசூல் சென்னையில் 54 இலட்சம்தான்; ஆனால் 7 ஆம் அறிவின் முதல் ஐந்துநாள் வசூல் 2 கோடி 20 இலட்சம்; இது '7 ஆம் அறிவு' திரைப்படத்தின் மீதான மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த ஓப்பினிங், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வரும்வரை இதுதான் மிகப்பெரும் ஓப்பினிங்!!!(எந்திரன் தவிர்த்து) இதேபோல முன்னரும் ஒருதடவை 'வாரணம் ஆயிரம்' வரும்போது சூர்யாவிற்கு மிகப்பெரும் ஓப்பினிங் கிடைத்தது; சென்னையில் மூன்று நாட்க்களில் அன்று 75 இலட்சம்வரை வசூலானது; இது அன்று அஜித், விஜய் எட்டாத தொகை; காரணம் கௌதம் மேனன், சூர்யா கூட்டணிமீதான பெரும் எதிர்பார்ப்பு!!! இந்த தொகையை சூர்யாவின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படமான அயன்கூட எட்டவில்லை!!!!<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd24rcV1l6dwFArD0JW6S7dDD2PtnwW8t3oIoejtM9PwQIGWPfSbkRIlpYPCr1jeKavII4llfn0sbHGs0gGPwVvx1ljRG1nG9oP-xqC4Vg2fYRTJnkeyS0junOZm-tNJrwEqrQeTQxBFda/s1600/dhanush_shruthi_3_movie_wallpapers_092.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd24rcV1l6dwFArD0JW6S7dDD2PtnwW8t3oIoejtM9PwQIGWPfSbkRIlpYPCr1jeKavII4llfn0sbHGs0gGPwVvx1ljRG1nG9oP-xqC4Vg2fYRTJnkeyS0junOZm-tNJrwEqrQeTQxBFda/s400/dhanush_shruthi_3_movie_wallpapers_092.jpg" width="400" /></a></div>
<br />
<b style="color: #20124d;">தனுஷ், சிம்பு -</b> மாறிமாறி இருவரும் தமது சாதனைகளை முறியடித்துக்கொண்டு வருகின்றார்கள்; கௌதம் மேனன், ஏ.ஆர்,ரகுமான் கூட்டணிமீதான எதிர்பார்ப்பால் 'விண்ணைத்தாண்டி வருவாயா' மூன்று நாட்களில் 64 இலட்சங்களை சென்னையில் வசூலித்தது. செல்வராகவன், தனுஸ் கூட்டணி மீதான எதிர்பார்ப்பில் 'மயக்கம் என்ன' மூன்று நாட்க்களில் 97 இலட்சங்களை வசூலித்தது. சிம்புவின் 'ஒஸ்தி' நான்கு நாட்களில் 1 கோடி 33 இலட்சங்களை வசூலித்தது. கொலைவெறி கொடுத்த எதிர்பார்ப்பால் தனுஸின் '3' திரைப்படம் மிகப்பெரும் ஓப்பினிங்கான ஒரு கோடி 31 இலட்சங்களை சென்னையில் வசூலித்திருக்கின்றது!!! இது ஒரு மிகப்பெரிய தொகை!!! இருவருக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஏறுமுகத்தில் ஓப்பினிங்கை கொடுத்துக்கொண்டிருப்பது இருவருக்கு ஆரோக்கியமான விடயம்!!<br />
<br />
<b style="color: #20124d;">கார்த்தி -</b> முதல் திரைப்படமான பருத்தி வீரனுக்கு எதிராபார்க்காதளவிற்கு மிகப்பெரியளவில் ஓப்பினிங் கிடைத்தது; காரணம் இயக்குனர் அமீரா, சூர்யாவின் தம்பி என்கின்ற கார்த்தி மீதான எதிர்பார்ப்பா என்பது பதில் தெரியாத கேள்வி!! அதனை தொடர்ந்து கார்த்தியின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சிறந்த ஓப்பினிங் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது!!! கார்த்திக்கு அடுத்து நடிகர்களில் விஷால், ஜீவா, ஆர்யா போன்றோருக்கும் கணிசமான ஓப்பினிங் கிடைக்கின்றது!!!<br />
<br />
நடிகர்களை தாண்டியும் ஒரு சில திரைப்படங்களுக்கு எதிர்பார்க்காதளவிற்கு ஓப்பினிங் கிடைத்திருக்கின்றது; அப்படியான இரு சந்தர்ப்பங்கள் சிலவருடங்களுக்குள் நிகழ்ந்துக்கான 1) வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்', 2) ராஜேஷ் சந்தானம் எதிர்பார்ப்பில் வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' முதல் மூன்று நாட்க்களில் சென்னையில் 40 இலட்சங்கள்வரை வசூலித்தது, இது அன்று எந்த விஜய், சூர்யா திரைப்படங்களும் வசூலிக்காத ஓப்பினிங்!! அதற்க்கு காரணம் 'இம்சை அரசன்' திரைப்படத்தால் வடிவேலுவுக்கு ஏற்ப்பட்ட எதிர்பார்ப்புத்தான்!!<br />
<br />
இன்று ஒரு கல் ஒரு கண்ணாடி யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு முதல் மூன்று நாட்களில் சென்னையில் 1 கோடி 73 இலட்சம்வரை வசூலித்திருக்கின்றது; இது ஒரு மிகபெரும் தொகை!!! அஜித், விஜய், சூர்யா போன்ற மிக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களது திரைப்படங்களின் வசூலை அறிமுக நாயகன் உதயநிதியின் திரைப்படம் எப்படி கடந்து சென்றது!!! காரணம் உதயநிதி அல்ல என்பது உதயநிதிக்கும் தெரியும். அப்படிஎன்றால் இந்த ஓப்பினிங் யாருக்கு? சந்தானத்திற்க்கா? இல்லை இயக்குனர் ராஜேஷிற்கா? இருவரும் தனித்தனியாக இல்லை, இருவரும் ஒன்றாக சேர்ந்த கூட்டணிக்குத்தான் இந்த ஓப்பினிங்!!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmnHPsg7KNVYR2YCS0tBacT5IsWCDONkGEsES6ZQ59MA2x5aVxzZdwQUKrCP3_c72sFoPJFUw9xp_MlRNNi3rGR41NL925u4ae54ogxR2pF_oPn6rjxTl1IRmMPBr5v5ns_f5TBIU_Aq7P/s1600/oru_kal_oru_kannadi_okok_movie_wallpapers_864.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmnHPsg7KNVYR2YCS0tBacT5IsWCDONkGEsES6ZQ59MA2x5aVxzZdwQUKrCP3_c72sFoPJFUw9xp_MlRNNi3rGR41NL925u4ae54ogxR2pF_oPn6rjxTl1IRmMPBr5v5ns_f5TBIU_Aq7P/s400/oru_kal_oru_kannadi_okok_movie_wallpapers_864.jpg" width="400" /></a></div>
<br />
சந்தானம் இல்லாமல் ராஜேஷ் ஒரு படத்தை இயக்கினாலோ, ராஜேஷ் இல்லாமல் சந்தானம் வேறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததாலோ இந்த ஓப்பினிங் நிச்சயமாக சாத்தியமில்லை. இருவரும் சேரும்போது ஏற்ப்பட்ட எதிர்பார்ப்புத்தான் இந்த ஓப்பினிங்கின் இரகசியம்!!! மற்றும் விஷேடதினங்களிலேயே அதிக மக்கள் திரையரங்குவரும் சித்திரை புத்தாண்டு (காரணம் கோடைவிடுமுறை) தினத்தில் போட்டிக்கு வேறெந்த திரைப்படமும் வராமையும் இதன் பலம். டிரெயிலர் மற்றும் தமது முன்னைய திரைப்படங்கள் மூலம் இதுவொரு பக்கா காமடி பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை படக்குழு தெளிவாக மக்களுக்கு உணர்த்தி இருந்தமையால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை விரும்பி எதிர்பார்த்திருந்தனர், அதுதான் இந்த திரைப்படம் அதிகளவு ஓப்பினிங் பெற முக்கிய காரணம்!!!<br />
<br />
ஒரு ஹீரோதான் ஓப்பினிங்கின் காரணகர்த்தா என்றால் ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பினிங் உதயநிதிக்குத்தான்!! இதை யாரவது ஒத்துக்கொள்வார்களா? ஓப்பினிங் என்பது ஹீரோவைவிட அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பில்த்தான் எப்போதும் தங்கி இருக்கின்றது; அதிகமாக ஹீரோக்கள்தான் அந்த எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைவதால் ஹீரோக்களை முன்னிறுத்தி ஓப்பினிங் சொல்லப்படுகிறது. ஆனாலும் ஹீரோக்களைதாண்டி எதிர்பார்ப்புக்கள் அதிக ஓப்பினிங்கை பெறுவது அப்பப்போ இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, இனியும் இடம்பெறும்!!!<br />
<div style="color: black;">
<br /></div>
<div style="color: #cc0000;">
<b><span style="font-size: large;">குறிப்பு :- </span></b></div>
<div style="color: black;">
<br /></div>
<div style="color: black;">
* ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கிற்கும் அதன் வெற்றிக்கும் சம்பந்தமில்லை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="color: black;">
<br /></div>
<div style="color: black;">
* பதிவில் சென்னை பாக்ஸ் ஆபீஸ் மட்டுமே பெறுமதிகளில் சொல்லப்பட்டுள்ளது.</div>
<div style="color: black;">
<br /></div>
<div style="color: black;">
* Behindwoods தளம் 2007 ஆம் ஆண்டுமுதல் வாரவாரம் தவறாமல் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது, இங்கு சொல்லப்பட்ட விபரங்கள் அதன் அடிப்படையில்த்தான் சொல்லப்பட்டிருக்கின்றது!!! 100 % நம்பகத்தன்மை உண்டென்று சொல்லமுடியாவிட்டாலும் Behindwoods பக்கச்சார்பான தளமில்லை என்பதை அனைத்து நடிகர்களும் Behindwoods உடன் கொண்டிருக்கும் நெருக்கம் உணர்த்துகின்றது!!!</div>
<div style="color: black;">
<br /></div>
<div style="color: black;">
* ஒரு திரைப்படம் வெளியாகியவுடன் சொல்லப்படும் மொத்த, சில்லறை வசூல்கள் எவையும் ஆதாரம் இல்லாமல் குறிப்பிட்ட தரப்புக்களால் சொல்லப்படுபவை என்பதால் அவ்வாறு சொல்லப்பட்ட எந்த இலக்கங்களையும் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவில்லை.</div>
<div style="color: black;">
<br /></div>
<div style="color: black;">
* Official இல்லாவிட்டாலும் கடந்த 5 ஆண்டிகளாக மூன்று இடங்களுக்கு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் வாராவாரம் வெளிவந்துகொண்டிருக்கின்றன; <b><span style="color: #20124d;"><a href="http://www.behindwoods.com/features/Topten/top-ten/index.html">சென்னை</a></span></b>, <b><span style="color: #20124d;"><a href="http://industry.bfi.org.uk/boxofficearchive">UK</a></span></b>, <b style="color: #20124d;"><a href="http://www.boxofficemojo.com/intl/malaysia/?yr=2012&p=.htm">மலேசியா</a></b> (இவை பக்கச்சார்ப்பில்லாத நம்பகமான தளங்கள்) </div>
<div style="color: black;">
<br /></div>
<div style="color: black;">
* இவ்வளவு தொளில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் இதுவரை ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலை வாரவாரம் வெளியிடுமளவிற்கு இன்னமும் தயாராகாதது ஏன் என்று புரியவில்லை!!! வருமானவரிக்காகவா ? இல்லை நடிகர்களின் இமேஜை காப்பாற்றவா? Official ஆக வாராவாரம் Box Office இனை அறிவித்தால் எல்லோருக்குமே நல்லது; குறிப்பாக சமூகத்தளங்களில் ரசிகர்களது சண்டையும் நேரமும் அதிகளவில் மிச்சமாகும், அத்துடன் போலியாக ஆளாளுக்கு கணக்கு காட்டி ரசிகர்களை ஏமாற்றி இணையத்தை ஓட்டுவதும் குறைவடையும்!! குறிப்பாக தொலைக்காட்சிகளில் தோன்றி அவ்வளவு வசூல், இவ்வளவு வசூல் என கதை அளந்து மக்களை ஏமாற்றும் படக்குளுவினர்களது நாடகங்களும் உடைபட்டுப் போகும்!!<br />
<br />
<div style="color: blue; text-align: center;">
<span style="font-size: x-large;">*--------*</span></div>
</div>
</div>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-92177467961391888552012-04-13T16:33:00.002+05:302023-02-01T01:11:44.610+05:30 ஒரு கல் ஒரு கண்ணாடி <br />
<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKcPo_h6wmp7oT2dmJ-XAo-d4YWGG1m-7C-8PTrdRNqpcT6Oh9kQ0P5-CILjCf4L8B6QL7KakFahxwuWFpj-_ZPFfQ8j6SjhXbx1iVA8_Gxr_SOsTxfK9_3ZkY56BIQIKi9tPotVPSng1-/s1600/67996075605069975867.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="392" width="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKcPo_h6wmp7oT2dmJ-XAo-d4YWGG1m-7C-8PTrdRNqpcT6Oh9kQ0P5-CILjCf4L8B6QL7KakFahxwuWFpj-_ZPFfQ8j6SjhXbx1iVA8_Gxr_SOsTxfK9_3ZkY56BIQIKi9tPotVPSng1-/s400/67996075605069975867.jpg" /></a></div><br />
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் + அறிமுக நாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும், சந்தானம் ஹீரோ + காமடியன் + குணச்சித்திரம் என பல பரிமாணங்களிலும் நடிக்க; ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பாலசுப்ரமணியத்த்தின் ஒளிப்பதிவில், M.ராஜேஷ் இயக்கிய திரைப்படம்தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' (ஓகே ஓகே) இவர்களுடன் கௌரவ வேடத்தில் ஆர்யா, சினேகா, ஆண்ரியாவும் முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணனும் நடித்துள்ளார். 2012 கோடை விடுமுறை + சித்திரை புது வருடத்திற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக வெளிவந்துள்ள அதிகபட்ட பொழுதுபோக்கு திரைப்படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்றால் அது மிகையில்லை.<br />
<br />
<span style="color: #20124d; font-size: large;"><b>ஹீரோவாக உதயநிதி -</b></span><span style="color: #20124d;"> </span>சாம் அண்டர்சன், பவர் ஸ்டார் ரேஞ்சிற்கு கலாய்க்கப்படுவார் என எதிர்பார்த்த அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது!!! எனக்கும்தான். மனிதர் அசத்தி இருக்கிறார், ஆகா ஓகோன்னு நடிப்பில் புரட்டி எல்லாம் போடவில்லை, ஆனால் இயக்குனர் கொடுக்க நினைத்ததை உள்வாங்கி சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். இவர் முதல் திரைப்படத்தில் நடிப்பது போன்ற எண்ணம் காதல் & பாடல் காட்சிகளில் மட்டும் அப்பப்போ தெரிகிறது, சிறிது தயக்கம் உள்ளதுபோன்ற உணர்வு, மற்ற இடங்களில் சிறப்பாக அசத்தி இருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவைகூட இந்த திரைப்படத்திற்கு போதுமான அளவில் நன்றாகவே உள்ளது. தனக்கேற்ற கதையை தெரிவு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் இவரும் தாக்குப்பிடிக்கலாம்!!!!!<br />
<br />
<span style="color: #20124d; font-size: large;"><b>ஹன்சிகா -</b></span> நன்றாக ஊதிய பலூன் போல் இருக்கிறார், அதிக தசை போட்டதாலோ என்னமோ முகமும் அதைத்ததுபோல உள்ளது, உடைகளும் பெரிதாக பொருந்தவில்லை, பெரிதாக கவரவில்லை, ஒருவேளை சந்தானம் சொன்னதுபோல நைட்டியில் நல்லாயிருப்பாரோ என்னமோ :-)) ஆனாலும் அவருக்கான பாத்திரத்தை குறைவில்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். ஹன்சிகாவிற்கு இப்ப 'உடை' குறைப்பைவிட 'எடை' குறைப்புத்தான் அவசியம் (இதில இவங்க 58 Kg ஆம்:p), இல்லையென்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் 'மானாட மயிலாட'வில் நமீதாவுக்கு பக்கத்தில இன்னொரு சீட் போடும் நிலை வரலாம்!!!!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBjhxizgdUdvI3Lcd7nQqz1w7Hy2cuJfeS7-HaIGr9Q4R9lv5KWoeu0rkIEhRXeQ3yr3q9xhQXVa1ohtq49M7D1aI_7Qdm0ynE9Z0xSaANMSlcOBHJVlcb8w7JppNo8CniQQCd3eXqTp_m/s1600/____20120306_1537570791.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="266" width="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBjhxizgdUdvI3Lcd7nQqz1w7Hy2cuJfeS7-HaIGr9Q4R9lv5KWoeu0rkIEhRXeQ3yr3q9xhQXVa1ohtq49M7D1aI_7Qdm0ynE9Z0xSaANMSlcOBHJVlcb8w7JppNo8CniQQCd3eXqTp_m/s400/____20120306_1537570791.jpg" /></a></div><br />
<b style="color: #20124d;"><span style="font-size: large;">சந்தானம் -</span></b> சந்தானம் இல்லையென்றால் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இல்லவே இல்லை!!!! அசத்துகிறார், கலக்குகிறார், பின்னுகிறார், ஜமாய்க்கிறார், பிரிச்சு மேய்கிறார்...... இந்தமாதிரி வார்த்தைகள் எத்தனை இருக்கோ அத்தனையையும் சேர்த்துக்கோங்க. என்ன மனுசன்யா இந்தாளு!!!!! எனக்கு தெரிஞ்சு ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களுக்கு அடுத்து முதல்க்காட்சி அரங்குநிறைந்த காட்சியாக யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நான் பார்த்த ஒரே திரைப்படம் இதுதான். புதுவருட விடுமுறை, கோடைவிடுமுறை என பல காரணிகள் இருந்தாலும் அதிகமானவர்களை திரையரங்கிற்கு வரவைத்தது சந்தானம்தான் என்பதில் சந்தேகமே இல்லை; இதை அவரும், அவர் பெயரும் திரையில் அறிமுகமானபோது பறந்த விசில், மற்றும் கரகோஷம் உணர்த்தியது.<br />
<br />
என்ன ஒரு உடல் மொழி!!! எத்தனை விதமான வசன உச்சரிப்பு!!! எத்தனை விதமான ரியாக்சன்கள்!! அசத்தலான டைமிங், மொத்தத்தில் மிகச்சிறப்பான Screen present. சந்தானம் - One Of the Best Actor!!! ஒரு முழுத் திரைப்படத்தையே ஒரு காமடியனை நம்பி இயக்கி, அதில் மூன்று தடவைகள் ஒரு இயக்குனர் ஜெயித்திருக்கிறார் என்றால் அவரை காமடியன் என்பதைவிட 'ஹீரோ' என்று சொல்வதே சால பொருந்தும். இந்த்த திரைப்படத்தின் பின்னர் சந்தானத்திற்கு ரசிகர்கள் நிச்சயம் அதிகரிப்பார்கள் என்று அடித்து சொல்லலாம், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சந்தானத்தின் கேரியரில் மற்றொரு முத்திரை.<br />
<br />
<b>சரண்யா பொன்வண்ணன் -</b> வழமையான அம்மா பாத்திரம், இவங்களைவிட்டா அந்த கேரக்டருக்கு வேறு தேர்வே இல்லை, வழமைபோல கலக்கி இருக்கிறாங்க. <b>ஆர்யா - </b>வழமையாக ராஜேஷ் திரைப்படங்களை முடித்துவைக்க ஒரு ஹீரோ வருவார், 'சிவா மனசில சக்தி'க்கு அப்புறம் மீண்டும் ஆர்யா இரண்டாவது தடவையாக திரைப்படத்தை முடித்து வைக்கிறார். <b>சினேகா -</b> பிரசன்னா குடுத்து வச்சவன்யா!!! ம்ம்ம்... :p <b>ஆண்ட்ரியா -</b> வேஸ்டா சும்மா ஜாலிக்கு வந்திட்டு போனாங்க!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDxiDdvp4zE8q36GY_50WfA3w6Am0CQbXk_S0DNhSPvDdXAeSQqDI0nLiScEfzjrXJgW2R69_jVUYl7_5VIcIV8oGqSc2ed2A17AF_GFpMDqBveVBy7o_L637Anzoa512luli5gN25BE80/s1600/oru+kal+oru+kannadi+movie+stills00-004.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="266" width="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDxiDdvp4zE8q36GY_50WfA3w6Am0CQbXk_S0DNhSPvDdXAeSQqDI0nLiScEfzjrXJgW2R69_jVUYl7_5VIcIV8oGqSc2ed2A17AF_GFpMDqBveVBy7o_L637Anzoa512luli5gN25BE80/s400/oru+kal+oru+kannadi+movie+stills00-004.jpg" /></a></div><br />
ஹாரிஸ் ஜெயராச்சின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன, உதயநிதி சொதப்பாதது ஆச்சரியம்!!! சூப் சாங்கான "வேணாம் மச்சான் வேணாம்" படமாக்கியவிதம் மற்றும் அந்தப் பாடலில் சந்தானத்தின் காஸ்டியூம்ஸ் கலக்கல்! பின்னணி இசையை கவனிக்கவே முடியவில்லை (படம் முழுக்க விசில் & கைதட்டல் சத்தத்தில எப்டி ரீ ரெக்கோடிங் புரியும்!!!) தப்பிச்சீங்க ஹாரிஸ் :-)) பால்சுப்ரமணியத்தின் கமரா அழகியல்; தமிழ் சினிமாவின் கலர்புல் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பாலா ஒளிப்பதிவில் சொத்தப்பினல்த்தான் ஆச்சரியம், வழமைபோலவே கலக்கி இருக்கிறார், கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு!!!! விவேக் ஹர்சன் படத்தொகுப்பு விறுவிறு!!!<br />
<br />
<span style="font-size: large;"><b style="color: #20124d;">M.ராஜேஷ் -</b></span> அடித்து சொல்லலாம் இது இவரது மூன்றாவது ஹிட் திரைப்படம் என்று!!! மூன்றும் ஒரே பார்முலா, ஆனாலும் ரச்கர்களுக்கு சலிக்கவே சலிக்காது, யாருக்குத்தான் காமடி சலிக்கும்!!! பேரரசு செய்யும் வேலைதான், ஆனால் இங்கே ராஜேஷ் கலர்புல்லா, செம ஜாலியா, சிறந்த டைம்பாஸா, சிறந்த பொழுதுபோக்கா 2.30 மணி நேரமும் நேரம் போனது தெரியாம ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்; அதுதான் இவரின் வெற்றி ரகசியம்!!! வேகமான, மிகச்சிறந்த டைமிங் காமடியுடனான திரைக்கதை, மிகச்சிறப்பான வசனங்கள், அதிலும் காமடி வசனங்கள் எல்லாமே அடி தூள் ரகம்!!!! இவைதான் ராஜேஷின் சுமாரான இயக்கத்தையும், லாஜிக் மீறல்களையும் மறைத்து நிற்கின்றன. ஒண்ணுமே இல்லாத கதைக்கு சிறப்பான திரைக்கதை + மிகச்சிறப்பான காமடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை படம் முழுவது விசில் + கைதட்டல் என அதிர வைத்த ராஜேசுக்கு ஒரு சலூட் போடலாம்!!<br />
<br />
<br />
கலைப்படைப்புக்களை எடுக்கிறவங்க எடுக்கட்டும், அவங்க தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போகட்டும்!! அதே நேரம் ராஜேஷ் போன்ற பக்கா காமடி + பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நிச்சயம் வரவேற்கலாம், இவர்கள் தமிழ் சினிமாவிற்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை வாழவைக்கும் ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவை தொடர்ந்தும் நேசிப்பதற்கு இவர்கள்தான் பூஸ்ட்!!! ஒட்டுமொத்த திரையரங்குமே ஜாலியாக கைதட்டி, விசிலடித்து, கரகோஷம் செய்து ஒரு படத்தை முழுமையாக ரசிக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு சபாஷ் போடுவதில் தப்பில்லை!!! <br />
<br />
படத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும்!!! படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு!!! இதயநோய், வயிற்றுவலி உள்ளவர்கள், சிரித்தால் நஷ்டம் ஏற்ப்படும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் இது ஒரு பக்கா விருந்து....<br />
<br />
<span style="color: #cc0000; font-size: large;"><b>ஒரு கல் ஒரு கண்ணாடி - </b></span> <span style="font-size: large;"><b style="color: #274e13;">சூப்பர், செம, ஜாலி, கலக்கல்!!! Fact... Fact...Fact...Fact...Fact.. </b></span></div>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-13788542545684117632012-03-30T13:48:00.006+05:302023-02-01T01:11:33.195+05:30'3' - எனது பார்வையில்.. <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWgvNfbKCxMu3bbrhhrnFYffwVfTYUPhCxkjGQEkurG70kz74PMjHM9o0JOfRgR0mMRWAaIcZ90gQiPI-zLne8qgv5TArTf1c7X-mWCQIUg4_Mphlqth-D5nQ-IV3nTHpdjioe3FMkirNj/s1600/moonu.png"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 329px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWgvNfbKCxMu3bbrhhrnFYffwVfTYUPhCxkjGQEkurG70kz74PMjHM9o0JOfRgR0mMRWAaIcZ90gQiPI-zLne8qgv5TArTf1c7X-mWCQIUg4_Mphlqth-D5nQ-IV3nTHpdjioe3FMkirNj/s400/moonu.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5725626398527561186" /></a>
<br/><br/>
கஸ்தூரிராஜா தனுஷ் கூட்டுத் தயாரிப்பில்; தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுபிரகாஷ், பானுபிரியா, ரோஹினி, சுந்தர், சிவகார்த்திகேயன் நடிப்பில்; அனிருத்தின் இசையில் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவில்; ஐஸ்வர்யா.R.தனுஷ் இயக்கிய திரைப்படம்தான் '3'. கொலைவெறி பாடல் மூலம் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருந்த '3' திரைப்படம் அதன் எதிர்பார்ப்பை வர்த்தக ரீதியாக பூர்த்தி செய்யுமோ இல்லையோ ஒரு அழகிய திரைப்படமாக பூர்த்தி செய்துள்ளது.
<br/><br/>
திரைப்படம் ஆரம்பிக்கும்போதே அமங்கலமாக ஆரம்பிக்கின்றது; சுருதி, சுந்தர் Point Of View வில் கதை பிளாஷ்பாக் மூலம் சொல்லப்படுகின்றது, குழப்பமான கதைக்கு குழப்பமில்லாத தெளிவான திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர்; இரண்டாம் பாதியை மிகவும் மெதுவாகவே நகர்த்தி இருக்கின்றார். முதல் பாதி இளமை, காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என்று விறுவிறுப்பாக நகர்கின்றது; இரண்டாம் பாதியில் காட்சிகள் அனைத்தும் இறுக்கமாகவும் மெதுவாகவும் நகர்கின்றது. படம் ஆரம்பிக்கும்போதே இதுதான் கிளைமாக்ஸ் என்று சொல்லியிருந்தாலும் திடீரென படம் நிறைவடைகின்றது. படம் பார்த்து முடித்ததும் மனதில் ஏற்ப்பட்ட ஒரு கனம் இந்தக்கணம்வரை விலகவில்லை....
<br/><br/>
<span style="font-weight:bold;">தனுஷ் -</span> இந்த மாதிரி படங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு தனுஷை ஹீரோவாக தெரிவு செய்யலாம், வேறு யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர். கெட்டப் போட்டால்த்தான் நடிப்பில் சிறப்பான வெளிப்பாட்டை காட்ட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தனுஷ் தவறென நிரூபித்திருக்கின்றார். இந்த மாதிரியான திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக நன்றாக போகவில்லை என்று தனுஸ் கவலைப்படத் தேவையில்லை; பதினைந்து, இருபது வருடம் கழித்து தனது கேரியரை திரும்பி பார்க்கும்போது இவைதான் தனுசின் கேரியரை பூரணப்படுத்தும்!!! பள்ளி மாணவனாகவும், இளைஞனாகவும், அசாதாரண நிலையிலும் தனுஷ் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவங்களில் காட்டும் வேறுபாட்டுக்கு ஒரு சபாஸ் போடலாம். அசாதாரண நிலைகளில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன தனுஷை நினவு படுத்துவதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்; ஆனாலும் அந்த கிளைமாக்ஸில் - <span style="font-weight:bold;">Hats Off To U Danush</span>
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiT7gdfNaJh5FXPWfGSxs2WrjnSCAJtDJNaRNdOBqODfXVmtqjlj6afBndh68a7kdAMNxrKaniQjE5SB-__G8041kjD4BAfntTk6eUOd8z_rD1IrWL1-kr5j_dyDcndlBhecafKN8_tkR7/s1600/24-03-2012-14773-2-2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiT7gdfNaJh5FXPWfGSxs2WrjnSCAJtDJNaRNdOBqODfXVmtqjlj6afBndh68a7kdAMNxrKaniQjE5SB-__G8041kjD4BAfntTk6eUOd8z_rD1IrWL1-kr5j_dyDcndlBhecafKN8_tkR7/s400/24-03-2012-14773-2-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5725626394690398818" /></a>
<br/><br/>
<span style="font-weight:bold;">ஸ்ருதி -</span> சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் "பெரிசா ஒண்ணுமே இல்லையேடா" என்று ஒரு வசனம் சொல்லுவார்; அது உண்மைதான்; ஆனால் அவரது பெர்போமான்ஸ் எதிர்பார்க்காத ஒன்று. 7 ஆம் அறிவில் அலுப்படித்த ஸ்ருதியா இதென்று ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார். ஒரு திரைப்படத்திற்குள் இத்தனை முதிர்ச்சியான நடிப்பு எதிர்பார்க்காத ஒன்று!! புலிக்கு பிறந்தது புலிக்குட்டிதான்!! காதல், பாசம், பிரிவு என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கின்றார். பேரழிகியெல்லாம் இல்லை என்றாலும் அழகாகத்தான் இருக்கின்றார்!!!
<br/><br/>
பிரபு, பனுபிரகாஷ், பானுப்பிரியா, ரோஹினி போன்றவர்கள் தமக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்திருக்கின்றார்கள். சிவகார்த்திகேயன் முதல் பாதியை கலகலப்பாக்கினாலும் சிவகார்த்திகேயனிடமிருந்து ரசிகர்கள் இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதை டைட்டிலில் அவர் பெயர் வரும்போது திரையரங்கில் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் உணர்த்தியது!!! சுந்தர் 'மயக்கம் என்ன'வில் டம்மி அக்கப்பட்டவர், இங்கு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். தனுஷ், சுருதிக்கு அடுத்து அதிக காட்சிகள் இவருக்குத்தான்; ஆகா ஓகோன்னு இல்லாவிட்டாலும் தன்னால் குடுக்ககூடிய அதிகபட்ச்சத்தை நிறைவாக கொடுத்திருக்கின்றார்.(சுந்தருக்கு முன்னாடி தனுஷ் ஹீரோயினை கட்டிப்பிடிக்கிற சீன் தொடர்ந்துகிட்டே இருக்கு :p)
<br/><br/>
அனிருத்தின் இசையில் மிகப்பெரும் ஹிட்டான கொலைவெறி பாடலை தவிர ஏனைய பாடல்களுக்கு கதையை ஒட்டியே காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது; கொலைவெறி பாடல் எதிர்பார்க்கப்பட்டது போலவே திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் அதிகமான இடங்களில் நிசப்தத்தை பயன்படுத்தி இருக்கும் அனிருத் சில இடங்களில் சிறப்பான பின்னணியை வழங்கியிருக்கின்றார்; சில இடங்கள் சப்பென்றும் இருக்கின்றது. பொல்லாதவன், ஆடுகளம் புகழ் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்; கதையின் தேவைக்கு, காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இவர் கொடுத்த லைட்டிங் பிரமாதம். கோலா பாஸ்கரின் எடிடிங் Point Of View வில் சொல்லப்படும் கதை என்பதால் ஒரு சில இடங்களில் லாஜிக்கை உறுத்தினாலும், குழப்பமில்லாத, தெளிவான திரைக்கதைக்கு உதவியிருக்கின்றது.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZgqHIQbIx7wqwibE4yB6wpJUSGGex3XF8HQyFlAtKgKbFYskDPLzfF-S663A0g5jEFHQy1iWKOJeIO7OJm_8jKMhsN7aIUlO14Uww5tRuIch4X3ETdwlOU-iIwh1NbV0UC4bgIZowUvum/s1600/3+movie+celebrities+wallpapers.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZgqHIQbIx7wqwibE4yB6wpJUSGGex3XF8HQyFlAtKgKbFYskDPLzfF-S663A0g5jEFHQy1iWKOJeIO7OJm_8jKMhsN7aIUlO14Uww5tRuIch4X3ETdwlOU-iIwh1NbV0UC4bgIZowUvum/s400/3+movie+celebrities+wallpapers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5725626390000794322" /></a>
<br/><br/>
கொலைவெறி பாடல் என்னதான் பட்டையை கிளப்பி எதிர்பார்ப்பை உயர்த்தினாலும், ஐஸ்வர்யாவால் ஒரு படத்தை சிறப்பாக கொடுக்க முடியுமா என்கின்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்தது. முதலில் வந்த ட்ரெயிலர்களும் அதை நிரூபிப்பதுபோலத்தான் இருந்தது. படம் சிறுபிள்ளை வேளாண்மை போலத்தான் இருக்கும் என்கின்ற நினைப்பை தகர்த்திருக்கின்றார் செல்வராகவனின் முன்னாள் உதவி இயக்குனர் ஐஸ்வர்யா; படம் முழுவதும் ஆங்காங்கே செல்வராகவன் டச்!! ஆனாலும் பல இடங்களில் ஐஸ்வர்யா 'அட' போட வைத்திருக்கின்றார். பல காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. ஒரு இயக்குனராக ஐஸ்வர்யா ஜெயித்திருக்கின்றார்!!! கதைக்கு தேவை என்றாலும் இரண்டாம் பாதியில் அதிகமான நேரம் நாயகனும், நாயகியும் அழுவது போன்ற காட்சிகள் சலிப்பையும், திரைக்கதையில் தொய்வையும் ஏற்ப்படுத்தியத்தையும் மறுப்பதற்கில்லை!!!
<br/><br/>
'3' பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் விரும்புபவர்களுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை; இவர்கள் திரையரங்கு சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனையவர்கள் '3' திரைப்படத்தை நிச்சயமாக ரசிக்கலாம்!!
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:180%;" >'3' - 3 Out Of 5</span>
<br/><br/>Unknownnoreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-33126744652125126262012-03-05T22:05:00.006+05:302023-02-01T01:09:12.947+05:30இலங்கை கிறிக்கட் அணியை ரசிக்கும் தமிழர்கள் துரோகிகளா?!!!! <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLjFCzj1CljZiTWKVFrX90utyNzNog-aa1lMfNZFiJaFq3nbS57a_LDOM1-VwdIVcRGh0HNygXXmObPKOhdHlFwVxK2OQ3cBucbaSyoXLtaNnoRrQ2ffJZCiJkm_Tq-qp8I2huZqR-I3FI/s1600/Sri+Lankan_cricket_fan.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 277px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLjFCzj1CljZiTWKVFrX90utyNzNog-aa1lMfNZFiJaFq3nbS57a_LDOM1-VwdIVcRGh0HNygXXmObPKOhdHlFwVxK2OQ3cBucbaSyoXLtaNnoRrQ2ffJZCiJkm_Tq-qp8I2huZqR-I3FI/s400/Sri+Lankan_cricket_fan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5716461332178931058" /></a>
<br/><br/>
இலங்கை கிறிக்கட் அணியை ரசிக்கும் இலங்கை தமிழர்களை துரோகிகள், சிங்களவனுக்கு செம்பு தூக்குபவர்கள், தம் இனத்து மீது அக்கறை இல்லாதவர்கள் போன்ற சொற்களால் காயப்படுத்தும் தமிழ் உணர்வு மிக்க 'சில' ஆசாமிகளுக்காகவே இந்தப்பதிவு. இலங்கை அணி பற்றி நல்ல முறையில் ஒரு கருத்தை தனது முகநூலிலே ஒரு நண்பர் வெளியிட்டிருந்தார்!!! அவருக்கு அவருடைய நண்பர்களில் ஒருவரிடமிருந்து "இலங்கை அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் நண்பர்கள் பட்டியலில் இருந்து தூக்கிவிடுவேன்" என்று மிரட்டல்; சில நேர விவாதத்தின் பின்னர் அவர் சொன்னதை செய்துவிட்டார்!!! இவர் மட்டுமல்ல, இவரை போன்ற இன்னும் சிலரும் சமூக தளங்களில், நண்பர்களில், சமூகத்தில் எம்முடன்தான் வசிக்கின்றார்கள். இவர்களது பேச்சுக்களை, செய்கைகளை சாதாரணமான விடயம் என்று ஒதுக்கிவைக்க முடியாது....
<br/><br/>
அதிலும் இவர்களுக்கு இனப்பற்று இலங்கை நன்றாக விளையாடும்போதுதான் அதிகரிக்கும்!!! இலங்கை உதை வாங்கும்போது நமட்டு சிரிப்பு சிரிக்கும் இவ்வகை ஆசாமிகளுக்கு இலங்கை வெற்றி பெறும்போதுதான் எம்மை பார்த்தால் தமிழ் இன உணர்வு மூக்கு, வாய், கண், காது, ..... என உடம்பின் ஒன்பது துவாரங்களின் ஊடாகவும் வழியும்!!!! இலங்கை அணிக்கு ஆதரவாக, இலங்கை அணியை ரசிப்பவர்கள் துரோகிகள் என்றால் இலங்கை தமிழர்களில்(கிறிக்கட் பார்ப்பவர்களில்) பாதிப்பேர் துரோகிகள்தான்!!!! டீ கடை முதல், பாடசாலை, பல்கலைகழகம், அலுவலகம் என கிறிக்கட் பற்றி இலங்கை தமிழர்கள் விவாதிக்கும் இடங்களில் எல்லாம் இலங்கை கிறிக்கட் அணியின் ரசிகர்கள் பாதிப்பேராவது இருப்பார்கள்!!!! அப்படியானால் அந்த பாதிப்பேரும் துரோகிகளா? இலங்கைக்கு அல்லாமல் வேறு அணிகளை ரசிப்பவர்கள் அனைவரும் தமிழ் இன உணர்வாளர்களா?
<br/><br/>
இலங்கை அரசை எதிர்க்கும் இலங்கை தமிழர்களில் பாதிப்பேர் எப்படி இலங்கை கிறிக்கட் அணிக்கு ரசிகர்களாக இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகம் இந்திய நண்பர்கள் சிலருக்கும் ஏற்ப்படலாம்!!! ஆச்சரியமாக கூட இருக்கலாம்!!! சிலருக்கு கோபம்கூட வரலாம்!! இலங்கை கிறிக்கட் அணிக்கு பல இலங்கை தமிழர்கள் ரசிகர்களாகிய காலம் 1996 காலப்பகுதிதான்; அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் பாரிய இடம்பெயர்வை சந்தித்திருந்த நேரம்; உடைமைகள், சொத்துக்கள் போன்றவற்றை இழந்த நிலையிலும் அன்று பாதி இலங்கை தமிழர்கள் இலங்கை கிறிக்கட் அணிக்கு ரசிகர்களாக இருந்தார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. அதற்க்கு முக்கியகாரணம் இனப்பிரச்சனையையும் கிறிக்கட்டையும் அதிகமானவர்கள் ஒன்றுபடுத்திப் பார்க்கவில்லை என்பதுதான்.......
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs4Z0esm38uicZjZnSTWPxV5eX7EqgxLsZVHbc2ZtoJpd8Rzwe-ddMeOSHKGxeNHqq25u_JU93vjXIUE5rIjZ4S7qh27lAEV9-Z1ZIFDFEWXizTod6Xk8wkEd7U_wQqECiKeFjsJH7DOwV/s1600/c25_04031172.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs4Z0esm38uicZjZnSTWPxV5eX7EqgxLsZVHbc2ZtoJpd8Rzwe-ddMeOSHKGxeNHqq25u_JU93vjXIUE5rIjZ4S7qh27lAEV9-Z1ZIFDFEWXizTod6Xk8wkEd7U_wQqECiKeFjsJH7DOwV/s400/c25_04031172.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5716461327823395522" /></a>
<br/><br/>
சர்வதேச கிறிக்கட் சாதரணமாக 10 - 12 வயதிலே அதிகமானவர்களுக்கு அறிமுகமாகிவிடும்; அப்போதைய நிலையில் எந்த அணி சிறப்பாக ஆடுகின்றதோ, எந்த வீரர் மனதை கவர்கிராரோ ; அந்த அணி, அந்த வீரர் சார்ந்த அணி பிடித்தமான அணியாக மனதில் பதிந்துவிடும்; அதனை அவ்வளவு சுலபமாக யாராலும் மாற்ற முடியாது. குறிப்பிட்ட அணி மோசமான நிலையில் இருக்கும்போதுகூட அதிகமானவர்கள் சிலகாலம் கிறிக்கட்டை பார்க்காமல் இருப்பார்களே அன்றி; அந்த அணியை விடுத்து வேறொரு அணிக்கு ரசிகர்களாக தம்மை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் (சில சந்தர்ப்பவாதிகளை தவிர்த்து)
<br/><br/>
இவை தவிர்த்து தமது நாட்டு அணி மீது அதிகமானவர்களுக்கு இயல்பிலேயே பிடிப்பு ஏற்படுவது இயற்கை; அதனால்த்தான் பங்களாதேசில் அவுஸ்திரேலியா ஆடும்போதும் அந்நாட்டு ரசிகர்கள் தங்கள் அணியினருக்கு ஆதரவாக மிகப்பெரும் ஊக்கத்தை கொடுக்கிறார்கள்!!! இலங்கை தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல; என்னதான் அரசினால் பிரச்சனைகள் இருந்தாலும் சிறுவயதில் பாடசாலையில் தொடக்கம் ஒரு விண்ணப்பபடிவம் நிரப்புவது வரையில் எமதுநாடு - இலங்கை என்றே சொல்லி எழுதிப் பழகிவிட்டோம்!!!! வரலாறு, சமூககல்வி என சிறுவயது முதல் இலங்கைதான் எமதுநாடு என்பதை கல்வியும் அடிமனதில் ஏற்றிவிட்டது; அந்த வயது இனப்பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை எதுவும் புரிகிற வயதில்ல; ஆனால் அவற்றை புரியும் வயது வரும்போது கிறிக்கட்டையும், நாட்டுப்பிரச்சனையும் ஒன்றுபடுத்தி பார்த்தால்கூட அதிலிருந்து வெளிவர முடியாது!!!
<br/><br/>
என்னதான் கிறிக்கட் வேறு, நாட்டுப் பிரச்சனை வேறு என்று சொன்னாலும் ஒருசில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்தபோது இனிமேல் இலங்கை கிறிக்கட்டை ரசிப்பதில்லை என்று முடிவெடுத்து சிலகாலம் ஒதுங்கியிருந்தாலும், மனதளவில் ஒதுங்க முடியாது!! ஒரு சிறந்த போட்டி ஒன்றை வெற்றி பெறும்போதோ, அல்லது தனிமனித சாதனை நிகழும் போதோ மனம் அனைத்தையும் மறந்து மீண்டும் இலங்கை கிறிக்கட்டை வெளிப்படையாக ஆதரிக்கும்!!! மது, மாது மீதான காதல் போலத்தான் கிறிக்கட்டும்; பிரச்சனைகள் வரும்போது இனிமேல் அந்த பக்கமும் போவதில்லை என்று அந்த கணம் தோன்றும், சில நாட்களிலேயே மனதுக்குள் ஏக்கம் உண்டாகிவிடும்; ஆனால் வெளியில் காட்டிக்க முடியாது, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எல்லாவற்றையும் மறந்து ஐக்கியமாகிவிடுவார்கள். (சூதாட்டம் பிடிபடும் சந்தர்ப்பங்கள்; மோசமான தோல்விகளில் பிடித்த அணி தவிக்கும்போது ஏனைய நாட்டு ரசிகர்களுக்கும் இதே மனநிலை வந்திருக்கலாம்)
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFsujhU-KmAQOdzzWWxkqnFgeTIKN8MQvQqNyIyqazExPEWhNaBmtXuAlHTvNhyZsP_G49KOozz6k1ndUNgZg7gNS8-S1QjqLAH_PEUwRrkp9vibSzzzj9P_sYAJo4FLQ155RRURNnbbpO/s1600/ICC11.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFsujhU-KmAQOdzzWWxkqnFgeTIKN8MQvQqNyIyqazExPEWhNaBmtXuAlHTvNhyZsP_G49KOozz6k1ndUNgZg7gNS8-S1QjqLAH_PEUwRrkp9vibSzzzj9P_sYAJo4FLQ155RRURNnbbpO/s400/ICC11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5716460779733031986" /></a>
<br/><br/>
ஒருசிலருக்கு கிறிக்கட் குடும்ப உறவுகள், நண்பர்கள், சமூகம் மூலமாகவும் அறிமுகமாகும்; உதாரணமாக சொல்வதானால் அப்பா, அண்ணன், நண்பன், அயலில் உள்ள பிடித்தமானவர் ஒருவர் எந்த அணிக்கு, வீரருக்கு அதரவாக ரசிக்கிறாரோ அதையே தனக்கு பிடித்ததாக சிறுவயதில் உருவாக்கி கொள்ளும் கிறிக்கட் ரசிகர்களும் இருக்கின்றார்கள். தாமக கிறிக்கட்டை அறிகிறார்கள! இன்னொருவரால் அறியப்படுத்தப் படுகிறார்களோ! அதிகமானவர்களுக்கு தமது முதல் பார்வையில் பிடிக்கும் அணிதான் அதிகமாக இறுதிவரை அபிமான அணியாக இருக்கும்!!! என்னுடைய நண்பர்களில் பல இந்திய, பாகிஸ்தான், தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து ரசிகர்கள் (வெறியர்கள்) இருக்கின்றார்கள்; இவர்களில் 90 % ஆனவர்கள் அந்த அணியின்மீது, அணிவீரர்கள்மீது ஏற்ப்பட்ட ஈர்ப்பினால் அந்த அணிகளை ரசிக்கின்றார்களே அன்றி நாட்டுப் பிரச்சனையால் அல்ல!!!!
<br/><br/>
அதிலும் இலங்கை அணிக்கு ரசிகர்களாக இருப்பவர்களை நாட்டு பிரச்சனையை சுட்டிக்காட்டி ஏளனம் செய்யும் சிலர் அதே காரணத்திற்காக இந்திய அணிக்கு ரசிகர்களாக இருப்பதுதான் காமடியின் உச்சம்!!! இந்தியா தமிழர்களின் அணியா? இல்லை இந்தியாவிற்கும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கும் சம்பந்தம்தான் இல்லையா? அரசியல், இனப்பிரச்சனை என்று பார்த்தால் இலங்கை தமிழர்களால் இலங்கை, இந்தியா என்று இரண்டு நாட்டு அணிகளுக்கும் ரசிகர்களாக இருக்க முடியாது!!! இன்றைக்கு இலங்கை தமிழர்களில் இந்திய ரசிகர்களாக இருப்பவர்களில் அதிகமானவர்கள் இந்திய அணியை நேசிக்க முக்கிய காரணம் இனப்பிரச்சனை அல்ல, சச்சின்!!!! இன்னும் சிலர் கிறிக்கட்டே தெரியாமல் இனப்பிரச்சனைக்கும் கிறிக்கட்டுக்கும் முடிச்சுப்போட்டு இந்தியாக்கு வலிந்து சென்று ஆதரவு அளிப்பதாக காட்டிக்கொள்கின்றார்கள்; அவர்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.....
<br/><br/>
இலங்கை கிறிக்கட் அணிக்கு ஆதரவாக இருப்பதால் "நாட்டு பற்று அதிகமாக உள்ளதோ"? என்று நண்பர் ஒருவர் கேட்டார்; அது நாட்டுப் பற்றல்ல, கிறிக்கட்மீதான பற்று, அது நான் சார்ந்த நாட்டு அணிமீதுள்ளதால் அப்படி தோன்றுகின்றது. உண்மையை சொல்வதானால் இலங்கை தமிழர்களில் பலருக்கு 'நாடுப்பற்று இல்லை என்று சொல்வதைவிட, பற்றுவைக்க ஒரு நாடு இல்லை' என்பதே உண்மையான ஏக்கம்!!! இனம், மதம், மொழி தாண்டி நேசித்தால்த்தான் கிறிக்கட்டை கிறிக்கட்டாய் ரசிக்க முடியும்... ஓரணியிலேயே முரளிதரன் என்னும் 'தமிழ்' பந்துவீச்சாளர் உலக சாதனைகளை நிகழ்த்தியபோதும்; முரளியைவிட அதே அணியின் 'சிங்கள; வீரர் சமிந்த வாஸை அதிகமாக நேசித்த தமிழர்களும் இருகின்றார்கள்! அதேநேரம் முரளியை கொண்டாடிய சிங்களவர்களும் இருக்கின்றார்கள்; அதேபோல ஜெயசூர்யாவை கொண்டாடிய முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். கிரிக்கட்டில் அரசியல் அப்பப்போ இருந்தாலும்; அதிகமான ரசிகர்கள் ரசித்தது கிறிக்கட்டை அன்றி, அரசியலை அல்ல!!!!!
<br/><br/>
<span style="font-weight:bold;"><div style="text-align: center;"><span style="color: rgb(0, 0, 102);">எனக்கு</span><span style="color: rgb(0, 0, 102);"> </span><span style="color: rgb(0, 0, 102);">இலங்கை</span><span style="color: rgb(0, 0, 102);"> </span><span style="color: rgb(0, 0, 102);">அணியை</span><span style="color: rgb(0, 0, 102);"> </span><span style="color: rgb(0, 0, 102);">எப்படி</span><span style="color: rgb(0, 0, 102);">/</span><span style="color: rgb(0, 0, 102);">ஏன்</span><span style="color: rgb(0, 0, 102);">/</span><span style="color: rgb(0, 0, 102);">எபோதிலிருந்து</span><span style="color: rgb(0, 0, 102);"> </span><span style="color: rgb(0, 0, 102);">பிடித்தது</span><span style="color: rgb(0, 0, 102);">......</span>
</div></span>
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHvB4FoGl9JEavoJdYiF2KKTb954DybC8qPKXZnqw-i6kjSF5cyrwONoEhnhNwfdJT36ySYU0XZLBPdrf0SmmU_4vRXNt4Ij4YcGfI021-nzO3jkkDtlsVwIYDym078L3ugRghlU3nWWkm/s1600/Team_Sri_Lanka_1996.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHvB4FoGl9JEavoJdYiF2KKTb954DybC8qPKXZnqw-i6kjSF5cyrwONoEhnhNwfdJT36ySYU0XZLBPdrf0SmmU_4vRXNt4Ij4YcGfI021-nzO3jkkDtlsVwIYDym078L3ugRghlU3nWWkm/s400/Team_Sri_Lanka_1996.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5716460778259725202" /></a>
<br/><br/>
10 வயதிலில் நண்பர்களுடன் ஊரிலே கிறிக்கட் விளையாட தொடங்கிய எனக்கு 13 வயதில்தான் சர்வதேச கிறிக்கட் ஓரளவுக்கு அறிமுகமாகியது; அதுவரை உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்கள் பெயர்தான் பரிச்சியம், பிடித்த வீரர்களும் அவர்கள்தான் (இன்றும் அன்றைய வீரர்களின் பெயர்களும், சில போட்டிகளும் பசுமையாக ஞாபகத்திலே உள்ளது) சர்வதேச வீரர்களின் பெயர்களில் முதலில் நான் அறிந்த வீரர்கள் இலங்கை அணியினர்தான்!!! ஆனாலும் எந்த போட்டியும் பார்த்ததில்லை. 1996 ஆம் ஆண்டு நாட்டு பிரச்சனையால் இடம்பெயர்ந்து ஒரு குடிசை அமைத்து சாவகச்சேரியில் தங்கியிருந்த காலப்பகுதியில்த்தான் உலக கிண்ண போட்டிகள் ஆரம்பமானது!!
<br/><br/>
மின்சாரம், டிவி எதுவுமே இல்லாத காலப்பகுதி என்பதால் வானொலிதான் ஒரே பொழுதுபோக்கு!!! உலககிண்ண போட்டிகளின் வர்ணனையும் வானொலியில்த்தான் கேட்போம்; 5 ஓவர்கள் ஆங்கிலத்திலும், 5 ஓவர்கள் சிங்களத்திலும் வர்ணனை சொல்லப்படும்; சிங்களம் தெரியாததால் வர்ணனை சொல்லும் வர்ணனையாளரின் 'ஒலி'யின் அளவை வைத்துதான் சிலநேரங்களில் என்ன நடந்தது என்பதை அன்று ஊகிப்போம்; இந்நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கை விளையாடும் தகுதி பெற்றது, இறுதிப் போட்டி என்பதால் அருகில் இருந்த ஒரு வீட்டில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உருவாக்கி டிவியில் மச் போடப்பட்டது; மிக அதிகமான ரசிகர்கள், கிட்டத்தட்ட அத்தனைபேரும் இலங்கைக்குத்தான் ஆதரவாக இருந்தார்கள்....
<br/><br/>
முதல் இன்னிங்க்ஸ் அவுஸ்திரேலியா பட்டிங் பெரிதாக ஆர்வமிருக்கவில்லை, இரண்டாவதாக இலங்கையின் இனிங்க்சை ஒரு பந்து விடாமல் பார்த்தேன்; அன்றுதான் எனக்கு தெரிந்த பெயர்களின் நிழலை தொலைக்காட்சியில் பார்த்தேன். 3 வயதில் மகாபாரத கதையை விரும்பி கேட்டதால் அர்ஜுனனின் அபிமானியான நான், 6 வயதில் 'மனிதன்' திரைப்படம் பார்த்ததில் இருந்து ரஜினியின் ரசிகனானேன், அன்றைய இலங்கை அணியின் போட்டி பார்த்தது முதல் அரவிந்த டீ சில்வாதான் என்னுடைய 'பேவரிட்' வீரர்!!! இன்றுவரை அரவிந்த மீதான மதிப்பு துளியளவும் குறையவில்லை; சனத், மஹேலா என்று பின்னர் பலரை ரசித்தாலும் எனக்கு எப்போதும் அரவிந்தா தான் ஸ்பெஷல். முதல் முதலில் எனக்கு தாக்கத்தை உண்டாக்கியவர்கள்தான் எனக்கும் எப்போதும் பேவரிட்டாக இருந்துள்ளார்கள்...
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjv4i0b9yOPrq6qT2aYYFecEpnLjEBlPqRgtW31D4vPnyIuZyuEV7GVjo4Tg4trj7uvarwJoGTrfcuLRYEAi07ENURIz1_1kf-8bTxvD1bSnaOcNg4VeDNP9CP584VvyqkI_3fEMsONMEf7/s1600/119316.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjv4i0b9yOPrq6qT2aYYFecEpnLjEBlPqRgtW31D4vPnyIuZyuEV7GVjo4Tg4trj7uvarwJoGTrfcuLRYEAi07ENURIz1_1kf-8bTxvD1bSnaOcNg4VeDNP9CP584VvyqkI_3fEMsONMEf7/s400/119316.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5716461324439570786" /></a>
<br/><br/>
அன்று பிடித்த இலங்கை அணி இன்றும் பிடிக்கிறது; இன்று அணிகளை ரசிப்பதை தாண்டி கிறிக்கட்டை ரசிக்கலாம் என்று நினைத்தாலும் இலங்கை மீதான ஈடுபாடு குறையவில்லை!!! நான் இலங்கை கிரிக்கெட் அணியை ரசிப்பதால் இலங்கை விசுவாசி என்றால்; நான் உதைபந்தாட்டத்தில் ஜெர்மனியையும்; மோட்டார் கார் பந்தயத்தில் மைக்கல் ஷூமேக்கரையும் ரசிப்பதால் நான் ஜெர்மனி விசுவாசி!!! டெனிஸில் ரோஜர் பெடரரை ரசிப்பதால் சுவிட்சலாந்து விசுவாசி!!! மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வாலன்சீனோ ரோஸியை ரசிப்பதால் இத்தாலிய விசுவாசி!!!! கோல்பில் டைகர் வூட்சை ரசிப்பதால் அமெரிக்க விசுவாசி!!!
<br/><br/>
இல்லப்பா இலங்கை கிறிக்கட் அணிக்கு நீங்க ரசிகர்களாக இருப்பதால் நீங்கள் எல்லோரும் தமிழ் இன துரோகிகள்தான், நீங்க சிங்களவனுக்கு கொடி பிடிக்கிறவங்கதான், உங்களுக்கு இனப்பற்றே இல்லை... இப்படி என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கோங்க; எங்களுக்கு கவலையில்லை!!! ஏன்னா எங்களுக்கு நாங்க யார்? நாங்க செய்யிறது சரியா? தவறா? என்கின்றதை சிந்தித்து பாக்கிற அளவுக்கு ஏதோ கொஞ்சமாச்சும் புத்தி இருக்கென்று நம்புகிறேன்; அதுவும் இல்லை என்று சொல்கிறீர்களா பரவாயில்லை, சொல்லீட்டு போங்க; உங்களுக்கு அப்படி சொல்வதில் ஒரு அற்ப சுகம் கிடைக்குமென்றால் அதை எதுக்கு நாம் தடுக்கணும்!!!! ஆனால் ஒன்று இதனால் நீங்கள் தமிழ் இன உணர்வாளர்கள் என்றோ, நாம் தமிழ் உணர்வில்லாதவர்கள் என்றோ நீங்க நினைத்தால் <span style="font-weight:bold;">VERY SORRY....
</span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-19086037817684763952012-02-09T00:23:00.004+05:302023-02-01T01:09:34.337+05:30யுவராஜ் சிங் - The Fighter <br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCom58Y2j_EL9f9wo2YIMl0-kNXvPlG2t-kSFTIgn6OeaiOjz2R_vvVSkKJcOr8zv1NrmKt_19u01uR8RjIPSZmgwEWvDj7WgXvpbULuKIVWUHyYXGmjwoFCD3enTJJNWeGkbMa0W2OIv9/s1600/YUVRAJ-SINGH-WALLPAPER-10.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCom58Y2j_EL9f9wo2YIMl0-kNXvPlG2t-kSFTIgn6OeaiOjz2R_vvVSkKJcOr8zv1NrmKt_19u01uR8RjIPSZmgwEWvDj7WgXvpbULuKIVWUHyYXGmjwoFCD3enTJJNWeGkbMa0W2OIv9/s400/YUVRAJ-SINGH-WALLPAPER-10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706840647158846290" /></a>
<br/><br/>
ஒருவரை எமக்கு பிடிக்காமல் இருக்கும்போது அவர் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள், கருத்துக்கள்தான் எம்மிடமிருந்து வெளிப்படும்; அதே நபருக்கு எதிர்மறையான விடயம் ஒன்று நிகழ்ந்து பொதுப் பார்வையில் இரக்கம் உண்டாகும் போதுதான் அவர் பற்றிய நேர்மறையான எண்ணம் எமக்குள் உருவாகும். இது சாதாரண மனித இயல்பு!!!
<br/><br/>
அந்த வகையில் இந்தியாவிற்காக யுவராஜ்சிங் ஆடும்போதெல்லாம் அதிகமாக எனக்கு யுவராஜ் சிங்கை பிடித்ததில்லை; காரணம் ஆரம்பத்தில் நான் ஒரு இலங்கை ரசிகன், மற்றும் இந்திய அணியின் எதிரி; அதன் பிற்ப்பாடு நாடுகளை தாண்டி கிரிக்கெட்டை மட்டும் ரசிக்க ஆரம்பித்த காலங்களில் யுவராஜ்சின் மைதான நடத்தைகள் யுவராஜ்மீது அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் யுவராஜ்சின் புற்றுநோய் செய்தி கேட்ட பிற்ப்பாடு மனதில் யுவராஜ் சிங் பற்றிய ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மனதை கனக்கச் செய்கின்றது!! இந்நேரத்தில் யுவராஜ் என்னும் இந்திய கிரிக்கட் ஆளுமை பற்றிய சிறு அலசலை பதிவாக எழுத முயற்ச்சிக்கின்றேன்......
<br/><br/>
<span style="font-weight:bold;">யுவராஜ் சிங் - </span>2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ண போட்டித் தொடரில்த்தான் யுவராஜ் சிங் முதல் முதலாக தன்னை வெளிக்காட்டி கொண்டார். இலங்கையில் இடம்பெற்ற இந்த தொடரில் இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியதற்கு யுவராஜ்சிங்தான் முக்கிய காரணம். ஆஜானுபாகு தோற்றத்தில், இடதுகை துடுப்பாட்ட வீரராக அறிமுகமான யுவராஜ்சிங் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டக்காறராகத்தான் தன்னை வெளிக்காட்டி வந்தார். 19 வயதுக்கு உட்பட்ட அணியில் சிறப்பான வெளிப்பாட்டை காட்டியதன் பலனாக 2000 ஆம் ஆண்டு கென்யாவின் நைரோபியில் இடம்பெற்ற ICC Knock Out தொடரில் கென்யா அணியுடனான போட்டியில் இந்திய தேசிய அணியில் அறிமுகப்படுத்தப்பட்டார்!!!
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCwbIDHugOCh1T8_h3HH0mEE6jb3zxAlt4J-hOdppXHUWI5G2gH3ueRtGgyqhNXuUvISDkwH_yJulHBHF5-OO7QkN5-q1RUExB-HoiNBlS2uOCG95TPB6TgIBjCbGWLmcVK3ker7mGVRbW/s1600/130311.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCwbIDHugOCh1T8_h3HH0mEE6jb3zxAlt4J-hOdppXHUWI5G2gH3ueRtGgyqhNXuUvISDkwH_yJulHBHF5-OO7QkN5-q1RUExB-HoiNBlS2uOCG95TPB6TgIBjCbGWLmcVK3ker7mGVRbW/s400/130311.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706840622099046946" /></a>
<br/><br/>
மேற் சொன்ன அதே போட்டியில் யுவராஜ் சிங்குடன் அறிமுகப் படுத்தப்பட்ட மற்றுமொரு பிரபல இந்திய வீரர் சஹீர் ஹான்; மற்றொருவர் விஜய் டாஹியா. இந்த போட்டியில் சஹீர் ஹான் 3 விக்கட்டுகளை வீழ்த்தி தன்னை வெளிக்காட்டினார்; டாகியா விக்கட் காப்பாளராக 2 பிடிகளை பிடித்திருந்தார்; ஆனால் யுவராஜ்சிற்கு துடுப்பாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, 4 ஓவர்கள் பந்து வீசியும் விக்கட்டும் கிடைக்கவில்லை; மொத்தத்தில் முதல் போட்டி யுவராஜ் சிங்கிற்கு சாதகமாக அமையவில்லை என்றே சொல்லலாம்!!!
<br/><br/>
ஆனால் அடுத்த போட்டியே யுவராஜ்சை "யார் இந்த பையன்?" என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது!!! அன்றைய தேதியில் பலம் மிக்க அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின், கங்குலி, டிராவிட் என இந்தியாவின் முக்கிய 3 விக்கட்டுகளும் 90 ஓட்டங்களுக்குள் சரிந்த நிலையில் களமிறங்கிய யுவராஜ்சிங்; 80 பந்துகளை எதிர்கொண்டு 84 ஓட்டங்களை குவித்து ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி இலக்காக 265 ஓட்டங்களை இந்தியா நிர்ணயிக்க உதவினார். அவுஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டாமல் (245 ஓட்டங்கள்) அந்த தொடரில் இருந்து வெளியேறியது; ஆட்ட நாயகனாக யுவராஜ் தெரிவு செய்யப்பட்டார். தான் துடுப்பெடுத்தாடிய முதல் போட்டியிலேயே அரைச்சதமும், ஆட்ட நாயகன் விருதும் வென்றதுடன் அன்றைய உலக சாம்பியனின் கிண்ணக் கனவையும் பொய்யாக்கியிருந்தார் யுவராஜ் சிங்!
<br/><br/>
அந்த போட்டியின் பின்னர் பல போட்டிகளில் பிரகாசிக்க தவறிய யுவராஜ் அவ்வளவுதானா? என எண்ணிய வேளையில் அன்றைய பலம் மிக்க இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இலங்கையில் வைத்து யுவராஜ் பெற்ற 98* ஓட்டங்கள் மீண்டும் அவர் மீது நம்பிக்கையை ஏற்ப்படுத்தியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பிரகாசிக்காது போனாலும் அப்பப்போ தனது அதிரடியால் அரைச்சதங்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணை புரிந்த யுவராஜ் தனது கன்னி சதத்தை பங்களாதேஷ் அணிக்கு எதிராக பெற்றார். ஆனாலும் அடுத்ததாக சிட்னியில் வைத்து பெறப்பட்ட சதம்தான் யுவராஜ்சின் சதங்களிலேயே சிறப்பான சதமாக அமைந்தது!!! அவுஸ்திரேலியர்களுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் வைத்து 122 பந்துகளில் யுவராஜ் பெற்ற 139 ஓட்டங்கள்தான் இன்றுவரை யுவராஜ்சின் ஒருநாள் போட்டிகளின் அதிக பட்ச ஓட்டங்கள்.
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnwFQp_L-PaOtWtT8xjjtJA2w5SDEvfafqAqqk9uaTlGg1GejeLGgj_WTdQijcX359VgRZxCHG_dj7VzlJFO6lqAD5bXvxBwXvFuGB_LCSUei7rletLRpKYNiDta-BPiFKgaC6U3YYO8OY/s1600/Yuvraj-Singh-with-the-ICC-World-Cup-2011-Player-of-the-Series-Trophy.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 390px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnwFQp_L-PaOtWtT8xjjtJA2w5SDEvfafqAqqk9uaTlGg1GejeLGgj_WTdQijcX359VgRZxCHG_dj7VzlJFO6lqAD5bXvxBwXvFuGB_LCSUei7rletLRpKYNiDta-BPiFKgaC6U3YYO8OY/s400/Yuvraj-Singh-with-the-ICC-World-Cup-2011-Player-of-the-Series-Trophy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706840662891050786" /></a>
<br/><br/>
இந்த இரண்டு சதங்களும் பெறப்படுவதற்கு முன்னர் இங்கிலாந்தில் இந்திய அணி ஆடிய முக்கோணத் தொடரின் இறுதி ஆட்டத்தில்; 325 என்னும் கடினமான இலக்கை, 146 ஓட்டங்களுக்குள் மூத்த வீரர்கள் 5 பேரும் சுருண்ட நிலையில் முஹமட் கைப் உடன் இணைந்து எட்டுவதற்கு உதவினார் (கைப்தான் யுவியை விட இந்த போட்டியின் சிறப்பாட்டகாரர்) இறுதிப் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துகொண்டிருந்த இந்திய அணி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்ற இறுதிப் போட்டி இதுதான்!!!
<br/><br/>
இந்த போட்டியின் பின்னர் இந்திய கிரிக்கட்டின் தவிர்க்க முடியாத வீரராக யுவராஜ் சிங்கிற் கென்றொரு நிலையான இடம் இந்திய அணியிலே ஒதுக்கப்பட்டது !!! அன்று முதல் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கத்தில் யுவராஜ்சின் ஆதிக்கமும் சேர்ந்தே வெளிப்பட ஆரம்பித்தது. யுவராஜ்சின் சிறப்பான ஆட்டத்தால் 2008 ஆம் ஆண்டில் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு உபதலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த காலப்பகுதியில் ஓட்டங்களை குவிக்க முடியாமல் சிரமப்பட்டதால் உபதலைவர் பதவியை இழக்கவேண்டி வந்தது!!
<br/><br/>
அதன் பின்னர் மீண்டும் சாதாரண வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ்சிங் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டித் தொடரில் 4 முறை ஆட்ட நாயகன் விருதையும், தொடரின் நாயகன் விருதையும் வென்று இந்திய அணியின் உலகக்கிண்ண வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார். குறிப்பாக தொடர்ந்து 3 தடவைகள் தொடர்ச்சியாக உலகச் சாம்பியன் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியாவை கால் இறுதிப் போட்டியில் தோற்கடிக்க முக்கிய காரணியாக யுவராஜ் விளங்கியிருந்தார். யுவராஜ் பெற்ற இரண்டு விக்கட்டுகள் மற்றும் ஆட்டமிழக்காமல் பெற்ற 57 ஓட்டங்கள் அந்த போட்டியை இந்தியா வசம் பெற்றுக் கொடுத்ததோடு அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்தது. ஆஸ்திரேலியர்களுக்கு சச்சினுக்கு அடுத்து அதிக குடைச்சல் கொடுத்த இந்தியர் யுவராஜ்தான்!!!
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB-fiubzcn7Ne7KYToyH_wPEXej5vppWpWpytAbhqBF-TeaEQPH_GcQEr-Mb-OEIFaakFcTh7xTLlrN-3HZ3cVl1UTSF_1zwzmWquSxjcDEdLPPhVuQkBq_ShNhadr9vo-h-oNFh0KyvpM/s1600/135486.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 386px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB-fiubzcn7Ne7KYToyH_wPEXej5vppWpWpytAbhqBF-TeaEQPH_GcQEr-Mb-OEIFaakFcTh7xTLlrN-3HZ3cVl1UTSF_1zwzmWquSxjcDEdLPPhVuQkBq_ShNhadr9vo-h-oNFh0KyvpM/s400/135486.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706840628736276082" /></a>
<br/><br/>
ஒருநாள் போட்டிகளில் 274 போட்டிகளில், 37.62 சராசரியில், 87.58 Strike Rate இல், 13 சதங்கள், 49 அரைச் சதங்களுடன், 8051 ஓட்டங்களை குவித்துள்ள யுவராஜ் சிங்; ஒரு 5 விக்கட் அடங்கலாக 109 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்; சிறந்த களத்தடுப்பு வீரரான யுவராஜ் 84 பிடிகளையும் பிடித்துள்ளார். 25 தடவைகள் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ள யுவராஜ் சிங் 7 தடவைகள் தொடரின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடுவரிசை வீரராக ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இது ஒரு மிகச் சிறப்பான பெறுதி என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்பலாம்!!!!
<br/><br/>
<span style="font-weight:bold;">டெஸ்ட் போட்டிகள் - </span> ஒருநாள் போட்டிகளைபோல யுவராஜ் சிங்கால் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பிரகாசிக்க முடியவில்லை!! 2003 வரை டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பே யுவராஜ்சிற்க்கு கிடைக்கவில்லை. காரணம் 3, 4, 5, 6 ஆம் இலக்கங்களுக்கு டிராவிட், சச்சின், கங்குலி, லக்ஸ்மன் என நான்கு சுவர்களும் ஸ்திரமாகவும், நிலையாகவும் இருந்தமைதான். 2003 ஆம் ஆண்டில் கங்குலிக்கு பதிலாக மொகாலியில் நியூசிலாந்து அணியுடன் தனது கன்னி டெஸ்ட் போட்டியை விளையாடிய யுவராஜ்சிங் 2008 ஆம் ஆண்டு கங்குலி ஓய்வு பெறும்வரை அப்பப்போதான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
<br/><br/>
2008 க்கு பின்னரும் யுவராஜ் தொடர்ச்சியாக ஆட முடியாத அளவிற்கு அவருக்கு உபாதை, Out of Form, புதிய திறமைகளின் வரவு என்பன ஆதிக்கம் செலுத்தின. தொடர்ச்சியாக சில போட்டிகளில் சாதித்திருந்தால் யுவராஜ்சிர்க்கு Test அணியில் நிரந்த இடம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் அவரது Game Style க்கு டெஸ்ட் போட்டிகள் சரியாக அமையுமா என்பது கேள்விக்குறிதான்!!!! அது தவிர அடிக்கடி உபாதைக்குள்ளாகும் யுவராஜ் சிங் டெஸ்ட் போட்டிகளை தவிர்ப்பதுதான் சிறப்பான முடிவும்கூட!! டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 37 போட்டிகளில், 34.80 சராசரியில், 3 சதங்கள், 10௦ அரைச்சதங்களுடன் 1775 ஓட்டங்களை குவித்துள்ள யுவராஜ் சிங் தான் பெற்ற மூன்று சதங்களையும் இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக பெற்றது சிறப்பு.
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2oGR1_w8O1wE80yE5bU5VMl9lOmc5jynU9Q3nAopLfLGff1u2Grqj1SPY5xkkE2JMhkVjs9d2NpgnFS4ZNG35DMUyi95BSiiThKu4CeNwBe2lkjbOlVQp9CctX6lbeBIGLfGnaR3xyc-R/s1600/daew.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 357px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2oGR1_w8O1wE80yE5bU5VMl9lOmc5jynU9Q3nAopLfLGff1u2Grqj1SPY5xkkE2JMhkVjs9d2NpgnFS4ZNG35DMUyi95BSiiThKu4CeNwBe2lkjbOlVQp9CctX6lbeBIGLfGnaR3xyc-R/s400/daew.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706842710826532754" /></a>
<br/>
<div style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 0, 0);"><span style="font-size:85%;"><span>மறக்க </span><span>முடியாத</span><span> ஓவர்</span> </span></div>
<br/><br/>
<span style="font-weight:bold;">T/20 போட்டிகள் - </span>முதலாவது T/20 உலகக்கிண்ணத்தை இந்தியா வெல்வதற்கு யுவராஜ் சிங்கின் துடுப்பாட்டம் மிக்கபெரும் பக்கபலமாக அமைந்தது என்றால் மிகையில்லை. அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 30 பந்துகளில் தலா 5 சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடங்கலாக யுவராஜ் பெற்ற 70 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவை முதல் T/20 போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றியது ( ICC போட்டித்தொடரில் 3 தடவைகள் யுவராஜ் சிங் அவுஸ்திரேலியாவை வெளியேற்ற காரணமாக அமைந்துள்ளார்)
<br/><br/>
இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 58 ஓட்டங்களை பொழிந்ததை அந்த போட்டியை பார்த்த யாராலும் எப்போதும் மறக்க முடியாது!!! அதிலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவட் புரோட் தன் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை யுவராஜ்சை மறக்கவே மாட்டார் :-) போட்டியின் 19 ஆவது ஓவரில் புரோட் வீசிய 6 பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றிய யுவராஜ் ஆறாவது சிக்ஸரை அடித்த போது; ஒரு ஓவரில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டமான 36 ஓட்டங்களையும், குறைந்த பந்துகளில் (12 பந்துகள்) பெறப்பட்ட அரைச்சதத்தையும் உலக சாதனையாக தனது பெயரில் பதிவு செய்தார். 23 T/20 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் 31.5 சராசரியில் 151.6 ஸ்ரைக் ரேட்டில் 5 அரைச்சதங்கள் அடங்கலாக 567 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
<br/><br/>
<span style="font-weight:bold;">அணித்தலைமை - </span>யுவராஜ் சிங்கிற்கு அணித்தலைமை சரியாக இருக்குமா என்பது சந்தேகம்தான்!!! இந்திய அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் சந்தர்ப்பம் அமையாவிட்டாலும் IPL போட்டிகளில் பஞ்சாப், பூனே அணிகளை தலைமை ஏற்று வழிநடத்தும் பொறுப்பு யுவராஜ்சிற்கு கிடைக்கப்பெற்றது; ஒரு துடுப்பாட்ட வீரராக பிரகாசித்த யுவராஜ் அணித்தலைவராக சிறப்பாக செயற்ப்படவில்லை என்பதுதான் உண்மை!! இந்திய அணிக்கு யுவராஜ் தலைமை ஏற்றால் அவர் ஒரு மோசமான அணித் தலைவராகத்தான் கணிக்கப்படுவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து! T/20 போட்டிக்களில் பிரகாசித்ததுபோல யுவராஜ் IPL போட்டிகளில் சிறப்பாக பிரகாசிக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை!!
<br/><br/>
வலுவான புஜவலிமை மிக்க யுவராஜ் பந்தினை வேகமாக எல்லைக்கோட்டுக்கு அப்பால் விரட்டி அடிக்கும் ஆற்றல் உள்ளவர்; அதே நேரம் சிறப்பாக பந்தினை கணித்து (Timing & Placement) நேர்த்தியாக அடிக்கும் ஆற்றலும் உள்ளவர். Deep Mid wicket - Long on இடையிலான Gap, Deep Extra Cover - Long Off இடையிலான Gap என களத்தடுப்பு வகுக்கப்படாத பகுதிகளுக்கு பந்தினை On Drive, Off Drive மூலமும் Hard Hitting மூலமும் ஓட்டங்களை குவிப்பதில் யுவராஜ் கில்லாடி. Full Length Delivery களை Half Volley மூலம் சிக்சர்களாக மாற்றியமைக்கும் தந்திரம் யுவராஜ்சிற்கு தெரியும். துடுப்பாட வந்த முதல் சில ஓவர்களுக்கு சுழல் பந்துக்கு கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக அடித்தாடக் கூடியவர் யுவராஜ்.
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-bQAYq2XHbELXjuRQIV5CpS5ROjBKoMkoqIbE2qSt66mgYx5LzayPdDZVT_zzXyyDlGFRbHLqjWcBx7Vz22tsG0t5o8lKEvYwyOnOG5r6kVDWrET7QpDUfvKoQcL_XObgHO2m0qYYRQd-/s1600/yuvraj-singh-29a.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-bQAYq2XHbELXjuRQIV5CpS5ROjBKoMkoqIbE2qSt66mgYx5LzayPdDZVT_zzXyyDlGFRbHLqjWcBx7Vz22tsG0t5o8lKEvYwyOnOG5r6kVDWrET7QpDUfvKoQcL_XObgHO2m0qYYRQd-/s400/yuvraj-singh-29a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706840641775815906" /></a>
<br/><br/>
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை யுவராஜ் 20 ஓவர்கள் மைதானத்தில் துடுப்பெடுத்தாடினால் எதிரணி போட்டியை மறக்கவேண்டிய நிலைதான் ஏற்ப்படும்!! பந்து வீச்சை பொறுத்தவரை யுவராஜ் சிறப்பான பகுதிநேர பந்து வீச்சாளர் என தன்னை பல தடவைகள் நிரூபித்திருக்கிறார். Turning, slow pitch களில் யுவராஜ் மிக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். களத்தடுப்பை பொறுத்தவரை யுவராஜ் Short Fielding இல் சிறப்பானவர்; Point, Backward Point, Cover, Cover Point, Extra Cover Position களில் யுவராஜ் மிகச்சிறப்பான களத்தடுப்பாளர்; ஓட்டங்களை கட்டுப்படுத்தியும், கடினமான பிடிகளை பிடித்தும், சிறப்பான Run out மூலமும் பல தடவைகள் இந்தியாவின் வெற்றிக்கு யுவராஜ் தன் களத்தடுப்பால் வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறார்!!!!
<br/><br/>
ஏனோ இப்போதெல்லாம் யுவராஜ் இல்லாத இந்திய அணி(ODI) ஒரு முழுமையான அணியாக தெரிவதில்லை; உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் இந்தியாவிற்காக யுவராஜ் ஒருநாள் போட்டிகளில் இன்னமும் ஆடவில்லை; இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆடினாலும் உபாதை காரணமாக ஒருநாள் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பம் அமையவில்லை!!! தற்போது இடம்பெறும் முக்கோணத் தொடரிலும் உபாதை காரணமாக யுவராஜ் பெயர் இடம்பெறவில்லை; இந்நிலையில்த்தான் யுவராஜ் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியது!!!
<br/><br/>
புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில்த்தான் உள்ளதென்பதால் குணமாக்க முடியும் என மருத்துவர்கள் சொன்னதால் பயப்படும்படி இல்லை என்றாலும் மனதில் ஏதோ கனம் இல்லாமல் இல்லை!! மேலே யுவராஜ் பற்றிய தரவுகள் அனைத்தும் யுவராஜ் கிரிக்கட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக எண்ணி எழுதப்படவில்லை; ஒரு சிறு ஞாபகப்படுத்தலுக்காக மட்டுமே; கூடிய சீக்கிரமே யுவராஜ் கிரிக்கட்டுக்கு தற்காலிகமாக போட்டுள்ள முற்றுப்புள்ளியை 'கம'வாக மாற்றி அடுத்த இன்னிங்க்சை ஆரம்பிப்பார். யுவராஜ் ஒரு Fighter, நிச்சயமாக அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என்கின்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. மீண்டும் 12 ஆம் இலக்க இந்திய jersey யில் யுவராஜ்சை காண ஆவலுடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களில் நானும் ஒருவனாக காத்திருக்கிறேன்.......
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">குறிப்பு</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"> :- </span><span style="font-weight:bold;">கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நோயினால் பீடிக்கப்பட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளக்கிய இரு பிரபலங்கள் - ரஜினிகாந்த் மற்றும் யுவராஜ்சிங் # இருவரும் பிறந்தது மார்கழி 12 !!! ஒரு Fighter மீண்டு வந்துள்ளார், மற்றைய Fighter ம் நிச்சயம் மீண்டு வருவார்.......
</span>
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 51, 51);">இது யுவராஜ் வழங்கியுள்ள நம்பிக்கை தரும் செய்தி</span><span style="font-weight: bold; color: rgb(0, 51, 51);">-</span> <span style="font-weight:bold;">"I am a fighter and I will return stronger than ever. Initially, I was angry and confused. I was even repentant and kept thinking I could have done some things in life differently. However, I have a counsellor here who has helped me get over the initial shock of learning that I am suffering from cancer. I have come to terms with it now,"</span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-67588873650171715112012-01-18T23:07:00.010+05:302023-02-01T01:09:44.640+05:30"விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துக்கோ" வாழ்க்கைக்கு சரிவருமா? <br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPSTCJlAQI6DSC5qzUTwEKnG1A8r_QtZtUcjxDM9Vof3-wlj1zibeg_pMegXRROdFmxOfNOO-Eo5nzAiIXDSdOSIOqQeRmx1LxnUSkMEXBJfKsuneEVNLxSWFtLwESXb0oP38oILqHfZN3/s1600/alphabet.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 325px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPSTCJlAQI6DSC5qzUTwEKnG1A8r_QtZtUcjxDM9Vof3-wlj1zibeg_pMegXRROdFmxOfNOO-Eo5nzAiIXDSdOSIOqQeRmx1LxnUSkMEXBJfKsuneEVNLxSWFtLwESXb0oP38oILqHfZN3/s400/alphabet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699052778250687026" /></a>
<br/><br/>
இங்கிலீஸ்காரன், Taare Zameen Par, 3 Idiots, நண்பன் திரைப்படங்களில் சொல்லப்பட்ட; இன்றைய இளைஞர்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துத்தான் "விரும்பிய துறையை தேர்ந்தேடுத்துக்கோ". பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எந்ததுறை பிடிக்கிறதோ!! அதே துறையில் அவர்களது திறமையை வளர்க்க முன்வரவேண்டும் என்கின்றதுதான் இதன் சாரம். திரைப்படங்கள் மட்டுமல்ல சமூகத்திலும் இந்த விடயம் சம்பந்தமான பேச்சுக்கள், ஆலோசனைகள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
<br/><br/>
கேட்ப்பதற்க்கும், ரசிப்பதற்கும் இந்த விடயம் நன்றாகத்தான் இருக்கின்றது; ஆனால் நடைமுறை வாழ்வில் சாத்தியமா என்பதில்த்தான் எனக்கு நிறைய சந்தேகங்கள்!!! மேற்குறிப்பிட்ட திரைப்படங்களை குறைசொல்வதோ, அந்த திரைப்படங்களில் சொல்லப்பட்ட மையக்கருவை குறை சொல்வதோ என் நோக்கமல்ல; அந்த கருத்தில் எனக்கு சில சந்தேகங்களும், உடன்பாடில்லாத நிலையும் உள்ளது; அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு!!!
<br/><br/>
ஒரு இளைஞனுக்கு, யுவதிக்கு அல்லது சிறுவர்களுக்கு தங்களுக்கு பிடித்த துறை எது என்பது எந்த வயதில் புலப்படும்? 15, 16 வயதுவரை பெரும்பாலும் அனைவருக்கும் கல்வி என்பது ஒன்றுதான். இந்த வயதுக்குட்ப்பட்ட காலப்பகுதியில் கல்வி தவிர்த்து வேறு துறைகளில் தமது எதிர்கால துறையை தேர்ந்தெடுக்க சிந்திப்பவர்கள் விளையாட்டு, கலை, தொழில்நுட்ப்பம், வியாபாரம் மற்றும் பரம்பரை சார்ந்த தொழில் போன்றவற்றில்த்தான் பெரும்பாலும் ஈடுபாட்டுடன் காணப்படுவார்கள்.
<br/><br/>
இதில் தொழில்நுட்ப்பம் என்று குறிப்பிடுவது மின்சாரம், மோட்டார்கள், வாகனங்கள் போன்றவற்றினை கையாளும் மற்றும் திருத்தம் திறன் படைத்தவர்களைத்தான். இவர்களில் தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் பரம்பரை சார்ந்த தொழில்களில் ஈடுபாடு உடையவர்களுக்கு தாம் விரும்பினால் தமக்கு விருப்பமான துறையை 15,16 வயதுகளில் தேர்ந்தெடுப்பதில் பெரியளவில் பாதிப்புக்கள் இல்லை!!! இவர்களில் அதிகமானவர்கள் வாழ்க்கையில் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்!!! அனாலும் கல்வியை இடை நிறுத்தியதற்கு எப்போதாவது வருந்தவும் செய்வார்கள்!!
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidD0WeS7LZ8oSlK1lkUFt6joJkuJ2uDkawCus_yS9o9cvyIhDSKS2TzuZkcFZv7fwjQtVRUe6qZyK2eGx1pWNzljyafC9cbkurJ5TOafBh1xNJahzciMdrAz9a9U5BtEbB4afOz6aoLMfl/s1600/actors.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 318px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidD0WeS7LZ8oSlK1lkUFt6joJkuJ2uDkawCus_yS9o9cvyIhDSKS2TzuZkcFZv7fwjQtVRUe6qZyK2eGx1pWNzljyafC9cbkurJ5TOafBh1xNJahzciMdrAz9a9U5BtEbB4afOz6aoLMfl/s400/actors.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699052774709393170" /></a>
<br/><br/>
அதே நேரம் இந்த வயதில் விளையாட்டுத்துறை மற்றும் கலைத்துறையில் ஈடுபாடுடையவர்கள் கல்வியை நிறுத்திவிட்டு மேற்ப்படி துறைகளை தேர்ந்தெடுத்து தமது எதிர்காலத்தை நிர்ணயிப்பது சரியான முடிவா என்றால்; என்னை பொறுத்தவரை இல்லையென்றே தோன்றுகிறது!!! சச்சின் டெண்டுல்க்கர், லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹுமான் எல்லோருமே சாதனையாளர்கள்தான், மறுக்கவில்லை; அதே நேரம் இதுதான் எனது கேரியர் என்று படிப்பை நிறுத்திவிட்டு விளையாட்டிலும் சினிமாவிலும் வாழ்வை தேடி காணாமல்போன பல ஏ.ஆர்.ரஹுமான்களும், சச்சின் டெண்டுல்க்கர்களும் எமது கண்ணுக்கு தெரிவதில்லை; எண்ணிக்கையில் மிக மிக அதிகமாய்!!! "வெற்றிகளுக்கு அதிக பெற்றோர்கள், தோல்விகள் அநாதை" என்கின்ற பழமொழியை மெய்ப்பிப்பதுபோல நாம் வென்றவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்கின்றோம், தோற்றவர்களை பொருட்படுத்துவதில்லை!!
<br/><br/>
நீங்கள் கேட்க்கலாம் உங்களுக்கு நேர்மறையான எண்ணம் இல்லையா என்று; நேர்மறையாக சிந்தித்தால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடியாது, எதையும் நடைமுறையில் சிந்திப்பது அவசியம்!!! கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் இன்னும் சில கவிஞர்களும் எமக்கு வெற்றியாளர்கள்; அதேநேரம் கவிதையே வாழ்க்கை என்று வாய்ப்பில்லாமல் திரும்பியவர்கள் ஏராளம்!!! கவிதை மட்டுமல்ல பாடகன், இயக்குனர், போட்டோகிராபி, டான்ஸ் என எமக்கு தெரிந்த வெற்றியாளர்களைவிட தோல்வியாளர்களே அதிகம். அப்படியானால் விளையாட்டு, கலை துறைகளில் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடாதா? என நீங்கள கேட்க்கலாம்; நிச்சயமாக உங்களுக்கு பிடித்த துறையில் நீங்கள் முயற்சி செய்யலாம், கூடவே கல்வியுடன்!!!
<br/><br/>
அதாவது பிடித்த துறையில் முயற்சி செய்யும் அதே நேரம் கல்வியையும் நிச்சயம் சம அளவி முக்கியத்துவப் படுத்தல் வேண்டும்; குறிப்பிட்ட துறையில் முதற்படி வைக்கும் வரையாவது குறைந்தது கல்வியை தொடர வேண்டும். சச்சினை முன்மாதிரியாக பார்ப்பவர்கள்; சச்சினைவிட டிராவிட்டை முன்மாதிரியாக பார்ப்பது சிறந்தது. டிராவிட் ஒரு பட்டதாரி, ஒருவேளை கிரிக்கட் அவருக்கு கைகொடுக்காவிட்டால் அவருக்கு கேரியருக்கு அவருடைய டிகிரி உதவியிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகராகியிருக்காவிட்டால் அவர் ஒரு பொறியியலாளராக வேலை பார்த்திருப்பார். என்னதான் விடாது முயற்ச்சித்தாலும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியளிப்பதில்லை; ஒரு துறையில் கடின முயற்சி வெற்றியளிக்காதபோது கைகளில் ஒரு டிகிரி இருந்தால்; கல்வி துணை இருக்கின்றது என்கின்ற நம்பிக்கையாவது மீதமிருக்கும்!!!!
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOK0uRO_TBxXryoIB9E5_DYdIDXjr0uw1GXX6OgMAJV53ow1exRyGOnc9iJbOG7JtcmWL0IkzlSAaxQT83DAZiIsT5HY-4m5m5y5T8DPvRLZePozK3JzcnV6855Hx-jlK80E9KRFo5Pvu6/s1600/edulaw.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 293px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOK0uRO_TBxXryoIB9E5_DYdIDXjr0uw1GXX6OgMAJV53ow1exRyGOnc9iJbOG7JtcmWL0IkzlSAaxQT83DAZiIsT5HY-4m5m5y5T8DPvRLZePozK3JzcnV6855Hx-jlK80E9KRFo5Pvu6/s400/edulaw.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699052786370454562" /></a>
<br/><br/>
இங்கே கல்வி தவிர்த்து வேறொரு துறை பிடிக்கின்றதென்றால் அது அநேகருக்கு பொழுதுபோக்கு சார்ந்தோ, கல்விமீதிருக்கும் பிடிப்பின்மை சார்ந்தோதான் பிடிக்க காரணமாக அமைகின்றது. இப்படியானவர்கள் குறிப்பிட்ட துறைகளில் இலக்கை அடைவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!! காரணம் இந்த துறைகளில் போட்டி மிகமிக அதிகம். இப்படி எதையும் சாராமல் உண்மையான திறமையுடன், கடின உழைப்பை கொடுத்தவர்களுக்கே இந்த துறைகளில் இலக்கை அடைவதற்கு சவால்கள் அதிகம்!! இந்த துறைகளில் முயற்ச்சிப்பவர்கள் மேலே சொன்னதுபோல கையில் துணைக்கு கல்வியாலான தகமையை வைத்திருத்தல் அவசியம்!!!
<br/><br/>
சரி இப்போது கல்வி சார்ந்த துறைகளிலேயே பிடித்ததை தேர்ந்தெடுப்பதை பற்றி ஆராய்வோம்; 16 வயதில் கிட்டத்தட்ட எமக்கு எந்த துறை சரிவரும் என்பது ஓரளவுக்கு எமக்கு தெரிந்திருக்கும். கணிதமா, விஞ்ஞானமா, வணிகமா, கலையா, தொழில் நுட்பமா தங்களுக்கு வரும் என்பது பலருக்கும் இந்த வயதில் தெரிந்திருக்கும். ஆனாலும் சிறுவயது கனவு ஒன்று சமூகத்தால், பெற்றோரால் விதைக்கப்பட்டிருக்கும்; இதனால் தனக்கு விஞ்ஞானம் சரிவராது என்று தெரிந்தும், டாக்டராகும் விருப்பத்தில் கடும் முயற்சி எடுத்தும்கூட தோற்றுப்போன பலர் இருக்கின்றார்கள்!!! அதே நேரம் நண்பன் படிக்கின்றான் என்பதற்காக தனக்கு சரிவராத துறையை விரும்பி தேர்ந்தெடுத்தவர்களும் இருக்கின்றார்கள்; அதே நேரம் பெற்றோரால் பலவந்தமாக ஒரு துறையில் தள்ளி விடப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் கடந்து சரியான முடிவை எடுப்பவர்களும் இருக்கின்றார்கள், எண்ணிக்கையில் குறைவாய்!!!
<br/><br/>
பெற்றோர்கள் பலர் தங்கள் விருப்பத்தை திணிக்கின்றார்கள் (சில பெற்றோர் பிள்ளைகளை புரிந்து சரியான முடிவை எடுப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்); மாணவர்கள் பலருக்கோ சொந்தமாக, சரியான முடிவெடுக்கும் வயதும் அனுபவமும் இல்லை; அப்படியானால் எப்படி துறையை சரிவர தேர்ந்தெடுப்பது? இந்த விடயத்தை சரியாக தீர்மானிப்பதற்கு நாடவேண்டிய முக்கிய நபர்கள் ஆசிரியர்கள். ஒரு மாணவனின் பிளஸ், மைனஸ் நன்கறிந்தவர்கள் அவர்கள்தான். மாணவனின் விருப்புக்கு அமைவான துறையை அவனால் தொடரமுடியுமா என்பதை ஆசிரியர் துணைக்கொண்டு அறிந்து, ஆமென்றால் அந்த துறையிலும், அந்த துறை சரியாக வராதென்றால் மாற்றுத் துறையையும் (மாணவனுக்கு புரியும்படி , விரும்பும்படி எடுத்துக் கூறி) தேர்ந்தெடுத்து கொடுப்பது பெற்றோர்களின் கடமை. அதாவது பிடித்த துறையை மாணவன் தேர்ந்தெடுப்பதிலும் சரியான துறையை தேர்ந்தெடுப்பதுதான் சால சிறந்தது!!!!
<br/><br/>
சிலருக்கு குறிப்பிட்ட வயதில் படிப்பு சுத்தமாக எடுபடவில்லை என்றால் அவர்களை மேலும் படிக்கத் தூண்டுவதில் பயனேதுமில்லை, காலமும், பணமும்தான் விரயம்!!! இவர்களுக்கு தொழில் முயற்சி ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இவர்களில் அதிகமானவர்களுக்கு தமது எதிர்காலம் பற்றிய எந்த திட்டமும் இருக்காது, பணம் படைத்த குடும்பத்தை சார்ந்த இந்த வகையினர் சொந்த தொழில் அல்லது வெளிநாடு சென்று பிழைத்துக் கொள்வார்கள்; பணமில்லாமல் இந்த வகையில் சிக்கிக்கொள்ளும் பல இளைஞர்கள் மற்றும் யுவதிகள்தான் பாவம், பல முதலாளிகளுக்காக தம் வாழ்வை தொலைத்து தினமும் 10, 12 மணித்தியாலங்களுக்குமேல் குறைந்த சம்பளத்தில் அடிமாடுகள்போல உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!!!! இவர்களுக்கு என்ன வழி என்பதுதான் புரியவில்லை!!!!!
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKl8KO8rfeuiiwmxpwJsJ0oO_CnKsdQG7qkCk9x2ejvAEozHwsNdgHx80dsHn1Nw6Zv0uMMJ5FMscavEcPyBc_n73-9iw4POBtYjd3qnSa6GvNqEcowy0pHzwotcDhfjS_Q8K3VYLv_g1y/s1600/ist2_2812437-track-and-field-silhouette-collection.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 380px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKl8KO8rfeuiiwmxpwJsJ0oO_CnKsdQG7qkCk9x2ejvAEozHwsNdgHx80dsHn1Nw6Zv0uMMJ5FMscavEcPyBc_n73-9iw4POBtYjd3qnSa6GvNqEcowy0pHzwotcDhfjS_Q8K3VYLv_g1y/s400/ist2_2812437-track-and-field-silhouette-collection.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699052768239453618" /></a>
<br/><br/>
அடுத்து சிலருக்கு பிடித்த துறை என்பது அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்; சிலருக்கு பிடித்த துறை சம்பந்தமாக எந்தவித ஐடியாக்களுமே இல்லாமல் இருக்கும். சிலருக்கு சில துறைமீது அதிக ஈடுபாடிருக்கும், ஆனால் அதை அடைவது, எட்டுவது எட்டாக்கனியாக இருக்கும். எப்படி பார்த்தாலும் பிடித்த துறையினை சரியாக தேர்ந்தெடுத்து, அதில் பயணித்து வெற்றியடைந்தவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக மிக குறைவே!!! அதே நேரம் கிடைத்த துறையை பிடித்த துறையாக மாற்றி அதில் வெற்றி அடைந்தவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிக அதிகம்!!! பிடித்த துறையில் முயற்சி செய்வது தவறல்ல; அது அமையாவிட்டால் வேறு துறைகளிலும் செயற்ப்பட முடியும் என்கின்ற நம்பிக்கையும், தகுதியும் அவசியம், அதற்க்கு கல்வி அவசியம்!
<br/><br/>
இன்றைக்கு படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!!! ஒரு இலக்கை முன் வைத்துத்தான் எல்லோருமே ஒரு துறையில் கற்கின்றார்கள், ஆனால் அந்த துறையிலேயே எதிர்பார்த்த வெற்றியை பெற்று கற்கை சார்ந்த வேலை செய்பவர்களைவிட; இலக்கை அடையாமலும், இலக்கை அடைந்தும் சிலபல காரணங்களுக்காக வேறு துறையில் வேலை செய்பவர்களே அதிகம்!!! இவர்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விடயம் பிடித்த துறை அமையாவிட்டால்கூட பரவாயில்லை; பிடிக்காத துறையை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது!!!! அது வாழ்வின் நின்மதியை குலைத்துவிடும்!!!!
<br/><br/>
"பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக்கோ" என்பதிலும் பார்க்க; "உனக்கு தகுதியான(Capacity) சரியான துறையை தேர்ந்தெடுத்துகோ; இல்லையா கிடைத்த துறையை பிடித்த துறையாக மாற்றிக்கோ; முடிந்தவரை பிடிக்காத துறையை தவிர்க்கப்பார்" என்பதித்தான் எனக்கு உடன்பாடு!!!
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span>குறிப்பு</span> <span style="font-size:180%;">1</span></span> <span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" >-</span> பதிவிலே கல்வி முக்கியம் என்று பல தடவை குறிப்பிட காரணம்; இன்றைய வாழ்க்கை கல்வியை பின்னியே காணப்படுகின்றது. மற்றும் எமது கல்வி முறையில் (Education System) உள்ள தவறுகள், மற்றும் குறைபாடுகள் சம்பந்தமாக குறிப்பட்ட திரைப்படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இங்கு பதிவில் எடுத்துக்கொள்ளப் படவில்லை.
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" >
<span>குறிப்பு</span> <span style="font-size:180%;"><span>2</span></span> -</span> இந்தப்பதிவுக்கான கருபொருளுக்கு சொந்தக்காரர் எனது தம்பிதான்; நாங்க ரெண்டு பெரும் பேசும்போது ஒரு விஷயம் புரிந்தது; இன்றைக்கு வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் இதுதான் எங்கள் துறை என்று ஒரு இலக்கும் நிலையாக இருக்கவே இல்லை; இது எங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தானா இல்லை மத்தவங்களுக்குமா என்கிறதை செக் பண்ணி பாத்ததில; பலபேரு நம்ம லிஸ்டில இருக்கிறாங்க :-)) எனக்கு அப்பப்ப பிடித்த துறை மாறிக்கிட்டே இருந்திருக்கு; நிலையாக எதுவுமே இருந்ததில்லை, அப்படி அப்பப்போ பிடித்த துறைகளில் ஒரு சிலவற்றை நான் முயற்ச்சித்திருந்தால் 99 சதவிகதம் நான் தோல்வியடைந்தவனாகத்தான் இருந்திருப்பேன் என்பது இப்போது எனக்கு புரிகிறது!!!! (முயற்ச்சிக்காமலும் அதே நிலைமைதான்; அது வேறு சொந்தக்கதை :p)
<br/><br/>
<span style="font-weight: bold;">இந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">விடயத்தில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கருத்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வேறுபாடுகள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இருக்கலாம்</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">இது</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சொந்தக்கருத்து</span><span style="font-weight: bold;">; </span><span style="font-weight: bold;">உங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எண்ணம்</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">கருத்துக்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வேறுபடலாம்</span><span style="font-weight: bold;">!!!!! </span><span style="font-weight: bold;">அதை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நீங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தாரளமாக</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பகிரலாம்</span><span style="font-weight: bold;">!!!</span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-3155731699890040572012-01-17T22:34:00.003+05:302023-02-01T01:09:23.229+05:30நண்பன் - எனது பார்வையில் <br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8KrzAPF6g71yUelU4c3x4J1EFWeeUR4nFKcreOHWZFpYwOoNEGlARwF1EZwfQZ4ljisMDUazZ7NqZ39-KWNp1hdp9DLWENOPWCocjAoxlklOH_5UcSJ6tMxWbVIBc0o_a2iASp0gOY7RV/s1600/shankars-3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8KrzAPF6g71yUelU4c3x4J1EFWeeUR4nFKcreOHWZFpYwOoNEGlARwF1EZwfQZ4ljisMDUazZ7NqZ39-KWNp1hdp9DLWENOPWCocjAoxlklOH_5UcSJ6tMxWbVIBc0o_a2iASp0gOY7RV/s400/shankars-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698653522076058066" /></a>
<br/><br/>
பலபேரும் விமர்சனம் (?), தங்கள் பார்வை எல்லாம் எழுதி முடித்து விட்டார்கள்; இந்நிலையில் எனது பார்வையில் நண்பனை எழுதணுமான்னு யோசித்தேன்!! கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னமே எந்தப்படத்துக்குமே நெகட்டிவ் ரிவியூ எழுதிறதில்லை என்கிற முடிவை எடுத்திருப்பதால் இதுவரை எந்த விஜய் படத்திற்கும் எனது பார்வையை எழுதவில்லை :p (காவலன் திரையங்கில் பார்க்கவில்லை) இந்தத்தடவை எழுதாவிட்டால் மீண்டும் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமென்று சொல்ல முடியாது!! :p எனவே இந்த தடவை எழுதலாமென்று எழுதுகிறேன்; முடிந்தவரை பக்கச்சார்பில்லாமல்!!!
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" >
3 <span>இடியட்ஸ்</span> -</span> எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலானவர்களுக்கும் மிகவும் பிடித்த திரைப்படம் என்பதில் யாருக்கும் எதிர்க்கருத்து இருக்காது என்று நம்புகின்றேன்!!!! 3 இடியட்ஸ்சில் ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய அடையாளங்களான பஞ்சு டயலாக்குகள், சண்டைக்காட்சிகள், ஓவர் பில்டப்புகள் எதுவுமே இல்லை; ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே அமீர்கான் கேரக்டருக்குள் ஒருவித 'மாஸ்' இருக்கும் (Taare Zameen Par இல் கூடத்தான்); அது மட்டுமல்லாமல் ஒருவித துரு துருப்பான, அப்பாவித்தனமான செய்கையும் உள்வாங்கப்பட்டிருக்கும்!!! அமீர்க்கான் தவிர்த்து வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர் அது; இன்னும் சொல்லப்போனால் அமீர்க்கானுக்காகவே உருவாக்கப்பட்ட கேரக்டர் அது!!!! அந்த கேரக்டரை தமிழில் சுமப்பதற்கு........
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span>விஜய்</span> - </span>ஆமாங்க; விஜய் தவிர்த்து 'பாரி' கேரக்டருக்கு சத்தியமா எனக்கு வேற சொய்ஸ் தெரியலைங்க; சூர்யா நடிக்கப் போறதா முதல்ல பேசிக்கிட்டாங்க; என்னை பொறுத்தவரைக்கும் சூர்யா இல்லை பாரி கேரக்டருக்கு தெற்க்கில யார் நடித்திருந்தாலும் விஜய் கொடுத்த வெளிப்பாட்டில் பாதிகூட தேறியிருக்குமா என்கிறது சந்தேகம்தான்!!! அதற்காக விஜய் அமீர்க்கானை ஓவர் டேக் செய்துவிட்டதாகவோ ஈடுகொடுத்து நடித்ததாகவோ அர்த்தமல்ல; தன்னாலான அதிகபட்ச்சத்தை நிறைவாக ஓவர் ஆக்ட் செய்யாமல் கொடுத்திருக்கிறார்; மற்றும் விஜய் தன்னை அமீர்க்கானோடு ஒப்பிட வேண்டாம் என்று சொன்ன பிற்ப்பாடு ஒப்பிடுவதும் அழகல்ல; அதற்க்கான தேவையும் இல்லை!!!!! சந்தேகமே இல்லாமல் நண்பனின் முதல்வன் விஜய்தான்.
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgmRK92ATrNXvffj54hHA4YxT4ctn3_OZrZ1gzaUYgxZq0OMmhyphenhyphengraVid6JCx2ibXSMMeOJxc42aZrJhzx0zvxRDo69f8IZvro_GLYgChVgi1nOu5BSaW_nMtOGL-QO48pNFvzCeIPikht/s1600/nanban-tamil-movie-pictures-053.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 260px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgmRK92ATrNXvffj54hHA4YxT4ctn3_OZrZ1gzaUYgxZq0OMmhyphenhyphengraVid6JCx2ibXSMMeOJxc42aZrJhzx0zvxRDo69f8IZvro_GLYgChVgi1nOu5BSaW_nMtOGL-QO48pNFvzCeIPikht/s400/nanban-tamil-movie-pictures-053.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698654374024881058" /></a>
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span>ஜீவா</span> -</span> தனுஷ், சிம்பு கூட எந்த விதத்திலும் சளைக்காமல் போட்டிபோடக்கூடிய இளம் நடிகர்களில் ஜீவா முக்கியமானவர்; ஆகா ஓகோன்னு சொல்றமாதி இல்லையின்னாலும் குடுத்ததை திருப்தியாக ஓவர் ஆக்ட் செய்யாமல் நடித்திருக்கிறார். ஜீவாவிற்கு பலமான அவரது வசன உச்சரிப்பும், முகபாவமும் நண்பனுக்கும் ஜீவாவுக்கும் பலம்!!!
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span>ஸ்ரீகாந்த்</span> -</span> சப்பிறைஸ் பக்கேஜ்; மாதவன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட ஈடாக மாட்டார் என்கின்ற எனதெண்ணத்தை தவிடுபொடியாகியவர்!!! எனக்கு மாதவன் கேரக்டருக்கும் ஸ்ரீகாந்த் கேரக்டருக்கும் பெரிதாக வேறுபாடு தெரியல!!!! பார்ப்பதற்கு மாதவனைவிட பிரெஷாக வேறு இருக்கிறார்!!!! முகபாவங்களில் இயல்பாகவும், விஜய்க்கும் ஜீவாவுக்கும் ஈடுகொடுத்தும் சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இனிமேலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இதுபோன்ற நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்தால் அவருக்கும், தமிழ் சினிமாவிற்கும் நல்லது!!!!
<br/><br/>
<br style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;font-size:130%;" ><span>இலியானா</span> -</span><span style="color: rgb(0, 0, 102);"> </span>இடுப்புக்காக மட்டுமே ஹீரோயினை தேர்ந்தெடுத்த மாதிரி இருக்கு!!! தமிழ் ரசிகர்களுக்கு எப்பவுமே கொஞ்சம் சதை போட்டாத்தான் பிடிக்கும் என்கிறது உண்மைதான்; அதே நேரம் 'சிலிம்மான' சிம்ரனையும் கொண்டாடியவங்க நம்மாளுகதான்:p இலியானாவை சிலிம் என்று கூட சொல்ல முடியாது; அநியாயத்திற்கு எழும்பும் தோலுமாக இருக்கின்றார்!!! எலும்பெல்லாம் திரையை விட்டு வெளிய வருற மாதிரியே இருக்கு; தெலுங்கு ரசிகர்களை புரிஞ்சிக்கவே முடியலைப்பா!!!! அப்புறம் இலியானா நடிப்பு? நண்பனுக்கும் 3 இடியட்சுக்குமான மிகப்பெரும் இடைவெளி!!! அழகான முகம் இருந்தா மட்டும் போதுமா? கொஞ்சூண்டாவது எக்ஸ்பிரஷன்!!! ம்ம்ம்ஹீம்....
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifUdfQq24WgQZRm9hHk_XYqeo1v3KXZ8f8lozAGS80QVhyphenhyphenecoc6IxReVTsk72MotRkCq-BniNwrq9z_hPAGcMTQLziplFSrpALvvDwGEVLxWJLDT3MwkGfqxdcGQmGh_vGUcxmjHPKbH8G/s1600/12.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifUdfQq24WgQZRm9hHk_XYqeo1v3KXZ8f8lozAGS80QVhyphenhyphenecoc6IxReVTsk72MotRkCq-BniNwrq9z_hPAGcMTQLziplFSrpALvvDwGEVLxWJLDT3MwkGfqxdcGQmGh_vGUcxmjHPKbH8G/s400/12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698653504327537346" /></a>
<br/><br/>
<span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span style="font-weight: bold;">சத்யன்</span><span style="font-weight: bold;"> & </span><span style="font-weight: bold;">சத்யராஜ்</span><span style="font-weight: bold;">;</span></span> சத்யன் - கேரக்டரை எல்லோரும் புகழ்ந்து தள்ளீட்டாங்க; நிச்சயம் சத்யனுக்கு இது ஒரு திருப்புமுனைதான்; அருமையான தெரிவு!!! காமடி காட்சிகளில் மட்டுமல்ல கோபப்படும்போதும் சத்யன் ஆச்சரியப்பட வைத்தார்!!!! சத்யராஜ் - எனது எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை; அக்மார்க் ஓவர் ஆக்டிங்!!! 'வைரஸ்' கேரக்டில் பூமி இராணியுடன் மிகப்பெரும் முரண்!!! பல இடங்களில் 'வைரஸ்' கேரக்டரில் இருந்து அமைதிப்படை சத்யராஜ் கிளம்புகிறார். ஆனாலும் 3 இடியட்ஸ் பார்க்காதவர்களை சத்யராஜ் கவருவார் என்று நம்பலாம்!!!
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" >
<span>ஹாரிஸ்</span> <span>ஜெயராஜ்</span> -</span> பாடல்கள் அளவிற்கு பின்னணி இசை கவரவில்லை; உயிர்ப்பான, சென்டிமென்ட், விறுவிறு காட்சிகளுக்கு ஹாரிஸின் பின்னணியில் உயிர் இல்லை, ஷங்கர் கூடவா கவனிக்கவில்லை!!! ஆனாலும் பாடல்களில் ஹாரிஸ் கலக்கியிருப்பதை பாராட்டியே தீரவேண்டும்!! ஆட்டைய போட்டாலும், ரசிகர்களின் பல்ஸை புரிந்து வைத்திருக்கும் இசையமைப்பாளர்களில் ஹாரிஸ் நம்பர் 1 தான்.
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" >
<span>மனோஜ்</span> <span>பரமஹம்சா</span> -</span> "என்னையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்? கொஞ்சம் கூட தெளிவில்லை"; நான் பார்த்த திரையரங்கின் திரையை வைத்து சொல்வதானால் இப்படித்தான் சொல்லவேண்டும் :-) மூணு மாசம் தோய்க்காத வேட்டியை கட்டிவிட்ட மாதிரியே இருந்திச்சு!!! வாங்கிற காசுக்கு கொஞ்சமாவது நல்ல திரையில போடலாமே!!!! ஒரிஜினல் DVD யில்த்தான் முழுமையான ஒளிப்பதிவை ரசிக்கமுடியும்; இருப்பினும் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span>ஆண்டனி</span> - </span>இந்த திரைப்படத்தில் குறைவான வேலை இவருக்குத்தான்; எதை எங்க கட் பண்ணி எப்படி சொருகணும் என்கின்ற ஒரு டென்ஷனும் இல்லை; இருக்கிற படத்தில 2 பாடல்களை சேர்த்தது தவிர ஆங்காங்கே சிறு சிறு கிராபிஸ்க் வேலைகள்தான்; ஷங்கர் படத்தில் இவளவு சுலபமாக இதற்கு முன்னர் ஆண்டனி வேலை செய்திருக்க மாட்டார் !!
<br/><br/>
<span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" ><br style="font-weight: bold;"><span style="font-weight: bold;">மதன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கார்க்கி</span><span style="font-weight: bold;"> -</span></span> வசனங்கள் பளிச் பளிச் என்று இருக்கின்றன; 3 இடியட்சில இருந்து எனக்கு புதுசா தெரிஞ்ச ஒரே விடயம் வசனங்கள்தான் (ஏன்னா அங்கதான் வசனம் புரியாதே!!); கார்க்கி பல இடங்கள்ள முத்திரை பதித்திருக்கின்றார். விண்வெளியில் பென்சில் பாவிக்கமுடியாத காரணத்தை சொன்ன விதம், அதிகமானவர்கள் குறிப்பிட்ட ஆம்பிலன்ஸ் & பீசா வசனம் என்பன சிறப்பான சில உதாரணங்கள்; குறிப்பாக "அவனா நீ" பக்கா :-) பாடல்கள் தவிர்த்து திரைக்கதை, வசனம் என தனது ஆளுமையை கார்க்கி வளர்த்துக்கொள்ள ஷங்கர் பக்கபலமாக இருப்பது வைரமுத்துவுக்ககத்தான் என்றாலும் கார்க்கி அவற்றிற்கு தகுதியானவர்தான்!!!
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBAHK0MmTgoH0nCgPKTMqj_VZw6bnATYVlrufW9SGrwwn1cS4ip3f72ykdNpTptJBPWYXbbvvxQzlCaoCx_DqzAEVZoHo2MDPqcb2QaVfQNfEieYKJNtnDfsPzS7X7eqtH7uuly7DestQ7/s1600/nanban.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBAHK0MmTgoH0nCgPKTMqj_VZw6bnATYVlrufW9SGrwwn1cS4ip3f72ykdNpTptJBPWYXbbvvxQzlCaoCx_DqzAEVZoHo2MDPqcb2QaVfQNfEieYKJNtnDfsPzS7X7eqtH7uuly7DestQ7/s400/nanban.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698653509382203186" /></a>
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span>ஷங்கர்</span> -</span> ரசிகர்களின் பல்ஸ் அறிந்த ஒரே (ஆமாங்க ஒரே தான்) இயக்குனர். ஆனால் ஷங்கர் நண்பனில் காணாமல் போயிருந்தார் என்பதுதான் உண்மை!! படத்தை அச்சாரம் மாறாமல் மாற்றி அமைத்ததற்காக சொல்லவில்லை; எந்த புதுமையையும் இந்த கதையில் புகுத்த முடியாது, அப்படி புகுத்தியிருந்தால் படம் வேறுமாதிரி ஆகியிருக்கு அபாயம் உண்டு; அந்த வகையில் ஷங்கரை பாராட்டாலாம்!!! அதேநேரம் 60 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் பிரம்மாண்டத்தை நண்பனில் எங்கும் காணவில்லை!!! டிப்பிக்கல் ஷங்கர் பட பாடல்கள் விஷுவலில் மிஸ்ஸிங் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்!!!! அதிலும் நான் பெரிதும் எதிர்பார்த்த 'அஸ்கு லஸ்கா' பாடல் விஷுவலாக ஏமாற்றம்!!!
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span>ஜெமினி</span> -</span> 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் உரிமையை வாங்கி நண்பனாக வெளியிட்டமைக்கு Hats Off. அந்த சின்னப்பசங்களுக்கு ஜட்டியை மறைக்க டிரஸ் வாங்கி குடுக்க சொல்லி நம்ம நண்பர்கள் சிலர் சிபாரிசு செய்தாங்க :-) வேண்டவே வேண்டாம் அவங்களுக்கு அந்த ஜட்டிதான் அழகு :-)))
<br/><br/>
<span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">நண்பன்</span><span style="font-weight: bold;"> -</span></span> <span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">தமிழ்</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">ரசிகர்கள்</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">கண்டிப்பா</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">பாக்கணும்</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">!</span><span style="font-weight: bold; color: rgb(0, 51, 51);font-size:85%;" > (3 <span>இடியட்ஸ்</span> <span>பாத்தவங்களும்</span> <span>பார்க்கலாம்</span>, <span>புது</span> <span>அனுபவம்</span> <span>கிடைக்கும்</span>)</span>
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">குறிப்பு</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"> -</span> நண்பனில் மட்டுமல்ல தற்பொழுது இளைஞர்கள் வட்டத்தில் பொதுவாக சொல்லப்படுகின்ற ஒரு மெசேஜ் - "விரும்பிய துறையை தேர்ந்தேடுத்துக்கோ"; எனக்கு இந்த மெசேஜில் சில சந்தேகங்கள் மற்றும் மாற்றுக் கருத்து உண்டு; அவற்றை நாளை பதிவிடுகிறேன்.
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-15388709177434810942012-01-13T23:35:00.010+05:302023-02-01T01:12:25.348+05:30வேட்டை - எனது பார்வையில் <br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEfioTu1DgnHBP9SLNlxRWzWOwySnTSywfwhJkrC1EyOyz7xPpTT3BaJwWWB8-kIiSnG3D6UPInpAjqMcDp8oZWN70UI_5ACXDIE9y3USqPEBWN8ebPQ9IQhkGbQYP62_FklRuF50vfBhF/s1600/Vettai-Movie-Wallpapers.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 346px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEfioTu1DgnHBP9SLNlxRWzWOwySnTSywfwhJkrC1EyOyz7xPpTT3BaJwWWB8-kIiSnG3D6UPInpAjqMcDp8oZWN70UI_5ACXDIE9y3USqPEBWN8ebPQ9IQhkGbQYP62_FklRuF50vfBhF/s400/Vettai-Movie-Wallpapers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697182567096131170" /></a>
<br/><br/>
மாலை 6 மணிக்கு கிரிக்கெட் விளையாடி முடிந்த பின்னர் நண்பனுடன் ஒரு வேலையாக Town போகவேண்டி இருந்ததால் அப்படியே ராஜா திரையரங்கில் வேட்டை 14 ஆம் திகதியா இல்லை 15 ஆம் திகதியா ரிலீஸ் என்று கேட்பதற்கு சென்றோம்(15 என்றுதான் முதல் எழுதி வச்சிருந்தாங்க). அங்கு சென்றபோதுதான் 15 நிமிடத்தில் 'வேட்டை' திரையிடப் படப்போவதாக கூறினார்கள். கைகால் கூட கழுவவில்லை; ஓகே, பரவாயில்லை பார்த்துவிடுவோம் என்று உள்ளே சென்றுவிட்டோம்.
<br/><br/>
UTV க்ரூப்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதேஸ் இணைந்து தயாரிக்க; ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால், தம்பி ராமையா நடிப்பில்; யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க, ராஜீவனின் கலையில், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில், பிருந்தா சாரதி வசனமெழுத, என்.லிங்குசாமி இயக்கிய திரைப்படம்தான் வேட்டை.
<br/><br/>
முன்னமே பார்த்த பல திரைப்படங்களில் வந்த கட்சிகளின் சாயல், ஓரளவிற்கு ஊகிக்க கூடிய அடுத்துவரும் கட்சிகள், 'ஹீரோகுடும்பத்தை' வில்லன் கிளைமாக்ஸ்வரை கண்டுகொள்ளாமல் வழமைபோல கிளைமாச்சில் கொலைசெய்ய வருவது, அதேபோல ஹீரோவை கிளைமாச்சில் மட்டும்தான் கொல்லவேண்டும் என்பதுபோல திரைப்படத்தின் இடையில் சந்தர்ப்பம் கிடைத்தும் கொல்லாமல் அடித்துவிட்டு மட்டும் போவது, வில்லனால் பாதிக்கப்பட்ட கேரக்டரை வைத்தே வில்லனை கொல்வது; இப்படி இதற்கு முன்னர் வந்த வழமையான கமர்சியல் சினிமாக்களின் வரிசையில்த்தான் 'வேட்டை'யும்...
<br/><br/>
ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து லிங்குசாமியின் விறுவிறு வேகமான திரைக்கதை 2.30 மணித்தியாலங்களுக்கு திரையரங்கில் கட்டிப்போடுமளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. கதை எல்லோருக்கும் ட்ரெயிலரிலேயே தெரிந்திருக்கும்; சாதாரண கதைதான், அதற்க்கு வேகமான விறுவிறுப்பான திரைக்கதையினை லிங்குசாமி தனது வழமையான ஸ்டையிலில் கலக்கலாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன், காமடி கலவையாக நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே காதல், கல்யாணம், சென்டிமென்ட் தூவப்பட்டுள்ளது. ஒரு மசாலாப்படத்திற்கு திரைக்கதை அமைப்பதில் இயக்குனராக லிங்குசாமி வெற்றி பெற்றுள்ளார்.
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzDNU251a5Sck75H_Y2B1-hN9svUcwo8TQPKRlM3pUUO5egrfDRDqbJFK-SrPTEI_6Ymfy5rcSN8HywTlKHTG_ZX6gtXJNPGcfVmMNS2Hl4K2D5wgnwuByosltupaYu1qwmpyYigTicedX/s1600/arya+and+madhavan+in+vettai00.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzDNU251a5Sck75H_Y2B1-hN9svUcwo8TQPKRlM3pUUO5egrfDRDqbJFK-SrPTEI_6Ymfy5rcSN8HywTlKHTG_ZX6gtXJNPGcfVmMNS2Hl4K2D5wgnwuByosltupaYu1qwmpyYigTicedX/s400/arya+and+madhavan+in+vettai00.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697182577710790338" /></a>
<br/><br/>
ஆர்யா - துரு துரு கேரக்டருக்கு சரியான தேர்வு; இயற்கையிலேயே அமைந்த குரல்தான் என்றாலும் ஆர்யாவின் வசன உச்சரிப்புக்கு அவரது குரல் மிகப்பெரும் பலம்; ஆக்ஷனுக்கும் நகைச்சுவைக்கும் ஆர்யா குரலால் கொடுக்கும் வேறுபாடு சிறப்பு. படம் முழுவதும் ஆர்யாவின் டைமிங் காமடி களை கட்டுகிறது; ஆக்ஷனிலும் பட்டையை கிளப்புகிறார். அடுத்த தலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் ஆர்யாவால் நிச்சயம் சிறந்த போட்டியை கொடுக்க முடியும்!!!
<br/><br/>
மாதவன் - முதலில் மாதவனுக்கு Hats Off; மாதவனுக்கு ஆர்யாவைவிட குறைவான வேடம்தான்; ஆனாலும் தன்னைவிட யூனியர் நடிகர் ஆர்யா என்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கொடுத்த வேடத்திற்கு சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்த மாதவனை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களிலும் இமேஜ் பார்க்காமல் இணைந்து நடிக்கும் கலாச்சாரம் இப்போது உருவாகி இருப்பது மகிழ்ச்சியே! மாதவனின் முகம் காட்டும் உணர்ச்சிகள் குறையவில்லை, ஆனால் அவரது உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை; இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அவரது கேரக்டர் ரீதியாக ஓகே, ஆனாலும் மாதவன் உடம்பை குறைப்பது அவசியம்!!!
<br/><br/>
அமலாபால் & சமீராரெட்டி - வழமையான கமர்சியல் பட நாயகிகள்தான்; அமலாபாலுக்கு பாடல்கள் அதிகம் என்பதாலோ என்னமோ சமீராரெட்டிக்கு அமலாபாலை விட சற்று அதிகமான காட்சிகள்; சமீரா உடல் எடையையும் நன்றாக குறைத்திருக்கின்றார், நடிப்பிலும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்; ஆனாலும் பார்க்கும்போது நோ பீலிங்க்ஸ்; அதேநேரம் அமலாபாலுக்கு பாடல் தவிர்ந்த காட்சிகள் குறைவென்றாலும் பார்ப்பவர்களுக்கு செம பீலிங்க்ஸ்:-)
<br/><br/>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu9eRWriwVlD_a0YNpfGAcR4sv00Va5x1CpqDUrs2dCf5Zf9IGgWMkBhz3P_LT2ZV6yTNDVPyyzdnLP-8UP0T_WROTBL5SW4fe5imFmX2KX7Sa8etQ_SNU-NdTVbC5ZgEPSgQNZ_uwKg_L/s1600/vettai-arya-madhavan-011.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 397px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu9eRWriwVlD_a0YNpfGAcR4sv00Va5x1CpqDUrs2dCf5Zf9IGgWMkBhz3P_LT2ZV6yTNDVPyyzdnLP-8UP0T_WROTBL5SW4fe5imFmX2KX7Sa8etQ_SNU-NdTVbC5ZgEPSgQNZ_uwKg_L/s400/vettai-arya-madhavan-011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697182561233652642" /></a>
<br/><br/>
தம்பி ராமையா கேரக்டர் படத்திற்கு பக்கபலம்; நாம் தமிழ் சினிமாவில் பார்த்த போலிஸ் கேரக்டர்தான் என்றாலும் தம்பி ராமையாவின் நடிப்பு வெளிப்பாடு சிறப்பு; ஒரு காட்சியில் மாதவன் சந்தேகப்படும்போது தம்பி ராமையா கொடுக்கும் அப்பாவித்தனமான பதில் சென்டிமென்ட் & மாஸ். நாசர் போலிஸ் மேலதிகாரியாக மூன்று காட்சிகளில் வந்தாலும் டைமிங் காமடியிலும் முகபாவத்திலும் அசத்துகிறார். வில்லன்கள் 2 பேர் வாறாங்க; அதில் ஒருவர் பக்கா டம்மி; மற்றவரும் கிட்டத்தட்ட அப்படித்தான், ஆனாலும் அவர் ஹீரோக்கு நாலு அடி அடிக்க பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்; நம்ம கேப்டனுக்கு வில்லன் பொன்னம்பலம் முதல்ல நாலு குடுக்கிற மாதிரி!
<br/><br/>
யுவன்ஷங்கர்ராஜா இசையில் 'பப்பரப்பா' பாடல் தவிர்த்து ஏனையவை பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லை; ஆயினும் நீரவ்ஷாவின் கேமராவில் அத்தனை பாடல்களும் கண்ணுக்கு குளிர்ச்சி. 'பப்பரப்பா' பாடலில் இசையும், ஒளிப்பதிவும், நடனமும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. பாடல்களில் வைத்த குறையை யுவன் பின்னணி இசையில் வைக்கவில்லை; ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான பின்னணி இசையை யுவன் பக்காவாக கொடுத்திருக்கிறார். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பாக இல்லை என்றால்த்தான் ஆச்சரியம்!! நீரவ்ஷாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
<br/><br/>
ஆண்டனியின் படத்தொகுப்பு, ராஜீவனின் கலை, பிருந்தா மற்றும் ராஜ சுந்தரத்தின் நடனம், சண்டைப்பயிற்சி என்பன ஒரு கமர்சியல் திரைப்படத்தின் தேவையை திருப்திகரமாக பூர்த்தி செய்திருக்கின்றன. மிகப்பெரும் ஏமாற்றம் நா.முத்துக்குமார்!!!! கமர்சியல் படம்தான் என்றாலும் பாடல்வரிகளில் நா.முத்துக்குமாரிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றோம்!!! அதிலும் 'உன்னோட பாப்பாவை பெத்துக்கிறேன்' போன்ற மூன்றாம்தர வரிகள் நா.முத்துக்குமாருக்கு அழகல்ல!!! அடுத்து வேட்டையின் இன்னுமொரு பலம் பிருந்தா சாரதி; ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான வசனங்களை அப்பப்போ ஆங்காங்கே திறம்பட எழுதி கிளாப்ஸ் வாங்குகிறார்; அதிலும் மாதவன் சொல்லும் "எனக்கே ஷட்டாரா" வசனத்திற்கு செம கிளாப்ஸ் & விசில்.
<br/><br/>
உங்களுக்கு பொழுதுபோக்கிற்கு திரைப்படம் வேண்டுமா? நீங்கள் தாராளமாக 'வேட்டை'க்கு செல்லலாம்; 21/2 மணிநேரம் எப்படி முடிந்தது என்பதே தெரியாதளவிற்கு உங்கள் பொழுதுபோக்கிற்கு 'வேட்டை' உத்தரவாதம்!!!!
<br/><br/>
<span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" ><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">வேட்டை</span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"> -</span><span style="font-weight: bold;"><span style="color: rgb(51, 0, 51);"> </span> </span><span style="font-weight: bold;">செமையா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஆடியிருக்காங்கலே</span><span style="font-weight: bold;">.....</span></span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-10414816243247569972011-11-25T15:47:00.003+05:302023-02-01T01:10:08.896+05:30மயக்கம் என்ன... <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWacXyq8NOqrEH2czGmUx0poW6lsmjTJa6VKHD9Cosq2Z7YLNtPip6Vrc8GHEp3uasCT0HsZB0xMkQMIXG7EH7syldFPa7RD6MCAzFvNt59NKxyUB_nZ4nw3n4463jJ08jcvThrOgUPwO6/s1600/mayakam141011_1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWacXyq8NOqrEH2czGmUx0poW6lsmjTJa6VKHD9Cosq2Z7YLNtPip6Vrc8GHEp3uasCT0HsZB0xMkQMIXG7EH7syldFPa7RD6MCAzFvNt59NKxyUB_nZ4nw3n4463jJ08jcvThrOgUPwO6/s400/mayakam141011_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876163167463938" /></a>
<br/><br/>
2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, சந்தியா நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க R.ரவீந்திரனுடன் இணைந்து நண்பர்களான செல்வராகவன், யுவன்ஷங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கூட்டமைப்பில் உருவாக்கிய White Elephant நிறுவனம் சேர்ந்து தயாரிப்பதாக இருந்த 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம்; நண்பர்களுக்கிடயிலான விரிசலால் கைவிடப்பட R.ரவீந்திரன், கார்த்தி கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவனை செல்வராகவன் இயக்கினார். அதன் பின்னர் மீண்டும் 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்க 'இரண்டாம் உலகம்' என பெயர் மாற்றி செல்வராகவன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. மீண்டும் செல்வா, ஆண்ட்ரியா பிணக்கினால் அது கைவிடப்பட; புதிய கதைக்களம், புதிய கூட்டணி என செல்வராகவன் தந்துள்ள திரைப்படம்தான் 'மயக்கம் என்ன'. ('இரண்டாம் உலகம்' ஆரியாவை வைத்து செல்வாவால் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது)
<br/><br/>
'மயக்கம் என்ன' - எதிர்பார்ப்பை செல்வராகவன் ஏமாற்றவில்லை; எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இயக்குனர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் செல்வராகவன் தன் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகத் திருப்தியாக பூர்த்திசெய்துள்ளார். மாறுபட்ட கதைக்களம், நேர்த்தியான & குழப்பமில்லாத திரைக்கதை, செல்வாவின் டிப்பிக்கல் டச் என 'மயக்கம் என்ன' செல்வாவின் மற்றுமொரு திரைவிருந்து. திரைப்படத்தில் தனுஸ் கேரக்டரை அவ்வப்போது Genius என்று அழைப்பார்கள், மயக்கம் என்னவை பார்த்த பின்னர் எனக்கு தோன்றியது; செல்வராகவன் - Genius. ஆயிரத்தில் ஒருவனில் குழப்பமான திரைக்கதை மூலம் செல்வராகவன் விட்ட தவறை 'மயக்கம் என்ன'வில் சரிப்படுத்தியுள்ளார். படம் அதிக வேகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மெதுவாக நகர்கின்றது என்றும் சொல்ல முடியாது, எந்த இடத்திலும் திரைக்கதையில் தொய்வில்லை.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB7FgCFX-fsmwgFw9t_y2kkLLqEmpJCChuh-CeHmx3we_yVp5WwhXPKFZcleCDDHpKtRuzZbY8-QNkHxQllYNUborQg6VFpOGM37ZI3ZkGlJHe8dw2xr95S0QbF3-F6imbfWwvFuczURWV/s1600/Mayakam-Enna-Movie-new-Photos-Ninja+romeo-13.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 253px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB7FgCFX-fsmwgFw9t_y2kkLLqEmpJCChuh-CeHmx3we_yVp5WwhXPKFZcleCDDHpKtRuzZbY8-QNkHxQllYNUborQg6VFpOGM37ZI3ZkGlJHe8dw2xr95S0QbF3-F6imbfWwvFuczURWV/s400/Mayakam-Enna-Movie-new-Photos-Ninja+romeo-13.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876169392992194" /></a>
<br/><br/>
தனக்கு பிடித்த ஒரு துறையிலே தன் எதிர்காலம் அமைய வேண்டும் என ஆசைப்படும் ஒரு இளைஞன் தனது துறையினை எந்தளவிற்கு நேசிக்கின்றான் என்பதை காதல், காமம், துரோகம், நட்பு, தாய்மை, விரக்தி, மகிழ்ச்சி, ஏக்கம், இயலாமை என பல உணர்வுகளின் துணை கொண்டு சிறப்பாக கையாண்டிருக்கும் செல்வராகவனுக்கு மீண்டும் Hats Of. 'மயக்கம் என்ன'வில் நிறைய இடங்களில் செல்வராகவன் பிரமிப்பூட்டுகின்றார்; வசனங்கள் அனைத்தும் யதார்த்தமாகவும், அளவாகவும்; அதே நரம் ஆபாசமில்லாமலும் சில இடங்களில் பிரமிக்கதக்க வகையிலும் அமைந்தது திரைப்படத்திற்கு மேலும் பலம்; காருக்குள் தனுஸின் மனைவியும், தனுஸின் நண்பனும் பேசும் காட்சியும் வசனங்களும் பிரமாதம், அதிலும் "உன்மேல தப்பில்லை ஏன்னா நீ ஆம்பிளை" எனும் இந்த வசனம் எத்தனை உண்மை! உங்கள் திறமையை இன்னொருவன் தன் திறமை என்று சொல்லி பெயர் எடுத்த சம்பவம் உங்கள் வாழ்வில் எப்போதாவது ஏற்ப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் அந்த வலியை 'மயக்கம் என்ன'விலும் நீங்கள் உணர்வீர்கள்.
<br/><br/>
தனுஷ் - படத்தில் கார்த்திக் + Genius கேரக்டரில் அதகளப்படுத்தியுள்ளார், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக தனுஸ் மாறிவருவது நன்றாக தெரிகின்றது. ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் நடிப்பால் மிரட்டுகிறார்; உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் என நடிப்பின் அத்தனை பரிமாணங்களிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்; தனுஸ் தவிர்த்து யாராலும் செய்ய முடியாத கேரக்டர் இது. அதென்னமோ தெரியல செல்வராகவன் படங்கள் என்றால் தனுஸ் வழமையைவிட பலமடங்கு அதிகமான output கொடுக்கிறார். தனுசிற்கு ஒரு பணிவான வேண்டுகோள்; தயவு செய்து வேங்கை, மாப்பிள்ளை போன்ற மொக்கை மசாலாப் படங்கள் வேண்டாமே!!!
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqdTmd47uw6ekN8C10oOhN_sbQjJ48pEBovkOqFAbTpFM1WAiZef6TPJ5S_XFqA72qAcMClH_kQYpeZnJnqmMfZeIkml5XR0iiifvX-u3n_2W2JpCcdZy69hgzgFMjgoSlfytP7seZq_V-/s1600/mayakkam+enna+stills00-5.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 248px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqdTmd47uw6ekN8C10oOhN_sbQjJ48pEBovkOqFAbTpFM1WAiZef6TPJ5S_XFqA72qAcMClH_kQYpeZnJnqmMfZeIkml5XR0iiifvX-u3n_2W2JpCcdZy69hgzgFMjgoSlfytP7seZq_V-/s400/mayakkam+enna+stills00-5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876187219239170" /></a>
<br/><br/>
றிச்சா- யாமினி கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் படத்தில் றிச்சாவிர்க்கு நடிக்க வாய்ப்பில்லை என்றால்த்தான் ஆச்சரியம்; அற்ப்புதமாக நடித்துள்ளார், சமீப காலங்களில் நடிகை ஒருவருக்கு இந்தளவு ஸ்கோப் உள்ள கேரக்டர் அமைத்ததில்லை; கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். காதல், காமம், தாய்மை, பொறுப்பு, தைரியம், புரிதல் என பல பரிமாணங்களிலும் தேவைக்கேற்ப அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அசப்பில் பார்ப்பதற்கு நயன்தாரா + சோனியா அகர்வால் + பிரியங்கா சோப்ரா போலுள்ளார், தென்னிந்தியாவில் சிறப்பான எதிர்காலம் உண்டு. இவர்கள் இருவர் தவிர்த்து தனுஸின் நண்பர்கள், National Geographic Photographer ஆக வருபவர், நண்பர்களில் ஒருவரின் தந்தை என மிகக்குறைந்த கேரக்டர்களே 'மயக்கம் என்ன'வில் நடித்திருந்தாலும் தனுஷ், றிச்சா இருவரும்தான் படம் முழுவதும் தெரிகிறார்கள்.
<br/><br/>
தனுஷ் தவிர்த்து 'மயக்கம் என்ன'விர்க்கு இரண்டு கதாநாயகர்கள்; ஒருவர் ராம்ஜி - ஒளிப்பதிவாளர்; மற்றையவர் ஜீ.வி.பிரகாஷ்குமார் - இசையமைப்பாளர். இயக்குனர் அமீரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ராம்ஜி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவனுடன் முதல் முதலில் இணைந்தார், இப்போது மீண்டும் 'மயக்கம் என்ன' வில் இணைந்து விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா இல்லாத வெற்றிடம் செல்வராகவன் திரைப்படத்தில் இல்லவே இல்லை!! ஒரு Photography சம்பந்தமான ஒரு திரைப்படத்தை எவ்வளவு அழகாக படாமாக்க வேண்டுமோ அதைவிட பலமடங்கு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். லைட்டிங், ஆங்கிள், கமெரா மூவ் என ராம்ஜி சாம்ராட்சியம்தான் 'மயக்கம் என்ன'.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO2TT8Ann1CaXH9gv0KvoOcM-Qe2hX8vcEtPMcIjOTnl4hocxumnFPAPLnokiuDYHt3rSCMb7DHzlLuc5rMCSrpwAvWU3okGN83dLIlyURO25EUTIFEuQhy43WzRCUTgMKwyaLgYi4zWWb/s1600/mayakkam_enna_10_915201154855123.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 329px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO2TT8Ann1CaXH9gv0KvoOcM-Qe2hX8vcEtPMcIjOTnl4hocxumnFPAPLnokiuDYHt3rSCMb7DHzlLuc5rMCSrpwAvWU3okGN83dLIlyURO25EUTIFEuQhy43WzRCUTgMKwyaLgYi4zWWb/s400/mayakkam_enna_10_915201154855123.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876200607768162" /></a>
<br/><br/>
சுட்டுக்குடுத்தாரோ, சுடாமல் குடுத்தாரோ ! அண்மைக்காலங்களில் பாடல்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏமாற்றியதில்லை. மதராசப்பட்டினம், தெய்வ திருமகள் திரைப்படங்களுக்கு பின்னர் மீண்டும் பாடல்கள் அனைத்துமே அற்ப்புதமாக அமைந்துள்ளன. "நான் சொன்னதும் மழை வந்திச்சா", "ஓட ஓட" இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டதும் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம்; பல இடங்களின் மௌனத்தை ஜி.வியின் பின்னணி இசை சிறப்பாக ஈடுகட்டி இருக்கிறது, அதேநேரம் தேவையான இடங்களில் மௌனத்தையும் ஒலித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சினிமாவின் மற்றுமொரு தவிர்க்க முடியாத சக்தி.
<br/><br/>
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, தனுஸின் நண்பனாக வரும் றிச்சாவின் Boy Friend கேரக்டர்; தனுஸ், றிச்சாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை உருவாக்குவது திரைக்கதைக்கு தேவை என்னினும் செயற்கையாக உள்ளது. ஒருவரை பார்த்தவுடன் or ஒருவர் கேரக்டரை புரிந்தவுடன் வரும் காதலுக்கு எதற்க்காக அந்த நண்பனை கொண்டு இருவரையும் தனிமைப்படுத்தியும், தொடுகைக்குட்படுத்தியும் செல்வா காட்சி அமைத்தார் என்று புரியவில்லை!! அந்த இடங்கள் அபத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளதை மறுபதற்கில்லை. இதுதவிர ஒருசில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மிகப்படுத்தப்பட வேண்டிய பாரிய தவறுகளோ லாஜிக் மீறல்களோ அல்ல.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYcrDcEG5URz5YWfS1s2l0VW7MRDsKQWdtq3748vRCsWvGVsPNwCAIE7Vbnoz2wUPAt8weRYG7eYM9zRiGZrPFc4gFrvT6sKroUTE5C5gJ0S4jJLtab9zLK8JqjXNKFH5rPI-QpwHMO-6s/s1600/Mayakkam+Enna+Stills+_18_.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 226px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYcrDcEG5URz5YWfS1s2l0VW7MRDsKQWdtq3748vRCsWvGVsPNwCAIE7Vbnoz2wUPAt8weRYG7eYM9zRiGZrPFc4gFrvT6sKroUTE5C5gJ0S4jJLtab9zLK8JqjXNKFH5rPI-QpwHMO-6s/s400/Mayakkam+Enna+Stills+_18_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876188362545250" /></a>
<br/><br/>
மாறுபட்ட சினிமாவை, தரமான சினிமாவை கொடுப்பதில் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார்; உங்களுக்கும் மாறுபட்ட, தரமான சினிமாவை பார்க்க விருப்பமா? 'மயக்கம் என்ன' நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும். "இல்லை நான் மசாலா மட்டும்தான் பார்ப்பேன்" என்பவரா நீங்கள்! தயவுசெய்து திரையரங்கு செல்லாதீர்கள்; அங்கு சென்று படம் பார்ப்பவர்களையும் சத்தம் போட்டு குழப்பாதீர்கள்(இன்றைய அனுபவம்). இது ஏதாவதொரு உலக சினிமாவின் சாயலா! என்றெல்லாம் எனக்கு தெரியாது, அப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை; 'எனக்கு மயக்கம்' என்ன மிகவும் பிடித்துள்ளது. செல்வாவின் முன்னைய படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் 'மயக்கம் என்ன'வும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.......
<br/><br/>
<span style="font-size:130%;"><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">மயக்கம்</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">என்ன</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"> - </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">உணர்ச்சிக்</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">குவியல்</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">...</span></span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-4825375562723322812011-11-19T16:30:00.007+05:302023-02-01T01:10:28.802+05:30சிவகார்த்திகேயனும் மெரினாவும்..... <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgygGot_-280lgnVBREebWRR6YMdr7f50MKh47ldHlF7VcWdohr1aoKMHqIXOzkkXo-4J-gWOUihkEvm7pHAZGNtYEVymXBlpyZidRdXG9aEth_4BYpbfeaFuW4ar7_X8OIFGiQDcE_oADl/s1600/sivakarthikeyan.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 264px; height: 335px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgygGot_-280lgnVBREebWRR6YMdr7f50MKh47ldHlF7VcWdohr1aoKMHqIXOzkkXo-4J-gWOUihkEvm7pHAZGNtYEVymXBlpyZidRdXG9aEth_4BYpbfeaFuW4ar7_X8OIFGiQDcE_oADl/s400/sivakarthikeyan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676662601476010146" /></a>
<br/><br/>
சிவகாத்திகேயன்; இந்த பெயரை தெரியாத சின்னத்திரை பார்வையாளர்கள் இருக்க முடியாது. இன்றைய விஜய் TV யின் One Man Army இவர்தான்; ஒரு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய சிவகாத்திகேயனின் stage presence போதும் என்பதை அறிந்துள்ளதாலோ என்னமோ விஜய் TV யின் நிர்வாக இயக்குனர்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிவகார்த்திகேயனை களமிறக்கு கின்றார்கள். சாதாரண மிமிக்கிரி போட்டியாளராக 2008 இல் விஜய் Tv யின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்த சிவகார்த்திகேயன் அந்தப்போட்டியின் இறுதியில் முதல்ப்பரிசை வென்று விஜய் Tv பார்வையாளர்களுக்கு நக்கு பரிச்சியமானார்.
<br/><br/>
அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியில் விஜய் Tv யின் 'லொள்ளுசபா' புகழ் ஜீவாவிற்கும் இயக்குனர்/நடிகர் S.J சூரியாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டினால் போட்டியின் இடையிலேயே விலகிய ஜீவாவிற்கு பதிலாக களமிறக்கப்பட்டார். அதில் விஜய் TV யின் மற்றொமொரு தொகுப்பாளரான ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர்ந்து 3 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும் பின்னர் சிறப்பாக ஆடக் கற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் விஜய் Tv யின் 'ஜோடி நம்பர் வண்'னிற்கு பதிலாக இரண்டு சீசன் நடாத்தப்பட்ட Boys VS Girls நிகழ்ச்சிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் நன்றாக ஆடினாரோ இல்லையோ பாலாஜியுடன் சேர்ந்து இவர் பண்ணிய ரணகளத்தை அந்த சீசனை பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRNKidfOjU4-1RR0lo0wlhb7hmQ0F54sD2yTbZQaGAuyIgllCCGhdBy5n7PbURNNVeVqpFu4OUVNkr6hhkG1chfg-lYYrgltxo3duREZzC3Oo5qle-uDlPb21xpYOLBePuZTBwqhJ8lPdP/s1600/Kpy+3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 285px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRNKidfOjU4-1RR0lo0wlhb7hmQ0F54sD2yTbZQaGAuyIgllCCGhdBy5n7PbURNNVeVqpFu4OUVNkr6hhkG1chfg-lYYrgltxo3duREZzC3Oo5qle-uDlPb21xpYOLBePuZTBwqhJ8lPdP/s400/Kpy+3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676662599996446018" /></a>
<br/><br/>
அதன் பின்னர் விஜய் Tv சிவகார்த்திகேயனை முன்னிறுத்தி வழங்கிய 'அது இது எது' நிகழ்ச்சி இன்றுவரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியின் மூன்று சுற்றுக்களுமே சுவாரசியமானவை; அதிலும் சிவகார்த்திகேயனால் மூன்றாவது சுற்றில் கேட்க்கப்படும் 'மாற்றி யோசி' மிகவும் சுவாரசியமாக இருக்கும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜய் Tv இனுள் தனக்கென ஒரு இடத்தை ஏற்ப்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன் 'விஜய் அவாட்'சினை கோபிநாத்துடன் இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் tv யின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக மாறினார். அதன் பின்னர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் அவ்வப்போது தொகுப்பாளராக வந்து கலகலப்பூட்டினார். அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிநார்; ஒரு நடன நிகழ்ச்சியை நகைச்சுவை நிகழ்ச்சியோ என்று சொல்லுமளவிற்கு உடல் மொழியாலும், டைமிங் காமடியாலும் கிச்சு கிச்சு மூட்டினார்.
<br/><br/>
இறுதியாக நடந்த 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை விட அதிகளவில் ரீச் ஆனதென்னமோ அதன் 'ப்ளு பேஸ்' தொகுப்புத்தான்; நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை இடம்பெற்ற இதுவரை ஒளிபரப்பப்படாத சுவாரசியமான நிகழ்வுகளில் தொகுப்பே இது. ஒரு தொலைக்காட்சியில் சாதாரண போட்டியாளராக நுழைந்து 4 ஆண்டுகளில் அந்த தொலைக்காட்சியின் முதல்த்தர தொகுப்பாளராக மாறியிருக்கின்றார் என்றால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபரிமிதமானது! நகைச்சுவை உணர்வு (sense of humor), உடல் மொழி (Body Language), Timing sense, Voice Modulation போன்றவைதான் சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சியின் இரகயியம். சின்னத்திரையில் தொகுப்பாளராக எத்தனையோ பேர் வந்திருந்தாலும் ஒரு சிலரர்தான் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். 'பெப்சி' உமா, 'காமடி டைம்' அர்ச்சனா & சிட்டி பாபு, ஆனந்த கண்ணன், விஜயசாரதி, விஜய் ஆதிராஜ், 'நீயா நானா' கோபிநாத்,திவ்யதர்சினி, தேவதர்சினி என ஒரு சிலரே மக்களை அதிகம் ஈர்த்தவர்கள்; அந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும்........
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9v6aq4-8hH4zzxQIiAfGblG_OpIXtqo48qM0dPQoVtrli25iDjKwoD46zGNoBitTg7XNZ84j7mNPipgmo3BQPa5k_SJ7AZXlC5FQdYeZs0_1q-55CsVh3vC6Sy2yGZD_oWuWuJeeZg213/s1600/Pandira-in-Marina-6.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9v6aq4-8hH4zzxQIiAfGblG_OpIXtqo48qM0dPQoVtrli25iDjKwoD46zGNoBitTg7XNZ84j7mNPipgmo3BQPa5k_SJ7AZXlC5FQdYeZs0_1q-55CsVh3vC6Sy2yGZD_oWuWuJeeZg213/s400/Pandira-in-Marina-6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676662603551029666" /></a>
<br/><br/>
ஆனால் சிவகார்த்திகேயனுக்கு சின்னத்திரை மட்டுமல்ல; இப்போது வெள்ளித்திரையும் செங்கம்பளம் விரித்துள்ளது. 'பசங்க' புகழ் பாண்டியராஜ் இயக்கம் 'மெரீனா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். பசங்க, வம்சம் திரைப்படங்களின் வரவேற்ப்பிற்க்கு பின்னர் பாண்டியராஜ்சும், சிவகார்த்திகேயனின் அறிமுகமும் உள்ளதால் மெரினாவிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'களவாணி' படத்தில் நடித்த ஓவியா நடிக்கிறார்; 1988 இல் மிரா நயிர் (Mira Nair) இயக்கிய 'சலாம் மும்பை' ஹிந்தி திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் மெரீனா என்று சொல்லப்படுகின்றது. இந்த திரைப்படமும் பசங்க திரைப்படத்தை போன்றே குழந்தைகள் சம்மந்தப்பட்ட திரைப்படம்தான், மேரினாவில் சிறுவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சரியான முறையில் விளம்பரம் செய்யப்படும் பட்சத்தில் மெரீனா மிகப்பெரும் ஓப்பினிங்கை பெறும் சந்தர்ப்பம் உண்டு; மயக்கம் என்னவிர்க்கு அடுத்து நான் அதிகம் எதிர்பார்ப்பது மெரினாவைத்தான்...
<br/><br/>
மெரீனா தவிர்த்து R. ஐஸ்வர்யா தனுஸ் இயக்கத்தில் தனுஸ், சுருதிஹாசன் நடிக்கும் '3' திரைப்படத்தின் போஸ்டரிலும் தனுஷுடன் சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார். தனுஷுடன் குணச்சித்திர நடிகராக (Character artist) இல்லாமல் நகைச்சுவை நடிகராக (Comedy artist ) நடித்தால் சிறப்பாக இருக்கும்; இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நகைச்சுவையாளர்களின் வெற்றிடத்தை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து எழில் இயக்கம் திரைப்படமொன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஹீரோவாக வெற்றிபெற்றால் மகிழ்ச்சி, ஒருவேளை அது கைகூடவில்லை என்றால் இருக்கவே இருக்கு நகைச்சுவை; அது சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும். சின்னத்திரையில் சாதிச்ச சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.......
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-15675071527390211362011-11-10T01:59:00.008+05:302023-02-01T01:10:41.045+05:30நானும் சினிமாவும் பாகம் - 2 <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3oCizSAnfPHpKQDvXHNS9DDa5THwq2krhxmKIO-t0453ZM4P6pLut7Wfrsj4U-bx1dv1R4ilh8eWGDP5aZcT8QRitM9cueoAl4A3wq9CEisLA72hmSZ2KKv7n0Jy4LQXcBF7aQcK1b-PR/s1600/big_Ajith_Kumar_in_the_remake_of_Dookudu-504b563e315e181548767cb3d1438877.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3oCizSAnfPHpKQDvXHNS9DDa5THwq2krhxmKIO-t0453ZM4P6pLut7Wfrsj4U-bx1dv1R4ilh8eWGDP5aZcT8QRitM9cueoAl4A3wq9CEisLA72hmSZ2KKv7n0Jy4LQXcBF7aQcK1b-PR/s400/big_Ajith_Kumar_in_the_remake_of_Dookudu-504b563e315e181548767cb3d1438877.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673098448284581058" /></a>
<br/><br/>
முதல் பதிவில் விஜய் பற்றி எழுதியுள்ளதால் இந்த பதிவை அஜித்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நான் முன்னர் குறிப்பிட்டது போலவே நாட்டின் போர் காரணமாக 1996 க்கு பின்னர்தான் அடுத்த தலைமுறை நடிகர்களின் முகத்தையே காணும் வாய்ப்பு கிடைத்து. அப்படி அஜித்தை முதல் முதலில் பார்த்தது ஒரு ஒலியும் ஒளியும் பாடலில்த்தான். 1996 இல் பல்கலைக்கலகத்திற்கே யாழ்நகரில் முதல் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது (6 ஆண்டுகளின் பின்னர்) அதுகூட மாலை 6 மணி முதல் இரவு 12 மணிவரைதான்! பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரம் அந்த அயலில் உள்ள வீடுகளுக்கும் கிடைத்தது. குறிப்பிட்ட பகுதியில் அண்ணா ஒருவரின் வீடு இருந்ததால் ஒவ்வொரு வெள்ளியும் இரவு தங்குவது அங்குதான்; காரணம் 8 மணிக்கெல்லாம் ஊரடங்குசட்டம், வீதியில் நடமாடமுடியாது.
<br/><br/>
இரவு 7.30 மணிக்கு ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு இரவு 9.30 மணிக்கு டூடடர்சனில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தினை 12 மணிவரை பார்ப்போம்; மின்சார நிறுத்தத்தால் படம் அரைகுறையில் தடைப்படும்போது வரும் ஏக்கமும், கோபமும், ஏமாற்றமும் சொல்லில் கூறமுடியாதவை. சில நேரங்களில் 10 நிமிடங்கள் அதிகமாக மின்சாரம் தொடர்ந்திருக்கும், எங்களுக்கும் இன்று மின்சாரம் தொடர்ந்து இருக்குமோ என்று ஒரு நப்பாசை !! அடுத்த கணமே மின்சாரம் தடைப்பட்டு எமக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைக்கும். அப்படி மின்சாரம் தடைப்படாமல் பார்த்தது இரண்டு திரைப்படங்கள்; திருமலை தென் குமரி, வேலைக்காரன்; இவை இரண்டும்தான் அன்று முழுமையாக பார்த்த இரண்டு திரைப்படங்கள்; வேலைக்காரன் முழுமையாக பார்த்து முடித்தபோது இருந்த மனநிலை சொல்லி புரிய வைக்க முடியாதது!
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPfLiOXlE2OqdUxoEp0QmF6RR3T7a5aqBfTCjRTGgJlO0nXmgD4fBDSuoKPsGpbvUpPm3SV4i6Fvd3sIB1JhFUyzgGPnc_ejCprIY1DvN1xzTuSfW6dm3gP2sQ2qtbiGOwHWdGFWeJaQDA/s1600/video-formats-software+copy.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 306px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPfLiOXlE2OqdUxoEp0QmF6RR3T7a5aqBfTCjRTGgJlO0nXmgD4fBDSuoKPsGpbvUpPm3SV4i6Fvd3sIB1JhFUyzgGPnc_ejCprIY1DvN1xzTuSfW6dm3gP2sQ2qtbiGOwHWdGFWeJaQDA/s400/video-formats-software+copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673098793450825106" /></a>
<br/><br/>
அப்படி அங்கு ஒருநாள் ஒளியும் ஒளியும் பார்க்கும்போது அறிமுகமாகிய நடிகர்தான் அஜித்குமார்; என்ன பாடல் என்று தெரியவில்லை, "யார் இந்த பையன்" என்ற ஒருவரின் கேள்விக்கு "அஜித் என்று ஒரு பையன் புதுசா நடிக்கிறான்" என்பதுதான் நான் அஜித் பெயரையும், அஜித்தின் உருவத்தையும் கேட்ட, பார்த்த கணம். ஆனாலும் எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் அப்போது ஏற்ப்படவில்லை. அதன் பின்னர் நான் பார்த்த முதல் அஜித் திரைப்படம் 'வான்மதி'; 'பூவே உனக்காக' முன்னமே பார்த்ததாலோ என்னமோ எனக்கு அஜித் மீது அப்போதும் ஈர்ப்பு வரவில்லை. தொடர்ந்து காதல்க்கோட்டை, நேசம், ஆசை என பல அஜித் படங்களை பார்த்திருந்தாலும் அஜித் அன்று எனக்கு பத்தோடு பதினொன்றாகத்தான் தெரிந்தார். மீடியா வசதிகள் எதுக்குமே இல்லாத காரணத்தால் சினிமாவின் தாக்கம் திரைப்படங்களை ரசிப்பதில் மட்டும்தான் அன்றிருந்தது; இன்றுபோல் நடிகர்களுக்காக ரசிகர்கள் நண்பர்களுடன் மோதியதில்லை.
<br/><br/>
இந்நிலையில் அஜித்தை எனக்கு பிடிக்க ஆரம்பித்த திரைப்படம் சரண் இயக்குனராக அறிமுகமாகி அதகளப்படுத்திய காதல் மன்னன்; இந்த திரைப்படம் நான் பார்க்கும்போது திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்கள் இருக்குமென்று நினைக்கின்றேன்; ஒரு ரூபாயில் சவால் விடுவது, சொடுக்கு போடுவது, 'மெட்டுத்தேடி தவிக்கிது ஒரு பாட்டு' பாடல் என காதல் மன்னனும்; காதல் மன்னனால் அஜித்தும் பிடித்துப்போயிற்று. அடுத்து அமர்க்களம், தீனா என அஜித் படத்திற்கு படம் என்னை அதிகமாக இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்தார். அந்த காலப்பகுதியில் வெளிவந்த அனைத்து அஜித் திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன்; அந்த நேரத்தில்த்தான் அஜித்தின் 'நான்தான் சூப்பர் ஸ்டார்' ஸ்டேட்டஸ் பத்திரிகைகளில் வெளிவந்தது; அன்றிலிருந்து அஜித்மீதிருந்த ஈர்ப்பு குறைய ஆரம்பித்தது. அடுத்த தலைமுறை நடிகர்களில் விஜய், அஜித் இருவருமே அந்த காலப்பகுதியில் எனக்கு பிடித்தமானவர்கள்தான்; ஆனால் அன்றைய அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ரிரஜினியுடன் இவ்விருவரையும் ஏட்டிக்கு போட்டியாக வைத்து பேசியதுதான் நான் விக்ரமின் தீவிர ரசிகரான மாற காரணமாக அமைந்தது.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeZe4nkjb_n4MKcVBW57CjhZzgHgzZBHjGpGhJ_HsmpZrkDZLsrwYpYkuBdbXqutD69WFUceR8PKfNO8_OmW_DpsAWZkDsJVYyz8sSM_uxyPG6I-HvDU2SVA3rUm2KfxkunIDzGVfNtEcS/s1600/ajith-in-remake-of-race.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 373px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeZe4nkjb_n4MKcVBW57CjhZzgHgzZBHjGpGhJ_HsmpZrkDZLsrwYpYkuBdbXqutD69WFUceR8PKfNO8_OmW_DpsAWZkDsJVYyz8sSM_uxyPG6I-HvDU2SVA3rUm2KfxkunIDzGVfNtEcS/s400/ajith-in-remake-of-race.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673098789107220706" /></a>
<br/><br/>
விக்ரம் பற்றி பின்னர் பார்ப்போம்; தீனா திரைப்படத்தை தொடர்ந்து வெளிவந்த அஜித்தின் திரைப்படங்களில் 'வில்லன்' தவிர்த்து ஆறு திரைப்படங்கள் தோல்வியடைந்தன! இந்த நிலையில் விஜயின் திருமலை, கில்லி வெற்றி விஜய் ரசிகர்களை அஜித்தை கிண்டல் செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தன. கில்லி வெற்றியின் பின்னர் கூட இருந்த சில விஜய் ரசிகர்கள் பண்ணிய ரகளைதான் அடுத்து வெளிவந்த அஜித்தின் 'அட்டகாசம்' திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் பார்க்க தூண்டியது; அதுவரை அஜித் மீதிருந்த வெறுப்பும் குறைந்திருந்தது, கூடவே அஜித்தும் மிகவும் மாறியிருந்தார். 'அட்டகாசம்' திரைப்படம் பார்த்த பின்னர்தான் மீண்டும் அஜித்தை பிடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து 'ஜீ' திரைப்படத்திற்கு முதல்க்காட்சி சென்றாலும் லிங்குசாமி ஏமாற்றியிருந்தார்!
<br/><br/>
அடுத்து வெளிவந்த பரமசிவன் திரைப்படம்தான் அஜித்மீது மிகப்பெரும் ஈர்ப்பை கொண்டு வந்தது, அது மரியாதை கலந்த ஈர்ப்பு. யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாதளவிற்கு தன் உடல் எடையை குறைத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் குண்டு எறியும் கலாச்சாரம் அதிகமாக இருந்த காரணத்தால் திரையரங்கிற்கு செல்வதில்லை என்றிருந்தோம்; ஆனால் சண் டிவியில் புதிய பாடல்களை ஒளிபரப்பிய அடுத்த 15 நிமிடங்களுக்குள் நாம் திரையரங்கில் நின்றோம்; காரணம் அஜித்தின் தோற்றம்!! வாசு படத்தை சொதப்பினாலும் அஜித் என்னை ஏமாற்றவில்லை! படம் சரியாக போகாவிட்டாலும் கூடவந்த ஆதி, சரவணா திரைப்படங்களைவிட அதிகம் வசூலித்தது. அதற்க்கு அடுத்து வெளிவந்த திருப்பதி திரைப்படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன்; ரஜினியை வைத்து பேரரசு படமெடுத்தாலும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை என்பது அன்று எடுத்த முடிவுதான்:-)
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjYQ1jk4zclz8e0mYTXfyTD5Kwa8Euc4BUX-jU93o9AUjeHIFI4cpWBvd-KExk6LPubI2FcH2KZ1Z0nMtJEnxyx4qjXwV9k36AqanJyYBY7tWkFPsRPdJjl-HtORRL_RLc7-1L51a_isi-/s1600/Thala.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjYQ1jk4zclz8e0mYTXfyTD5Kwa8Euc4BUX-jU93o9AUjeHIFI4cpWBvd-KExk6LPubI2FcH2KZ1Z0nMtJEnxyx4qjXwV9k36AqanJyYBY7tWkFPsRPdJjl-HtORRL_RLc7-1L51a_isi-/s400/Thala.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673098787300439666" /></a>
<br/><br/>
அடுத்து வரலாறு திரைப்படம் நாட்டு பிரச்சனை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெளியாகவில்லை; அதன் பின்னர் இன்றுவரை எந்த அஜித் திரைப்படத்தையும் திரையரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. நேரம், பணம், கூடவரும் நண்பர்கள் என ஈதோ ஒரு காரணத்திற்க்காக ஒவ்வொரு தடவையும் அஜித் படங்களை திரையரங்கில் பார்ப்பதற்கு முட்டுக்கட்டை விழுந்தது. இறுதியாக மங்காத்தா பார்ப்பதற்கு குறைந்தது 4 தடவைகள் திட்டமிட்டிருப்போம், ஆனால் அது கடைசிவரை கைகூடவில்லை; இறுதியில் வழமைபோல DVD தான்!!! இறுதி ஐந்து ஆண்டுகளில் ரஜினி, விக்ரம் திரைப்படங்கள் தவிர்த்து திரையரங்கில் நான் பார்த்த திரைப்படங்கள் என்றால் 5 திரைப்படங்கள்தான்; மொழி, தீபாவளி, நான்கடவுள், பையா, நந்தலாலா என்பவைதான் அந்த ஐந்தும்!!!!
<br/><br/>
மங்காத்தா எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்போது அஜித்தையும் அதிகமாகவே பிடிக்கின்றது; காரணம் ரஜினியா! இல்லை எமது சமூக தளங்களில் உள்ள விஜய் ரசிகர்களா! அல்லது அஜித்தை புறக்கணிக்கும் ஊடகங்களா! அல்லது அஜித்தின் அண்மைக்கால வெளிப்படையான நடவடிக்கைகளா! காரணம் இவை அனைத்தும்
சேர்ந்ததுதான் என்றாலும்; அஜித் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">சாவியைபிரித்தல்</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"> (Dis Key </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">அதாவது</span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">டிஸ்கி </span><span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">)</span>
<br/><br/>
அடுத்த பதிவுகளில் விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு மற்றும் ஹீரோயின்ஸ் பற்றியும் பார்க்கலாம் :-) பலருக்கும் இந்த பதிவு போரடிக்கும் என்பது புரிகிறது; காரணம் இது எனது சுய சொறிதல், இருந்தும் ஏன் எழுதுகின்றேன் என்றால் பின்னொருநாளில் குறைந்தபட்சம் எனக்காவது படிப்பதற்கு சுயாரசியமாக இருக்கும் என்பதால்த்தான், "அட நாதாரி இதை டயரியில எழுதவேண்டியதுதானே" என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கிது, ஆனா எனக்கு அந்த கெட்ட பழக்கமெல்லாம் இல்லை :-)
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">முதல்</span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">பதிவு</span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"> -></span> <a href="http://eppoodi.blogspot.com/2011/07/1.html"><span>நானும்</span> <span>சினிமாவும்</span> - <span>பாகம்</span> 1 </a>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-19735909977338417122011-10-25T09:56:00.005+05:302023-02-01T01:13:21.616+05:30யாழ் திரையரங்குகளும் திரைப்படங்களும் <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm5ZPw7vy4HX0Ltq_jXDI-hB0IlebaQGqMPIsJfjJ_9Dag35ipL4ZugTLID89B2z5e9ApIhM84H8wBVKX10xCGrYI83sN22w2RbejVsaQLpTHP2So4WISC-9pL9nlXBEIsjiIYWt1YWX52/s1600/DSC00880.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm5ZPw7vy4HX0Ltq_jXDI-hB0IlebaQGqMPIsJfjJ_9Dag35ipL4ZugTLID89B2z5e9ApIhM84H8wBVKX10xCGrYI83sN22w2RbejVsaQLpTHP2So4WISC-9pL9nlXBEIsjiIYWt1YWX52/s400/DSC00880.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667354442557071026" /></a>
<br/><br/>
1990க்கு முன்னர் யாழ்நகரில் திரையரங்குகளில் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்; இத்தனைக்கும் அன்றைய தேதியில் தமிழகத்தில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி குறைந்தது ஒரு மாதத்தின் பின்புதான் இங்கு திரையிடப்படும் (இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நாளில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் பாபா) ஆனாலும் அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட பல எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அள்ளிக்கொட்டியது வரலாறு. ராஜா, வின்சர், ராணி, மனோகரா, ரீகல், நாகம்ஸ், சாந்தி, லிடோ, வெலிங்கடன், ஸ்ரீதர், லக்ஸ்மி என ஏகப்பட்ட திரையரங்குகள்; ஆனாலும் ஒவ்வொன்றும் லாபகரமாகவே அன்று இயங்கின.
<br/><br/>
ஆனால் இன்று முக்கியமான திரையரங்குகள் என்று பார்த்தால் ராஜா, மனோகரா, செல்லா, நாகம்ஸ் என நான்கு திரையரங்குகள்தான்; அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ராஜா, மனோகரா என இரண்டு திரையரங்குதான் பெரிய படங்களை திரையிடுபவை. தமிழகத்தில் திரையிடப்படும் நாளிலே இங்கும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன, இன்னும் சொல்லப்போனால் முதல்நாள் இரவுக்காட்சியே இங்கு திரையிடப்படுகின்றது. அப்படி இருந்தும் 30 நாட்கள் ஒரு திரைப்படத்தை ஓட்டுவதற்கு படாதபாடு படவேண்டி இருக்கின்றது; வரும் வசூலில் படப்பெட்டி வாங்கிய தொகை, திரையரங்க செலவுகள் போனால் கையில் எதுவுமே மிஞ்சுவதில்லை என்கின்றார்கள் யாழ்ப்பாண திரையரங்க உரிமையாளர்கள். இதனால் இப்போதெல்லாம் யாழ்நகர் வரும் புதுப்படங்கள் குறைவடைய தொடங்கியுள்ளன.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj96Z6yv8kNKpw-XOhUasl4-oI6QIoOyrc4imYtmeRzLS-WrdksvDgUr3NRlOD_6fk1hcwnQFCR_FIB-yQWVoWuYeCP637WPxlJLR9ByfbUg8ALa9Aug3Ota53wmLeynC-gvhMQ5T5IFqNX/s1600/DSC00877.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj96Z6yv8kNKpw-XOhUasl4-oI6QIoOyrc4imYtmeRzLS-WrdksvDgUr3NRlOD_6fk1hcwnQFCR_FIB-yQWVoWuYeCP637WPxlJLR9ByfbUg8ALa9Aug3Ota53wmLeynC-gvhMQ5T5IFqNX/s400/DSC00877.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667354436084726466" /></a>
<br/><br/>
"விநியோகிஸ்தர்கள் லாபத்தை அள்ளிக்கொண்டுபோக கஷ்டப்பட்டு திரையரங்கை நடாத்தும் நாம் ஒன்றுமில்லாமல் வேடிக்கை பார்ப்பதா" என்பதே யாழ் நகரின் முக்கிய திரையரங்க உரிமையாளர் ஒருவரின் ஆதங்கம். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை திரைப்படங்கள் மூன்று விதமாக திரையிடப்படுகின்றன.
<br/><br/>
1 ) படப்பெட்டிகளை குறிப்பிட்ட விலைக்கு வாங்குவது
<br/><br/>
2 ) விகிதாசார அடிப்படையில் வசூலை பங்கிடுவது
<br/><br/>
3 ) திரையரங்கை விநியோகிஸ்தருக்கு வாடகைக்கு கொடுத்தல்
<br/><br/>
இவற்றில் இதுவரை யாழ்நகரில் அதிகம் திரையிடப்படுவது முதல் முறையில்த்தான்; எந்த திரைப்படமானாலும் படப்பெட்டியை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி அதனை திரையிடுவதுதான் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்து வந்ததுள்ளது. இந்த முறையில் திரைப்படங்களை வாங்கி வெளியிடும்போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை இதுவரை வெளியான ரஜினி, விஜய் படங்கள் பெரும்பாலும் லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன; தமிழகத்தில் அட்டர் பிளாப்பாகும் விஜய் படங்கள் யாழ்நகரில் சக்கை போடு போட்டிருக்கின்றன! ஏனைய நடிகர்களின் திரைப்படங்கள் சிறப்பாக இருந்தாலன்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம்தான்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3jLcrjSj4weZvqmocfA3BKMspI-W3IQXXA6VJ9ViGdJiZvlQgbrftmiVDJ0PmLe5_pWnlsq_Jr-NDCP195b8Vh90ERX5PcIOz2iN7d6V-qqEC-inNEC14vwxa1wePRT4cuMewuvjgLbhH/s1600/Sura_Audio_CD_Cover.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3jLcrjSj4weZvqmocfA3BKMspI-W3IQXXA6VJ9ViGdJiZvlQgbrftmiVDJ0PmLe5_pWnlsq_Jr-NDCP195b8Vh90ERX5PcIOz2iN7d6V-qqEC-inNEC14vwxa1wePRT4cuMewuvjgLbhH/s400/Sura_Audio_CD_Cover.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667349888707149314" /></a>
<br/><br/>
சுறா திரைப்படம் ராஜா திரையரங்கிற்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது. சச்சின், திருப்பாச்சி, சிவகாசி, வேட்டைக்காரன் திரைப்படங்கள் மனோகராவிலும்; கில்லி, மதுர, சுறா, காவலன் திரைப்படங்கள் ராஜாவிலும் போட்ட பணத்திற்கு மேலாக லாபத்தை அள்ளிக்கொடியிருக்கின்றன. மனோகராவில் சிவாஜிக்கு (51 லட்சம்) அடுத்து அதிக வசூல் வேட்டைக்காரன்(45 லட்சம்); ராஜாவில் எந்திரனுக்கு(86 லட்சம்) அடுத்த அதிக வசூல் காவலன் (62 லட்சம்) (ராஜாவில் டிக்கட் காசு மனோகராவைவிட 2 மடங்கு அதிகம்).
<br/><br/>
இதை ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்றால்; யாழ் நகரின் வசூல் இளவரசனாக விஜய் இருந்தும்; யாழ் நகரின் முன்னணி திரையரங்குகளான ராஜா, மனோகராவிற்கு இதுவரை விஜய் படங்கள் லாபத்தை அள்ளிக்கொடுத்திருந்தும் விஜயின் வேலாயுதத்தை மனோகரா, ராஜா என இரண்டு திரையரங்குகளும் எதற்க்காக கைவிட்டன? என்பதை கூறத்தான். வாகன பாக்கிங், இடவசதி போன்றவற்றை வைத்துப்பார்த்தால் மனோகராதான் யாழ் நகரின் சிறந்த திரையரங்கு; எந்த திரைப்படமாயினும் இங்கு திரையிட்டால் சற்றி அதிகமான பார்வையாளர்களை பெறமுடியும் (குறைந்த டிக்கட் கட்டணமும் இதற்க்கு ஒரு காரணம்) என்னதான் திரையரங்கு வசதியாக இருந்தாலும் இங்கு சவுண்ட் சிஸ்டம் மிகவும் மோசம். ஆனால் ராஜா திரையங்கில் சவுண்ட் சிஸ்டம் மனோகராவை விட சிறப்பு; இங்கு டிக்கட் கட்டணம் சற்று அதிகமாகையால் பார்வையாளர்கள் சற்று குறைந்தாலும் மனோகராவிற்கு குறைவில்லாத வசூல் இங்கு கிடைக்கும்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizSjliHloiup89h2A-6PXMBfS8Fswfu44vSskTgpfYN42qnjzxbAdwd1TzQXFim_WET-HRnQRrSHiYDtQFumrJWENe_LNDzv5RLEOwfM73KEbRISPG37R2MDlAihd1OoeSVAIc5gR9frg1/s1600/DSC00881.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizSjliHloiup89h2A-6PXMBfS8Fswfu44vSskTgpfYN42qnjzxbAdwd1TzQXFim_WET-HRnQRrSHiYDtQFumrJWENe_LNDzv5RLEOwfM73KEbRISPG37R2MDlAihd1OoeSVAIc5gR9frg1/s400/DSC00881.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667354445898049618" /></a>
<br/><br/>
மனோகரா திரையரங்கின் சவுண்ட் சிஸ்டத்தை சீரமைத்து புதிய நாற்காலிகள் போட்டு திரையரங்கை வளப்படுத்த மேலதிகமாக ஒரு கோடி ரூபா போதும் என்றும்; அதனை போட்டு திரையரங்கை சீரமைப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறும் அதன் உரிமையாளர்; முதலிட்ட ஒரு கோடிக்கு லாபம் கிடைக்குமா என்பதிலுள்ள தயக்கம்தான் தன்னை முதலிடாமல் வைத்துள்ளதாகவும் கூறுகின்றார். சவுண்ட் சிஸ்டம் சீரமைக்கப்பட்டு, தரமான இருக்கைகள் இடப்பட்டு, குளிரூட்டப்பட்டால் இலங்கையின் முதல்த்தர திரையரங்கு மனோகராதான். அது தெரிந்திருந்தும், கையில் பணமிருந்தும் அதன் உரிமையாளருக்கு ஏன் இந்த தயக்கம்? காரணம் திரையரங்கிற்கு வரும் குறைந்தளவு பார்வையாளர்களும், விநியோகிஸ்தர்களின் பேராசையும்தான்.
<br/><br/>
1990க்கு முன்னதாக நீண்ட நாள் கழித்து வெளிவந்த திரைப்படம் 100 நாள் ஓடியதற்கும்; இன்றைய திரைப்படங்கள் 30 நாள் ஓடவே கஷ்டப்படுவதர்க்கும் காரணம் திரைப்படம் வெளியான மறுநாளே அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் திருட்டு vcd யும்; வீட்டுக்கு வீடு உள்ள DVD Player, CD Player, கம்ப்யூட்டர் போன்ற இலத்திரனியல் சாதனங்களும்தான். அன்று 30 வீட்டுக்கு ஒரு வீட்டில் இருந்த இந்த சாதனங்கள் இன்று அதிகமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்றன. இதையும் தாண்டி மக்கள் திரையரங்கிற்கு வந்து 30 நாட்கள் ஒரு திரைப்படம் ஓடுவதென்பது பெரிய விடயமே. இந்த 30 நாட்களும் திரைப்படம் ஓடினாலே யாழ்நகரை பொறுத்தவரை நல்ல வசூல் கிடைக்கும்; ஆனால் இதில் ரஜினி, விஜய் படம் தவிர வேறெந்த படத்திற்கும் மினிமம் கராண்டி இல்லை.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHI_B2MS4oFiCfp_qjpd0XtqIWhl9FyzPTRGs_0ggEHmvsKHeiH1QGA7WPtMTaX2zeXUWHxrmhrpTN8zlD7yqE6g7a_nYyHuEMkVabwWt3vYG2C7ZV3xGG-8ubr0WrGmGh3SxT8-rWtW_I/s1600/DSC00878.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHI_B2MS4oFiCfp_qjpd0XtqIWhl9FyzPTRGs_0ggEHmvsKHeiH1QGA7WPtMTaX2zeXUWHxrmhrpTN8zlD7yqE6g7a_nYyHuEMkVabwWt3vYG2C7ZV3xGG-8ubr0WrGmGh3SxT8-rWtW_I/s400/DSC00878.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667354436075903346" /></a>
<br/>
<div style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 0, 0);"><span style="font-size:85%;">90 <span>களுக்கு முன்னர்</span> <span>யாழ்நகரின் மிகப் பிரபலமான வின்சர் திரையரங்கு இன்று களஞ்சியமாக உள்ளது</span></span></div>
<br/><br/>
தமிழகத்தில் சக்கை போடு போட்ட அஜித், சூர்யா, விக்ரம், தனுஸ் படங்கள் இரண்டாவது வாரமே இங்கு ஈ கலைக்கும் நிலையில்த்தான் உள்ளன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கே இந்த நிலையென்றால் மற்றைய திரைப்படங்களின் நிலைமை??? இதனால்த்தான் எல்லோருமே கொண்டாடிய மிகச்சிறந்த திரைப்படங்கள் எவையும் (பெரிய நாயகர்கள் இல்லாத) யாழ் நகரில் வெளியாகவில்லை; எதிர்வரும் காலங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இந்த நிலை ஏற்ப்படாலாம். திருட்டு vcd களின் தாக்கம் திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வராதமைக்கு காரணம் என்பது எப்படி உண்மையோ அதேபோல திரையரங்கத்தினரின் விளம்பரங்கள் போதாமையும் மக்கள் திரையரங்கிற்கு வராமைக்கு முக்கியகாரணம்; விளம்பரத்தின் இன்றியமையாமையை இன்னமும் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் சரியாக உணராதது கவலையான விடயம்.
<br/><br/>
இப்போது மேட்டருக்கு வருவோம்; ஏன் வேலாயுதத்தை மனோகராவோ, ராஜாவோ வாங்கவில்லை? இம்முறை வேலாயுதத்தை விநியோகிக்க வந்தவர்கள் மிகவும் அதிக விலையை கூறியுள்ளார்கள்; எப்படி ஓடினாலும் கிட்டாத தொகை அது. அது விநியோகிஸ்தருக்கும் நன்கு தெரியும். அது தெரிந்தும் அவர்கள் அந்த ரேட்டை கூறியதற்கு காரணம் அவர்களே வேலாயுதத்தை நேரடியாக திரையிடுவதுதான்; திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி தாங்களே வசூலை அள்ளுவது அவர்களின் நோக்கம். விஜய் படத்திற்கு இங்குள்ள மாக்கெட் அவர்களுக்கே தெரிந்திருக்கும்போது இங்கு பழம் தின்று கொட்டை போட்ட ராஜா, மனோகர உரிமையாளர்களுக்கு தெரியாதா? அவர்கள் மறுக்கவே ஒரு மூத்திர சந்திலுள்ள செல்லா (நாதன்ஸ்) திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி விநியோகிஸ்தர்களே வேலாயுதத்தை யாழ்நகரில் வெளியிடுகின்றார்கள்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTQ0W-Wv_kNutcYfg74r6uVcc0tpSRzrFV1kip8hnZuiZ2_X9Fyb9AUxqAr63dwfQL9VNtjjTVO5U0Y2_YDpEo16Fdx5dHrotAsNa7Yr5irwIwkr3bclq24YASG6tN7sT3nAacYuFVesAr/s1600/vijay_velayutham_movie_wallpapers_01.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 261px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTQ0W-Wv_kNutcYfg74r6uVcc0tpSRzrFV1kip8hnZuiZ2_X9Fyb9AUxqAr63dwfQL9VNtjjTVO5U0Y2_YDpEo16Fdx5dHrotAsNa7Yr5irwIwkr3bclq24YASG6tN7sT3nAacYuFVesAr/s400/vijay_velayutham_movie_wallpapers_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667349889037072850" /></a>
<br/><br/>
இப்படி யாப்பாணத்தில் வெளியிடப்படும் முதல் விஜயின் திரைப்படம் இதுதான். போதிய இடவசதி, வாகன பாக்கிங், சவுண்ட், விஷுவல் போன்றவற்றில் சிறப்பான தன்மை எதையும் கொண்டிராத செல்லா திரையரங்கால்; ராஜா அல்லது மனோகரா கொடுக்குமளவிற்கு வசூலை நிச்சயம் கொடுக்க முடியாது. ஆனாலும் விநியோகிஸ்தருக்கு கொள்ளை லாபம் உறுதி; அதேநேரம் இதுநாள்வரை ஈ கலைத்த செல்லா திரையரங்கிற்கும் குறிப்பிட்ட தொகை வாடகையாக கிடைக்க உள்ளது. மனோகராவும், ராஜாவும் அனைத்து பெரிய படங்களையும் வாங்கினால் மற்றவர்கள் என்ன செய்வது!! என செல்லா திரையங்கின் சார்பில் வாதிட்டாலும்; தமிழர்களின் 'ஒற்றுமையை' பயன்படுத்தி விநியோகிஸ்தர்கள் நல்ல காசு பார்க்கப் போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி.
<br/><br/>
செல்லா திரையரங்கு ராஜா, மனோகராவோடு போட்டி போடுவதென்றால் அதிக தொகை கொடுத்து போட்டிக்கு படத்தை வாங்கியிருக்கலாம்; ஆனால் இப்போது திரையரங்கை வாடகைக்கு கொடுத்திருப்பது விநியோகிஸ்தர்கள் எதிர்காலத்தில் இதே பாணியில் யாழ்நகரில் கொள்ளையடிக்க வழிசெய்ததை போலாகிடும். மனோகரா வேலாயுதம் திரைப்பத்தை திரையிட்டால் வேலாயுதம் திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் காட்சிகளில் குறிப்பிட்ட தொகை டிக்கட்டை தமது தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மூலம் விநியோகிக்க ஹச் நிறுவனம் மனோகராவை அணுகியது; பின்னர் செல்லா திரையரங்கில் வேலாயுதம் வெளியாவதால் ஹச் நிறுவனம் வேலாயுதம் திரைப்படத்தை கைவிட்டுவிட்டு இப்போது ஏழாம் அறிவினை வெளியிடும் ராஜா திரையரங்கை அணுகியுள்ளார்கள்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVKHHkZXmMuxw_bqpYpZKWiMj1w7GXFYGmjDGyoWLv2kMMi8pIl5P2ioKqsrjHnOE8NdIhGRwys0TykzWZKqDbo1LN66eANz0OEPDXAOkuF-PjmpUuucDAp2nnxskH3RnHAhPfs0Ggrlk8/s1600/Shahrukh-Khan-Soundarya-Rajinikanth-Latest-Images-Stills-www.tamiltinsel.com_1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 318px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVKHHkZXmMuxw_bqpYpZKWiMj1w7GXFYGmjDGyoWLv2kMMi8pIl5P2ioKqsrjHnOE8NdIhGRwys0TykzWZKqDbo1LN66eANz0OEPDXAOkuF-PjmpUuucDAp2nnxskH3RnHAhPfs0Ggrlk8/s400/Shahrukh-Khan-Soundarya-Rajinikanth-Latest-Images-Stills-www.tamiltinsel.com_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667349883000888210" /></a>
<br/><br/>
ரா-ஒன் திரைப்படத்தை மனோகரா வெளியிட தயாராக இருந்தாலும், விநியோகிஸ்தர்கள் சொல்லும் தொகை மலைக்க வைக்கிறது; 20 லட்சம் கேட்கின்றார்கள்! ஒரு முழுமையான ரஜினி படம் ஒன்றை திரையிடும்போது கொடுக்கும் தொகையின் பாதி இது. இந்த தோகையை கொடுத்து ஒரு டப்பிங் படத்தை முதல் முறையாக யாழ்நகரில் வெளியிட்டு விஷப்பரீட்சை மேற்கொள்ள மனோகரா தயாரில்லை. விகிதாசாரப்படி விநியோகம் செய்ய வினியோகிஸ்தர் தயாராக உள்ளபோதும் 70:30 விகிதத்தில் கேட்ப்பதால் திரையரங்கத்திற்கு கட்டுப்படியாகாது என்று கூறுகின்றார்கள். ஊழியர் சம்பளம், மின்சாரம், பொருட்சேதம் என செலவை பார்க்கும்போது குறைந்தது 55:45 தந்தால்தான் ஓரளவேனும் ஓகே என்கின்றார்கள். இப்போது ரா- ஒன்ணிற்கு பேரம் நடக்கின்றது; சுமூகமாக முடிந்தால் மனோகராவில் தீபாவளி அன்று ரிலீசாகும் சாத்தியம் உண்டு, இல்லையேல் யாழ் நகரில் ரா-ஒன் இல்லை.
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-44738847437339002082011-09-28T13:03:00.006+05:302023-02-01T01:13:35.746+05:30லசித் மலிங்க என்னும் நாகாஸ்திரம் <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOrf5ACh29mZPe365ieA5nXLZ92xgpiDW4JxxTADexUDZKhdhAioyoxpsVZjFY3ZF5XdFs7jCct0lWzMollclg9lkR_lOmqgyDQlKWvo4yyS4EnoAyx_cOzu0hSbK1XM5jkgoqnstlWEyB/s1600/malinga.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 348px; height: 378px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOrf5ACh29mZPe365ieA5nXLZ92xgpiDW4JxxTADexUDZKhdhAioyoxpsVZjFY3ZF5XdFs7jCct0lWzMollclg9lkR_lOmqgyDQlKWvo4yyS4EnoAyx_cOzu0hSbK1XM5jkgoqnstlWEyB/s400/malinga.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5657341098389429314" /></a>
<br/><br/>
மகாபாரதக் கதையில் கர்ணன் கையில் இருந்த நாகாஸ்திரம் ஒரு தடவைதான் கர்ணனுக்கு பயன்பட்டது. ஆனால் இன்று மலிங்க இருக்கும் அணியின் தலைவருக்கு மலிங்க என்னும் நாகாஸ்திரம் தேவைக்கேற்ப பயன்படுத்த உதவுகின்றது என்றால் அது மிகையான வார்த்தை இல்லை. எனக்கு தெரிந்து ஆரம்பகால ஷொஹைப் அக்தருக்கு பின்னர் ரசிகர்கள் காணும்போதெல்லாம் ஆர்ப்பரிக்கும் ஒரே பதுவீச்சாளர் மலிங்கதான். மலிங்க Run-up இல் பந்துவீச தயாராக இருக்கும்போது ஏற்ப்படுத்தப்படும் ரசிகர்களின் ஆரவாரம்கூட ஆரம்பகால ஷொஹைப் அக்தரை ஞாபகப்படுத்தும். என்னைக் கேட்டால் அக்தரின் வேஷன்-2 தான் மலிங்க என்பேன்.
<br/><br/>
அக்தர் அளவிற்கு வேகம் இல்லாவிட்டாலும்; விவேகத்தில் அக்தருக்கு மலிங்க எந்த விதத்திலும் குறைந்தவரில்லை. வக்கார்,வசீம்,அக்தர் வரிசையில் நான்காவது 'ஜோக்கர்' மன்னன் மலிங்கதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காதென்று நம்புகின்றேன். புதிய பந்தில் (New Ball) ஜோக்கர்களை வீசுவது சாதாரண விடயமல்ல; ஒரு சில பந்து வீச்சாளர்களால் ஆரம்ப ஓவர்களிலும் சிறப்பாக யோக்கர் வீச முடியுமாயினும், மலிங்க அளவிற்கு ஆரம்ப ஓவர்களில் யாராலும் ஜோக்கர்களை நேர்த்தியாக வீச முடியாது (இங்கிலாந்தின் 'டரன் கவ்' கூட இதில் கில்லாடி)
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEW5GaZILrs1pNQbKCH_KBt1jJPb8asN9WEutj_6pdv3M34HwC7_abEqF-8VKRkSu2_3iz_SyZq4ePyoDjyfPY0JqB3ixVsRPQckWYKQuVd-aYnlaqVPetZXuWPp6es0y6jDfJFejhvE9b/s1600/apr10malinga.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEW5GaZILrs1pNQbKCH_KBt1jJPb8asN9WEutj_6pdv3M34HwC7_abEqF-8VKRkSu2_3iz_SyZq4ePyoDjyfPY0JqB3ixVsRPQckWYKQuVd-aYnlaqVPetZXuWPp6es0y6jDfJFejhvE9b/s400/apr10malinga.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5657341100266152482" /></a>
<br/><br/>
ஒருநாள் போட்டிகளின் இறுதி பத்து ஓவர்களும், T/20 போட்டிகளின் இறுதி நான்கு ஓவர்களும் பந்து வீசுவதற்கு இன்றைய தேதியில் சிறந்த தெரிவாக மலிங்கவைவிட வேறு யாராகவும் இருக்க முடியாது. Full A Length Delivery (Blochold Arias), Yorker, Low Full Toss, Slow Delivery, Bouncer, Slow Ball Bouncer என பத்துவீச்சின் அத்தனை உக்திகளையும் பயன்படுத்தி இறுதி ஓவர்களில் மலிங்க ஆடும் கதகளியில் தப்பித்து ஓட்டங்களை குவிப்பதென்பது எதிரணியினருக்கு சாதாரண விடயமல்ல. பிரபலமான தொழில்சார் துடுப்பாட்ட வீரர்களே இறுதிநேரத்தில் மலிங்கவிற்கு திணறும்போது; பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிலை எப்படி இருக்கும்? அதிலும் பின்வரிசை 'இடதுகை' துடுப்பாட்ட வீரர்களின் நிலை ரொம்பவும் பரிதாபகரமாக இருக்கும்.
<br/><br/>
மலிங்காவின் சக வீரர்களும், இன்றைய சர்வதேச கிரிக்கட்டின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களும், மலிங்கவிற்கு அணித்தலைவர்களாக இருந்தவர்களுமான மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்ககார போன்றவர்களே மலிங்காவின் ஜோக்கருக்கு பதிலளிக்க முடியாதபோது; பாவம் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களால் என்னதான் செய்யமுடியும்? இறுதி நேரங்களில் மட்டுமல்ல, ஆரம்ப ஓவர்களிலும் மலிங்காவின் சிறந்த பந்துவீச்சு பல தடவை அணியின் வெற்றிக்கு வழிசமைத்துள்ளது. ஆனாலும் ஆரம்ப ஓவர்களிலும் பார்க்க இறுதி ஓவர்களில்த்தான் மலிங்க ஸ்பெஷலிஸ்ட்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJD-UYabw85ePNgSrYnwxCbxtlKjh8N9rNUrsDbFa6vY2yJNnZ10OKXBoqqBFgtq65cAAqdbVHyGIchh5hMnawcBq3l9_eUoy2IjYdjUTa2zm8iWGrfpJz0g3SPZhr686XQHYnAb6J2-4R/s1600/Lasith-Malinga-sri-lanka.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 241px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJD-UYabw85ePNgSrYnwxCbxtlKjh8N9rNUrsDbFa6vY2yJNnZ10OKXBoqqBFgtq65cAAqdbVHyGIchh5hMnawcBq3l9_eUoy2IjYdjUTa2zm8iWGrfpJz0g3SPZhr686XQHYnAb6J2-4R/s400/Lasith-Malinga-sri-lanka.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5657341103385522146" /></a>
<br/><br/>
எப்போதுமே பந்துவீச்சில் கலக்கிவரும் மலிங்க கடந்த 2 சாம்பியன் லீக் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தது அவர் சார்ந்த மும்பை அணிக்கு அவ்விரு போட்டியையும் வெற்றியாக மாற்றியது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் வைத்து 50 ஓட்டங்களை பெற்று இலங்கைக்காக ஒரு போட்டியையும் மலிங்க வென்று கொடுத்துள்ளார். இதில் குறிப்பட்டு சொல்லவேண்டிய முக்கியவிடயம் என்னவெனின் சென்னையுடனான போட்டியில் மலிங்காவின் துடுப்பாட்டத்தை 'மாஸ்டர் பாட்ஸ்மன்' சச்சின் மிகவும் விரும்பி ரசித்ததுதான். இதற்கு முன்னர் வேறு எந்த வீரரது துடுப்பாட்டத்தையும் சச்சின் அந்தளவிற்கு ரசித்து நான் பார்த்ததில்லை; சச்சினையே இம்ப்ரஸ் செய்த மலிங்கவிற்கு சராசரி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்வது கடினமா என்ன?
<br/><br/>
அப்படி மலிங்கவினால் இம்ப்ரெஸ் ஆனவர்களில் நானும் ஒருவன், ஆனால் இப்போதல்ல; மலிங்காவின் முதல்ப் போட்டியிலிருந்தே!!! 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் 6 விக்கட்டுகளை வீழ்த்தி அன்று மலிங்க இலங்கை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். வழமைக்கு மாறான ஆக்ஷன், இலங்கையில் வேறெந்த பந்துவீச்சாளருக்குமில்லாத பந்து வீச்சு வேகமென மலிங்க புதிதாக தெரிந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மலிங்கவால் சொல்லிக்கொள்ளும்படியாக பிரகாசிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மலிங்கவை அன்றைய இலங்கையின் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். அத்தப்பத்து பர்வீஸ் மஹரூபை நம்பிய அளவிற்கு மலிங்கவை நம்பவில்லை என்பதே உண்மை.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhketDHskHJ5aZKDAvxHC73sgSlPhYIUuyDPlacn4eyCh4tQtfCxg3hcftzNOC0UziZFBPS7ACdtqrgrLR917s0ocYYnTeelINU0YI58KNUYJj8Zt8mzNAll55WxFpWLSRmWYquF840HFzD/s1600/128625.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 327px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhketDHskHJ5aZKDAvxHC73sgSlPhYIUuyDPlacn4eyCh4tQtfCxg3hcftzNOC0UziZFBPS7ACdtqrgrLR917s0ocYYnTeelINU0YI58KNUYJj8Zt8mzNAll55WxFpWLSRmWYquF840HFzD/s400/128625.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5657341101826303682" /></a>
<br/><br/>
மார்வனுக்கு பின்னர் மஹேல தலைமை ஏற்ற சிறிது காலத்தில் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் மீண்டும் கலக்க ஆரம்பித்த மலிங்க அடுத்து இடம்பெற்ற நியூசிலாந்து தொடரின் டெஸ்ட் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார். ஆனாலும் அடுத்து சில மாதங்களில் இடம்பெற்ற 2007 உலகக்கிண்ணப் போட்டிகள்தான் மலிங்கவை மிகப் பிரபலமாக்கியது. தென்னாபிரிக்காவிற் கெதிராக மலிங்க தொடர்ச்சியாக வீழ்த்திய 4 விக்கட்டுகள் (Double Hat-Trick) மலிங்கவை மிகவும் பிரபலாமாக்கிற்று; ஆனாலும் மலிங்காவின் புகழ் உச்சத்தை அடைந்தது என்னமோ IPL போட்டிகளால்த்தான் என்பதை மறுக்க இயலாது.
<br/><br/>
மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சினுக்கு அடுத்து அதிக ரசிகர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பையும் பெற்ற லசித் மலிங்க; சொந்த நாட்டு அணிக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வை அறிவித்தபோது பலத்த சர்ச்சையும், மாற்றுக் கருத்தும் எழுந்தன. சொந்த நாட்டுக்காக ஆடுவதிலும் பார்க்க பணத்திற்கு மலிங்க முன்னுரிமை கொடுத்துள்ளதாக இலங்கையின் தீவிர விசுவாசிகளும், மலிங்கவை பிடிக்காமல் கடுப்பில் இருந்தவர்களும் மலிங்கவிற் கெதிராக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdP9etHg-Z21zOZOf6OKdcwPMcXg5vttm2oiYg0IfqS94CgiWgXuXJNZynoM6He1EBGUcroPX0mjKwCc4IlLJ334VeBPM8E6DOYHqbG9BR_S2pdA2AegYHk7LUmzE_yUigz4fWAzYPZT8A/s1600/22malinga.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 319px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdP9etHg-Z21zOZOf6OKdcwPMcXg5vttm2oiYg0IfqS94CgiWgXuXJNZynoM6He1EBGUcroPX0mjKwCc4IlLJ334VeBPM8E6DOYHqbG9BR_S2pdA2AegYHk7LUmzE_yUigz4fWAzYPZT8A/s400/22malinga.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5657342025279758402" /></a>
<br/><br/>
அந்த நேரத்தில் இலங்கையின் சமகால தூண்களும், மலிங்காவின் அணித்தலைவர்களாக இருந்தவர்க்களுமான மஹேல ஜெயவர்த்தனாவும் குமார் சங்கக்காரவும் மலிங்கவிற்கு ஆதரவாக தம் கருத்துக்களை முன்வைத்தனர். டெஸ்ட் போட்டிகளில் மலிங்க ஆடுவதால் ஏற்ப்படும் உபாதை மலிங்கவை பல மாதங்களுக்கு கிரிக்கட்டில் இருந்து தள்ளி வைப்பதாகவும்; இதற்கு டெஸ்ட் கிரிக்கட்டின் ஓய்வு சரியான முடிவே என்பதும் அவர்களது கூற்று.
<br/><br/>
மலிங்க டெஸ்ட் போட்டிகளின்போது ஏற்ப்பட்ட காயம் காரணமாக பல தடவைகள் மாதக்கணக்கில் கிரிக்கட் விளையாடாமல் இருந்தது என்னமோ உண்மைதான்; ஆனால் IPL போட்டியென்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இதே காயத்தை காரணம் காட்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பாரா என்பது மிகப்பெரும் சந்தேகம்தான். உண்மையை சொல்வதென்றால் IPL என்னும் பணம் கொட்டும் பூதத்திடம் செல்வதற்கு மலிங்க தன் உபாதையை நன்றாக பயன்படுத்தி இருந்தார். நாட்கணக்கில் வெய்யிலில் நின்று குறைந்த சம்பளத்திற்கு உடல் உபாதையை வாங்குவதற்கு; வெறும் நான்கு ஓவர்கள் பந்துவீசி கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்கு யாருக்குத்தான் கசக்கும்!!!!
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEI8Z4jukUU1IVUNncmfPTIHdlqDTwhcOHOKJkbsLsFrD4hcQERGCTaAQYdW2AxgfzZPUVsCO8i4yr5Wzqcpl7QF0POgCrdsTa71tObuAgvxqpNy-FUf6gJU8Or05sQikbb2VFAAZOUkFY/s1600/Sachin-Tendulkar-speaks-with-Malinga-110514-G400h.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 338px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEI8Z4jukUU1IVUNncmfPTIHdlqDTwhcOHOKJkbsLsFrD4hcQERGCTaAQYdW2AxgfzZPUVsCO8i4yr5Wzqcpl7QF0POgCrdsTa71tObuAgvxqpNy-FUf6gJU8Or05sQikbb2VFAAZOUkFY/s400/Sachin-Tendulkar-speaks-with-Malinga-110514-G400h.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5657342032982657426" /></a>
<br/><br/>
இலங்கை ரசிகர்கள் மற்றும் கிரிக்கட் ஆர்வலர்கள் பக்கம் நின்று பார்த்தால் மலிங்க செய்தது மிகப்பெரும் தவறுபோல் தோன்றினாலும் மலிங்கவை பொறுத்தவரை அது சரியான முடிவே. மலிங்க பணத்திற்காக இந்த முடிவை எடுத்துக் கொண்டதாகவே வைத்துக்கொண்டாலும்; டெஸ்ட் போட்டிகளின் உபாதை காரணமாக மலிங்க மாதக்கணக்கில் ஆடாதபோது இலங்கைக்காக பல ஒருநாள், T/20 போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது; அந்தக்குறை இப்போது இல்லை. மலிங்க டெஸ்ட் கிரிக்கட்டில் இல்லாத போதும்; ஒருநாள், T/20 போட்டிகளில் தன்னாலான முழுப் பங்களிப்பையும் தன் நாட்டிற்காக கொடுக்கிறார்; சமீபகாலத்து இலங்கையின் ஒருநாள், T/20 வெற்றிகளை பார்த்தால் இதை புரிந்து கொள்ளலாம். அதே சமயம் மலிங்க இல்லாத குறை சமீபத்தைய டெஸ்ட் போட்டி முடிவுகளில் நன்கு புலப்படுகின்றதையும் மறுக்க முடியாது.
<br/><br/>
மலிங்கவின் பந்துவீச்சு எப்படி சிறப்பானதோ அதைவிட ஒருபடி அதிகம் சிறப்பானது மைதானத்தில் அவரது நடத்தை. இதுவரை எந்த துடுப்பாட்ட வீரருடனும் மலிங்க முறைத்தோ, தர்க்கம் பண்ணியோ பார்த்ததில்லை; ஒரு விக்கட்டை வீழ்த்திய பின்னர் குறிப்பிட்ட துடுப்பாட்ட வீரரை முகம் பார்த்து கேலிபண்ணி மலிங்க தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில்லை; தன் பந்திற்கு ஆறு, நான்கு என துடுப்பாட்ட வீரர்கள் விளாசியபோதுகூட மலிங்க புன்னகையைத்தான் உதிர்ப்பவர்; எந்த அணிக்காக ஆடியபோதும் தன் அணித்தலைவருடனோ, சக வீரர்களுடனோ இதுவரை எந்த பிணக்கிலும் மலிங்க ஈடுபட்டதில்லை; எந்தப்பொழுதிலும் நடுவருடன் அவரது தீர்ப்பை எதிர்த்து மலிங்க விவாதித்ததில்லை; இப்படியான உயரிய பண்புகளுடன் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்!!!
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilmLBO18ZcK-FFPvouOiFAel5Z0pzGgkQTtIw-Nwbhllymfsn7aic4DvXmEZ7kYXz1QW5DaDJGTrN2nsNd__yRwOKfb_X0wuVbzr4jqwU9sxapEXLMjboo6vIXfCZdwpPzkuuNqL_IueRD/s1600/lasith-malinga-2011-4-1-8-0-49.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilmLBO18ZcK-FFPvouOiFAel5Z0pzGgkQTtIw-Nwbhllymfsn7aic4DvXmEZ7kYXz1QW5DaDJGTrN2nsNd__yRwOKfb_X0wuVbzr4jqwU9sxapEXLMjboo6vIXfCZdwpPzkuuNqL_IueRD/s400/lasith-malinga-2011-4-1-8-0-49.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5657342026877749522" /></a>
<br/><br/>
ஆனால் இதே லசித் மலிங்காவை 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்முக வர்ணனையில் கேவலப்படுத்திய பெருந்தகை ஒருவர் இருக்கிறார்; அவர்தான் அர்ஜுன ரணதுங்க. மலிங்கவின் தலைமுடியையும், அவரது இமையில் குத்தப்பட்ட தோட்டினையும் சுட்டிக்காட்டிய அர்ஜுனா மலிங்கவை ஒரு ஒழுக்கமில்லாதவர் என்று கூறியிருந்தார். ஒரு பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக மகேலா, சங்கா, முரளி, வாஸ் இப்படியானவர்களை கூட்டிச்செல்லலாம்; மலிங்காவை கூட்டிச்செல்ல முடியுமா? என்று அன்று அர்ஜுனா கேள்வி எழுப்பினார். ஒரு உயரிய பண்புள்ள ஒரு கிரிக்கட் வீரரை அவரது புறத்தோற்றத்தில் வைத்து எடைபோட்டமை அர்ஜுனா போன்ற மிச்சிறந்த வீரருக்கு அழகாக இல்லை.
<br/><br/>
மலிங்காவின் புறத்தோற்றம் அவரது மனதுக்கு பிடித்தமானது, ஒருவரது புறத்தோற்றம்தான் அவரது ஒழுக்கத்தை தீர்மானிக்கின்றது என்கின்ற அர்ஜுனாவின் அன்றைய கூற்று அபத்தமான ஒன்று. எந்த மாணவனும் மலிங்காவின் புறத்தோற்றத்தில் இம்ப்ரெஸ் ஆகப்போவதில்லை, அப்படி ஆனாலும் அதிலென்ன தவறு? தலை முடியை வளர்த்து, கலர் அடிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா? அதிகமான சிறுவர்கள் இன்று மலிங்கவை முன்னுதாரணமாக கொண்டு பந்துவீசவே எத்தனிக்கிறார்கள், தலைமுடியை வளர்ப்பதில் அல்ல என்கின்ற கூற்றில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை; சிறுவர்கள் விளயாடும்போதுகூட போல்ட் முறையில் விக்கட்டை வீழ்த்தினால் 'மலிங்க ஸ்டையில்' என்றுதான் சொல்கிறார்கள். மலிங்காவின் தலைமுடியைவிட மிகமிக அதிகமாக இம்ப்ரெஸ் செய்வது அவரது 'ஜோக்கர்'கள்தான்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8LG67nUWRd5_FlvEOLsPvXzszqiByJJAlqyrdSz4CobaIJV80B3mLJ15e3Ll-4EL8yrgK2ljWucLe0ynvSLdth1wI0grOViJq1KrphFJj7ZXfEa-EFqVPx4fdNIgW761S1raMl2jqvObX/s1600/malinga_tycdeip.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 235px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8LG67nUWRd5_FlvEOLsPvXzszqiByJJAlqyrdSz4CobaIJV80B3mLJ15e3Ll-4EL8yrgK2ljWucLe0ynvSLdth1wI0grOViJq1KrphFJj7ZXfEa-EFqVPx4fdNIgW761S1raMl2jqvObX/s400/malinga_tycdeip.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5657342031136769570" /></a>
<br/><br/>
உடல்நிலை ஒத்துளைக்குவரை, உடல் உபாதைகள் தொந்தரவின்றி தான் சார்ந்த அணியினருக்கு மலிங்கவும், மலிங்கவின் ஜோக்கர்களும் எப்போதும் விக்கட்டுகளை அள்ளிக்கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையில் சமகால கிரிக்கட்டின் எனக்கு பிடித்த ஒரே வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னுமின்னும் பல விக்கட்டுகளை தகர்க்க அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானுன் வாழ்த்துக் கூறுகின்றேன்.............
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-38040371398558153102011-07-18T00:10:00.014+05:302023-02-01T01:13:53.216+05:30நானும் சினிமாவும் - பாகம் 1 <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7ZY4atmjlBLcE3wjutEfksuE5ACjsMmwwVPjDTrcyH4X2BJVZt83Ht-RRuu4VME6kVkLNOwHzILxIiZgq-gF773nijLuuHrO8RGqqNyHBuQgYdFQq0f46Ejj0rGmXBTXLK3LMAQEmpdu9/s1600/Cinema2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 256px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7ZY4atmjlBLcE3wjutEfksuE5ACjsMmwwVPjDTrcyH4X2BJVZt83Ht-RRuu4VME6kVkLNOwHzILxIiZgq-gF773nijLuuHrO8RGqqNyHBuQgYdFQq0f46Ejj0rGmXBTXLK3LMAQEmpdu9/s320/Cinema2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5630402309141234402" border="0" /></a>
<br/><br/>
நிறைய விசயம் எழுதணுமின்னு தோணுது, எந்த வகையில் வகைப்படுத்தி எழுதுவதென்று தெரியல!! மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதுவதால் பதிவில் தொடர்ச்சி இருக்காது. குறிப்பிட்ட ஒவ்வொரு விடயங்களையும் பற்றி எழுதும்போது ஆண்டுகள் கிராமமாக வராமல் சுழற்ச்சியில் வரும். இது எனது எண்ணங்களின் பதிவு என்பதால் போரடிக்குமென நினைப்பவர்கள் வேறொரு பதிவில் சந்திக்கலாம். <a href="http://balapakkangal.blogspot.com/">பாலாவின் பக்கங்கள்</a> <span style="font-weight:bold;">பாலா</span> கிரிக்கட் தொடரை எழுதுவதுதான் எனது இந்த பதிவின் இன்ஸ்பிரேஷன். இது பெருந்தொடர் என்று என்ன வேண்டாம், ஜஸ்டு 4 அல்லது 5 பதிவுகள்தான், யாராவது இந்த பதிவை தொடரவிரும்பினாலும் தொடரலாம்.
<br/><br/>
மனிதன்; இது நான்பார்த்த முதல்த் திரைப்படம். அன்று ஆரம்பித்த ரஜினி மற்றும் சினிமா மீதான காதல்(மோகமல்ல) இன்றுவரை தணியவில்லை, இனிமேலும் தணிய வாய்ப்பில்லை :-) 1991 ஆம் ஆண்டுவரை நான் பார்த்த திரைப்படங்களில் 90 சதவீதமானவை ரஜினிகாந்த், மற்றும் விஜயகாந் நடித்த திரைப்படங்கள்தான். இவர்கள் இருவருக்குமடுத்து அன்று கார்த்திக், பிரபு திரைப்படங்களை விரும்பி பார்த்திருக்கிறேன்.
<br/><br/>
ஏனைய திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளை மட்டும் பார்த்தவிட்டு மீதி நேரங்களில் முற்றத்தில்; கிரிக்கட் அடித்ததுதான் ஞாபகத்தில் உள்ளது. அன்றைய நாட்களில் என் மனதில் ஹீரோன்னா அது ரஜினிதான்(இன்று வரைக்கும், எப்போதுமே). அன்று எனக்கு கமல், மோகன் இருவருக்குமிடையில் உருவத்தில் பெரிதாக வித்தியாசம் தெரியாது; இருவரையும் அழுகுணி நடிகர்கள் என்று சொல்லி இவர்கள் படங்களை சிறுவயதில் பார்ப்பதில்லை. பின்னாட்களில் மோகனின் திரைப்படங்களை பாடல்களுக்காக தேடித்தேடி பார்த்துள்ளேன்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjmgwaBFfB1gz9_nAWZHSooYBEAFf_l68WUoA8_YV5jM_hf1V2Ba-n7HJMmFB9H5krA9wFw3OlpwpIhevOe_g3KAqz2rbXiCCYZ_Fd3l4_LvLd1NLs9rq6eSCGVwSryEcM48YBw9yRtQLj/s1600/RAJ+%2526+VIJAI.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 157px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjmgwaBFfB1gz9_nAWZHSooYBEAFf_l68WUoA8_YV5jM_hf1V2Ba-n7HJMmFB9H5krA9wFw3OlpwpIhevOe_g3KAqz2rbXiCCYZ_Fd3l4_LvLd1NLs9rq6eSCGVwSryEcM48YBw9yRtQLj/s320/RAJ+%2526+VIJAI.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5630401425532540786" border="0" /></a>
<br/><br/>
90 களில் ஆரம்பத்தில் ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் உக்கிரமடைந்த நிலையில் புதிய திரைப்படங்களை பார்ப்பது சாத்தியமில்லாமல் போயிற்று, அக்காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்களில் ஓரிரண்டு திரைப்படங்கள்தான் யாழ்ப்பாணத்திற்கு கேசட்டாக வந்தன; அவற்றில் வீரா, வள்ளி, சின்னத்தம்பி, கார்த்திக் நடித்த சீமான், சரத்குமார் பிரபுதேவாவின் 'இந்து' போன்றவை அன்று புதிய திரைப்படங்கள் என்று சொல்லப்பட்ட திரைப்படங்கள். வேறு புதிய திரைப்படங்கள் கேசட்டாக வந்தது ஞாபகத்தில் இல்லை. அக்காலப்பகுதியில் நான் அதிக தடவைகள் பார்த்த திரைப்படங்கள் என்றால் அவை ரஜினியின் சிவா மற்றும் விஜயகாந்தின் ராஜநடை.
<br/><br/>
ஈழப்போரின் உக்கிரம் அதிகரித்திருந்த நிலையில் இந்த காலப்பகுதியில் அறிமுகமாகிய அஜித், விஜய், பிரஷாந்த் போன்ற நடிகர்களையோ; அவர்களின் திரைப்படம், ஏன் புகைப்படத்தை கூட 1996 வரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரு மிகப்பெரும் இடம்பெயர்வின் பின்னர் 1996 இல்தான் அன்றைய புதிய தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களை முதல் முதலாக பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்படியாக அடுத்த தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களில் நான் பார்த்த முதல் திரைப்படம் 'பூவே உனக்காக'.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW8Npi8WyOYqTcz3vR3qrvT7MNimQOzOwzi3jB1_kpChNqN6sSMMOrp6pXz39rhTX0HWF1GPNfAms99nQ_Bt1qYDLGJJj-I8pcezp8MDF2fpJoGb7ZIC4QoyEMvTKGLT8cZN47PJuFpFN4/s1600/Poove-Unnakkaga-6.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 229px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW8Npi8WyOYqTcz3vR3qrvT7MNimQOzOwzi3jB1_kpChNqN6sSMMOrp6pXz39rhTX0HWF1GPNfAms99nQ_Bt1qYDLGJJj-I8pcezp8MDF2fpJoGb7ZIC4QoyEMvTKGLT8cZN47PJuFpFN4/s320/Poove-Unnakkaga-6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5630403282260361362" border="0" /></a>
<br/><br/>
அன்று என்னை மிகவும் பாத்தித்த, எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்தது. அந்த காலப்பகுதியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் டீவி,டேக்,ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து ஒரேநாளில் நான்கு திரைப்படங்களை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை போட்டு பார்ப்பது வழக்கம். ஞயிறு இரவு முழுவதும் திரைப்படங்களை பார்த்துவிட்டு காலையில் பாடசாலை சென்ற நாட்களும் உண்டு, சிவராத்திரி என்றால் மாலை 6 மணி முதல் மறுநாள் மாலைவரை 7 அல்லது 8 திரைப்படங்களை தொடர்ந்து பார்த்த சம்பவமும் உண்டு. கடைசியில் எல்லா படமும் ஒன்றோடு ஒன்று மிக்ஸ்ஆகி மண்டையைப் பிச்சுக்கிட்டதும் உண்டு.
<br/><br/>
ஒரே அயலில், வாரம் ஒரு வீட்டில் இவ்வாறு திரைப்படங்கள் போடப்படுவது வழக்கம்; அவ்வாறு போடப்படும் திரைப்படங்களில் பாட்ஷா, முத்து, இந்தியன், பூவே உனக்காக, காதல் கோட்டை, உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்கள் அதிகமாக பார்க்கப்படும் திரைப்படங்கள். அப்போது சிலகாலம் வாரம் ஒரு வீட்டில் திரைப்படங்களின் தீபாவளியாக இருந்தது. இப்போது நினைத்தாலும் பசுமையான அழகிய காலமது..............
<br/><br/>
அன்று (15 ஆண்டுகளுக்கு முன்னர்) யாழ்ப்பாணத்தில் 'காதல் கோட்டை' திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் அஜித் ரசிகர்களாகவும்; 'பூவே உனக்காக' திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் விஜய் ரசிகர்களாகவும் தங்களை வெளிக்காட்டிக் கொண்டார்கள்; இன்றுவரை இங்கு பலர் அஜித்,விஜய் ரசிகர்களாக இருக்க இவ்விரு திரைப்படங்களும்தான் முக்கிய காரணம் (தீனா, கில்லி அப்புறம்தான்). ஒருவேளை அஜித் ரசிகன் 'பூவே உனக்காக'வையும், விஜய் ரசிகன் 'காதல்க் கோட்டை'யையும் முதலில் பார்த்திருந்தால் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களாகவும், விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களாகவும் இருந்திருப்பார்கள்!!!
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoMV42Ii_D8a-tkHhSwBX6vOEQEvi6Bcq5jGzxcHS1n2IF1gVTYNO13qmkO-Cpwh4f0RwBRcfOQHH7jsYDhv8OdtPGdPkIGigdlfO9E3BopkEuU6CnM4LwqySMXPA8aID9ZRPp0xdi5xRN/s1600/vijay3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 278px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoMV42Ii_D8a-tkHhSwBX6vOEQEvi6Bcq5jGzxcHS1n2IF1gVTYNO13qmkO-Cpwh4f0RwBRcfOQHH7jsYDhv8OdtPGdPkIGigdlfO9E3BopkEuU6CnM4LwqySMXPA8aID9ZRPp0xdi5xRN/s320/vijay3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5630401419336255842" border="0" /></a>
<br/><br/>
நான் பூவே உனக்காக முதலில் பார்த்ததால் எனக்கு விஜயை அப்போது பிடித்திருந்தது, சினிமா பற்றி விவாதிப்பவவர்கள் அருகில் இல்லாததால் நல்லவேளை அன்று அஜித்தில் வெறுப்பு ஏற்படவில்லை. விஜயின் அத்தனை திரைப்படங்களையும் அன்று ரசித்துப் பார்ப்பது வழக்கம், விஜயின் அட்டர் பிளாப் திரைப்படங்களையும் ரசித்துள்ளேன்; அதேநேரம் அஜித், பிரஷாந்த் திரைப்படங்களையும் பார்க்கத் தவறியதில்லை. அஜித் திரைப்படங்களில் காதல் கோட்டை, வான்மதி, பவித்திரா, நேசம், ஆசை திரைப்படங்களும் பிரஷாந்தின் மன்னவா, ஆணழகன், திருடா திருடா திரைப்படங்களையும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.
<br/><br/>
சிலகாலங்களின் பின்னர் இந்தியாவில் படம் வெளியாகி ஒரு வாரத்தினுள் மினி திரையரங்குகளில் திரைப்படங்களை போட்டுவிடுவார்கள், அந்த காலப்பகுதியில் எந்த திரையரங்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கவில்லை. அதிகமான மினி திரையரங்குகளில் அந்தமாதிரி படங்கள் போடப்படுவதால் அதிகமான பெற்றோர் தம் பிள்ளைகள் மினி திரையரங்கிற்கு செல்ல விரும்புவதில்லை. ஆனால் எனக்கு மினி திரையரங்கில் சென்று படம் பார்க்க வீட்டில் எந்த தடையும் போடவில்லை, வீட்டிற்கு தெரிந்தே நான் திரையரங்கு சென்று பார்த்த முதல் திரைப்படம் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் பார்த்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 6 வயதில் இரு தடவைகள் (ராஜாதி ராஜா, பணக்காரன்) திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தாலும் பெரியதிரை அதிகம் ஞாபகத்தில் இல்லை என்பதால் ஓரளவு பெரியதிரையில் மினியில் படம் பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWJcqg0OhsjuN_Nj0JpO7-E2ypy2r-JXK243w3fykSy2doF6HR0v_pajvxF5PimYJyZcMlF2kL2Bh3xh_OU4UMlFe7hqLOgYaUEIcHK9RqLU9Xzx4UlnMUxwMtxgshIG4XyY5Vj39sxdAN/s1600/KadhalukkuMariyathai_mp4_snapshot_01_33_22_2010_07_11_10_06_58.png"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 143px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWJcqg0OhsjuN_Nj0JpO7-E2ypy2r-JXK243w3fykSy2doF6HR0v_pajvxF5PimYJyZcMlF2kL2Bh3xh_OU4UMlFe7hqLOgYaUEIcHK9RqLU9Xzx4UlnMUxwMtxgshIG4XyY5Vj39sxdAN/s320/KadhalukkuMariyathai_mp4_snapshot_01_33_22_2010_07_11_10_06_58.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5630401415685871282" border="0" /></a>
<br/><br/>
தொடர்ந்து சிலகாலம் மினி திரையரங்கில் புதிய திரைப்படங்கள் எது வந்தாலும் ஆஜராவது வழக்கம், டிக்கட் காசும் 10 ரூபாதான் என்பதால் பைனான்சியல் பிரச்சினைகளும் இருக்கவில்லை :-) அடுத்து மினி திரையரங்கில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் 'மினி'யாக ஷாலினியும் விஜயும் நடித்த பாசிலின் காதலுக்கு மரியாதை. காதலுக்கு மரியாதைக்கு பின்னர் விஜய் மீது சற்று அதிக ஈடுபாடு உண்டாயிற்று அந்த ஈடுபாடு 'யூத்' திரைப்படம்வரை வரை என்னை விஜய் திரைப்படங்களை தொடர்ந்து ரசிக்க வைத்தது. யூத் திரைப்படம் முதல்முதலாக என்னை விஜய்க்கு எதிராக மாற்றியது. காரணம் என்கூட இருந்த ஒரு விஜய் ரசிகர்!!!
<br/><br/>
எனக்கு என்னதான் விஜய் மீது அன்று ஈடுபாடு இருந்தாலும் ரஜினி எப்போதுமே என் மன சிம்மாசனத்தில் நிரந்தரமாக உட்கார்ந்திருந்தார். ரஜினியின் பாபா வெளிவரும் நேரத்தில்தான் விஜயின் யூத் திரைப்படமும் வெளிவர இருந்தது.பாபாவுக்கு போட்டியாக யூத்தினை கூட இருந்த குறிப்பிட்ட விஜய் ரசிகர் ஒப்பிட்டு விவாதித்து அந்த நொடியிலேயே விஜய் மீதிருந்த ஈடுபாடு துண்டுதுண்டாக்கியது!! பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் என எனக்கு பிடித்த விஜய் படங்களையே பின்னர் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது(ஆனாலும் இப்போதும் அத்திரைப்படங்களை பார்க்கும்போது ஏதோ ஒன்று ஈர்ப்பது உண்மை).<span style="font-weight:bold;"> சில</span> விஜய் ரசிகர்கள் என்னதான் விஜயை அன்று ரஜினியுடன் ஒப்பிட்டாலும் விஜய் ரஜினியை 'தலைவர்' என்று வாய்க்குவாய் சொல்லியதால் விஜய் மீது வெறுப்பு ஏற்ப்படவில்லை.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl3pIxBM0i5a0b8vvGU_JZi1GtG-aJ3Ys7MdST9dlJ4L1ViAdtV6nLgOR2p9uGbn-rvgYFGKcg6mInAWgWbbh_X4CpLG_a7jknLSj_RW14L0gqGLcn7C_deqC-YBEuLAgYeNlAhyBBmIQR/s1600/Vij_Indianexp_02Jun.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl3pIxBM0i5a0b8vvGU_JZi1GtG-aJ3Ys7MdST9dlJ4L1ViAdtV6nLgOR2p9uGbn-rvgYFGKcg6mInAWgWbbh_X4CpLG_a7jknLSj_RW14L0gqGLcn7C_deqC-YBEuLAgYeNlAhyBBmIQR/s320/Vij_Indianexp_02Jun.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5630401418824275138" border="0" /></a>
<br/><br/>
தொடந்து தன் திரைப்படங்களில் ரஜினியின் பெயரையோ, ரஜினி படப்பெயரையோ உபயோகித்து வந்ததாலும். கில்லி வெற்றி விழாவில் ரஜினி காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாலும்; ரஜினியும் அமிதாப்பும் என் கடவுள்கள் என்று சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததாலும் சச்சின் திரைப்படம் வெளிவரும்வரை விஜய்மீது வெறுப்பை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் சச்சின் திரைப்படத்தை சந்திரமுகியுடன் விஜய் வெளியிட்டதன் நோக்கம் அடிப்படை அறிவுள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்குமே நன்கு தெரியும். அந்த நிகழ்வின் பின்னர் எந்த ரஜினி ரசிகனுக்கும் விஜய் மீது வெறுப்பு ஏற்ப்படுவது ஆச்சரியமல்ல!!! ஆனாலும் விழுந்தும் மீசையில் மன் ஒட்டாதவாறு விஜய் சந்திரமுகி வெற்றிவிழாவில் ரஜினியை தலைவா, தலைவா என உருகினாலும் விஜய் மீதிருந்த கோபம் குறையவில்லை.
<br/><br/>
அந்த கோபம் லயோலாக்கலூரி வாக்கெடுப்பின் பின்னைய சம்பவங்களினால் பலமடங்கு அதிகமாகி இன்று விஜயை பரம எதிரி போல் பார்க்கவைத்து விட்டது. ஆரம்பத்தில் என் மனதிற்கு பிடித்த விஜய் இப்போ ரொம்ப தூரத்தில்!! ஆனாலும் இப்பவும் தொலைக்காட்சியில் 'பூவே உனக்காக' திரைப்படம் போனால் நிச்சயம் பார்ப்பேன், விஜயையும் தாண்டி அதில் ஏதோ ஒரு பீல் கிடைக்கறது............ இந்த விடயங்களை விஜயை சிறுமைப்படுத்தும் நோக்கில் நான் கூறவில்லை; நான் பார்த்த சினிமாவில் எனக்குள் விஜயின் பயணம்தான் நான் மேற்கூறியவை.
<br/><br/>
அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் பற்றியும், நம்ம ஹீரோயின்ஸ் பற்றியும், இன்னபிற விடயங்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் :-)
<br/><br/>
<span style="font-weight:bold;">தொடரும்............</span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-80641213095120027412011-07-15T15:16:00.001+05:302023-02-01T01:14:14.202+05:30தெய்வத்திருமகள் - எனது பார்வையில் <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF4CiqFa7O1Id2mYF3X3_kZsDJ5r5bTsActBb7FNyqGxXrFVJUNlbGY82p3CzmNq9yLI8GC_RDqpWE2L2Sc9xlAHuik2vQC7AwFVVa__RH0onvdSgpyy5fIHydakzZhNbSQcNItL8bTzIj/s1600/download_latest_Deiva_Thirumagan_tamil_mp3_songs_free.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF4CiqFa7O1Id2mYF3X3_kZsDJ5r5bTsActBb7FNyqGxXrFVJUNlbGY82p3CzmNq9yLI8GC_RDqpWE2L2Sc9xlAHuik2vQC7AwFVVa__RH0onvdSgpyy5fIHydakzZhNbSQcNItL8bTzIj/s320/download_latest_Deiva_Thirumagan_tamil_mp3_songs_free.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5629518520294703330" /></a>
<br/><br/>
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, ஸ்ரீ ராஜகாளி அம்மன் மீடியாஸ் மோகன் நடராஜன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷும், படத்தொகுப்பாளராக ஆண்டனியும் பணியாற்றியுள்ளனர். விக்ரம் தவிர பேபி சாரா, அனுஷ்கா, அம்லா பால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
<br/><br/>
'படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்கும் விக்ரம்' என்று சொல்வது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை ஒத்தது என்பதை விக்ரம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி விக்ரமின் நடிப்பை சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை; தெய்வதிருமகளில் விக்ரமின் நடிப்பு விருதுகளுக்கு அப்பாற்ப்பட்டது. என்னைக் கேட்டால் விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த பெர்போமன்ஸ் என்று தெய்வத்திருமகன் 'கிருஷ்ணா'வைத்தான் சொல்வேன்.
<br/><br/>
ஆம் தெய்வத்திருமகளில் கிருஷ்ணா கேரக்டரில் விக்ரம் வாழ்ந்திருக்கிறார், வார்த்தைகளால் சொல்லி விக்ரமின் நடிப்பினை விபரிப்பது சாத்தியமில்லை. என்னால் 'கிருஷ்ணா' பாத்திரத்திற்கு விக்ரம் தவிர்த்து வேறு எந்த நடிகரையும் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. விக்ரமால் மட்டுமே இது சாத்தியம் என்பதை உணர்ந்த இயக்குனர் விஜய் உண்மையிலே புத்திசாலிதான். படம் முழுவதும் தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தன் முத்திரையை பதித்துள்ள விக்ரம். நீதி மன்றில் கால் தடக்கி கீழே விழுந்த நிலையில் முகத்தில் கொடுக்கும் உணர்ச்சி சொல்லி புரியவைக்க முடியாது; அதுபோன்றே மன்றத்தின் உள்ளே இறுதிக் காட்சியிலும், திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியிலும் விக்ரமின் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBZruUsmVZsFxJheCA6MZfi-egOL-mwyapwgAAizFCdqjjQWhwX4X05RYUzR92s4XPRUmXRgjZ_qkjD5MqLjJK_gyuL2rwc7eWd6D2zcLfEoO6kGugyuRV_434LqenrMEQsZwIrY-Riftf/s1600/Deiva-Thirumagal.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 311px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBZruUsmVZsFxJheCA6MZfi-egOL-mwyapwgAAizFCdqjjQWhwX4X05RYUzR92s4XPRUmXRgjZ_qkjD5MqLjJK_gyuL2rwc7eWd6D2zcLfEoO6kGugyuRV_434LqenrMEQsZwIrY-Riftf/s320/Deiva-Thirumagal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5629518517388662674" /></a>
<br/><br/>
'நிலா'வாக பேபி சாரா; விக்ரமிற்கு அடுத்து தெய்வத்திருமகளின் முக்கிய பாத்திரம் பேபி சாராதான். எப்படித்தான் இந்த சின்ன குழந்தைகள் இவ்வளவு திறமைகளை கொட்டி நடிக்கிறார்களோ என்று மீண்டும் ஒருதடவை எண்ண வைத்துள்ளார் பேபி சாரா. 'நிலா' வரும் ஒவ்வொரு காட்சிகளும் அழகியல்; விக்ரமுடன் போட்டிபோட்டு நடித்த அந்த சிறுமிக்கு எந்தப்பாராட்டும் தகும். பாசம், பரிவு, செல்லக் கோபம், தவிப்பு, ஏக்கம், அழுகை, சிரிப்பு என எல்லா இடங்களிலும் மிகச்சிறப்பாக ஜொலிக்கின்றார் பேபி சாரா.
<br/><br/>
படத்தின் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் அம்லாபால் நடித்திருந்தாலும் அதிகமான காட்சிகளில் நடித்திருப்பதென்னவோ அனுஷ்காதான். ஆகா ஓகோன்னு இல்லையின்னாலும் தனக்கு கொடுத்ததை அனுஷ்கா சிறப்பாக செய்த்துள்ளார். வக்கீல் ட்ரெஸ்ஸும் அம்மணிக்கு நல்லாத்தான் இருக்கு :-) அம்லாபாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வேடம் இல்லை, அழகாக இருக்கிறார், அவளவுதான். படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்லும் பொறுப்பை சரியாக செய்த்திருக்கிறார் சந்தானம்; மனிதர் வரும் இடங்கள் ஒவ்வொன்றும் கலகலப்பாக இருக்கின்றது. அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் நகைச்சுவை கல்லாச்சாவி சந்தானத்தின் கைகளில்த்தான்.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrPMMk6sLARVzSWGU_v8m3OSDoiFRa14cRgENn5CKpQV2dxLIi6Au9bYoUVOPBWhBScZFyoNPy8OmxFgrKvbXeJdgqPc3uaZo1LbTWtwsWpnDGKNV5qxsOxpKqd8wScLaPQFaKWix4TA2s/s1600/Theiva-Thirumagan-Vikram-Anushka-04.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrPMMk6sLARVzSWGU_v8m3OSDoiFRa14cRgENn5CKpQV2dxLIi6Au9bYoUVOPBWhBScZFyoNPy8OmxFgrKvbXeJdgqPc3uaZo1LbTWtwsWpnDGKNV5qxsOxpKqd8wScLaPQFaKWix4TA2s/s320/Theiva-Thirumagan-Vikram-Anushka-04.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5629518524962711106" /></a>
<br/><br/>
நாசர் அப்பாட்டக்கர் வக்கீலாக வந்தாலும் ஏற்க்கனவே பல திரைப்படங்களில் பார்த்துப் பழகிய வக்கீல் கேரக்டர்தான். நாசர் தவிர வை.ஜி.மகேந்திரம், எம்.எஸ்.பாஸ்கர், 'கனாக்காணும் காலங்கள்' பாண்டி போன்றோரும் படத்தில் அப்பப்போ வந்து போனாலும் மனதில் ஒட்டவில்லை. அனுஷ்காவின் அசிஷ்டண்டாக வரும் பெண்ணும் அவரை ஜொள்ளுவிடும் நாசரின் அசிஷ்டண்டும் திரைக்கதையின் தேவைக்காக இயக்குனர் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களது பாத்திரங்கள் திரைக்கதைக்கு பெரிதாக ஒட்டவில்லை. அதேபோல அம்லா பாலின் தந்தை, சொக்கலேட் கம்பனி ஓனர், எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி பாத்திரங்கள் டெம்ளேட் பாத்திரங்கள்.
<br/><br/>
நீரவ்ஷாவின் கமெரா இதுவரை ஒருபோதும் ஏமாற்றியதில்லை, அது தெய்வத்திருமகளிலும் தொடர்ந்திருக்கிறது. தேவைக்கு ஏற்ப அழகான நேர்த்தியான ஒளிப்பதிவு. அதேபோல ஆண்டனியும் காட்சிகளை அழகாக கோர்த்திருக்கிறார், புதுமைகள் எதுவும் இல்லையெனினும் தேவைக்கு போதுமான படத்தொகுப்பு. பாடல்கள் அனைத்திலும் புகுந்து விளையாடியிருக்கும் ஜீ.வி.பிரகாஷ் பின்னணி இசையிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு எது வேண்டுமோ அதை அளவாக கொடுத்திருக்கிறார் ஜீ.வி.
<br/><br/>
அடுத்து திரைப்படத்தின் முக்கிய கர்த்தா இயக்குனர் விஜய்; நிச்சயம் இது 'மதராசப்பட்டினம்' போன்று விஜயின் முத்திரை குத்திய திரைப்படம் அன்று. விக்ரமின் கேரக்டரையும், கிருஷ்ணாவுக்கும் நிலாவுக்குமான உறவினையும் அடிப்படியாக கொண்டே திரைக்கதையை பின்னியிருப்பதால் இயக்குனர் சில இடங்களில் கம்பிரமயிஸ் ஆகவேண்டியிருப்பது தெரிகிறது. சில பாத்திரங்களும், காட்சிகளும் முன்னமே பார்த்தவை போன்று இருந்தாலும் கதையை பின்னுவதற்கு இயக்குனருக்கு வேறு வழி இல்லை என்பதால் அதை குறையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7w8Q8QDBga1PHX5XXjDquLhiBY1vamLgUSQw9FEutJBud3_BEmM7NPEz2Bz926Qzw4ZUZQ3e6T5vMr5XCi0HHwiAkOxFTQ5znzuy7Cc3zVbYTbwWo3R-P724VHiyhArd_v1ozoEi-WPwu/s1600/anushka_vikram_deiva_thirumagan_movie_stills.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 298px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7w8Q8QDBga1PHX5XXjDquLhiBY1vamLgUSQw9FEutJBud3_BEmM7NPEz2Bz926Qzw4ZUZQ3e6T5vMr5XCi0HHwiAkOxFTQ5znzuy7Cc3zVbYTbwWo3R-P724VHiyhArd_v1ozoEi-WPwu/s320/anushka_vikram_deiva_thirumagan_movie_stills.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5629518530625454866" /></a>
<br/><br/>
அதிகமான இடங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும் எவையும் அலுப்படிக்கவில்லை, இறுதிக்காட்சி இயக்குனரின் தனக்கே உரிய முத்திரை. மனதை கனமாக்கி திரையரங்கை விட்டு ரசிகர்களை வெளியேற்றும் உக்தி தெரிந்த இயக்குனர்களில் விஜையும் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். திரைக்கதையின் தொய்வை காமடியால் நிவர்த்திசெய்ய எத்தனித்த விஜய் அதில் வெற்றிகண்டுள்ளார் என்றே சொல்லலாம். ஆங்காங்கே சில காம்பிரமைஸ் செய்திருந்தாலும் (விழிகளில் ஒரு வானவில் பாடல் எதுக்கு விஜய் சார் ? )தெய்வத்திருமகளில் 'இயக்குனர்' விஜய் மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
<br/><br/>
நிச்சயமாக தெய்வத்திருமகள் ஒரு பக்கா கமர்சியல் படமல்ல, அதேநேரம் ஒரு ஆர்ட் திரைப்படமும் அல்ல, முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்க்ககூடிய ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று சொல்லலாம். விக்ரமிற்காகவும், அந்த குழந்தைக்காகவும் (பேபி சாரா) நிச்சயம் அனைவரும் திரையில் பார்க்க வேண்டிய திரைப்படம் தெய்வத்திருமகள்.
<br/><br/>
<span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);">தெய்வத்திருமகள் - ஜனரஞ்சகம் </span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-45530177549973390692011-07-06T22:51:00.011+05:302023-02-01T01:14:31.787+05:30சீரழிந்து வரும் யாழ்ப்பாண கலாச்சாரம்...... <br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3kWbfo3i05PGDxmee1jq2PWToe4fyVzey27Qxck7GpIXTbFU2Xi2zYsNgfPFimoZnbQNApECU1rwqEcA3k5TmHIZFMLSXMCy_xQV5Q5YTAPClq8XDmD6wjG42WPkXDEoAlRkWLDPVfAGt/s1600/Jaffna_Sri_Lanka.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 178px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3kWbfo3i05PGDxmee1jq2PWToe4fyVzey27Qxck7GpIXTbFU2Xi2zYsNgfPFimoZnbQNApECU1rwqEcA3k5TmHIZFMLSXMCy_xQV5Q5YTAPClq8XDmD6wjG42WPkXDEoAlRkWLDPVfAGt/s320/Jaffna_Sri_Lanka.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626299367387989298" /></a>
<br/><br/>
<span style="font-weight:bold;">
யாழ்ப்பாணத்தையும், யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளையும் எதிர்மறையாக மட்டுமே நோக்கப்போகிறேன் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பதிவு ஏமாற்றத்தை 'மட்டுமே' தரும்.</span>
<br/><br/>
இன்றைய திகதியில் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்களும் சரி, தம்மை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக்கொள்ள எத்தணிப்பவர்களும் சரி யாழ்ப்பாணத்தையும், யாழ் இளைஞர் யுவதிகளையும் அடையாளப்படுத்தும் விதமாக பயன்படுத்தும் முக்கிய சொல் 'சீரழிவு'. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்ப்பாடு யாழ்ப்பாண கலாச்சாரம் சீரளிந்துள்ளதாகவும், இளைஞர்களும் யுவதிகளும் கெட்டுப்போவதாகவும் இவர்களது குற்றச்சாட்டு. உண்மைதான்; இவர்களால் யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டப்படுவதில் எத்தனை சதவிகிதம் உண்மைத்தன்மை உள்ளதோ அதேபோல யாழ்ப்பாணம் வாழ்க்கைத்தரம், தொழில்நுட்பம், தொடர்பாடல், வசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, அபிவிருத்தி போன்ற பல விடயங்களில் முன்னேற்றம் அடைந்து வருவதிலும் அத்தனை சதவிகிதம் உண்மை உள்ளது; இதை யாராவது மறுக்க முடியுமா?
<br/><br/>
ஒவ்வொரு விசைக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்கின்ற நியூட்டனின் மூன்றாம்விதி விஞ்ஞானம் மட்டுமல்ல; அது உண்மையில் வாழ்க்கைத்தத்துவம். இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையும் நியூட்டனின் மூன்றாம் விதியை ஒத்ததுதான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கைத்தரம், தொழில்நுட்பம், தொடர்பாடல், வசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, அபிவிருத்தி என்பன அதிகரித்துவரும்போது அதன் பக்க விளைவுகளாக சில வேண்டத்தகாத மாற்றங்களும் இடம்பெறத்தான் செய்கின்றன, அதை யாரும் மறுக்க இயலாது; அப்படியான சில வேண்டத்தகாத நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதனால் ஏற்ப்படும் முன்னேற்றகரமான விடயங்களை அப்படியே புறக்கணிக்க முடியுமா??
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnTRZHEbI55ejgape_56f3BjUlWsZ9IABI93qLma5MJU3CS83rZMOcPaCNeqo9UythITreA1I6ymukBtdVEm4zjsiCUFuUwXwlAUsoppXq8vKPT1gxhNbYZ6TbtM8ANioBrLgbpNndEbXV/s1600/jaffna.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnTRZHEbI55ejgape_56f3BjUlWsZ9IABI93qLma5MJU3CS83rZMOcPaCNeqo9UythITreA1I6ymukBtdVEm4zjsiCUFuUwXwlAUsoppXq8vKPT1gxhNbYZ6TbtM8ANioBrLgbpNndEbXV/s320/jaffna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626301330430884690" /></a>
<br/><br/>
ஆமென்று கூறும் பிற்போக்கான எண்ணம் கொண்டவர்களை நாம் குறைகூற முடியாது; அது அவர்களின் சொந்த உணர்வு. அனால் இந்த விடயத்தை நேர்மறையாக அணுகுமிடத்தில் தற்போது உண்டாகிவரும் வசதி வாய்ப்புக்கள்தான் தீய பக்கவிளைவுகளுக்கு காரணம் என்று நோக்காமல்; புதிய வசதி வாய்ப்புக்களால் ஏற்ப்படுகின்ற தீய பக்கவிளைவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அதற்கான வழியை ஆராய்வதுதான் புத்திசாலித்தனம்; அதுதான் இன்றைய தேவை. அதை விடுத்து குறை கூறுவதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர்களை என்னதான் செய்யமுடியும்!
<br/><br/>
யாழ் இளைஞர்களும் யுவதிகளும் பண்பாடில்லாமல் முறைதவறி நடக்கின்றார்கள் என்பதுதான் இன்று முக்கியமாக யாழ்ப்பாணம் சீரழிவதாக கூறுபவர்களால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு; இவைதவிர கல்விப் பெறுபேறுகளில் வீழ்ச்சியும் இன்னுமொரு முக்கிய குற்றச்சாட்டு. இவ்விரண்டு குட்டச்சாட்டுகளும் ஏற்பட காரணமாக குற்றம் சொல்பவர்களால் கூறப்படும் முக்கிய காரணிகளாக தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம், வெளிநாட்டுப்பணம், எ-9 பாதை திறப்பு, கட்டுப்பாடு இல்லாமை (புலிகளின் கட்டுப்பாடு) போன்றவை முக்கியமானவை. இக்குற்றச்சாட்டுகளிணை விரிவாக நோக்குவோமாயின்...
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsnXrUNwStUHRd5PtuuCcpvMcJdwiLyAV-uBQqdbpvbY-IMby06QZsalfallfVxEx1kM10eRwc29R1tZ1E1xkBDCqIQDIiOsYerK5Bk8tiDoU_tfNSfw3t0V-noskMj11yPNoVmXWN3j2n/s1600/phone-busy-indicator.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsnXrUNwStUHRd5PtuuCcpvMcJdwiLyAV-uBQqdbpvbY-IMby06QZsalfallfVxEx1kM10eRwc29R1tZ1E1xkBDCqIQDIiOsYerK5Bk8tiDoU_tfNSfw3t0V-noskMj11yPNoVmXWN3j2n/s320/phone-busy-indicator.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626304606349354930" /></a>
<br/><br/>
1991 முதல் 1995 வரை யாழ் குடாநாட்டிலேயே மக்கள் பாவனைக்காக 'இயங்கும் நிலையில்' ஒன்றிரண்டு தொலைபேசிகள்தான் இருந்தன; அப்போதைய கட்டணங்களை கேட்டால் இப்போதும் தலை சுற்றும். அதிலும் வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேசுவதற்கு யாழிலிருந்து கொழும்பிற்கு செல்லவேண்டிய நிலை (அந்த காலப்பகுதியில் கொழும்பு செல்வது சாதாரண விடயமல்ல). 1995 க்கு பின்னர் மெல்லமெல்ல நிலையான தொலைபேசி (Land Line) இணைப்புக்கள் யாழ் குடாநாட்டிற்குள் அதிகரிக்க ஆரம்பித்தது; பெரும்புள்ளிகள், வசதியானவர்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள் போன்ற இடங்களில் நிலையான தொலைபேசி இணைப்புக்கள் இருந்தாலும் சாதாரண குடிமக்களால் அவற்றை சொந்தமாக பாவிக்க இயலவில்லை.
<br/><br/>
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டளவில் அறிமுகமாகியதுதான் கைத்தொலைபேசி; ஆரம்பத்தில் கைத்தொலைபேசியின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் 2007 இற்கு பின்னர் வீட்டிற்கு ஒன்றாக அதிகரித்து இன்று ஒவ்வொருத்தரும் ஒரு கைத்தொலைபேசி பயன்படுத்துமளவிற்கு அதன் பாவனை அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான விடயமா என்பதில்த்தான் விவாதமே. எதையுமே நாம் பயன்படுத்தும் விதத்தில்த்தான் அதன் நன்மை, தீமை தீர்மானிக்கப்படுகிறது; ஒரு தீக்குச்சியால் தீபமும் ஏற்றலாம் தீயும் வைக்கலாம்; அது பயன்படுத்தும் முறை மற்றும் தேவையை பொறுத்தது.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8zyQThBQFflTY78j1SzPn5kXL6Qmj02NiKQ60Mh4WabZ4dXtGgW1rHmefXxH80fN59Okb_sOHHjy-f_e36V0RUznWKb3OsxHC_YvB8vKhHweCba-NzqqT9oHS7UHf_KlrPz5MUjYkIuDX/s1600/nokia-1006-cell-phone-2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 170px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8zyQThBQFflTY78j1SzPn5kXL6Qmj02NiKQ60Mh4WabZ4dXtGgW1rHmefXxH80fN59Okb_sOHHjy-f_e36V0RUznWKb3OsxHC_YvB8vKhHweCba-NzqqT9oHS7UHf_KlrPz5MUjYkIuDX/s320/nokia-1006-cell-phone-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626299395373199826" /></a>
<br/><br/>
இன்று தொலைபேசி உள்ளதால் எத்தனை சௌகரியங்கள்!!! ஒரு சந்திப்பை எடுத்துக் கொண்டாலே ஒருவரை சந்திக்குமுன் தொலைபேசியில் அவர் சந்திப்புக்கு தயாராக உள்ளாரா என அறிந்த பின்னர் செல்வதால் வீண் அலைச்சல், பணம், நேரம் என்பன எவ்வளவு சேமிக்கப்படுகிறது! சரியான நேரத்திற்கு வீடிற்கோ அல்லது குறிப்பிட்ட ஓரிடத்திற்க்கோ செல்வதற்கு தாமதமாகினால் தாமதத்தை அறியப்படுத்தி ஏற்ப்படும் அசௌகரியங்களை தவிர்க்கிறோம். தூரதேச பிரிவின் இடைவெளி எத்தனை குடும்பங்களுக்கு தொலைபேசியில் இன்று ஆறுதலை வழங்குகின்றது!!!
<br/><br/>
வெளிநாடுகளில் உள்ளவர்களின் குரலையோ முகத்தையோ அன்று வருடக்கணக்கில் காணாத நாம் இன்று தினமும் பார்த்தும் கேட்டும் மனதிற்கு ஆறுதலை தேடுவது எதனால்? இவைதவிர வர்த்தகம், மருத்துவம் முதல் அத்தனை தொழில்களிலும், சேவைகளிலும் தொலைபேசியின் பங்கு என்ன என்பதை யாவருமே அறிவோம்! இத்தனை நன்மைகளை தன்னகத்தே கொண்ட தொலைபேசிதான் இன்றைய பல யாழ் இளைஞர்களினதும் யுவதிகளினதும் 'காம வேட்க்கைக்கு' பயன்படுகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 'பல'('சில' அல்ல) இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இன்று ஒன்றுக்கு மேற்ப்பட்ட (ஒரு சிலர் யாரென்றே தெரியாத) எதிர்ப்பாலருடன் தமது இச்சைகளை போக்கிக்கொள்ளும் ஒரு கருவியாக தொலைபேசியை பயன்படுத்துகிறார்கள் என்பது சோகமான விடயமே.
<br/><br/>
நிச்சயம் இது தொலைபேசியால் ஏற்ப்பட்ட சீரழிவுதான்; ஆனால் இந்த சீரழிவு யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை. இது உலகம் முழுவதிலும் உள்ள சீரழிவுதான், ஆனால் யாழ்ப்பாணம் எப்படி தனித்து காட்டுகின்றதென்றால்; இதுவரை காலமும் இருந்துவந்த கட்டுப்பாடான ஒழுக்கம்தான். உதாரணமாக கறுப்புடன் வேறெந்த நிறம் சேர்ந்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது, ஆனால் வெள்ளையுடன் ஒரு துளி வேறு எந்த நிறம் சேர்ந்தாலும் அது மிகைப்படுத்திக் காட்டிக்கொடுக்கும்; அந்த நிலைதான் இன்றைய யாழின் நிலை.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj1SN3Jvhjnvq8eWeEzi1guyXU11IjU-QxYszXFxeRt9xq07T7gBpEi_hC_e_Fpz_eJ5Kd9hsdd-lvEiqCY_1BATMS__tYYI8X8OH4MnftXQqbGvpZok8b51C-U9QXUfXywD_fjqF71Jn-/s1600/facebook-shut-down.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj1SN3Jvhjnvq8eWeEzi1guyXU11IjU-QxYszXFxeRt9xq07T7gBpEi_hC_e_Fpz_eJ5Kd9hsdd-lvEiqCY_1BATMS__tYYI8X8OH4MnftXQqbGvpZok8b51C-U9QXUfXywD_fjqF71Jn-/s320/facebook-shut-down.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626299380597922194" /></a>
<br/><br/>
தொலைபேசிபோலத்தான் இணையந்தின் பங்கும்; இணையத்தால் ஏற்ப்பட்டிருக்கும் நன்மைகளை சொல்லித் தெரியவேண்டியதில்லை! வீட்டிலிருந்தே உலகத்தை புரட்டிப்பார்க்கும் நெம்புகோல் இணையம்; அதனை ஆக்கவழியில் பயன் படுத்துவதும் அழிவுப்பாதையில் பயன்படுத்துவதும் தனிமனித நிலைப்பாடு. ஒரு சிலர் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதற்காக இணையத்தை புறந்தள்ள முடியுமா? இல்லை இணையம் இல்லாமல் இனிவரும் காலங்களில் உலகத்துடன் இணைந்து வாளத்தான் முடியுமா?
<br/><br/>
Face Book; இது இன்று உலகம் முழுவதும் ஆட்கொண்டிருப்பதை மறுக்க முடியாது; அதன் தாக்கம் யாழிலும் இல்லாமல் இல்லை. கல்வி வீழ்ச்சிக்கு இன்றைய Face Book இன் தாக்கம் ஒரு காரணமாக கூறப்படுகிறது, உண்மைதான்; சில மாணவர்கள் Face Book தான் வாழ்க்கை என்கின்ற அளவில் உள்ளார்கள்; இவர்களின் வயதும் அதற்க்கு துணைபோகும் காரணிகளும் Face Book இல் உள்ளமைதான் இவர்களின் இந்த அதீத ஈடுபாட்டிற்கு காரணம். பொய்யான பெயர்களில் கணக்கு வைத்திருந்து வேண்டாத நட்புகளை உருவாக்கி வயதின் இச்சையை பூர்த்திசெய்யும் விடலைகள் சற்று அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறார்கள்!!! அப்படியானால் Face Book என்கின்ற சமூகத்தளம் தேவையற்றதா? நிச்சயமாக தேவையற்றது என்று கூற முடியாது; பல நல்ல விடயங்கள் Face Book இல் உள்ளதையும் மறுக்க முடியாது.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj27HwgUpA2JmU8IBSzlqw7OvqapTp0E3D6-QBalWYwFgJelZBn7ZgmcAGoOA8-LLKS5NnYJA8k7Y2O-4O1KLZ7B0cr4FNhyphenhyphenh-nJAHPBOHpHztRAZtcZok26SvnXzXXfH3JkuN8ZqGnPOHI/s1600/38502307.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj27HwgUpA2JmU8IBSzlqw7OvqapTp0E3D6-QBalWYwFgJelZBn7ZgmcAGoOA8-LLKS5NnYJA8k7Y2O-4O1KLZ7B0cr4FNhyphenhyphenh-nJAHPBOHpHztRAZtcZok26SvnXzXXfH3JkuN8ZqGnPOHI/s320/38502307.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626299375523127634" /></a>
<br/><br/>
இவற்றைப்போலவே எ-9 பாதை திறக்கப்பட்டதால் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துள்ளது என்கின்ற வாதத்திலும் மறுப்பு ஏதும் கூறுவதற்கில்லை; பலதரப்பட்டவர்களும் வருகிறார்கள், தீய விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளை ஊக்குவிக்கிறார்கள்; உண்மைதான், அதற்காக எ-9 பாதை பயன்பாட்டை நிறுத்த முடியுமா? இல்லை புறக்கணிக்கத்தான் முடியுமா? எ-9 பாதை இல்லாத காலங்களில் எம்மக்கள் பட்ட அவஸ்தையை எட்ட நின்று கருத்து கூறும் யாராலும் புரிந்து கொள்ள இயலாது. 1000 ரூபாயில் செய்ய வேண்டிய போக்குவரத்தை 30,000 ரூபாவில் கூட செய்யமுடியாத சூழலில் எத்தனை பேர் முக்கிய நிகழ்வுகளில் (மரணம், திருமணம்) கலந்துகொள்ளாமல் மனரீதியாக தாக்கப்பட்டார்கள் என்பதை 'எக்ஸ்போ' விமான சீட்டு அலுவலகத்திற்கு குறிப்பிட்ட காலப்பகுதிகளில் சென்றவர்களால் உணரமுடியும்.
<br/><br/>
எ-9 பாதை திறக்கப்பட்டதால் ஏற்ப்பட்ட இலகு மற்றும் குறைந்த செலவில் நினைத்தநேர பயணம், ஏறுமதி மற்றும் இறக்குமதி, பொருட்களின் விலை வீழ்ச்சி போன்ற சாதகமான காரணிகளுடன் ஒப்பிடும் பொழுது பாதகமான காரணிகள் மிகச்சொற்பமே. அதற்காக பாதகமான காரணிகளை வரவேற்பதாக அர்த்தமல்ல, அப்பாதகமான காரணிகளை எவ்வாறு நீக்கலாம் என்று சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்; அதைவிடுத்து எ-9 பாதை திறந்ததுதான் இன்றைய யாழின் சீரழிவிற்கான காரணம் என்று கூறுவதல்ல!!
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwq96lY2tICZ31y-0CKygQCQrn-kjbAMDR5WV6KYdc2I0Og0PjBfL_dEau3iFzwfl91XdWSJ316rrs9BzuczaGPCtLRCgbj2_IwtbMk00OwdchPpahTULcbHe9KzIq5K-gKF2g6HpOspW1/s1600/bajaj+1501.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 222px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwq96lY2tICZ31y-0CKygQCQrn-kjbAMDR5WV6KYdc2I0Og0PjBfL_dEau3iFzwfl91XdWSJ316rrs9BzuczaGPCtLRCgbj2_IwtbMk00OwdchPpahTULcbHe9KzIq5K-gKF2g6HpOspW1/s320/bajaj+1501.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626299378229542130" /></a>
<br/><br/>
அடுத்து வெளிநாட்டுப்பணம்; மேலதிகமாக கிடைக்கும் வெளிநாட்டுப் பணத்தினால் பள்ளி வயது முதல் பாடை வயதுவரை பீர் மழையும், மோட்டார் சைக்கிள்களும் (குறிப்பாக பள்சர்) யாழ்ப்பாணத்தில் குறைவில்லாமல் உள்ளன. வேலைக்கு போகும் பணியாளர்களுக்கும், மாணவர்களின் தேவைகளுக்கும், வியாபாரிகளின் பயன்பாட்டிற்கும் மோட்டார் சைக்கிள்களின் தேவை இன்றியமையாதது என்பது நிதர்சனம். அதேநேரம் பகட்டுக்காக மோட்டர் கைக்கிளை வைத்து 'படம்' காட்டும் இளைஞர்களும் அதிகமாகவே உள்ளனர்; இவர்கள்தான் இன்றைய வீதி விபத்துக்களின் ஏஜண்டுகள், மற்றும் பெண் செட்டைகளின் முக்கிய சூத்திரதாரிகள். இவர்களை கட்டுப்படுத்துவது அவரவர் குடும்பத்தினதும், வெளிநாடுகளில் இருந்து தேவைக்கதிகமாக பணம் அனுப்புபவர்களதும், சமூகத்தினதும், பொலிசாரினதும்(?) கைகளில்த்தான் உள்ளது.
<br/><br/>
அடுத்து கூறப்படும் இன்னுமொருவிடயம்; "புலிகள் காலத்தில் இளைஞர்கள் யுவதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு பயந்து ஒழுக்காமாக இருந்தனர், ஆனால் இன்று புலிகளின் தாக்கம் இல்லாததால் ஒழுக்கம் குறைவாக நடக்கின்றார்கள்" என்பதுதான். இங்கு ஒழுக்கம் என்று சொல்லப்படும் முக்கிய விடயங்களாக ரவுடித்தனம், பெண் சேட்டைகள், கள்ளத்தொடர்பு, விபச்சாரம், போதை போன்றன அடங்குகின்றன. இவ்வாறான ஒழுக்க மீறல்களினை காணும் அல்லது அறியும் சந்தர்ப்பங்களில் "இவங்களுக்கு அவங்கள்தான் சரி" என்பதே பலராலும் உச்சரிக்கப்படும் ஒரு வாக்கியம்!!!
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEkHh90DMQuz2vVrXrfwQfl4nWdaR-B-Me3wdipJuoJ9LjCn7oTw2ImUGoRtw-cgIwHx2e3NTLSf1lkc69LWx9aGDOu6tg-3RVSht_8xSg4uCm2ngkq-tHuISOUW52vD0lh1IDbAfp4aAU/s1600/20080807_06.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEkHh90DMQuz2vVrXrfwQfl4nWdaR-B-Me3wdipJuoJ9LjCn7oTw2ImUGoRtw-cgIwHx2e3NTLSf1lkc69LWx9aGDOu6tg-3RVSht_8xSg4uCm2ngkq-tHuISOUW52vD0lh1IDbAfp4aAU/s320/20080807_06.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626307196287527154" /></a>
<br/><br/>
உண்மைதான் இதை நானும் பல இடங்களில் உணர்ந்திருக்கின்றேன்; அனால் இதில் இன்னுமொரு விடயத்தையும் உற்றுநோக்கவேண்டும், புலிகளின் கட்டுப்பாட்டுக்கு பயந்துதான் (மரண பயம்) இதுவரை காலமும் யாழ் இளைஞர்கள் யுவதிகள் ஒழுக்கமாக இருந்தார்களா? ஆம் என்றால் அந்த ஒழுக்கம் யாழ்ப்பாணத்தின் அடிப்படை ஒழுக்கமா? இல்லை கட்டுப்படுத்தியதால் ஏற்ப்பட்ட ஒழுக்கமா? இது எம்மக்களின் சுயமரியாதையை காயப்படுத்துவதாக இல்லையா?
<br/><br/>
அப்படியானால் கட்டுப்பாடு தேவை இல்லையா என நீங்கள் கேட்கலாம்! நிச்சயம் கட்டுப்பாடு தேவை, ஆனால் கட்டுப்பாடு மட்டுமே போதாது; கூடவே நல்ல சமூக கட்டுக்கோப்பும் தேவை; தனிமனிதனில் சமூகத்தினதும், சமூகத்தில் தனிமனிதனதும் ஒழுக்கம் தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். காவல்த்துறையும் நீதித்துறையும் மக்களுக்கும், மக்கள் காவல்த்துறைக்கும் நீதித்துறைக்கும் பூரணமான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் இதய சுத்தியோடு வழங்கினால் வேண்டத்தகாத பல தீய விளைவுகளை அடியோடு ஒழிக்கலாம்; அனால் இன்றைய சூழலில் அது உடனடிச்சாத்தியம் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxi4UMVrdcZQrY-yFES1sXgF1w8_EFu1yLhbH8fjYGlhpKFUJKJ-Hb4sf_L8Ob_s7Jw7JGckQ7PraQnS3Cs-fw0Iv34EVNTuNKPC3xCri4zuShhIjcCZHWJdyIdKo7msoQXjCCumgDOCsg/s1600/internet.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxi4UMVrdcZQrY-yFES1sXgF1w8_EFu1yLhbH8fjYGlhpKFUJKJ-Hb4sf_L8Ob_s7Jw7JGckQ7PraQnS3Cs-fw0Iv34EVNTuNKPC3xCri4zuShhIjcCZHWJdyIdKo7msoQXjCCumgDOCsg/s320/internet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626301326330094706" /></a>
<br/><br/>
தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம், எ-9, வெளிநாட்டுப்பணம் போன்றன எந்தளவிற்கு யாழ்மக்களுக்கு இன்றியமையாத தேவைகளாக உள்ளதோ! அதேபோல இவற்றால் ஏற்ப்படும் 'சீரழிவு' என்று சொல்லப்படும் அசௌகரியங்கள் அதிகரித்துள்ளமை <span style="font-weight:bold;">மிகவும்</span> பாதகமான விடயமாகவே உள்ளது. தொலைபேசி, இணையம் போன்றவற்றால் இன்று ஒழுக்கத்திலும், கல்வியிலும் ஏற்ப்பட்டுள்ள தாக்கங்கள் காலப்போக்கில் குறைவடைந்து ஓர்நாள் இல்லாமலே போய்விடும் என்கின்ற நம்பிக்கை உண்டு.
<br/><br/>
உதாரணமாக சொல்வதானால் 1996 களில் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் மின்சாரம் (6 ஆண்டுகளின் பின்னர்) வழங்க ஆரம்பித்த புதிதில் அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் முதற்கொண்டு வயலும் வாழ்வும் வரை முழுநேரமும் தொலைக்காட்சியுடன் தான் அன்றைய இளைஞர்கள் நேரத்தை செலவிட்டனர்; ஆனால் இன்று??? வேண்டியபோதுதான் தொலைக்காட்சி! அதேபோலத்தான் புதிதாக ஒரு தொலைபேசியை வாங்கிய முதல் இரண்டு வாரம் அதையே போட்டு நோண்டி நொங்கெடுப்போம் , பின்னர் ???? பாவனைக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்! இது மனித இயல்பு, எதையும் புதிதாய் கண்டால் சிலகாலம் அதனுடன் ஒன்றிப்பது மனிதர்க்கு புதிதல்ல!!!
<br/><br/>
இந்த நிலைதான் இன்று எம்மவரில் சிலருக்கும் இருக்கும் பிரச்சனை!!! காணாததை கண்டதால் ஏற்ப்பட்ட விளைவு என்றுகூட இதை சொல்லலாம். எந்த புதிய அறிமுகமும் அறிமுகமான புதிதில் சில அசௌகரியங்களை கொடுக்கத்தான் செய்யும்; ஆனால் நாளடைவில் அவை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், இது உலக நியதி, யாழ்ப்பாணம் ஒன்றும் இதற்க்கு விதி விலக்கல்ல. அப்படித்தான் கூடிய சீக்கிரம் தொலைபேசியும், இணையமும் மாறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.
<br/><br/>
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIhauxcb9pDTx32Cj-h8gr0EqF7wm9htn2YerI-3KVmG91WxFYEkNDE12KJnGd7ARmvIPlWtr68O384s40SCkqqHZZrKlMTDRfxWADKXVhDSVXRSYnpHFM1VpwQV6Ja8Iq5adGx6J3LJaY/s1600/25f4accf-1929-43ec-a292-259b32464479_S_secvpf.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIhauxcb9pDTx32Cj-h8gr0EqF7wm9htn2YerI-3KVmG91WxFYEkNDE12KJnGd7ARmvIPlWtr68O384s40SCkqqHZZrKlMTDRfxWADKXVhDSVXRSYnpHFM1VpwQV6Ja8Iq5adGx6J3LJaY/s320/25f4accf-1929-43ec-a292-259b32464479_S_secvpf.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626303212782277874" /></a>
<br/><br/>
ஆனால் ரவுடீசம், பெண் சேட்டைகள், புதிதாக நுழைந்துள்ள போதை, விபச்சாரம் போன்றன கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் அது நிச்சயம் சமூகத்தின் கைகளிலும், போலிஸ், மற்றும் நீதி துறையின் கைகளிலும்தான் தங்கியுள்ளது. போலீசார் நினைத்தால் இவற்றை அழிப்பது அவளவு கடினமல்ல; காரணம் இவையெல்லாம் இப்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எதையுமே ஆரம்பத்தில் அழிப்பது சுலபம் என்பதால் <span style="font-weight:bold;"> பணத்திற்கு</span> முன்னுரிமை கொடுக்காது இதய சுத்தியோடு செயற்ப்பட்டால் போலிஸ் துறையால் நிச்சயம் இவற்றை கட்டுப்படுத்த முடியும்; ஆனால்???
<br/><br/>
யாழ்மக்களை குறை சொல்பவர்களே ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், இங்குள்ளவர்களும் மனிதர்கள்தான்; தவறு செய்பவன்தான் மனிதன், அந்த தவறை சுட்டிக்காட்டி ஏளனப்படுத்தி கேவலப்படுத்துவதை கெட்டித்தனமென்று எண்ணாமல் தவறுகளை எப்படி தீர்க்கலாம் என்று சிந்தியுங்கள், அறிவுறுத்துங்கள். இன்னமும் பாவாடை தாவணி, சேலையில் பெண்களும்; வேட்டி சட்டைகளில் ஆண்களும் இருந்தால்த்தான் யாழ்ப்பாண கலாச்சாரம் காக்கப்படும் என நீங்களாகவே கற்பனை பண்ணிகொண்டு, அவ்வாறு இல்லாதவர்களை கலாச்சார சீர்கேட்டாளர்களாக எண்ணினால்; உங்களுக்கு நாங்கள் சொல்லாது ஒன்றே ஒன்றுதான் "VERY SORRY"
<br/><br/>
உலகம் போகிற வேகத்தில்த்தான் இனிவரும் காலங்களில் எங்களாலும் போக முடியும்; கலாச்சாரம் முக்கியம்தான்; அதற்காக கலாச்சாரத்தை மட்டுமே கட்டி பிடித்துக்கொண்டு இங்குள்ளவர்கள் 50 ஆண்டுகள் பின்நிற்க வேண்டும் என்று கலாச்சார காவலர்கள் நினைத்தால் அவர்களுக்கு AGAIN "VERY SORRY"தான். நான் ஒன்றும் முற்போக்கு வாதம் செய்யவில்லை, இதுதான் இன்றைய யதார்த்தம். உலகத்துடன் தன்னை இணைக்கும் முயற்ச்சியில் எல்லா துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் யாழ்ப்பாணத்தின் இன்றைய தளம்பல் நிலை தற்காலிகமானது; தளம்பல் நிலை சீரடைந்து உரிய வளர்ச்சியை எட்டும்போது இப்போது காணப்படும் சில வேண்டத்தகாத 'சீரழிவுகள்' நிச்சயமாக இல்லாதுபோகும், இல்லாது போக வேண்டும்!!!!!!!!!
<br/><br/>
<span style="font-weight:bold;">
அந்த நாளுக்காக காத்திருக்கும்,</span>
<br/>
<span style="font-weight:bold;">யாழ் மக்களில் ஒருவன்.</span>
<br/><br/>அ.ஜீவதர்ஷன்http://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.com28